Translate Tamil to any languages.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

கரந்தை ஜெயக்குமார்: ஈழத்துத் தமிழிசை

தமிழக வலைப்பதிவர்கள் எல்லோருக்கும் இனிய சுதந்திர நாள் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதிப்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களை 2010  நான் வலைப்பதிவினைத் தொடங்கிய காலத்தில் இருந்தே அறிவேன். அவரது பதிவுகளைப் படித்த பட்டறிவின் அடிப்படையில் அவரது எழுத்து எளிமையானது, அழகானது, அவரது பதிவினைப் படித்தால் நிகழ்வொன்றினை நேரில் பார்த்தவாறு இருப்பது, எனப் பல சிறப்புகள் அவரிடம் இருக்கிறது. ஈழத்துத் தமிழிசை என்ற பதிவினைப் பகிருவதன் மூலம் அதனை நிருபிக்க விரும்புகிறேன்.  அ - ஔ வரையான ஈழத்துத் தமிழிசை பற்றிய தகவலைச் சிறப்பாகத் தொகுத்துத் தந்துள்ளமையை ஈழத் தமிழரும் புலம் பெயர் தமிழரும் ஏற்றுக்கொள்வார்கள். மதிப்புக்குரிய கரந்தை ஜெயக்குமார் ஐயா அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.


கரந்தை ஜெயக்குமார்: ஈழத்துத் தமிழிசை: வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளைநிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார...

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

ஆண்களுக்கு ஒரு புண், பெண்களுக்கு இரு புண்

 

காதல் இயற்கையாக அமைந்தால்

காதலில் பிரிவே கிடையாதாம் - அந்த

காதலர்களுக்குச் சோதிடத்திலும்

குறிப்பேதும் பார்க்காமல் பொருந்துமாம்!

தாளில் அம்பு செய்து

எய்துவிட்டால் காதல் வரும்

பள்ளிப் பருவத்தில் தான்

கண்ணடித்தால் காதல் வரும்

பாடல்களில் தான்

அழகைக் காட்டியதும் - தங்க

அணிகலனைக் காட்டியதும் - நாலு

காசைக் காட்டியதும் மதிமயங்கி

காதல் ஊற்றெடுத்தும் வரும்

திரைப்படப் பாணியில் தான்

இப்பவெல்லாம்

இயற்கைக் காதல் இங்கில்லை

மணமுறிவு போல காதல் முறிவு

மலிஞ்சு போச்சுக் காணும்!

தங்கள் தங்கள் விருப்படைய

காதலை ஊடகமாக்கினால்

பின் விளைவுகள் சொல்லிலடங்காதே!

மண், பெண், பொன் விருப்படைய

காதலிப்பதாய் ஆண்களும்

எடுப்புக்கு (Styleக்கு), வருவாய் ஈட்டலுக்கு

காதலிப்பதாய் பெண்களும்

ஒருவரை ஒருவர் ஏமாற்றியதால்

காதல் தோல்வியாம் - விளைவாக

ஆண்களுக்கு ஒரு புண்ணும்

(உள்ளப் புண் மட்டும்)

பெண்களுக்கு இரு புண்ணும்;

(உள்ளப் புண்ணும் கருப்பைப் புண்ணும்)

ஏற்பட்ட பின்னரே - அவர்களுக்கு

மூளையே வேலை செய்ததாம்!

காலம் கடந்து அறிவு வந்தும்

பயனேதும் தரப் போவதில்லையே!!

காதல் புனிதமானது தான் - அது

திருமணமே இலக்கு - அதற்குப் பின்

இருவர் உள்ளத்து எதிர்பார்ப்புமென

காதலிப்போருக்கு மட்டுமே போருந்தும்!

காதலித்த பின்னர்

திருமணத்திற்காகப் போராடிய

காதலர் இலக்கியங்கள் சொல்லுமே!