Translate Tamil to any languages.

செவ்வாய், 30 மே, 2017

மக்களிடம் இலக்கியத்தைக் கொண்டு செல்ல எது உதவும்?

இலக்கியத்தைப் படிக்காதவர், படித்தவர் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் கொண்டு செல்லவல்லது பட்டிமன்றங்கள் என்பார்கள். அதற்குமப்பால் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களின் பாட்டுமன்றங்கள் உதவுமாம். இன்னும் ஏதாச்சும் புதிய கண்டுபிடிப்புகள் இருந்தால் பகிருங்கள்.

பட்டிமன்றங்களா பாட்டுமன்றங்களா தமிழை வாழ வைக்கப்போகின்றன? என்றால்
"பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது
பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது" என்கிறார்
பாவலரேறு பெரும்சித்திரனார் ஐயா!

இலக்கியத்தை எல்லோருக்கும் கொண்டு செல்லவல்ல ஊடகமாக எதனைக் குறிப்பிடலாம்? என்றால் வாசகர், கேட்போர், பார்ப்போர் உள்ளம் நிறைவைத் தரவல்ல எதனையும் குறிப்பிடலாம். அதனை அறிந்து திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் பட்டிமன்றங்கள் மக்கள் முன் விரும்பும் ஒன்றாகலாம். ஆனால், இலக்கியத்தை எல்லோருக்கும் கொண்டு செல்லும் என்றால் ஐயமே!

அருமையான வாழ்வின் அத்தனை மணித்துளிகளுமே இலக்கியம் தான். வாழ்வின் சில மணித்துளிகளைக் காட்டும் நாடகமும் திரைப்படமும் இலக்கியத்தை எல்லோருக்கும் கொண்டு செல்லாதா? அருமையான வாழ்வையே வெளிப்படுத்தும் தொடர்கதை (நாவல்) இலக்கியத்தை எல்லோருக்கும் கொண்டு செல்லாதா? அரங்கில் கைதட்டலும் மகிழ்வூட்டலும் பொழுதுபோக்கும் தரும் என்ற நோக்கிலேயே பட்டிமன்றங்கள், பாட்டுமன்றங்கள், ஏனையவை அமைகின்றன.

இன்றைய கேள்வி?
பட்டிமன்றங்களா பாட்டுமன்றங்களா மக்களைக் கவருகிறது?
நீங்கள் இலகுவாகப் பதிலளிக்க ஒவ்வொரு இணைப்பைப் பகிருகிறேன்.

இந்தப் பட்டிமன்றம் மக்களிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்கிறதா?



இந்தப் பாட்டுமன்றம் மக்களிடம் இலக்கியத்தை கொண்டு சேர்க்கிறதா?



இல்லையெனில், மக்களிடம் இலக்கியத்தைக் கொண்டு செல்ல எது உதவும்? அதனைக் கண்டுபிடித்தால் தான் தமிழை மக்கள் உள்ளத்தில் (மனத்தில்) வாழவைக்க முயலலாம். மக்கள் உள்ளத்தில் (மனத்தில்) தமிழ் வாழ்ந்தால் தான் தமிழை இனி மெல்லச் சாகாமல் பேணலாம்.

ஞாயிறு, 21 மே, 2017

ஊடகங்களில் மருந்துப் பெயர்களை வெளியிடலாமா?

அச்சு ஊடகங்களை விட, மின் ஊடகங்களைப் பலர் பாவிப்பது இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி தான் கரணியம் (காரணம்) ஆகிறது. எப்படி இருப்பினும் அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் குறிப்பிடுவதால் நன்மை, தீமை இருக்கலாம். ஆயினும், அதிகம் தீமை இருப்பதாகப் பேசப்படுகிறது. 

இது பற்றிக் கேட்ட போது "தன் (சுய) மருத்துவத்தைத் தூண்டாத வகையில் எச்சரிக்கையுடன் மருந்துப் பெயர்களைப் பாவிக்கலாம்" என்று மருத்துவர் ஒருவர் எனக்கு மதியுரை (ஆலோசனை) தந்துள்ளார். இப்பதிவிலும் எடுத்துக்காட்டாக எச்சரிக்கையுடன் மருந்துப் பெயர்களைப் பாவித்த பதிவுகளைப் பகிர்ந்துமுள்ளேன்.


எடுத்துக்காட்டு - 01
மேற்படி இணைப்பில் "மருத்துவர் கொடுத்த மருந்து #Citralka என்ற 60 ரூபாய் ஸிரப்..., அது Urinary infection க்கு தலைசிறந்த மருந்து." என்றும் குறித்த மருத்துவரைத் தொடர்பு கொள்வதற்கான முகவரியையும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, 'சிறுநீரகக் கட்டி' நோய்க்குக் குறித்த மருத்துவரை நாடினால் சுகப்படுத்தலாம் எனக் குறித்த பதிவர் வெளிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு - 02
மேற்படி இணைப்பில் டாக்டர் மு.அருணாச்சலம் அவர்களின் பதிவாக குங்குமம் "டாக்டர்" பகுதியில் 'கர்ப்பத்தடை மருந்துகள்' பற்றி அலசப்பட்டுள்ளது. "மாதவிடாய் தள்ளிப்போகத் தரும் மருந்துகளை அடிக்கடி எடுப்பதனால், அதிக ரத்தப்போக்குக் காரணமாக கர்ப்பப்பையை எடுக்க வேண்டி வரலாம். வேண்டாம்!" என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதனை எச்சரிக்கையுடனான மருத்துவ மதியுரை எனலாம்.

எடுத்துக்காட்டு - 03
மேற்படி இணைப்பில் யாழ்பாவாணன் அவர்கள் மருத்துவருக்குப் பொய்யுரைத்தல், மாதவிலக்கு வருவதைத் தள்ளிப்போடும் மருந்து, ஆண்-பெண் வயாக்ரா, பெண்களைக் கற்பளிப்புச் செய்த பின் தப்பித்துக் கொள்ள உதவும் மருந்து ஆகியவற்றைக் கூறி "மருத்துவரை நாடாமல் இதனைப் பாவிப்பதால் சாவைச் சந்திக்கின்றனர்." என எச்சரிக்கிறார். அதாவது, மருந்து என்றால் மருத்துவரை நாடி மருத்துவரின் மதியுரைப்படியே பாவிக்கலாம் என்கிறார். மேலும், "மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் (Pharmacist) மருத்துவர் விரிப்புத் தாள் (Doctor's Description) இன்றி மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது" என்கிறார்.

எடுத்துக்காட்டு - 04
மேற்படி இணைப்பில் "தலைவலி, உடல்வலிக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் கவனிக்க!" என மருத்துவரை நாடாமல் மருந்துக் கடைகளில் மருந்து வேண்டி உண்ணும் சூழலைச் சுட்டிக்காட்டி, கேட்போர் கேட்டதும் மருந்துகளை விற்போரையும் சாடி, "பொருத்தமான, நல்ல மருத்துவரிடம் சந்தேகங்களைக் கேட்பதும், சிகிச்சை பெறுவதும்தான் ஆரோக்கியம் காக்க உதவும்." என வழிகாட்டப்படுகிறது. அதாவது, "நோய்கள் நெருங்கியதும் நல்ல மருத்துவரை நாடிப் போவதே சரி." என்ற செய்தியைக் குறித்த பதிவர் வெளிப்படுத்துகிறார்.

எடுத்துக்காட்டு - 05
மேற்படி இணைப்பில் "விஷமாகும் மருந்துகள்... மிரளவைக்கும் உண்மைகள்!" என்ற விகடன் பதிவைப் படியுங்கள். "நோய்கள் தீர்வதற்காகத்தான் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால், மருந்து சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு, தனியாக சிகிச்சை எடுக்க வேண்டிய சூழலில்தான் இன்று வாழ்கிறோம். இதில் சுயமருத்துவம், அதிகமான ஆன்டிபயாடிக் மற்றும் வலிநிவாரணி எடுத்துக்கொள்வது, மாதவிடாய் காலம், கர்ப்பம் தவிர்க்க என பெண்கள் சார்ந்திருக்கும் மாத்திரைகள், குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதில் பெற்றோர் செய்யும் தவறுகள்... என இந்த மருந்து வகைகளால் ஏற்படும் பிரச்னைகள் ஏராளம்... தாராளம்!" என எச்சரிக்கை செய்கின்றனர். இப்பதிவு ஓர் சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம் என்பேன்.

மேற்காணும் எடுத்துக்காட்டுகளை வைத்துக்கொண்டு அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் கையாளலாமா? எடுத்துக்காட்டு - 04 உம் எடுத்துக்காட்டு - 05 உம் இதற்கான நல்ல பதிலைத் தந்திருக்கும். அதில் "காய்ச்சல், பீய்ச்சல்" என்றாலே கூகிள் தேடுபொறியில் மருந்துகளைத் தேடிப் பாவிக்கிறார்கள் எனின் "நோயும் அந்நோய்க்கான மருந்தும்" மருத்துவர்கள் அல்லாத நாம் பகிர்ந்தால் அப்படியே குடித்துச் சாகவும் பலர் இருக்கிறார்களே! ஆயினும் மருத்துவர்கள் வெளியிடும் பதிவுகளில் மருந்துப் பெயர்களைத் தந்திருந்தாலும் "மருத்துவரின் உடல் சோதனையின் பின் மருத்துவர் வழிகாட்டலின் படி பாவிக்கலாம்." என்று எழுதியிருப்பார்களே!

எடுத்துக்காட்டுக்கு வயிற்றோட்டம் வந்திட்டுது என்றால் கோப்பி அல்லது 5ml தேன் குடிக்கிறோம். 5ml தேன் குடித்ததும் சிறிது நேரத்திற்குத் தண்ணீர் குடிக்கக்கூடாது. அல்லது 5ml தேன் உடன் தண்ணீரைக் கலந்து குடிக்கக்கூடாது. அதாவது 5ml தேன் உடன் தண்ணீரைக் கலந்து குடித்தால் வயிற்றோட்டம் அதிகரிக்கும். வயிற்றோட்டத்தை அதிகரிக்கவோ வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தவோ 5ml தேன் பாவிக்கின்ற முறையில் தான் இருக்கு. அதேவேளை குழந்தைக்கா, இளையோருக்கா, முதியோருக்கா எவருக்கு '5ml தேன்' வழங்கலாம் என்பதில் கூடச் சிக்கல் இருக்கே!

அதேபோலத் தான் காய்ச்சல் என்றால் 'பனடோல்' அல்லது 'பரசிற்றமோல்' எனப் பல மருந்துகள் இருக்கலாம். "இம்மருந்துகளை எவருக்கு (குழந்தைக்கா, இளையோருக்கா, முதியோருக்கா) எவ்வளவு வழங்கலாம்; எத்தனை தடவை வழங்கலாம்; எத்தனை பக்க விளைவுகள் இருக்கு." என்பதை அறியாமல் பதிவுகளில் பகிருவது பாதிப்பையே தரும். ஆகையால் மருத்துவராயினும் சரி படைப்பாளியாயினும் சரி பதிவர்களாயினும் சரி "மருத்துவரின் உடல் சோதனையின் பின் மருத்துவர் வழிகாட்டலின் படி மருந்துகளைப் பாவிக்கலாம்" என்று மருந்துப் பெயர்களைப் பகிரலாம்.

நோய் சுட்டி, அதற்குத் தீர்வாக மருந்துப் பெயர்களை முன்வைத்தால் வாசகர் தன் (சுய) மருத்துவம் செய்யத் தூண்டும் என்பதால் மருந்துப் பெயர்களைப் பகிருவதை ஏற்கமுடியாது. நோயாளியின் உடல்நிலை மற்றும் நோயின் அறிகுறியைத் தீர்மானிப்பவர் மருத்துவரே! மருத்துவரின் அறிவுரைப்படியே மருந்துகளைக் கையாள வேண்டும்.

இந்த இந்த நோய்களுக்கு இந்த இந்த மருந்துகளைப் (மருந்துப் பெயர்களைச் சுட்டி) பாவிக்கவேண்டாமென எச்சரிக்கலாம். இது பற்றி மருத்துவரின் அறிவுரையை நாடவும் எனக் குறிப்பிடலாம். எச்சரித்த பின்னும் மருந்துகளை வேண்டிப் பாவிப்போர் தான் குற்றவாளி எனலாம்.

முடிவாக "தன் (சுய) மருத்துவம் செய்யத் தூண்டாமலும் மருத்துவரின் மதியுரைப்படியே மருந்துகளைக் கையாள வேண்டுமென எச்சரித்தும் குறித்த மருந்துகளைப் பாவிப்பதனால் ஏற்படும் கேடுகளை வெளிப்படுத்தியும் அச்சு ஊடகப் படைப்புகளிலோ மின் ஊடகப் படைப்புகளிலோ மருந்துப் பெயர்களைக் கையாளலாம்." என்பதே என் கருத்து.

வியாழன், 18 மே, 2017

தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நூலினும் வலைத்தளமே பலமிக்கதெனும் ....

இனிய வலைப்பதிவர்களே!
எழுத்து
எழுதுவோருக்கும் வாசிப்போருக்கும்
இடையேயான உறவுப்பாலம் என்பேன்!
மதிப்புக்குரிய ரமணி ஐயா - தன்
கைவண்ணத்தால் - இனிய
பாவண்ணத்தால்
நல்லதொரு வழிகாட்டலை
இளைய பதிவர்களுக்கு வழங்கி
"வலைப்பூக்களில் எழுதலாம் வாங்க!" என்ற
என் விருப்பத்தையும் ஊக்கப்படுத்துகிறார்! - அவர்
பதிவில் மின்னும் எண்ணங்களை
நாம்மாளுங்க கருத்திற்கொண்டு - சிறந்த
உலகத் தமிழ் பதிவர்களில் ஒருவராக
முன்னேற உதவும் என்பதால் - இங்கே
நானும்
அவரது பதிவைப் பகிருகிறேன்!
பொத்தகங்களும் வலைப்பூக்களும்
அவற்றை நாடும் வாசகர் ஒப்பீடும் - அவரது
தூரநோக்குப் பார்வை என்பேன்! - அவரது
பதிவைப் படித்துப் பகிருவதோடு
பயன்பெற எனது வாழ்த்துகள்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா...: நூலினும் வலைத்தளமே பலமிக்கதெனும் ....:
ஆயிரம்  கவிதைகளை
நூறு கவிதைகள் ஒரு நூலெனத்
 தொகுத்திருந்தால்
 பத்துக்  கவிதைப் புத்தகங்கள்
 ஆகியிருக்கக் கூடும்
 ஒரு பதிப்புக்கு ஆயிரமென
 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...

SATURDAY, MAY 27, 2017
இந்த மணித்துளி வரை
வலைப்பூவைத் திறம்பட நடாத்தும்
.வலைப்பதிவர்கள் எல்லோரும்
ஊடக எழுத்தாளர்களை விட
சற்று உயர்வானவர்களே!
https://yaathoramani.blogspot.com/2017/05/blog-post_27.html



SUNDAY, JUNE 11, 2017
கவிதைத் தேர்வுக்குத்
தன்னைத்
தயார் செய்து கொள்ளும்படியான
கடும் பயிற்சியிலிருக்கின்றன
வார்த்தைகள் அனைத்தும்
https://yaathoramani.blogspot.com/2017/06/blog-post_11.html

கவிஞர்கள் விளையாடும் சொல்களுக்கு
பயிற்சிகளும் தேவையா?

செவ்வாய், 16 மே, 2017

நானும் பணமும்



நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
தொழிலின்றி வருவாயின்றி
நானும்  - அடிக்கடி
பிச்சைக்காரன் ஆகின்றேன்!

நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
நானும்  - அடிக்கடி
தோல்விகளையே சந்திக்கின்றேன்
கையூட்டு (இலஞ்சம்) வழங்கக் கூட
நாலு பணம் கையில் இல்லாமையாலே!

நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
என்னை நாடி வந்த பணமோ
எப்பவும் - அடுத்தவர்
கையைத் தானே காதலிக்கிறது!

நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
பணம் உள்ள வேளை
காதலிப்பதாக ஆயிரம் பெண்ணுங்க
எனது நிழலாகத் தொடர்ந்தாங்க...
பணம் இல்லாத வேளை
அன்பாய்ப் பழகத் தானும்
நல்ல நண்பரும் இல்லையே!

நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
நானும்  - அடிக்கடி
ஊருக்க தலைவராக இருந்தேன்!
பணம் இல்லை என்றதும்
தொண்டராகக் கூட - எவரும்
என்னைச் சேர்க்கிறாங்க இல்லையே!

நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
ஏனென்றால்
பணம் உள்ள வரை
என்னைப் பற்றிய உறவுகள்
பணம் இல்லாத போது
என்னை விட்டுப் பறக்கிற உறவுகள்
ஆச்சே! ஆச்சே!

நானும் பணத்தை விரும்புகிறேன்
ஆனால்,
பணம் என்னை வெறுக்கிறதே!
எப்படியோ,
அத்தி பூத்தாற் போல - என்னை
நாடி வரும் பணம் தான்
என்னை வாழ வைக்கிறதே!
ஏனென்றால் - அதுவும்
நாலு பணம் சேமிப்பில
நான் போட்டு வைச்சதாலே!


அத்தி - 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும்

ஞாயிறு, 14 மே, 2017

தாய், தந்தை நாளில்

"தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை" என
பூவை செங்குட்டுவன் எழுதிக் கொடுக்க
அகத்தியர் படத்தில
குன்னக்குடி வைத்தியநாதன் இசையில
T.K.கலா அவர்களும் பாடி இருந்தார்!
தாய் நாளில் தாயையும்
தந்தை நாளில் தந்தையையும்
வாழ்த்துவதோடு நின்றுவிடாமல்
அவர்களை
முதியோர் இல்லத்தில் தள்ளிவிடாமல்
முதுமையில்
தம்மடியில் வைத்துப் பேணுவோரே
உண்மையான பிள்ளைகள்!


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்

மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை


** பாடலில் வருவது போல பாடலடிகள் தொகுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 12 மே, 2017

இலங்கையில் "கன்னியா வெந்நீர் ஊற்று" பௌத்த உடமையா?

என் அறிவிற்கு எட்டிய அளவில் இராவணன் (இலங்கையை ஆண்ட தமிழரசன்) சிறந்த தாய் பற்றாளன். அவர் பண்டாரவளை சென்ற வேளை 'அல்ல' என்ற பகுதியில் தாய் குளிக்கத் தண்ணீர் இல்லை என்றதும் அங்குள்ள மலையைத் தனது வாளால் வெட்டி நீர் வீழ்ச்சியைப் பெற்றார். அவ்விடத்தை 'இராவணன் வெட்டு' என்கின்றனர்.


தலைநகரமான திருகோணமலையில இறந்த தனது தாயாரின் 31ஆவது நாள் சமய நிகழ்வுகளைச் செய்வதற்காக நீரைப் பெற இராவணன் தனது வாள் முனையால் ஏழு இடத்தில் குற்றினாராம். அவ்வேழும் வெவ்வேறு சூட்டு அளவில் வெந்நீர் ஊற்றாக அமைந்தது. அதுவே 'கன்னியா வெந்நீர் ஊற்று' எனப் பேசப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்துக்கள் இறந்தவர்களின் 31ஆம் நாள் சமய நிகழ்வுகளை கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் நிறைவேற்றி வந்தனர்.

இலங்கையில் 1944 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் 'பட்டிப்பளை' என்ற ஊரில் இருந்த தமிழரை வெளியேற்றினர். அவ்விடத்தில் சிங்கள மக்களைக் குடியேற்றிய பின் 'கல்லோயா' என அவ்விடத்திற்குப் பெயரையும் வைத்தனர். அதே சிங்கள ஆட்சியாளர்களே, 2017 இல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 'கன்னியா வெந்நீர் ஊற்று' என்ற பகுதியை சிங்கள இடமாக மாற்ற முயலுகின்றனர்.


"பௌத்தமயமாகும் கன்னியா வெந்நீர் ஊற்று" என்ற செய்தியைக் கீழ்வரும் இணைப்பில் படித்தேன். அவர்களது ஒளிஒலி (Video) இணைப்பையே மேலே பகிர்ந்துள்ளேன்.

மேற்படி செய்தியைப் படித்ததும் நான் கிறுக்கிய வரிகளைக் கீழே தந்துள்ளேன்.
தமிழா! கன்னியா போவது
சிங்களவர் கையுக்கா - அப்ப
தமிழன் வீழ்வது கடலிலா?
கந்தளாய்க் குளம் கட்டியது
குளக்கோட்ட மன்னன் - அதனை
பொறித்திருந்த குளக்கட்டுக் கல்லையே
பிடுங்கி எடுத்திட்டாங்க...
கன்னியாவில முட்டை அவித்து
அதன் செயலைத் தணித்தான்
சுற்றுலாப்பயணி (வெள்ளைக்காரன்)
கன்னியா ஊற்று தங்கடயென
சிங்களவரும் முழங்க வந்திட்டாங்க...
இனியும்
தமிழர் இடங்கள் பறிபோவதா?
ஈற்றில்
தமிழர் வீழ்வது கடலிலா?

இதற்கெல்லாம் அவர்களது (http://www.trincoinfo.com/2017/05/blog-post_86.html) ஒளிஒலி (Video) இணைப்பில் சுவிற்சலாந்து அரசியல் கட்டமைப்பையே இலங்கை இனச் சிக்கலுக்குத் தீர்வாக முன்வைக்கின்றனர். இதனை நானும் வரவேற்கிறேன். கீழ்வரும் இணைப்பில் எனது தீர்வையும் முன்வைத்துள்ளேன்.
ஐக்கிய இலங்கையைப் பேணும் பணி (United Sri Lanka Care Duty)

உலகம் அமைதி பேணினால்
ஐ.நா. தூங்கி விட்டால்
இலங்கைத் தமிழர் இடங்கள் பறிபோக
இலங்கைத் தமிழர் கடலில் வீழ்வதா?
உலகம் அமைதி பேணாது
ஐ.நா. விழித்து எழுந்து
இலங்கைத் தமிழர் இடங்கள் பறிபோவதை
தடுத்து நிறுத்தா விட்டால்
இலங்கைத் தமிழர்
கடலில் வீழ்வதைத் தவிர
வேறு வழியுமுண்டோ?

ஞாயிறு, 7 மே, 2017

உறவுகளே! இறுதி நாள் நெருங்கி வருகிறதே!

"வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்பாவாணன் வெளியீட்டகம் தனது தமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி ஊடாக "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிட முன்வந்திருக்கிறது. இதனை வலைவழியே உலகெங்கும் அன்பளிப்பாக (இலவசமாக) பகிரவுள்ளோம். இந்நூலுக்கான பதிவுகளை வலைப்பதிவர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

சிறந்த மூன்று பதிவுகளுக்குப் பரிசில் வழங்குகின்றோம். அதாவது, நன்நூல்.கொம் ஊடாகத் தாங்கள் விரும்பிய நூல்களைப் பெறப் பத்து டொலர் பெறுமதியான வெகுமதி தாள்கள் (Gift Certificates) சிறந்த மூன்று பதிவுகளை அனுப்பிய ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்." என்றவாறு

"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html " என்ற பதிவில் தெரிவிக்கப்பட்டது. பின்னர்
"கால நீடிப்பு - மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/05/2017.html " என்ற பதிவில்

May 15 ஆம் நாள் வரை இம்மின்நூலுக்கான உங்கள் பதிவுகளை அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 
(படம் கூகிளில் பொறுக்கியது)

சிறப்பாகத் தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு எனப் பத்துப் பதிவுகள் வந்து சேர்ந்துவிட்டன. கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைப் படிக்கலாம். அவற்றைப் படித்து உங்கள் கருத்துகளை வெளியிடலாம்.

உறவுகளே! உங்கள் பதிவுகளை அனுப்புவதற்கான இறுதி நாள் நெருங்கி வருகிறதே! அதாவது, 16/05/2017 இற்கு முன்னதாக உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும். சிறந்த பதிவுகளை நடுவர்களே தெரிவு செய்வர்.
" https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html " என்ற இணைப்பைச் சொடுக்கி அப்பதிவில் குறிப்பிட்டவாறு உங்கள் பதிவுகளை அனுப்பிவைக்க வேண்டும்.

வாசிப்பு மாதத்தை ஒட்டி நடாத்தப்படும் எமது "வாசிப்புப் போட்டி - 2017" இற்கு முன்னதாக இம்மின்நூல் வெளியிடப்பட்டு உலகங்கும் பகிரவுள்ளோம்.



சித்திரைப் புத்தாண்டு - கவிதைப் போட்டியில் பங்கெடுத்தாச்சா?

சமகாலச் சூழலை வைத்து 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் சித்திரைப் புத்தாண்டை ஒட்டி கவிதைப் போட்டி நடாத்துவதாக அறிவித்திருந்தது.

"என்னடி - உன்ர ஆள்
முற்றத்தில தட்டுக் காய விடுறாரு?"
"அவருக்குக் கறி சரியில்லையாமடி
வெயிலில தட்டுக் காய்ந்ததும்
முட்டை பொரிக்கப் போறாராமடி"
சித்திரை வெயில் வாட்டுது
பொண்ணுகள் இப்படிப் பேசுறாங்க!

என்றவாறு சமகாலச் சூழலை வைத்து நிறையக் கவிதை எழுதலாம். போட்டி இறுதி நாள் 10/05/2017. ஆமாம், உறவுகளே! உங்கள் கவிதைகளை அனுப்புவதற்கான இறுதி நாள் நெருங்கி வருகிறதே! இன்னும் பங்கெடுக்காதோர் இன்றே பங்கெடுக்க வாருங்கள்.
இப்பவே கிழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் போட்டி ஒழுங்கு முறைகளை படித்த பின், உங்கள் கவிதைகளை அனுப்பி வைக்கலாமே!

வெள்ளி, 5 மே, 2017

வாழ்க்கையில் சுகங்களைத் தேடிச் சாகலாமா?

வாழ்க்கையில் மகிழ்ச்சியான பொழுதுகளைத் தேடி அலைவதை விட, மகிழ்வான பொழுதுகளை நாம் தான் அமைக்க வேண்டும். நோய்களை எமது உடலில் வந்து குந்தியிருக்க விடாமல் தடுப்பதை விட, நோய்களே எமது உடலில் வந்து குந்தியிருக்க இடமளித்தால் மகிழ்ச்சி கிட்டுமா? இதனடிப்படையில் பதினெட்டு அகவை (Major) ஆனவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

ஆண், பெண் உடலமைப்பில் மாற்றங்கள் வந்ததும் (அகவைக்கு வந்ததும்) பாலியல் (Sex) உணர்வுகளும் தூண்டப்படும். ஆயினும் மக்களாயம் (Society) கண்காணிக்கும் என்ற அச்சமே தவறான வழிகளில் அவர்களைச் செல்லவிடாமல் தடுக்கிறது. எப்படியோ பதினெட்டு அகவை (Major) ஆனவர்கள் தவறு செய்யத் துணிந்தும் விடுகிறார்கள். வழமைக்கு மாறாக பதினெட்டு அகவை (Major) ஆகாமலே தவறு செய்பவர்களும் இருந்து விடலாம்.

அரசாங்கப் பதிவுப் பொத்தகத்தில் திருமணப் பதிவை மேற்கொண்ட இணையர்கள் மட்டுமே பாலியல் (Sex) எண்ணங்களைப் பகிர வேண்டும். ஏனையோர் பாலியல் (Sex) உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயலவேண்டும். இது மக்களாயக் (Society) கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவோ தங்களது நற்பெயரை ஈட்டவோ உதவும் என்பேன். இனித் திருமணமானவர்கள் "தாம் செய்யும் தவறுகளால் சாவை நாடுவதேன்?" என்று எண்ணிப் பார்ப்போம்.


 மணமுடித்த இணையர்களின் முதல் நாள் இரவில் (First Night) இருந்தே, அவர்கள் பாலியல் (Sex) எண்ணங்களைப் பகிர உரிமை பெற்று விடுகின்றனர். "சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை (Sex)" என்ற முதுமொழியின் படி அவர்களுக்கு எவரும் பாலியல் (Sex) சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அப்படியிருக்கையில் உளநல மதியுரைஞராக (Psychological Counsellor) நான் எதைச் சொல்ல முடியும்?

"மணவாழ்வில் பாலியல் (Sex) ஐயங்கள் இருப்பின் குடும்ப நல மருத்துவரை நாடவேண்டும். குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடவும் குடும்ப நல மருத்துவரின் மதியுரையைப் பின்பற்ற வேண்டும். அப்படி மருத்துவரை நாடியும் மருத்துவருக்குப் பொய் சொல்வதால் சாவைச் சந்திக்க வேண்டி வரலாம்." என்பதையே நான் சொல்ல வந்தேன்.

எடுத்துக்காட்டாக மணமுடித்த இணையருக்குக் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட எண்ணியிருந்தும் குழந்தை கருத்தரித்து விடுகிறது. கருத்தரித்து நூறு நாளை நெருங்கியதும் மருத்துவரை நாடிக் கருக்கலைப்புச் செய்யச் சிலர் முனைகின்றனர்.

அவ்வேளை "எவ்வளவு காலம் மாதவிலக்கு (Period) வரவில்லை?" என்றதும் "ஒன்றரை மாதம் அல்லது இரண்டு தடவை" எனப் பதிலளித்து விடுகின்றனர். மருத்துவரும் கருக்கலைப்புச் (Abortion) செய்ததும் அதிக குருதிப் பெருக்கால் குறித்த பெண்ணும் சாவடைந்து விடுகிறாள். இவ்வாறான சாவு தொண்ணூறு நாள்களின் பின் கருக்கலைப்புச் (Abortion) செய்வதால் ஏற்படுகிறது. எனவே, மருத்துவருக்குப் பொய் சொல்லிச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

எனது தூரத்து உறவுக்காரக் குடும்பத்தில் நிகழ்ந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது. அக்குடும்பத்தில் இணையர்கள் இருவரும் படித்தவர்கள். அடிக்கடி வெளியிடங்களுக்கு மாநாடுகளுக்கு (Conferences) சென்று வருவர்.

அவ்வேளை மணமகளோ மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போட (Period Delay Tablet) மருந்துண்டு வந்திருக்கிறார். அதற்காக நோர்திஸ்ரரோன் (Norethisterone) மருந்து பாவிக்கப்படுவதாகத் தகவல்; மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்துங்கள். ஆனால், குறித்த பெண் மாதவிலக்கைத் தள்ளிப்போட என்ன மருந்துண்டார் என்பதை நானறியேன்.

ஆயினும் குறித்த பெண் கருப்பைப் புற்றுநோய் வந்து சாவடைந்த பின்னரே, இந்த உண்மை கசிந்தது. மருத்துவர் வழிகாட்டலின்றி மருந்துக்கடையில (Pharmacy) இவ்வாறான தேவைகளைச் சொல்லி மருந்துண்போருக்கு இச்சாவு நல்ல பாடமாக இருக்கட்டும்.

அடுத்து ஆண்களின் தவறான நடவடிக்கையில் ஒன்று ஆண்மைக் குறைவைப் போக்குமென ஊக்கமருந்தாக வயாக்ராவைப் (Viagra) பாவித்தல் ஆகும். இவர்களும் மருத்துவரை நாடாமல் இதனைப் பாவிப்பதால் சாவைச் சந்திக்கின்றனர்.

இந்த மருந்தைப் பாவிப்பதால் ஆண்களின் குருதிக் குழாய்கள் விரிவடையும். அவ்வேளை குருதி விரைவாகப் பாய ஆண்மை வலுப்பெறுகிறது. இதனால் இருதய (Heart) நோயுள்ள ஒருவரின் உயிரைக் குடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, மருத்துவரின் மதியுரையைப் பெறாமல் வயாக்ரா (Viagra) பாவித்துச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அடடே! "பெண்களுக்கு வயாக்ரா (Viagra) இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம். ஃபிலிபான்செரின் (Flibanserin) என்ற பெயரில் இருக்கிறதாம். இது பெண்களின் முளையில் வேதியல் மாற்றங்களைத் தூண்டிவிடுமாம். இதனால், பெண்களின் உடலில் பாலியல் இச்சையைக் கூட்டிவிட முடிகிறதாம். இதுவும் பக்க விளைவுகள் நிறைந்த உயிரைக் குடிக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. பெண்களும், மருத்துவரின் மதியுரையைப் பெறாமல் இதனைப் பாவித்துச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

"பெண்களைக் கற்பளிப்புச் செய்த பின் தப்பித்துக் கொள்ளவும் றோஹைப்னொல் (Rohypnol) என்ற மருந்து பயன்படுகிறதாம். எளிதில் நீரில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தைப் பெண்ணுக்கு நீரில் கரைத்துக் கொடுத்ததும் சிறிது நேரத்தில் போதை ஏறி விடுமாம். இந்நிலை 11 - 12 மணி நேரம் வரை நீடிக்குமாம். சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு அப்பெண் வந்து விடுவாளாம்.

இதனால் பெறுமதியான அணிகலன்களைப் பறிகொடுக்கவும் தமது கற்பை இழக்கவும் வாய்ப்புண்டாம். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணுச் சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க இயலாதாம். அதைவிடக் கொடுமை இதனை உண்ட பெண் தன் வாழ்வில் தாய்மை அடையவே இயலாதாம். இதனைத் தொடர்ந்து உண்டால், குறித்த பெண் இதற்கு அடிமையாகி விடுவாராம். மருத்துவர்களின் கருத்துப்படி, பக்க விளைவுகள் நிறையவே உண்டாம்." என்றவாறு நண்பரொருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

றோஹைப்னொல்(Rohypnol) என்ற மருந்துச் செய்தி பொய்யா? மெய்யா? உங்களுக்குத் தெரிந்த குடும்பநல மருத்துவர்களிடம் இச்செய்தியைச் சொல்லி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துங்கள். அதன் பின் அவர்களின் மதியுரையைப் பெற்று, முற்காப்பு எடுத்து வாழ முயலுங்கள். பெண்களே! மிகவும் கவனமாகத் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

சொத்தை இழந்தால் வேண்டிக்கொள்ள இயலும். கற்பை இழந்தால் வேண்டிக்கொள்ள இயலாதே! இது பற்றிக் கணவன்மாரும் கவனமாக இருக்க வேண்டும். காமவெறியர்களின் கருவியாகவோ நீலப்படம் (Blue Film) எடுப்போரின் கருவியாகவோ ஈழத்தில் தமிழின அழிப்புக் கருவியாகவோ றோஹைப்னொல்(Rohypnol) என்ற மருந்து அமைந்துவிடாமல் பொறுப்புள்ள எல்லோரும் விழிப்பாக இருங்கள். உலகெங்கும் இந்த உண்மையைப் பறை சாற்றுங்கள்.

மகிழ்ச்சியான வாழ்வு தானே எமக்குத் தேவை. காத்திருந்து, காத்திருந்து அரசாங்கப் பதிவுப் பொத்தகத்தில் திருமணப் பதிவை மேற்கொண்டு குடும்பமானதும் பாலியல் (Sex) உறவும் மகிழ்வும் கிட்டாமல் இப்படிச் சாகவேண்டாம். வீணே வேண்டாத மருந்துகளை நாடிப் போய்ச் சாவது சரியாமோ?

உயிரைக் குடிக்கும் மருந்துகளைப் பற்றிச் சொல்லிவிட்டு நானும் ஓடித் தப்ப இயலாதே! மருந்துகளின் பெயரைச் சுட்டியது எவரும் வேண்டிச் சாவென்று வழிகாட்ட அல்ல. மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் (Pharmacist) மருத்துவர் விரிப்புத் தாள் (Doctor's Description) இன்றி இவ்வாறான உயிரைக் குடிக்கும் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்பதை நினைவில் நிறுத்தவே! 

இலங்கையில் பேரினம் சிற்றினத்தை அழிக்க இம்மருந்துகளை ஊக்கப்படுத்தலாம். வெவ்வேறு சாட்டுதலுடன் வெளிநாடுகளில் இம்மருந்துகளை ஊக்கப்படுத்தலாம். எப்படியிருப்பினும் இம்மருந்துகளுக்குத் தடை வேண்டும். ஆனால், அரசு இம்மருந்துகளைத் தடை செய்ய முன்வருமா? இல்லையாயின், இம்மருந்துகளுக்கு எதிராகப் போராட வேண்டும். அதனை மேற்கொள்ள எவரிணைவார்?

ஆக மொத்தத்தில, தமிழர் பண்பாட்டையும் இயற்கைக் கட்டமைப்பையும் ஏற்று இம்மருந்துகளைக் கையாளாமல் வாழப் பழக வேண்டும். வயாக்ரா (Viagra) தேவை என்றால் அதற்கு ஈடான மருந்தை நான் தருகின்றேன். அதாவது, முதலில கொழுப்புணவை குறைத்து உண்ணுங்கள். அடுத்து உணவில் முருங்கைக்காய் (வயாக்ரா (Viagra) இற்கு ஈடான மருந்து முருங்கையே) கறி சேர்க்கவும். அடுத்து ஒவ்வொரு நாளும் 2km விரைவாக நடக்கலாம், 5km மிதிவண்டியில் மிதிக்கலாம், 5min துள்ளலாம், 10min உடற்பயிற்சி செய்யலாம்.

பாவரசர் கண்ணதாசன் "இரண்டடக்கேல்" என இருபாலாருக்கும் வழிகாட்டியுள்ளார். அதாவது மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கக்கூடாது. அதனால், உடலுக்குத் தீங்கு தான் ஏற்படும். அவ்வாறு தான் மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போடுதலும் ஆகும். மருந்துண்டு மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போட்டால் இயற்கைச் சுழற்சியை மாற்றுகிறோம். அதனால், உடலியல் இயற்கை அமைப்புக்குக் கேடு செய்கிறோம். நேர் விளைவும் பக்க விளைவும் சேர்ந்து நோய்களைத் தான் தருமே! மாதவிலக்கு (Period) வரும் நாள்களைக் கருத்திற்கொண்டு, அதற்கேற்ப நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடரவேண்டும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்
(அதிகாரம்: ஒழுக்கமுடைமை, குறள் எண்: 131)

"ஒழுக்கமே எல்லோருக்கும் உயர்வைத் (நன்மதிப்பைத்) தரும், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்." என்ற வள்ளுவரின் வழிகாட்டலைப் பின்பற்றுவோம்.

எப்பவும் பாருங்கோ...
ஒருவனுக்கு ஒருத்தி மட்டும் போதாதா?
ஒழுக்கம் கொஞ்சம் பேணவும் வேண்டுமே!
இயற்கையை ஏற்று
இசைந்து போகக் கற்க வேண்டுமே!
இயற்கையோடு இசைந்த
இல்லற வாழ்வே இனிய வாழ்வு!

முடிவாகச் சொல்வதற்கு ஒன்றுண்டு. தன் (சுய) மருத்துவம் தன்னையே கொல்லும். மருத்துவரின் மதியுரைப் படியே மருந்துகளை உண்ணவும் வேண்டும். எனவே, மணவாழ்வில் பாலியல் (Sex) ஐயங்கள் இருப்பின் குடும்ப நல மருத்துவரை நாடித் தீர்க்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சியான வாழ்வை, நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.