Translate Tamil to any languages.

ஞாயிறு, 3 மார்ச், 2024

எங்கே போகிறோம்

 02-03-2024 சனி மாலை 3 மணிக்கு யாழ் சரசுவதி (ராஜா கிறீம் ஹவுஸ்) மண்டபத்தில் மட்டுநகர் நீலையூர் சுதாகரனின் "கொத்துவேலி" பொத்தக அறிமுக விழாவில் "எங்கே போகிறோம்" என்ற தலைப்பில் பாடப்பட்ட என் கவிதை.

யாழிசைக் கவித்தடாகம் ஒருங்கிணைத்து வழங்கும்

"கொத்துவேலி" பொத்தக அறிமுக விழாவிலே

"எங்கே போகிறோம்" என்ற தலைப்பிலே

கவிதை அரங்கேறும் நிகழ்வூம் ஒன்றாச்சு!


பொன்னான கவியரங்கத் தலைவராக மின்னும்

பாவலர் உடுவிலுhர் கலா அவர்களுக்கு வணக்கம்!

பல்துறை ஆற்றலாளர் இவரென்று பறைசாற்ற

பத்துக்குமேலிவர் வெளியிட்ட பொத்தகங்களே சான்று!


இலக்கிய நாட்டமுடன் விழாவைச் சிறப்பிக்க

வருகை தந்துள்ள எல்லோருக்கும் வணக்கம்!

அரங்கையே அதிரவைக்கக் கவிபாட வந்திருக்கும்

பெருங்கவிஞர் எல்லோருக்கும் வணக்கம்!


நானோ தமிழறிவில் சின்னப்பொடியன் தான்

என்னையூமொரு பொருட்டாக எண்ணித் தான்

"எங்கே போகிறோம்" என்ற தலைப்பில் பாடத் தான்

இங்கே என்னையூம் அழைத்த உறவூகளுக்கு

நன்றியைக் கூறிக்கொண்டு நானும் தொடருகிறேன்.


எங்கே போகிறோம்


எந்நாளும் ஊருலகிற்கு என்னை அடையாளப்படுத்த 

எந்நேரமும் எல்லோரும் என்னோடு உரையாட

என்நாவால் ஒலிக்கும் தாய்மொழியாம் தமிழுக்கு

என்னுள்ளம் நிறைந்த நன்றியைக் கூறிக்கொண்டு

கதையை விதைக்கும் கவிதை வரிகளாய்

"எங்கே போகிறோம்" என்றவாறு தொடருகிறேன்.


எந்தனுhர் எல்லையிலே செந்தமிழ் விழாவாம்

வந்த பகலவன் செல்லும் வேளை தான்

இருள் சூழும் பொழுது பார்த்துத் தான்

வருவோர் போவோர் நிறையூம் அரங்கில் தான்

குத்துவிளக்கில் ஒளியேற்றி விழாவூம் தொடங்கியாச்சு!


எச்சூழலில் எப்படி வருவதென அறியாமல்

அச்சூழலில் வந்தாரைக் கண்டால் கண்கூசும்

மேலைநாட்டுப் பண்பாட்டு ஆடைகளை உடுத்தி

வேலைக் கடுமையெனத் தமிழர் பண்பாட்டை

காற்றிலே பறக்க விட்டிட்டு வந்தவர் தான்

பேச்சிலே பிறமொழிகளையே கலப்பாகப் பேசினர்

நாம்தமிழர் என்போராம் நம்தமிழைப் பேசவில்லையே!

நாம்தமிழர் நடாத்திய தமிழ்விழாக் காட்சியிதுவோ!!


நம்தமிழைப் பேணும் பற்றாளர் பரிசினைப் பெற

நம்தமிழர் ஒருவரை அரங்கிலேற அழைக்கையிலே

தமிழர் பண்பாட்டைப் பேணாத ஆடையூடுத்தி

தமிழ்விழா அரங்கிலே பரிசில்பெறப் போகலாமோ?

பார்த்தோர் காதுகிழிய முணுமுணுத்தனர் ஆங்கே!

பார்ப்போரில் வானிலிருந்து வந்திறங்கிய நக்கீரராம்

"எங்கே போகிறோம்" என்றுரக்கக் கேட்டாராம்

அங்கே அடுத்தகணம் அவருயிர் போச்சுதாம்! 


பிறந்த நாள், திருமண நாள் என

சிறப்பான நிகழ்வூகள் எதுவானாலும்

விருந்தளித்து வந்தாரை வரவேற்பது வழக்கமே!

விருந்தாகப் பதினெட்டுக் கறிகளும் ஊரரிசிச் சோறும்

விருந்துண்ணும் அரங்கிலே நிரையில் அடுக்கியாச்சு!

விருந்துக்குமுன் வந்தாரும் குடிக்கவூம் ஏற்பாடாம்

ஆணுக்குப் பெண் நிகரென்று காட்டவே

ஆணும் பெண்ணும் குளிர்பானம் குடித்தனராம்!


விருந்துண்ண வாவென்று சொன்னதும் விரைவாய் 

விருந்துண்ணக் குடித்தாரும் தள்ளாடி வந்தனராம்

ஒழுங்கான நிரையிலடுக்கிய உணவூத் தாங்கிகள்

ஒழுங்கில் வந்த தள்ளாடிகளும் தள்ளாடியதால்

உணவூண்ணும் அரங்கிலே விழுந்துணவைச் சிந்தின!

உணவெல்லாம் சிந்திச்சிதறிக் கிடந்ததைக் கண்ட

குண்டூசியாலே சிந்தியசோற்றை குத்திப்பொறுக்கித் தின்ற

வள்ளுவரும் வானிலிருந்து வந்திறங்கிப் பார்த்திட்டு

"எங்கே போகிறோம்" என்றே கத்திச் செத்தாராம்!


முழுவூலகைத் தமிழர் ஆண்டது பேச்சானாலும்

அரையூலகைத் தமிழர் ஆண்டது எழுத்திலே

'கடல் கொண்ட தென்னாடு' என்ற பொத்தகமாய்

கா.அப்பாத்துரை அவர்கள் வெளியிட்டாராம்!

தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு பேசி

தமிழே செம்மொழி என்று முழங்கும் - நாம்

எம்கண் முன்னே எம் அடையாளம்

எம்மவரால் சிதைக்கப்படுவதைக் கண்டும் கூட

"எங்கே போகிறோம்" என்றுணரத் தான்

எத்தனை மணித்துளிகள் எடுக்கப் போகின்றது?


நன்றி.