Translate Tamil to any languages.

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2026

கவனம் தேவை

 'அ' என்பவர் 'ஆ' வையும் 'இ' ஐயும் பிரித்தால் 'அ' உடன் 'ஆ'  சேரும் என்பது பொய். 'அ' என்பவர் 'ஆ' வை அதிகம் விரும்பினால் இணைவது உறுதி. ஆதலால் 'இ' விலகிச் செல்லக் கூடும். இந்தக் கதையைச் சொல்ல முயற்சித்த பதிவு இது.

👧👦❤

என்னை 

எவருடன் இருந்தும் பிரித்தாலும் கூட

பிரிந்தவரின் எண்ணங்கள் 

உள்ளத்தில் உருண்டு கொண்டிருப்பதால் 

என்னோடு புதியவர் இணைய

வாய்ப்பில்லைக் கண்டியளோ!


என்னோடு

புதியவர் ஒருவர் இணைந்துவிட்டால்

புதியவரின் செயல், குணம் அறிந்து 

என்னோடு இருந்த பழையவர்

என்னை விட்டுப் பிரியலாம் கண்டியளோ!


பழைய உறவைப் பிரிப்பது 

சுகமாக இருந்தாலும் கூட

புதிய உறவை இணைத்துக் கொள்வது

இயலாமல் போகவும் கூடும் என்றே

மூன்று கோணப் பார்வை 

எனக்கு உணர்த்துகிறது - ஆதலால் 

மாற்றாரைப் பிரிக்காமல் 

மாற்றாரை இணைக்க முயலும் காணும்!

சனி, 15 ஆகஸ்ட், 2026

செய்தி வாசிப்போம்

👨👩👧👤

இன்றைய செய்தி!

புலனாய்வுப் பிரிவு 

திடீர் பணக்கார உறவுகளைப் பிடித்து

எப்படி - தங்களால் 

திடீர் பணக்காராக முடிந்தது என்று 

விசாரணை செய்யப் போகிறார்களாமே!

பணம் வந்த வழியைக் கூறா விட்டால் 

பணத்தை அரசுடைமை ஆக்குவதும் 

தரம் வாய்ந்த தண்டனைக்கு 

ஆளை நீதிமன்றில் ஒப்படைப்பார்களாம்!

புலனாய்வுப் பிரிவு 

ஏழைகளைப் பிடித்து - அவர்களை

பணக்காரர் ஆவது எப்படி என்று 

தொழில் வழிகாட்டலைச் செய்யலாம் 

எதற்கும் இயலாதவர்களுக்கு

அரச உதவி பெற்றுக் கொடுக்கலாம் 

என்றெல்லோ

ஏழைகள் முன்னேற்ற முன்னணி 

ஒருவேளை உணவுக்குக் கெஞ்சி நிற்கின்றது!

ஆண்டவா! அளவுக்கு மிஞ்சி நீண்டவா!

ஏழைகளைக் கொஞ்சம் 

திரும்பிப் பார்க்க மாட்டாயா?

உன் மூச்சுக் காற்றுக் கூட

பணக்காரர் வீட்டுப் பக்கமாகவே வீசுகிறது!

எம்மைப் படைத்த ஆண்டவா!   

ஏழைகளை ஏன் படைத்தாய்? 

என்றல்லவா - உன்னிடம்

ஏழைகள் முன்னேற்ற முன்னணி 

ஒவ்வொரு நாளும் அழுது வடிக்கின்ற

கண்ணீரால் நாடே நனைகின்றது!

செவ்வாய், 21 ஜூலை, 2026

முயன்றால் முடியாதது எது?

 



இலை மறை காயாய் மறைந்திருக்கும் கலைஞர்களை வெளி உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்று எத்தனையோ பேர் சொல்லிக் கொள்கின்றனர். நானும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் "இலை மறை காயாக இருந்துவிடாமல் நாமும் எங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாமே" என்ற எண்ணம் உங்களுக்கும் வரலாம் தானே! அப்படியாயின் நீங்களே வெளிப்படுத்திப் பிறருக்குக் காட்சி கொடுக்கலாமே!

நீங்களும் மேடையேறிப் பேசி விளக்கலாம்
நீங்களும் கதை சொல்லி ஆகலாம்
நீங்களும் கட்டுரை எழுதிக் காட்டலாம்
நீங்களும் கவிதையை இசைத்துப் பாடலாம்
நீங்களும் ஆடிப் பாடி நடிக்கலாம்
நீங்களும் நகைச்சுவை சொல்லிச் சிரிக்க வைக்கலாம்
அடடே! உங்களுக்குள் இத்தனை திறமைகளா?
நீங்களும் வெளிப்படுத்த முன்வரலாமே!
இலக்கிய நாட்டம்/விருப்பம் உள்ளவருக்கு
தங்கள் வெளியீடுகள் தான்
தங்கள் முகவரியை வழங்கி வைக்குமே!

யாழ்ப்பாவாணன் கலைப்பணி மன்றம் இலை மறை காயாக இருக்கும் கலைஞர்களை வெளியுலகிற்கு அடையாளப்படுத்த உதவும். இருப்பினும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முன்வாருங்கள் எனப் பணிவோடு அழைக்கின்றேன்.

தகவல்: மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்

புதன், 15 ஜூலை, 2026

எந்தப் பொருத்தம் வேண்டும்?

 


கண்டதே கோலம் கொண்டதே காதல் 

என்பதும் பொய் தானே!

காதலைத் தேடிப் போனால் 

பொய்க் காதல் - அது 

இருவரையும் சேர்த்து வைக்காது!

காதல் ஒரு போதும் 

எங்களை நாடி வராதென்பது 

உலகில் பரவும் பெரிய பொய்!

நெடுநாள் பழகிய இருவருக்குள் 

ஏற்படும் ஒத்திசைவு, ஓரிணக்கப்பாடு

தானாக வந்த காதல் இல்லாமல் 

தேடிப் போய்ப் பிடுங்கிய காதலா?

உண்மைக் காதலர்களுக்கு

சோதிடம் பார்க்கத் தேவையில்லை என்று 

சொதிடக்காரர் சொல்கிறார்!

இயல்பாய்ப் பழகிய இருவர் 

ஒரே நேர் கோட்டில் பயணித்தால்

ஈருடல் ஓருயிராக

ஒன்றாய்ப் பொருந்திய உள்ளங்கள் தானே!

ஈருள்ளம் ஒன்றாய்ப் பொருந்தினால்

உண்மைக் காதலர் தானே - அவர்கள்

சோதிடத்தில் 

குறிப்புப் பொருத்தம் பார்க்காமல் 

திருமணம் செய்யலாம் தானே!

ஞாயிறு, 7 ஜூன், 2026

உள/மன நலக் கருத்து

 


சிலர் நினைக்கிறார்கள் ஒருவரை மாற்றிவிட்டால் தாங்கள் சம்பத்தப்பட்டு விடலாம் என்று. ஆனால் அது பொய்! 

என்னை மாற்றுவதனால் நான் ஒன்றும் மாறிவிடப் போவதில்லை. எனது உடலழகை, முகவழகை, பேச்சழகை, ஆடையழகை மாற்றலாமே தவிர; என்னில் உள/மன மாற்றம் இடம்பெறாது.

உள்ளத்தில் எழுதப்பட்டவை மாற்றப்படுமா? இல்லை! உள்ளத்தில் எழுதப்பட்டவை மாற்றப்பட முடியாத போது எவரும் மாறப்போவதில்லை. இது தான் உளவியல் உண்மை. உளவியல் நோக்கில் உள்ளம் மாற்றமடைய; உள்ளத்தில் உள்ள நடவடிக்கைகளை அவதானித்து மீள நினைவூட்டாத வகையில் புதிய சூழலில் புதிய முகங்களை உறவாட வைத்து சுகப்படுத்துகிறோம். அதனால், அவர்கள் பழைய நினைவுகளை மீட்பதற்கு தூண்டுதல் இல்லாமல் செய்கிறோம். அதனையே உளவியல் நோக்கிலான எமது தீர்வாக முன்வைக்கிறோம்.

மாற்றாரைப் பிடிக்காது விட்டால் ஒதுங்கிவிடலாம். மாற்றாரை நோகடிக்க வேண்டாம்.  மாற்றாரைப் புண்படுத்த வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் உங்களுடன் இணையமாட்டார்கள். அதற்கு உள்ளத்தில் எழுதப்பட்டவை இடமளிக்காது.