Translate Tamil to any languages.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

2023 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் தானே!

 

 
உலகத் தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர் எல்லோருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

2023 இல் எனது 'தன் முன்னேற்ற வழிகள் (Ways of Self Improvement)' வலையொளிப் பக்கம் https://www.youtube.com/@kasi.jeevalingam தொடங்கியுள்ளேன். அதில் வரும் தகவலை வாசிக்க https://mhcd7.wordpress.com/ என்ற இணைப்பைச் சொடுக்கலாம்.




"2023 தை பிறந்தால் நல்வழி பிறக்கும் தானே!" என்ற நம்பிக்கையில் வலைப்பதிவுகளை அதிகம் பகிர எண்ணியுள்ளேன். 


ஞாயிறு, 1 ஜனவரி, 2023

இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

 


2023 இலிருந்து எல்லா வலைப் பக்கங்களும் வழமை போல் இயங்கும்.

தன் முன்னேற்ற வழிகளைத் தெரிந்துகொள்வோம்.

2023 இலிருந்து புதிய வலையொளி (யூடியூப்) பக்கம் தொடங்கி உள்ளேன்.

தன் முன்னேற்ற வழிகளைத் தெரிந்துகொள்வோம்.

https://youtu.be/WSd0DvWRfvs

இனிய வலையுறவுகளே! தொடர்ந்தும் எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.







ஞாயிறு, 25 டிசம்பர், 2022

வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து

.வணக்கம் வலையுறவுகளே!


 மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

யாழ்பாவாணனுக்கு 'சொற்சுவைத் தேனி' விருது

இலங்கை - யாழ்ப்பாணம் - மாதகலில் இருந்து இயற் பெயர்: காசி.ஜீவலிங்கம்,  இலக்கியப் பெயர் (புனைபெயர்): யாழ்பாவாணன் ஆகிய நான் 1986, 1987 ்காலப் பகுதியில் இலக்கியம் படைக்கலாம் என முயன்று பார்த்தேன். சிறு நாடகம் முதலில் எழுதி, இயக்கி அரங்கேற்றினேன். எனது முதலாவது கவிதை 25/09/1990 யாழ் ஈழநாதம் ஏட்டில் வெளியானது. பின் வீரகேசரி ஏட்டிலும் வெளியானது. சில படைப்புகள் இந்திய மற்றும் இலங்கைத் தொகுப்பு நூல்களிலும்  வெளியானது. 2010 இலிருந்து இணைய வழியில் எனது படைப்புகளைப் பகிர்ந்து உலகலாவிய வாசகரைப் பேணி வருகிறேன். 

2020 தீநுண்மி (கொரோனா) தொற்றுப் பரவல் மற்றும் ஆள் முடக்கம் காலப் பகுதியில் இணைய வழிக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அந்த வகையில் நானும் இரண்டாண்டுகள் இலக்கியப் பயிலரங்குகள் நடாத்தி வந்தேன். ஏனைய குழுக்களின் இணைய வழிக் கலந்துரையாடல்களிலும் பங்கு பற்றியிருந்தேன். அந்த வகையில் இந்திய-தமிழக தேனித் தமிழ்ச் சங்கம் எனக்கு '‘சொற்சுவைத் தேனீ'' எனும்  விருதினை வழங்கியிருக்கிறது.

தேனித் தமிழ்ச்சங் கமேதந்த சான்றிதழ்
தேடியே வந்ததென் கைக்கு.
                   {இரு விகற்பக் குறள் வெண்பா}


மேற்படி விருது வழங்கியமையைத் தெரிவித்து மதிப்புக்குரிய தேனி மு,சுப்பிரமணி (தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்) அவர்கள் பின்வருமாறு பகிர்ந்துள்ளார்.

தேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து 9-7-2022 அன்று தேனி, வெஸ்டர்ன் காட்ஸ் ஓட்டலில் நடத்திய ‘இணைய வழி தமிழ் உரைகள் -150 நிறைவு விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா’வில் இந்தியாவிலிருக்கும் விருதாளர்களுக்கு, தமிழ்ப் பல்கலைக்கழக மாண்பமைத் துணைவேந்தர் முனைவர் வி. திருவள்ளுவன் அவர்களால் ‘சொற்சுவைத் தேனீ விருது' வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றது.

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இவ்விழாவில் பங்கேற்க இயலாது என்பதால், மின்னஞ்சல் வழியாக விருதுச் சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட்டது.

தேனித் தமிழ்ச்சங்கமும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகமும் இணைந்து " சொற்சுவைத் தேனீ " எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

தங்களுக்கான பக்கம்:

சொற்சுவை விருதாளர்கள் பக்கம்:

இப்படி ஒரு நிகழ்வில் உரையாற்ற ஒழுங்கு செய்து தந்த பெரியோருக்கும் நிகழ்வில் பங்கெடுத்த பெரியோருக்கும் எனக்கான விருதினை என் கைக்குச் சேர்ப்பித்த மதிப்புக்குரிய தேனி மு,சுப்பிரமணி (தலைவர், தேனித் தமிழ்ச் சங்கம்) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் நான் பல சான்றிதழ்களைப் பெற்றிருந்தாலும் நான் பல பட்டங்களைப் பெற்றிருந்தாலும் 'யாம் பெற்ற கல்வி இவ்வையகமும் பெற வேண்டும்' என்ற நோக்கில் எனது பணியைத் தொடர ஊக்குவித்தாலும் என்னிடம பயன்பெற்று நிறைவடைந்த பயனாளர்களின் மகிழ்ச்சியை உள்ளத்தில் பேணுவதிலே நான் நிறைவடைகிறேன்.

ஞாயிறு, 15 மே, 2022

இலங்கை எங்கும் தான்தீ பரவிற்றே!

 அனுமனின் வாலில் யாரோ தீவைக்க

அனுமனோ இலங்கை எங்கும் தான்

தன்வாலால் தொட்டுத் தொட்டுத் தீமூட்டினான்.

சிங்கள மக்களோ அமைதிவழி போராட

மகிந்தரோ அடக்க முனையத் தான்

இலங்கை எங்கும் தான்தீ பரவிற்றே!

                                            (வசன கவிதை போன்று)

பிள்ளையையும் கிள்ளிவிட்டிட்டு

தொட்டிலையும் ஆட்டிவிட்டால்

பிள்ளை நித்திரை கொள்ளுமோ?

09-05-2022 கொழும்புச் சூழலைப் பார்த்த

உலகாளும் கடவுள்

சிங்கள அரசியல் தலைவர்களையா

போராடும் சிங்கள மக்களையா

பார்த்துக் கேட்டிருப்பார்

யாராவது அறிந்திருந்தால்

எல்லோருக்கும் பகிர்ந்து உதவலாமே!

                                          (வசன கவிதை போன்று)



சிங்கள மக்களின் வாக்கினைப் பெற்ற

தனிச் சிங்களத் தலைவர்களே!

சிங்கள மக்களின் விருப்பினை

கேட்டறியாத சிங்களத் தலைவர்களே!

போராடும் சிங்கள மக்களை

போராடாமல் ஒதுங்கிச் செல்ல

படைப்பலத்தைக் காட்டலாமோ?

அடுத்த ஆண்டு அடுத்த தேர்தலில்

யாருக்கு வாக்குப் போடுவதென

மக்களுக்கு அச்சமூட்டி அறிவூட்டினீரோ?

அடுத்த ஆண்டு அடுத்த தேர்தலில்

உங்கள் நிலைமை என்னவாகுமென

பொறுத்திருந்து தான் பார்ப்போமே!

                                         (வசன கவிதை போன்று)

 

நற்பதவி தானுயரத் தான்பணிவு தானுணரா

எப்பதவி  யில்இருந்தும் வீண்

                                 (இரு விகற்பக் குறள் வெண்பா)

 

பதவிதான் உயரலாம் கண்டியளோ

பணிவுதான் வரவேணும் என்பார்

பணிவுக்கே இடம் இல்லையா

பதவியில் இருக்க இயலாதே

                           (தன்முனைக் கவிதை)

 

மக்களின் வாக்குகளைப் பெறும் போது

மக்களின் கால்களில் விழுந்து கும்பிட்டாங்க…

நாடாளுமன்ற நாற்காலியில் இருக்கும் போது

மக்களின் விருப்புகளைக் கேட்டு அறியல…

மக்கள் எழுச்சியைக் கூடத் தான்

சிறு குழு முயற்சி என்றார்களே…

ஏவலாளிகளை ஏவிவிட்டுத் தான்

மக்கள் எழுச்சியை  முடக்கத் தான்

முயன்ற பின்னர் தான் கண்டனரோ

மக்கள் எழுச்சிக்குள்ளே

தாங்கள் தான் மூழ்குவோமென்று!

                                          (வசன கவிதை போன்று)


பெரும்பான்மை இனத்தவர்கள்

தமது பக்கம்

தவறில்லையெனக் காட்ட

சிறுபான்மை இனத்தவர் மீது

(வடகிழக்கார், மலையகத்தார், முஸ்லிம்களென)

தங்கள் வன்முறையைத் திருப்பிவிடுவது

அமைதியான, ஐக்கிய இலங்கையை

கட்டியெழுப்ப ஒருபோதும் உதவாது!

காலிமுகத்திடலில் தொட்டு

நாடெங்கும் வன்முறையைத் தூண்டுவதும்

அமைதியான, ஐக்கிய இலங்கையை

கட்டியெழுப்ப ஒருபோதும் உதவாது!

வன்முறைகளைத் தூண்டாது

அமைதியான முறையில் தான்

வளம்மிக்க, அமைதியான

ஐக்கிய இலங்கையை உருவாக்க

சிங்கள மக்களின் உளப்பாங்கு

மாறவேண்டும் - அப்பதான்

காலிமுகத்திடலில் எழுச்சி வெல்லும்!

                                          (வசன கவிதை போன்று)