மின்நூல் வெளியீட்டுப் பணிகளில் நானிருந்தாலும் மின்நூல் தயாரிப்பது பற்றி ஏற்கனவே நான் எழுதியிருந்தாலும்
(http://www.ypvnpubs.com/2016/01/blog-post_26.html) நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்" என்றவாறு வைஷாலி வாசகர் வட்டம் வெளியிட்ட பதிவு எனக்குப் பிடித்திருந்தமையாலும் தங்களுடன் பகிருகிறேன்.
இவை நகைச்சுவையோ நகைச்சுவை இல்லையோ வாசகரே முடிவு செய்யுங்கள். என்
எண்ணத்தில் எழுந்த ஐயங்களைப் பகிருகிறேன்.
1.
தம்பி: நீயோ அவளை ஓடி ஓடிக் காதலித்தாய்! அவளோ அடுத்தவனைத் தாலி
கட்டெனத் தலையை நீட்டுகிறாளே!
அண்ணன்: கொடுப்பனவு (சீதனம்+ஆதனம்) ஏதும் கேட்காதவனைப் பார்த்து
எவளும் நாடலாம். வருவாயோடு வருபவளே எனக்குத் தேவை!
தம்பி: அப்ப காதல்...?
அண்ணன்: வருவாய்க்காரி எவளென்றறியவே!
2.
ஒருவள்:
அடியே! என்னுடைய அழகன், காதலிக்கவோ தாலி காட்டவோ மாட்டேன் என்கிறானடி!
அடுத்தவள்: ஐம்பது ஏக்கர் நெற்காணி, நாற்பது இலட்சம் காசு, முப்பது
இலட்சம் நகை, இருபது இலட்சம் பெறுமதியான மாடிவீடு பத்துப் பரப்புக் காணியில
இருக்கு என்று சொல்லடி...
உன்னுடைய அழகன் என்னடி, ஆண்டவரே வந்து உன்னைக் கட்டுவாரடி!
3.
ஒருவன்: நான் உன்னைக் காதலிக்கிறேன் (143). உனக்கு விரும்பமா தோழி?
ஒருவள்: கணவன், பிள்ளைகளைக்
கேட்டுச் சொல்கிறேன். என் கணவனே உனக்கு பதிலளிப்பாரே!
4.
இவளைக் காதலிக்கக்
கேட்பவரெல்லாம்
குதிக்கால் பிடரியிலடிக்க
ஓடுறாங்களாமே!
தானோ காவற்றுறைக் கதிரவனின்
மனைவி என்றதும்...
5.
அவருக்கு அடிக்கடி காதல்
தோல்வியாமே!
திருமணம் என்றதும்
கொடுப்பனவு (சீதனம் + ஆதனம்) கேட்பதாலேயாம்!
6.
ஒருத்தி:
ஏனடி அவரிடம் இருந்து மணமுறிப்புக் (டிவோஸ்) கேட்கிறாய்?
அடுத்தவள்: தாய்க்கு நோய் என்றதும் முதியோர் இல்லத்தில விட்டது
போல, என்னையும் தெருவில விட்டாலுமென்று தான்...
2010 இலிருந்து எனது எண்ணங்களை வலைவழியே பகிர்ந்து வருகின்றேன்.
சமகால உறவுகளிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது. அதனை மேம்படுத்த வலைவழியே 'வாசிப்புப் போட்டி 2016' நடாத்தி ஓரளவு வெற்றி பெற்றேன்.
ஆயினும், 10/10/2017 அன்று 'வாசிப்புப் போட்டி 2017' இற்கான அறிவிப்பை (இணைப்பு: https://seebooks4u.blogspot.com/2017/10/2017.html) எனது தளத்தில் வெளியிட்டிருந்தேன். அதற்கான தேர்வு நாளை 17/12/2017 ஞாயிறு அன்று இடம் பெறுகிறது. இணைப்பைச் சொடுக்கி விரிப்பைப் படித்துப் பங்குபற்றலாமே!
மேற்படி வாசிப்புப் போட்டி நடாத்துவதால் சமகால உறவுகளிடையே வாசிப்புப் பழக்கம் ஏற்பட வாய்ப்பு மலருமா? தங்கள் ஆய்வினைப் பகிருங்கள்.
பாரதி பிறந்த
நாளில் (11/12/1882) எனக்கொரு செய்தி கிட்டியதே! அதனைத் தங்களுடன் பகிர விரும்புகின்றேன்.
இலங்கை,
யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சியில் 05/10/2017 அன்றும் 06/10/2017 அன்றும்
ஒளிபரப்பாகிய 'கவிதைகள் சொல்லவா' நிகழ்வில் மூத்த கவிஞர் சி.ரவீந்திரன் அவர்களுடன்
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் அவர்களும் பங்குபற்றி இருந்தார். இருவரையும் கவிஞர் முகுந்தன்
அவர்கள் நேர்காணல் மேற்கொண்டார்.
இலக்கிய
உலகில் 1987 இல் நுழைந்தாலும் எனது "உலகமே ஒருகணம் சிலிர்த்தது" என்ற தொடக்க
வரியைக் கொண்ட முதல் கவிதை 25/09/1990 அன்று ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்தாலும் என்
வாழ்வில் முதலாவது நேர்காணல் இதுவென்பேன். என்னை முதலில் நேர்காணல் செய்த கவிஞர் முகுந்தன்
அவர்களை எனது வலையுறவுகள் எல்லோரும் பாராட்டுவீர்கள் என நம்புகின்றேன்.
'கவிதைகள்
சொல்லவா' நிகழ்வில் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அழைத்துச் சிறப்பித்தமைக்கு இலங்கை,
யாழ்ப்பாணம், டாண் தமிழ் ஒலி தொலைக்காட்சி மேலாண்மைக்கும் கவிஞர் முகுந்தன் அவர்களுக்கும்
உள்ளம் நிறைந்த நன்றி உரித்தாகுக.
"ஆரியப்
பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரை ஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத்
தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக்
கொண்டது." எனத் தமிழகத் தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் தெரிவித்ததாக 'எனது
எண்ணங்கள்' வலைப்பூவில் அறிஞர் தி.தமிழ் இளங்கோ பகிர்ந்திருந்தார். அப்பதிவுக்குக்
கருத்துரைத்த அறிஞர் ஜீவி அவர்கள் "நமஸ்காரம் வெகுதிரள் மக்களின் பயன்பாட்டில்
இல்லாத நேரத்தும் 'குட்மார்னிங்' பார்த்து இதற்கு தமிழில் என்ன சொல்லலாம் என்ற யோசனையின்
அடிப்படையில் வந்ததே 'வணக்கம்' என்று நினைக்கிறேன்." எனப் பகிர்ந்திருந்தார்.
முகநூலில்
(Facebook) "இராவணன் பாலம்" என்ற உறவின் பதிவில் வெளியாகியிருந்த படம் இது.
உயிரோவியம் வரைந்தவரைப் பாராட்டுவோம்.
உங்களுக்குக்
கவிதை எழுத வருமா? - அப்படியாயின்
மேற்காணும்
தகவலை வைத்து, படத்தைப் பார்த்து
"மதுவை
விரட்டினால் கோடி நன்மை!" என
அழகான கவிதை
எழுதிக் காட்டுங்க...
கவிதைக்கான
தலைப்பு எதுவாயினும் - அது
உங்கள் விருப்பத்
தெரிவாக இருக்கட்டும்!
மக்கள் உள்ளங்களில்
(சமூகத்தில்) மாற்றத்தை விதைக்கும்
இனிய கவிதைகளைப்
பணிவோடு தொகுத்து - நாம்
மின்நூலாக
வெளியிட்டுப் பகிர்ந்துதவ எண்ணியுள்ளோம்!
மரபுக் கவிதையாயினும்
சரி
புதுக் கவிதையாயினும்
சரி
பத்திலிருந்து
இருபது வரிகளுக்குள் - உங்கள்
எண்ணங்களில்
மலர்ந்த கவிதைகள் அமையணும்!
சிறந்த கவிதைகளுக்குப்
பரிசில் வழங்குவோம்! மின்நூல் வெளியிடும் வேளை பரிசில் விரிப்பு வெளியிடுவோம்! உங்கள் கவிதைகளை
wds0@live.com என்ற மின்னஞ்சலுக்கு 31-12-2017 இற்கு முன்னதாக அனுப்பிவைக்கவும்.