Translate Tamil to any languages.

செவ்வாய், 21 ஜூலை, 2026

முயன்றால் முடியாதது எது?

 



இலை மறை காயாய் மறைந்திருக்கும் கலைஞர்களை வெளி உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்று எத்தனையோ பேர் சொல்லிக் கொள்கின்றனர். நானும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் "இலை மறை காயாக இருந்துவிடாமல் நாமும் எங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாமே" என்ற எண்ணம் உங்களுக்கும் வரலாம் தானே! அப்படியாயின் நீங்களே வெளிப்படுத்திப் பிறருக்குக் காட்சி கொடுக்கலாமே!

நீங்களும் மேடையேறிப் பேசி விளக்கலாம்
நீங்களும் கதை சொல்லி ஆகலாம்
நீங்களும் கட்டுரை எழுதிக் காட்டலாம்
நீங்களும் கவிதையை இசைத்துப் பாடலாம்
நீங்களும் ஆடிப் பாடி நடிக்கலாம்
நீங்களும் நகைச்சுவை சொல்லிச் சிரிக்க வைக்கலாம்
அடடே! உங்களுக்குள் இத்தனை திறமைகளா?
நீங்களும் வெளிப்படுத்த முன்வரலாமே!
இலக்கிய நாட்டம்/விருப்பம் உள்ளவருக்கு
தங்கள் வெளியீடுகள் தான்
தங்கள் முகவரியை வழங்கி வைக்குமே!

யாழ்ப்பாவாணன் கலைப்பணி மன்றம் இலை மறை காயாக இருக்கும் கலைஞர்களை வெளியுலகிற்கு அடையாளப்படுத்த உதவும். இருப்பினும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முன்வாருங்கள் எனப் பணிவோடு அழைக்கின்றேன்.

தகவல்: மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்

புதன், 15 ஜூலை, 2026

எந்தப் பொருத்தம் வேண்டும்?

 


கண்டதே கோலம் கொண்டதே காதல் 

என்பதும் பொய் தானே!

காதலைத் தேடிப் போனால் 

பொய்க் காதல் - அது 

இருவரையும் சேர்த்து வைக்காது!

காதல் ஒரு போதும் 

எங்களை நாடி வராதென்பது 

உலகில் பரவும் பெரிய பொய்!

நெடுநாள் பழகிய இருவருக்குள் 

ஏற்படும் ஒத்திசைவு, ஓரிணக்கப்பாடு

தானாக வந்த காதல் இல்லாமல் 

தேடிப் போய்ப் பிடுங்கிய காதலா?

உண்மைக் காதலர்களுக்கு

சோதிடம் பார்க்கத் தேவையில்லை என்று 

சொதிடக்காரர் சொல்கிறார்!

இயல்பாய்ப் பழகிய இருவர் 

ஒரே நேர் கோட்டில் பயணித்தால்

ஈருடல் ஓருயிராக

ஒன்றாய்ப் பொருந்திய உள்ளங்கள் தானே!

ஈருள்ளம் ஒன்றாய்ப் பொருந்தினால்

உண்மைக் காதலர் தானே - அவர்கள்

சோதிடத்தில் 

குறிப்புப் பொருத்தம் பார்க்காமல் 

திருமணம் செய்யலாம் தானே!

ஞாயிறு, 7 ஜூன், 2026

உள/மன நலக் கருத்து

 


சிலர் நினைக்கிறார்கள் ஒருவரை மாற்றிவிட்டால் தாங்கள் சம்பத்தப்பட்டு விடலாம் என்று. ஆனால் அது பொய்! 

என்னை மாற்றுவதனால் நான் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. எனது உடலழகை, முகவழகை, பேச்சழகை, ஆடையழகை மாற்றலாமே தவிர; என்னில் உள/மன மாற்றம் இடம்பெறாது.

உள்ளத்தில் எழுதப்பட்டவை மாற்றப்படுமா? இல்லை! உள்ளத்தில் எழுதப்பட்டவை மாற்றப்பட முடியாத போது எவரும் மாறப்போவதில்லை. இது தான் உளவியல் உண்மை. உளவியல் நோக்கில் உள்ளம் மாற்றமடைய; உள்ளத்தில் உள்ள நடவடிக்கைகளை அவதானித்து மீள நினைவூட்டாத வகையில் புதிய சூழலில் புதிய முகங்களை உறவாட வைத்து சுகப்படுத்துகிறோம். அதனால், அவர்கள் பழைய நினைவுகளை மீட்பதற்கு தூண்டுதல் இல்லாமல் செய்கிறோம். அதனையே உளவியல் நோக்கிலான எமது தீர்வாக முன்வைக்கிறோம்.

மாற்றாரைப் பிடிக்காது விட்டால் ஒதுங்கிவிடலாம். மாற்றாரை நோகடிக்க வேண்டாம்.  மாற்றாரைப் புண்படுத்த வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் உங்களுடன் இணையமாட்டார்கள். அதற்கு உள்ளத்தில் எழுதப்பட்டவை இடமளிக்காது.

வெள்ளி, 22 மே, 2026

நெஞ்சத்தில் உருளும் நன்றி

 





நன்றிக்கு நன்றியெனச் சொல்வதல்ல நம்மரபில்
நன்றிக் கடன்தீர்ப்பின் நன்று
  (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

செய்த செயலுக்கு
செய்நன்றி மறவாமல் நினை
செயலிலும் செய்நன்றி
           (துளிப்பா/ஹைக்கூ)

பலனை எதிர்பார்க்காது செய்
பகவத் கீதை சொன்னது
செய்த செயலுக்குச் செய்நன்றி
திருக்குறள் தான் சொன்னது
             (தன்முனைக் கவிதை)

இந்தியாவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில்17 மே 2026 ஞாயிறு அன்று இடம்பெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் ஹைக்கூ மாநாட்டில் எனது "யாழ்ப்பாவாணனின் துளிப்பாக்கள் ஹைக்கூ" பொத்தகம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அச்சிட்டு, வெளியீடு செய்து சிறப்பித்த இனிய நந்தவனம் குழுமத்திற்கு மிக்க நன்றி. இவ்வெளியீட்டில் பங்கெடுத்த மதிப்புக்குரிய அறிஞர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி.

எனது சொந்த ஊரான  இலங்கை, யாழ்ப்பாணம், மாதகலூரில் இப்பொத்தகம் விரைவில் (இந்தியாவில் இருந்து எனது ஊருக்குப் பொத்தகம் வந்து சேர்ந்ததும்) அறிமுகம் செய்து வைக்கப்படும்.

தகவல்: மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்

புதன், 13 மே, 2026

காதல் என்பது பொய் என்கிறாங்க

 


காதல்
ஒரு பருவக் குழப்பம் என்கிறாங்க...
எவர் அழகானவரோ
எவர் பணக்காரரோ
என்றெல்லாம் பழகுவதும்
இவரை விட அவர் அழகு
இவரை விட அவர் பணக்காரர்
என்றெல்லாம் ஆளையாள் மாற்றுவதாலே!
காதல்
ஒரு சுவைக்கும் வழி என்கிறாங்க...
ஆண் பெண்ணைச் சுவைத்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
பெண் ஆணிடம் - பொன்,
பொருள், பணம் வாங்கி
வருவாய் ஈட்டி மகிழ்ந்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
இருபாலாரும்
ஆளையாள் ஏமாற்றிச் சுவைப்பதாலே!
காதல்
ஒரு உப்புக் கருவாடு என்கிறாங்க...
காதலிப்பதாகக் கூறி
ஊருக்குள்ள கேவலமாக உலாவுதால் 
ஊரவரே
காறித் துப்பிப் பழித்து நெளித்து
கேலியும் நையாண்டியும் செய்வது கூட
கருவாட்டு நாற்றம் போல பரவுவதாலே!
காதலுக்குத் தான்
கண் இல்லை என்கிறாங்க...
கிழவி குமரனையும் குமரி கிழவரையும்
தாம் காதலிப்பதாக ஊருக்குள் உலாவுவதாலே!
காதலிலும் கூட
நகைச்சுவை இருக்கு என்கிறாங்க...
கள்ளக் காதல் செய்வோருக்கு
நல்ல காதலர் கிடைக்குது...
நல்ல காதல் செய்வோருக்கு
நம்பிக்கையான ஒருவரும்
கண்ணில் தென்படவில்லையென
காதலர் கிடைக்காதவரின்
கண்ணீர் கதை அது!
உண்மைக் காதல் என்பது
வேலிக்குள் பொட்டு வைத்து
மூஞ்சியை நீட்டிக் கதைப்பதால்
உருவான நம்பிக்கையான உறவென்று
ஆச்சி, அப்புமார் சொல்லி வைச்சாங்க!