நன்றிக்கு நன்றியெனச் சொல்வதல்ல நம்மரபில்
நன்றிக் கடன்தீர்ப்பின் நன்று
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)
செய்த செயலுக்கு
செய்நன்றி மறவாமல் நினை
செயலிலும் செய்நன்றி
(துளிப்பா/ஹைக்கூ)
பலனை எதிர்பார்க்காது செய்
பகவத் கீதை சொன்னது
செய்த செயலுக்குச் செய்நன்றி
திருக்குறள் தான் சொன்னது
(தன்முனைக் கவிதை)
இந்தியாவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில்17 மே 2026 ஞாயிறு அன்று இடம்பெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் ஹைக்கூ மாநாட்டில் எனது "யாழ்ப்பாவாணனின் துளிப்பாக்கள் ஹைக்கூ" பொத்தகம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அச்சிட்டு, வெளியீடு செய்து சிறப்பித்த இனிய நந்தவனம் குழுமத்திற்கு மிக்க நன்றி. இவ்வெளியீட்டில் பங்கெடுத்த மதிப்புக்குரிய அறிஞர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி.
எனது சொந்த ஊரான இலங்கை, யாழ்ப்பாணம், மாதகலூரில் இப்பொத்தகம் விரைவில் (இந்தியாவில் இருந்து எனது ஊருக்குப் பொத்தகம் வந்து சேர்ந்ததும்) அறிமுகம் செய்து வைக்கப்படும்.
தகவல்: மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்






