Translate Tamil to any languages.
1-உளநலப் பேணுகைப் பணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
1-உளநலப் பேணுகைப் பணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மார்ச், 2026

மருத்துவரை நாடுங்கள்


சுய(தன்) மருத்துவம் கூடாது.

மருந்து விற்பனை நிலையங்களில் நோயைச் சொல்லி மருந்து வாங்கக்கூடாது. என்றெல்லாம் பெரியோர் உங்களுக்குச் சொல்லித் தந்திருப்பர்.

சமூக ஊடகங்களில் மருந்துப் பொருள் விளம்பரம் அதிகம். அதனை நம்பி மருந்து வாங்கிப் பாவிக்கக்கூடாது.

தங்கள் நோய்க்கு மருந்தா?

விளம்பரம் சொல்லும் மருந்துக்கு நோயா?

சிந்தித்துப் பாருங்கள்.

தங்கள் நோய்க்கு மருந்து தேவையாயின் மருத்துவரை நாடுங்கள்.

விளம்பரம் சொல்லும் மருந்துக்கு நோய் வந்ததாகக் கருதினால் சாவு தான் வரும்.

விளம்பரதாரரோ மருந்துக் கடைக்காரரோ  தெருவோர வழிகாட்டியோ  தங்கள் உடலைப் பரிசோதித்து எந்த நோய்? எப்படி வந்தது? எந்த மருந்து, தங்கள் உடலுக்கு ஒத்துழைக்கும்? என்றெல்லாம் ஆய்வு செய்ய மாட்டார்களே! இந்தக் கேள்விகளுக்கு மருத்துவர் ஒருவராலேயே தீர்வு தரமுடியும்.

சிந்திக்க ஒரு மணித்துளி (நிமிடம்)!

மருத்துவரை அணுகித் தங்கள் நோயை விளங்கப்படுத்தி, மருத்துவ சோதனைகளைச் செய்து, மருத்துவர் கூறும் வழிகாட்டலின் படி மருந்தை வாங்கிப் பயன்படுத்துவதே நீண்ட ஆயுளுக்கு வழி! நானும் மருத்துவரை நாடி மாற்றார் நோயின்றி நீடூழி வாழ வழிகாட்டும் ஒருவர் என்பதனால் இதனைப் பதிவு செய்கிறேன்.

எனது கருத்தை ஏற்றுக்கொண்டால் இப்பதிவைப் பலருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.

காசி.ஜீவலிங்கம் (யாழ்ப்பாவாணன்) +94703445441

வியாழன், 25 டிசம்பர், 2025

உள(மன) விருப்பம்

 



"எப்படிப்பட்ட பெண்ணை நீ விரும்புகின்றாய்?" என்று ஒரு ஆணிடம் கேட்டு பார்த்தேன்.

"தன் உள்ளத்தை தொட்ட, தன் உள்ளத்தில் குந்தி இருக்கின்ற, தன் உள்ளம் விரும்புகின்ற ஒருத்தி அகப்பட்டால் அவளை விரும்புவதாக..." அந்த ஆணும் சொன்னார்.


"எப்படிப்பட்ட ஆணை நீ விரும்புகின்றாய்?" என்று ஒரு பெண்ணிடம் கேட்டு பார்த்தேன்.

"தன் உள்ளத்தை தொட்ட, தன் உள்ளத்தில் குந்தி இருக்கின்ற, தன் உள்ளம் விரும்புகின்ற ஒருவன் அகப்பட்டால் அவனை விரும்புவதாக..." அந்தப் பெண்ணும் சொன்னார்.

இருவரது பதிலும் உள்ள (மன) ப் பொருத்தம் இருந்தால் ஒருவரை ஒருவர் விரும்புவதாகத் தெரிவிக்கிறது. அந்த உள்ள (மன) ப் பொருத்தம் எப்படி அமைகின்றது என்று நீங்களும் கேட்கலாம் தானே!

ஒருவரது எண்ணம், எதிர்பார்ப்பு, இலக்கு, விருப்பம், வெறுப்பு, நடத்தை போன்ற எல்லாவற்றிலும் ஒத்துப்போகக்கூடிய இன்னொருவர் இருப்பின் அவர்களுக்கு இடையே உள(மன)ப் பொருத்தம் இருக்கிறது எனலாம்.

காதலன் - காதலி, கணவன் - மனைவி போன்ற இணையர்கள் இணைந்து ஒரே நேர்கோட்டில் பயணிப்பது போல் வாழ்ந்தால் உள்ளம் (மனம்) ஒத்து வாழ்வதாகக் குறிப்பிடலாம். இருவரும் இருவேறு வழியில் பயணித்தால், உள்ளம் (மனம்) ஒத்துப்போகாமல் வாழ்வதாகக் குறிப்பிடலாம்.

உளநல மதியுரை பெற விரும்பின் 094 0703445441 இலக்கம் ஊடாக சிக்னல் செயலி வழி பெறலாம்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

2023 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் தானே!

 

 
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர் எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

2023 இல் எனது 'தன் முன்னேற்ற வழிகள் (Ways of Self Improvement)' வலையொளிப் பக்கம் https://www.youtube.com/@kasi.jeevalingam தொடங்கியுள்ளேன். அதில் வரும் தகவலை வாசிக்க https://mhcd7.wordpress.com/ என்ற இணைப்பைச் சொடுக்கலாம்.




"2023 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் தானே!" என்ற நம்பிக்கையில் வலைப்பதிவுகளை அதிகம் பகிர எண்ணியுள்ளேன். 


திங்கள், 8 பிப்ரவரி, 2021

நம்பிக்கை

தங்களைப் பற்றிச் சொன்ன பிறகும்

எங்களைப் பற்றி விசாரிக்கும் ஆளை

உங்களுக்குத் தெரியுமா என்று கேட்போம்

எங்களுக்கு நம்பிக்கை வரவேண்டும் என்று!

தங்களைப் பற்றி ஏதும் சொல்லாமல்

எங்களைப் பற்றி விசாரிக்கும் ஆளை

உங்களுக்கு எப்படித் தெரியும்? - அவர்களால்

எங்களுக்குச் சிக்கல் வரலாம் காண்!

நம்பிக்கை தானொருவர் நம்பிக்கை வைக்கத்தான்

நம்பிக்கை தந்திடும் காண்!

                 (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

 

நம்பக்கூடியவராக வெளிப்படுத்தும் ஒருவரை

நம்பத்தான் முடிந்தாலும் கூட - அவர்

நம்பக்கூடியவராக நடிக்கவில்லை என்றபின்

நம்பாமல் தான் இருக்க முடியுமா?



உள்ளத்தில் நொந்தபின் உள்ளத்தை நோகடிக்க

உள்ளத்தில் எண்ணாமை நன்று

                (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

உன்னுள்ளம் நொந்த பின்னாவது

மாற்றார் உள்ளத்தை நோகடிக்க

உன்னுள்ளத்தில் எண்ணாமல் இருப்பது நன்று.

உள்ளத்தை நோகடிப்பது

உள்ளப் புண்ணைத் தோற்றுவிக்கும்

உள்ளம் நொந்த பின்னாவது உணர்.

வெள்ளி, 5 மே, 2017

வாழ்க்கையில் சுகங்களைத் தேடிச் சாகலாமா?

வாழ்க்கையில் மகிழ்ச்சியான பொழுதுகளைத் தேடி அலைவதை விட, மகிழ்வான பொழுதுகளை நாம் தான் அமைக்க வேண்டும். நோய்களை எமது உடலில் வந்து குந்தியிருக்க விடாமல் தடுப்பதை விட, நோய்களே எமது உடலில் வந்து குந்தியிருக்க இடமளித்தால் மகிழ்ச்சி கிட்டுமா? இதனடிப்படையில் பதினெட்டு அகவை (Major) ஆனவர்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

ஆண், பெண் உடலமைப்பில் மாற்றங்கள் வந்ததும் (அகவைக்கு வந்ததும்) பாலியல் (Sex) உணர்வுகளும் தூண்டப்படும். ஆயினும் மக்களாயம் (Society) கண்காணிக்கும் என்ற அச்சமே தவறான வழிகளில் அவர்களைச் செல்லவிடாமல் தடுக்கிறது. எப்படியோ பதினெட்டு அகவை (Major) ஆனவர்கள் தவறு செய்யத் துணிந்தும் விடுகிறார்கள். வழமைக்கு மாறாக பதினெட்டு அகவை (Major) ஆகாமலே தவறு செய்பவர்களும் இருந்து விடலாம்.

அரசாங்கப் பதிவுப் பொத்தகத்தில் திருமணப் பதிவை மேற்கொண்ட இணையர்கள் மட்டுமே பாலியல் (Sex) எண்ணங்களைப் பகிர வேண்டும். ஏனையோர் பாலியல் (Sex) உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயலவேண்டும். இது மக்களாயக் (Society) கண்காணிப்பில் இருந்து தப்பிக்கவோ தங்களது நற்பெயரை ஈட்டவோ உதவும் என்பேன். இனித் திருமணமானவர்கள் "தாம் செய்யும் தவறுகளால் சாவை நாடுவதேன்?" என்று எண்ணிப் பார்ப்போம்.


 மணமுடித்த இணையர்களின் முதல் நாள் இரவில் (First Night) இருந்தே, அவர்கள் பாலியல் (Sex) எண்ணங்களைப் பகிர உரிமை பெற்று விடுகின்றனர். "சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை (Sex)" என்ற முதுமொழியின் படி அவர்களுக்கு எவரும் பாலியல் (Sex) சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை. அப்படியிருக்கையில் உளநல மதியுரைஞராக (Psychological Counsellor) நான் எதைச் சொல்ல முடியும்?

"மணவாழ்வில் பாலியல் (Sex) ஐயங்கள் இருப்பின் குடும்ப நல மருத்துவரை நாடவேண்டும். குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடவும் குடும்ப நல மருத்துவரின் மதியுரையைப் பின்பற்ற வேண்டும். அப்படி மருத்துவரை நாடியும் மருத்துவருக்குப் பொய் சொல்வதால் சாவைச் சந்திக்க வேண்டி வரலாம்." என்பதையே நான் சொல்ல வந்தேன்.

எடுத்துக்காட்டாக மணமுடித்த இணையருக்குக் குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட எண்ணியிருந்தும் குழந்தை கருத்தரித்து விடுகிறது. கருத்தரித்து நூறு நாளை நெருங்கியதும் மருத்துவரை நாடிக் கருக்கலைப்புச் செய்யச் சிலர் முனைகின்றனர்.

அவ்வேளை "எவ்வளவு காலம் மாதவிலக்கு (Period) வரவில்லை?" என்றதும் "ஒன்றரை மாதம் அல்லது இரண்டு தடவை" எனப் பதிலளித்து விடுகின்றனர். மருத்துவரும் கருக்கலைப்புச் (Abortion) செய்ததும் அதிக குருதிப் பெருக்கால் குறித்த பெண்ணும் சாவடைந்து விடுகிறாள். இவ்வாறான சாவு தொண்ணூறு நாள்களின் பின் கருக்கலைப்புச் (Abortion) செய்வதால் ஏற்படுகிறது. எனவே, மருத்துவருக்குப் பொய் சொல்லிச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

எனது தூரத்து உறவுக்காரக் குடும்பத்தில் நிகழ்ந்த ஒன்றைப் பகிர விரும்புகிறேன். இந்த நிலை எவருக்கும் வரக்கூடாது. அக்குடும்பத்தில் இணையர்கள் இருவரும் படித்தவர்கள். அடிக்கடி வெளியிடங்களுக்கு மாநாடுகளுக்கு (Conferences) சென்று வருவர்.

அவ்வேளை மணமகளோ மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போட (Period Delay Tablet) மருந்துண்டு வந்திருக்கிறார். அதற்காக நோர்திஸ்ரரோன் (Norethisterone) மருந்து பாவிக்கப்படுவதாகத் தகவல்; மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்துங்கள். ஆனால், குறித்த பெண் மாதவிலக்கைத் தள்ளிப்போட என்ன மருந்துண்டார் என்பதை நானறியேன்.

ஆயினும் குறித்த பெண் கருப்பைப் புற்றுநோய் வந்து சாவடைந்த பின்னரே, இந்த உண்மை கசிந்தது. மருத்துவர் வழிகாட்டலின்றி மருந்துக்கடையில (Pharmacy) இவ்வாறான தேவைகளைச் சொல்லி மருந்துண்போருக்கு இச்சாவு நல்ல பாடமாக இருக்கட்டும்.

அடுத்து ஆண்களின் தவறான நடவடிக்கையில் ஒன்று ஆண்மைக் குறைவைப் போக்குமென ஊக்கமருந்தாக வயாக்ராவைப் (Viagra) பாவித்தல் ஆகும். இவர்களும் மருத்துவரை நாடாமல் இதனைப் பாவிப்பதால் சாவைச் சந்திக்கின்றனர்.

இந்த மருந்தைப் பாவிப்பதால் ஆண்களின் குருதிக் குழாய்கள் விரிவடையும். அவ்வேளை குருதி விரைவாகப் பாய ஆண்மை வலுப்பெறுகிறது. இதனால் இருதய (Heart) நோயுள்ள ஒருவரின் உயிரைக் குடிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, மருத்துவரின் மதியுரையைப் பெறாமல் வயாக்ரா (Viagra) பாவித்துச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அடடே! "பெண்களுக்கு வயாக்ரா (Viagra) இல்லையா?" என்று நீங்கள் கேட்கலாம். ஃபிலிபான்செரின் (Flibanserin) என்ற பெயரில் இருக்கிறதாம். இது பெண்களின் முளையில் வேதியல் மாற்றங்களைத் தூண்டிவிடுமாம். இதனால், பெண்களின் உடலில் பாலியல் இச்சையைக் கூட்டிவிட முடிகிறதாம். இதுவும் பக்க விளைவுகள் நிறைந்த உயிரைக் குடிக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. பெண்களும், மருத்துவரின் மதியுரையைப் பெறாமல் இதனைப் பாவித்துச் சாவடைய வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

"பெண்களைக் கற்பளிப்புச் செய்த பின் தப்பித்துக் கொள்ளவும் றோஹைப்னொல் (Rohypnol) என்ற மருந்து பயன்படுகிறதாம். எளிதில் நீரில் கரையக் கூடிய சுவையற்ற இம்மருந்தைப் பெண்ணுக்கு நீரில் கரைத்துக் கொடுத்ததும் சிறிது நேரத்தில் போதை ஏறி விடுமாம். இந்நிலை 11 - 12 மணி நேரம் வரை நீடிக்குமாம். சொல்வதை எல்லாம் கேட்கும் நிலைக்கு அப்பெண் வந்து விடுவாளாம்.

இதனால் பெறுமதியான அணிகலன்களைப் பறிகொடுக்கவும் தமது கற்பை இழக்கவும் வாய்ப்புண்டாம். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணுச் சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க இயலாதாம். அதைவிடக் கொடுமை இதனை உண்ட பெண் தன் வாழ்வில் தாய்மை அடையவே இயலாதாம். இதனைத் தொடர்ந்து உண்டால், குறித்த பெண் இதற்கு அடிமையாகி விடுவாராம். மருத்துவர்களின் கருத்துப்படி, பக்க விளைவுகள் நிறையவே உண்டாம்." என்றவாறு நண்பரொருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார்.

றோஹைப்னொல்(Rohypnol) என்ற மருந்துச் செய்தி பொய்யா? மெய்யா? உங்களுக்குத் தெரிந்த குடும்பநல மருத்துவர்களிடம் இச்செய்தியைச் சொல்லி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துங்கள். அதன் பின் அவர்களின் மதியுரையைப் பெற்று, முற்காப்பு எடுத்து வாழ முயலுங்கள். பெண்களே! மிகவும் கவனமாகத் தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.

சொத்தை இழந்தால் வேண்டிக்கொள்ள இயலும். கற்பை இழந்தால் வேண்டிக்கொள்ள இயலாதே! இது பற்றிக் கணவன்மாரும் கவனமாக இருக்க வேண்டும். காமவெறியர்களின் கருவியாகவோ நீலப்படம் (Blue Film) எடுப்போரின் கருவியாகவோ ஈழத்தில் தமிழின அழிப்புக் கருவியாகவோ றோஹைப்னொல்(Rohypnol) என்ற மருந்து அமைந்துவிடாமல் பொறுப்புள்ள எல்லோரும் விழிப்பாக இருங்கள். உலகெங்கும் இந்த உண்மையைப் பறை சாற்றுங்கள்.

மகிழ்ச்சியான வாழ்வு தானே எமக்குத் தேவை. காத்திருந்து, காத்திருந்து அரசாங்கப் பதிவுப் பொத்தகத்தில் திருமணப் பதிவை மேற்கொண்டு குடும்பமானதும் பாலியல் (Sex) உறவும் மகிழ்வும் கிட்டாமல் இப்படிச் சாகவேண்டாம். வீணே வேண்டாத மருந்துகளை நாடிப் போய்ச் சாவது சரியாமோ?

உயிரைக் குடிக்கும் மருந்துகளைப் பற்றிச் சொல்லிவிட்டு நானும் ஓடித் தப்ப இயலாதே! மருந்துகளின் பெயரைச் சுட்டியது எவரும் வேண்டிச் சாவென்று வழிகாட்ட அல்ல. மருந்துக் கடைகளில் மருந்தாளுநர் (Pharmacist) மருத்துவர் விரிப்புத் தாள் (Doctor's Description) இன்றி இவ்வாறான உயிரைக் குடிக்கும் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்பதை நினைவில் நிறுத்தவே! 

இலங்கையில் பேரினம் சிற்றினத்தை அழிக்க இம்மருந்துகளை ஊக்கப்படுத்தலாம். வெவ்வேறு சாட்டுதலுடன் வெளிநாடுகளில் இம்மருந்துகளை ஊக்கப்படுத்தலாம். எப்படியிருப்பினும் இம்மருந்துகளுக்குத் தடை வேண்டும். ஆனால், அரசு இம்மருந்துகளைத் தடை செய்ய முன்வருமா? இல்லையாயின், இம்மருந்துகளுக்கு எதிராகப் போராட வேண்டும். அதனை மேற்கொள்ள எவரிணைவார்?

ஆக மொத்தத்தில, தமிழர் பண்பாட்டையும் இயற்கைக் கட்டமைப்பையும் ஏற்று இம்மருந்துகளைக் கையாளாமல் வாழப் பழக வேண்டும். வயாக்ரா (Viagra) தேவை என்றால் அதற்கு ஈடான மருந்தை நான் தருகின்றேன். அதாவது, முதலில கொழுப்புணவை குறைத்து உண்ணுங்கள். அடுத்து உணவில் முருங்கைக்காய் (வயாக்ரா (Viagra) இற்கு ஈடான மருந்து முருங்கையே) கறி சேர்க்கவும். அடுத்து ஒவ்வொரு நாளும் 2km விரைவாக நடக்கலாம், 5km மிதிவண்டியில் மிதிக்கலாம், 5min துள்ளலாம், 10min உடற்பயிற்சி செய்யலாம்.

பாவரசர் கண்ணதாசன் "இரண்டடக்கேல்" என இருபாலாருக்கும் வழிகாட்டியுள்ளார். அதாவது மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கக்கூடாது. அதனால், உடலுக்குத் தீங்கு தான் ஏற்படும். அவ்வாறு தான் மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போடுதலும் ஆகும். மருந்துண்டு மாதவிலக்கு (Period) வருவதைத் தள்ளிப்போட்டால் இயற்கைச் சுழற்சியை மாற்றுகிறோம். அதனால், உடலியல் இயற்கை அமைப்புக்குக் கேடு செய்கிறோம். நேர் விளைவும் பக்க விளைவும் சேர்ந்து நோய்களைத் தான் தருமே! மாதவிலக்கு (Period) வரும் நாள்களைக் கருத்திற்கொண்டு, அதற்கேற்ப நமது வாழ்க்கைப் பயணத்தைத் தொடரவேண்டும்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப் படும்
(அதிகாரம்: ஒழுக்கமுடைமை, குறள் எண்: 131)

"ஒழுக்கமே எல்லோருக்கும் உயர்வைத் (நன்மதிப்பைத்) தரும், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்." என்ற வள்ளுவரின் வழிகாட்டலைப் பின்பற்றுவோம்.

எப்பவும் பாருங்கோ...
ஒருவனுக்கு ஒருத்தி மட்டும் போதாதா?
ஒழுக்கம் கொஞ்சம் பேணவும் வேண்டுமே!
இயற்கையை ஏற்று
இசைந்து போகக் கற்க வேண்டுமே!
இயற்கையோடு இசைந்த
இல்லற வாழ்வே இனிய வாழ்வு!

முடிவாகச் சொல்வதற்கு ஒன்றுண்டு. தன் (சுய) மருத்துவம் தன்னையே கொல்லும். மருத்துவரின் மதியுரைப் படியே மருந்துகளை உண்ணவும் வேண்டும். எனவே, மணவாழ்வில் பாலியல் (Sex) ஐயங்கள் இருப்பின் குடும்ப நல மருத்துவரை நாடித் தீர்க்க வேண்டும். உங்கள் மகிழ்ச்சியான வாழ்வை, நீங்களே அமைத்துக் கொள்ளலாம்.

திங்கள், 24 ஏப்ரல், 2017

சாவு (தற்கொலை) தான் தீர்வு ஆகாதே!

முகநூல் (Facebook) பயன்படுத்துவோர் பலர் சாவு (தற்கொலை) மூலம் தம் கதையை முடித்துக் கொள்கின்றனர். இலங்கையில் சாவடைவதை (தற்கொலை செய்வதை) ஒருவர் திறன்பேசி (Smart Phone) ஊடாக ஒளிஒலி (Video) பதிவு செய்து தன் கதையை முடித்து இருக்கின்றார். அதனை ஒட்டி முகநூலில் (Facebook) எழுதியதை இங்கும் பகிருகின்றேன்.



முகநூல் (Facebook) உறவுகளே!
ஒவ்வொருவர் வாழ்விலும்
அவரவர் சந்திக்கும் சிக்கல்கள்
எல்லாவற்றுக்கும் முடிவாக
சாவு (தற்கொலை) தான் தீர்வு என்றால்
உலகில் எவரும் வாழ இயலாதே!
சிக்கல்கள் எல்லாம் வந்தாலும்
வாழ முயன்று தான் பார்க்கணும்
வாழ முயன்று பார்க்கையிலே
சிக்கல்கள் எல்லாம் ஓடி மறையலாம்!
வலைவழியே தலை காட்டுவோர்
எல்லோரும் - உண்மையான
அடையாளம் அற்றவர்கள் என்பேன்
வலைவழியே உலாவும் போலிகள் இடையே
உண்மையான அடையாளங்களும்
அருமையாய் உலாவலாம்!
வலைவழியே உலாவும் உறவுகளை நம்பி
எவரும்
வலைவழியே தம்மை வெளிப்படுத்தி
பொன்னான வாழ்வில்
சிக்கல்களைத் தேடிவேண்டி
மண்ணோடு மண்ணாகும்
முடிவுகளை எடுக்காதீர்கள்!
எப்படியும் வாழலாம் என்கின்ற
கடவுள் - எப்படியும்
சாவு (தற்கொலை) அடையலாம் என்பாரா?
மேடுபள்ளம், சறுக்கி விழுத்தும் சேற்றுவழி
நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில்
தலையை நிமிர்த்திப் பயணித்து
வாழ்வதே வாழ்க்கை என்பேன்!
அடைய/ கிடைக்க முடியாத ஒன்றை
எண்ணி எண்ணிச் சாவதை விட
கல்லும் முள்ளும் நிறைந்த
கரடுமுரடான வாழ்க்கைப் பயணத்தில்
வாழும் வரை பயணிக்கலாம் வாங்க!
பயணம் தெளிவில்லை என்றால்
பயணிக்கத் துணிவில்லை என்றால்
சற்று ஓய்வு எடுக்கலாம் - அடுத்து வரும்
பின்விளைவை எண்ணிப் பார்த்து
முன்னேறிப் பார்க்கலாமே! - அதுவும்
நம்பிக்கை தரவில்லை என்றால்
நல்லோர் மதியுரை கேட்கலாமே!

குறிப்பு: உங்கள் வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களைத் தீர்க்க நல்ல உளவளத் துணையாளரை நாடவும். என்னுடனும் தொடர்புகொண்டு மதியுரை பெற்றுக்கொள்ளலாம்.

வியாழன், 9 மார்ச், 2017

உறவுகள் உடைந்து (பிரிந்து) விடாமல் பேண...


நமது வாழ்வில் நாம் அடிக்கடி எதை எதையோ சொல்லுகிறோம்; செய்கிறோம். சொல்லி முடிய/ செய்து முடிய நாம் காண்பதென்ன? வெற்றி, தோல்வி வரலாம்; புதிய உறவுகள் மலரலாம் அதேவேளை உள்ள உறவுகளுக்கிடையே நெருக்கம் ஏற்படலாம்; புதிய உறவுகளும் உருவாகாது அதேவேளை இருந்த உறவுகளும் பிரிந்து போகலாம்.

ஏன் இந்த நிலை? எப்பன் எண்ணிப்பாருங்கள்!

சொல்லுற எல்லாம் சொல்லிப்போட்டு, செய்யிற எல்லாம் செய்துபோட்டு நன்மை அடைந்தால் நலமாக இருக்கலாம். ஆனால், தீமை அடைந்தால் எத்தனை உளநோய்களைச் சிலவேளை உடல்நோய்களைச் சந்திக்க வேண்டி இருக்கிறது.

மனித உள்ளம் ஒரு போதும் வன்முறையை விரும்புவதில்லை. மனித உள்ளம் எப்போதும் மென்முறையை அதாவது அன்பால் அணுகும் முறையை விரும்புகிறது. "அன்புக்கும் அடைக்கும் தாழ்" என்று சும்மாவா சொன்னார்கள். அதாவது அன்பால் அணுகினால் எவரது உள்ளத் தாழ்ப்பாளும் (கதவும்) அடைபடாது அதாவது திறபடும்.

உடல்நோய்கள் ஏன் வருகிறது? வன்முறையைக் கண்டு அஞ்சும் உள்ளம் மென்முறையைத் தேடிக்கொள்ள முனையும் வேளை சந்திக்கின்ற சிக்கல்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் துயருறும் வேளை உளநோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உளநோய்களில் இருந்து விடுபடவே "இந்தப் பழம் புளிக்கும்" என்று பிரிவைத் தூண்டுவதும் உள்ளமே! அதாவது, உள்ளத்தில் வெறுப்பு ஏற்படப் பிரிவுகள் தானகவே அமைந்து விடுகிறது.

உண்மையில் என்ன நிகழ்கிறது?
எமது சொல்லோ செயலோ அடுத்தவரைப் புண்படுத்துகிறது. எமது சொல்லோ செயலோ வன்முறையாக இருப்பின் அதாவது அடுத்தவர் விரும்பாது இருப்பின் அவர்களைப் புண்படுத்தலாம். அவ்வுள்ளப் புண்களை ஆற்றுப்படுத்தப் பிரிவு தேவைப்படுகிறது. அதனால், மென்முறையாக அதாவது அன்பாக அணுகாக விட்டால் பிரிவைத் தான் சந்திக்க வேண்டிவரும்.

இவ்வாறான பிரிவுகளை ஏற்படுத்தா வண்ணம் நல்லுறவைப் பேண இரண்டு வழி உண்டு.

முதல் வழி "உன்னைப் போல் உன் அயலாரையும் விரும்பு (நேசி)" என்ற முதுமொழியைக் கையாளவேண்டும். நாம் விரும்புவதெல்லாம் அடுத்தவர் விரும்பாது இருக்கலாம். நாம் விரும்பாததெல்லாம் அடுத்தவர் விரும்பலாம். அதாவது, எமது சுவையும் அடுத்தவர் சுவையும் வேறுபடலாம். இங்கு நமது விருப்பங்களை நாம் அடைய விரும்புவது போல அடுத்தவரும் முயலலாம். எனவே, அடுத்தவர் விருப்பு/ வெறுப்புகளைப் பொருட்படுத்தி அவர்களுக்கு ஏற்ப எம்மைச் சரிசெய்து நல்லுறவைப் பேணலாம்.

அடுத்த வழி பொருட்பால் - 1. அரசியல் - 1. அதிகாரம் 47. தெரிந்துசெயல்வகை குறள் 467 ஐப் படியுங்க.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

எதைச் செய்ய/சொல்ல விரும்புகிறோமோ, அதனை நன்றாகச் சிந்தித்துச் செய்ய/சொல்ல வேண்டும்; செய்த/சொன்ன பின் சிந்திக்கலாம் என்பது நன்றன்று.

ஒரு செயலைச் செய்வதாயின், அதனைச் செய்வதற்கான வழிகளையும் அதனைச் செய்வதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் சிந்தித்துச் செய்ய வேண்டும்; செய்த பின் சிந்திக்கலாம் என்பது நன்றன்று.

ஒரு சொல்லைச் சொல்வதாயின், அதனைச் சொல்வதற்கான நோக்கத்தையும் அதனைச் சொல்வதனால் ஏற்படும் நன்மை தீமைகளையும் சிந்தித்துச் சொல்ல வேண்டும்; சொன்ன பின் சிந்திக்கலாம் என்பது நன்றன்று.

ஒரு செயலைச் செய்வதாயினும் சரி, ஒரு சொல்லைச் சொல்வதாயினும் சரி அது அடுத்தவர் உள்ளத்தையும் நோகடிக்கலாம் அல்லது எமது நற்பெயரையும் கெடுக்கலாம் அல்லது எமக்கோ அடுத்தவருக்கோ பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இவற்றை எல்லாம் சிந்திக்காமல் செய்த/சொன்ன பின், அதற்கான விளைவைத் தான் சந்திக்கலாம். எப்பவும் நம்மாளுகள் பாதிப்பைக் கண்ட பின்னே சிந்திக்கத் தெரிந்தவர்கள் என்பதால்; பாதிப்பு வருமுன்னே சிந்திக்குமாறு வள்ளுவர் வழிகாட்டுகின்றார். எனவே, பாதிப்பு வந்த பின் சிந்திக்கலாம் என்பது நன்றன்று என்பதே என் கருத்து.


முடிவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். உள்ளம் என்பது உடைந்து நொருங்கக் கூடிய ஒன்று. அதனை உடைந்து நொருங்க இடமளியாது பேணவும். உள்ளம் உடைந்து நொருங்கினால் உளநோய்கள் தோன்ற இடமுண்டு. உளநோய்கள் தோன்றினால் உடல் நோய்கள் தோன்ற இடமுண்டு. ஈற்றில் உறவுகள் உடைந்து (பிரிந்து) போக இடமுண்டு. எனவே, மேலே உள்ள எண்ணங்களைக் கருத்திற்கொண்டு, மண்ணில் நல்லவண்ணம் வாழ உறவுகள் உடைந்து (பிரிந்து) விடாமல் பேணுங்கள். அதாவது எவரது உள்ளத்தையும் எவரும் நோகடிக்காமல் அல்லது உடைத்து நொருக்காமல் பேணுங்கள். அப்போது நமக்குள்ளே நல்லுறுவுகளைப் பேணுவதோடு நாமும் நெடுநாள் நோயின்றி வாழ முடியுமே!

திங்கள், 30 மே, 2016

சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே!

எனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அதனைத் தங்களுடன் பகிர விரும்புகிறேன். அக்குரல் செய்திக்குப் பின்னணி இசை சேர்த்துப் பதிவு செய்துள்ளேன். அதனைக் கேட்டுணரக் கீழுள்ள படத்தில் சிவப்பு, வெள்ளை நிற செய் (Play) அழுத்தியை (Button) அழுத்தவும்.

 

இந்தக் குரல் வழிச் செய்தி ஊடாக வேதியியல் (Chemistry) கற்ற பொறியியலாளர் ரமேஸ் அவர்கள் பஞ்சு மிட்டாய், சுவைகளி (Chocolate), குளிர்களி (Ice Cream), மற்றும் சுவையூட்டி கலந்த உணவுகளால் நமது உடலுக்குத் தீங்கு வரும்; அதனைச் சாப்பிட வேண்டாம் என வழிகாட்டுகின்றார். அவரது வேண்டுதலை ஏற்று "சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே!" என இப்பதிவை வலைப்பூ உறவுகளுடன் பகிருகின்றேன்.

நாளுக்கு நாள் நாம் உண்ணும் உணவுகளில் சுவையூட்டி சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும் முன் சற்று நமது சாவையும் எண்ணிப் பாருங்கள். இயற்கையான சுவையூட்டிகள் விலை அதிகமானது. ஆகையால், விலை குறைந்த சாவைத் தரவல்ல செயற்கையான சுவையூட்டிகள் உணவுகளில் சேர்க்கப்படுகிறது. அதன் பின்விளைவு சாவு வரை எம்மைத் தள்ளி விடலாம். 

எப்படி என்று என்னைக் கேட்க வேண்டாம்; மேலுள்ள குரல் வழிச் செய்தியில் பொறியியலாளர் ரமேஸ் அவர்கள் விரிவான விளக்கம் தந்துள்ளார். அதாவது, செயற்கையான சுவையூட்டிகள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன; அவற்றில் கலக்கப்படும் நஞ்சுகள் எவை என்பதை சிறப்பாக அலசி உள்ளார். அவரது குரல் வழிச் செய்தியைக் கேட்ட பின், உங்கள் உள்ளத்தில் மாற்றம் வரலாம். அம்மாற்றம் என்னவென உங்களுக்குத் தெரிந்த உறவுகளுடன் பகிர்ந்து உதவுங்கள்.

உணவுகளில் சுவையூட்டிகள் சேர்க்கப்படுவதால், அதனை உண்டு ஆயுளைக் குறைக்க வேண்டாம் என முன்னைய பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளேன். மீளவும் இப்பதிவினூடாக சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாமென அறியத் தருகின்றேன். சமச்சீர் உணவுகள், இயற்கை உணவுகள், அவித்த உணவுகள் (பொரியல், வறுவல் சேர்க்காத), பனம் பண்டங்கள் ஆகியவற்றோடு உப்பு, புளி, காரம் (மிளகாய்த் தூள்), எண்ணெய் போன்றன சமையலில் குறைத்துச் சேர்க்கவும். அப்ப தான் எம்மை நெருங்கி வரும் சாவைக் கொஞ்சம் விரட்டி விடலாம்.

மேற்குறிப்பிட்டவாறு உணவை உண்டாலும் நேரம் தப்பாமல் மூன்று வேளையும் உண்ண வேண்டும். ஒரு வேளை உணவை உண்ட பின், நான்கு மணி நேரம் (உணவு சமிபாடு அடைய) கழித்து அடுத்த வேளை உணவை உண்ணலாம். நாளொன்றுக்குக் குறைந்தது ஆறு லீற்றர் சுத்தமான நீரைக் குடிக்கலாம். அதேவேளை உடலில் இருந்து வியர்வை வெளியேறத் தக்கதாக நாளொன்றுக்கு அரை மணி நேரம் கடின வேலை அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வொழுங்கைப் பின்பற்றினால் நெடுநாள் நோயின்றி வாழலாமே!


ஞாயிறு, 11 அக்டோபர், 2015

உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணிக்கும் செயலி

அந்தக் காலத்தில ஒருவர் நூறாண்டுகளுக்கு மேலே இளமைத் துள்ளலுடன் வாழ்ந்துள்ளார். இந்தக் காலத்தில ஒருவர் ஐம்பதுக்கு மேலேயே முதுமைத் தள்ளாடலுடன் வாழ்ந்துகொண்டிருப்பதைக் காணலாம். இதற்கெல்லாம் உண்ணும் உணவே காரணமாம்.

அந்தக் காலத்தில மூக்குமுட்டத் திண்டுபோட்டு நீட்டி நிமிர்ந்து தூங்கி எழுந்து வாழ்ந்தே நூறில இளமையை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் உண்டது தானிய வகைகள், பச்சை இலைக் கறியோட, அவியற் குழம்பு, ஒடியற் கூழ், பனாட்டு எனப் பல. கண்டதைத் திண்டாலும் இரும்பு போல அந்தக் காலத்து ஆள்கள் இருந்தவையாம்.

இந்தக் காலத்திலயும் மூக்குமுட்டத் திண்டுபோட்டு நீட்டி நிமிர்ந்து தூங்கி எழுந்து வாழ்ந்தே ஐம்பதில முதுமையை வெளிப்படுத்திறாங்க. இவர்கள் உண்பது தெருக் கடைகளில விரும்பிய (வணிக) உணவுகள், அரிசி, மாவுப் பண்டங்களுடன் எண்ணெய்ச் சட்டியில போட்டெடுத்த உணவுகளே! கண்டதைத் திண்டாலும் முருக்குப் பருத்துத் தூணுக்கு உதவாதது போல இந்தக் காலத்து ஆள்கள் இருப்பதைக் காணலாம்.

இப்ப தங்களுக்கு எத்தனை அகவை, ஆண்டு, மாதம், நாள் எல்லாம் கணிப்பீர்களா? ஏன் தெரியுமா? இப்ப இருந்தே உயரத்திற்கு ஏற்ற நிறையைப் பேண முயன்றால் தான் நெடுநாள் வாழலாம். அப்படியாயின் கீழ்வரும் செயலியைப் பாவித்து முதலில் தங்கள் அகவையைக் காணுங்கள்.


இச்செயலியைத் தங்கள் தளத்தில் பாவிக்கக் கீழ்வரும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து (Copy) ஒட்டலாம் (Paste).

<iframe border="0" frameborder="0" height="370" marginheight="1" marginwidth="1" name="myage" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_age_calcu.php" width="440"> Your browser does not support Iframes. </iframe><br />

மூக்குமுட்டத் திண்டுபோட்டு உடற்பயிற்சி செய்யாமல் ஆனைக்குட்டி போல இருப்பதாலும் முறையான சமச்சீர் உணவுண்ணாமல் எலும்புந் தோலுமாய்ச் சாவாரைப் போல இருப்பதாலும் நோய்கள் தான் தேடி வரும். தேடி வரும் நோய்களை வீரட்ட சமச்சீர் உணவுண்டு உடற்பயிற்சி செய்யவும் வேண்டும். அவரவர் தத்தம் உயரத்திற்கு ஏற்ற நிறையைப் பேணவும் வேண்டும். அப்ப தான் உடல் நலம் பேணலாம்.

 உயர்குருதி அமுக்கும், நீரிழிவு, கொலஸ்ரோல் போன்ற பல நோய்களுக்குக் காரணமே உயரத்திற்கு ஏற்ற நிறை அமையாமையே! அந்த உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணிக்க ஒரு வலைச் செயலியை அமைத்துள்ளேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி உங்கள் உயரத்திற்கு ஏற்ற நிறையைக் கணித்துப் பாருங்களேன். வழமைக்கு மாறாக நிறை குறைந்தோ கூடியோ இருப்பின் தங்கள் குடும்ப மருத்துவரிடம் மதியுரை (ஆலோசனை) பெறவும்.


இச்செயலியைத் தங்கள் தளத்தில் பாவிக்கக் கீழ்வரும் நிகழ்நிரலைப் (Code) படியெடுத்து (Copy) ஒட்டலாம் (Paste).
<iframe border="0" frameborder="0" height="320" marginheight="1" marginwidth="1" name="mybmi" src="http://www.yarlsoft.com/adg/ys_wdgts/ys_bmi_calcu.php" width="435"> Your browser does not support Iframes. </iframe><br />

'உயரத்திற்கு ஏற்ற நிறை' பற்றிய விரிவான அறிவைப் பெற கீழுள்ள இணைப்புகளைப் படிக்கவும்.

உடல் திணிவுச்சுட்டி உடல் பருமன்
http://tamil.happylife.lk/?page_id=153
உங்கள் உடல்நிறையைக் குறைத்துக்கொள்வது எப்படி? http://www.thamilhealth.com/2014/04/08/
உடல்நிறை-குறைப்பு-ஒரு-இல/ நல்ல உணவும் குப்பை உணவும்
http://sinnutasty.blogspot.com/2012_03_01_archive.html

இப்பதிவின் ஊடாக நான் ஆக்கிய இரு செயலிகளை உங்களுடன் பகிருகிறேன். எப்படித் தங்கள் தளங்களில் வலைச்செயலிகளை (விட்ஜட்ஸ்) இணைப்பது பற்றி எனது மற்றைய தளத்தில் விளக்கமளிக்கவே எடுத்துக்காட்டாக இவற்றை ஆக்கினேன். மேலதிகத் தகவலுக்கு: http://www.yarlsoft.com/adg/bmi_calculator.php

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

ஏன்? எதற்கு? எப்போது?

Posted on ஏப்ரல் 11, 2013 in Wordpress Blog that is https://mhcd7.wordpress.com

ஏன் வழிகாட்டலும் மதியுரையும்?
அறியாத, தெரியாத எதனையும் அறிந்து முன்னேற

எதற்கு வழிகாட்டலும் மதியுரையும்?
இலகுவாக வெற்றியடைய

எப்போது வழிகாட்டலும் மதியுரையும்?
ஏதாவது அறியாத, தெரியாத வேளையில்

வழிகாட்டலும் மதியுரையும் பற்றி…
உள்ளத்தில்(ஆழ் மனத்தில்) இருப்பது தான் நடத்தைகளாக வெளிப்படுகிறது. சில நடத்தை மாற்றங்கள் நோய்களை உண்டாக்கும். எனவே, உள்ளத்தில் நல்லெண்ணங்களைத் தோற்றுவித்து நோய் நெருங்காமல் பேண வழிகாட்டலும் மதியுரையும் உதவுகின்றது. வழிகாட்டலும் மதியுரையும் எமக்குத் தேவையில்ல என்போருக்கு; தாம் தமது உள்ளத்தில் நல்லெண்ணங்களைப் பேணினால் போதும்.