Translate Tamil to any languages.

செவ்வாய், 8 ஜூலை, 2014

எறும்பூரக் கல் தேயுமாப் போல...

ஏதோ
என் எதிரி
என்னைத் தூற்றிக்கொண்டே இருந்தார்...
ஏன்டா
என்றும் தொடருகின்றாய் என்று கேட்க
எறும்பூரக் கல் தேயுமாப் போல
தன்பக்க விளக்கமெல்லாம்
மக்கள் உள்ளத்தில் எழுதப்படுமாமே!
எதிரியின்
தூற்றல் எல்லாம் பொய்யென
நான் கூட
வெளிப்படுத்திய
என்பக்க விளக்கமெல்லாம்
மக்கள் உள்ளத்தில் எழுதப்படாதா?!
கோட்பாடுகளும் முதுமொழிகளும்
எந்தவொரு பக்கத்தாருக்கும்
துணை நிற்பதில்லையே - அவை
எல்லோருக்கும் பொதுவானதே!

8 கருத்துகள் :

  1. வணக்கம்
    நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை! எறும்பு ஊர ஊர கல் தேயும் என்பது......உண்மை....எல்லாவற்றிற்கும் காலம்....தான் பதில் சொல்லும்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. எரும்பை காரணம் காட்டியே கவிதை முடிச்சிட்டீங்களே,,,, அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் எனத் தோன்றுகிறது அய்யா!
    கவிதை இனிமை!
    பகிர்வினுக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!