Translate Tamil to any languages.
4-எழுதப் பழகுவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
4-எழுதப் பழகுவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 28 மே, 2021

எழுதுங்க, முடிவை வாசகர் சொல்லட்டும்

 

1, 
எழுதுங்கள் எழுதுங்கள் - உங்கள்
உள்ளத்தில் ஏற்பட்ட நோவை
உடலில் ஏற்பட்ட வலிகளை
எழுதும் போது மறக்காமல்
எதுகை, மோனை அமைய
எழுதுங்கள் எழுதுங்கள் - உங்களுக்கும்
கவிதைகள் எழுதத்தான் வருமே!
பலவாண்டுகள் பக்குவமாய் பழகி
பலரும் பார்க்கத்தான் காதலிப்பதாய்
காலம் கடத்திப் போட்டு
காலமானதும் அண்ணா என்றாளே!
எழுதுங்கள் இப்படித்தான்
எழுதுவது கவிதை ஆகலாம்!

2.
கவிதை என்பதும் பாடல் என்பதும்
வேறுபாடு உள்ளதாய்
எனக்குத் தெரியவில்லை.
"காசுள்ளவரை சூழவிருந்தவர்கள்
காசில்லாத வேளை பார்த்து
எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்! " என
பணத்துக்காய் உறவுகளென்று
எழுதி முடிப்பது கவிதை!
"பணம் இருந்தால் பறந்து வருவார்
குணம் இருந்தால் பறந்து போவார்
(பணம்)
பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா
குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா
சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா
(பணம்) "  என
மனித உள்ளத்தை உரித்துக் காட்டினால்
கவிதை என்றாலும் பாடல் என்கிறாங்க.
ஓ! இரண்டிலும்
இசை வேறுபாடு இருக்காம்
எழுதுங்க உறவுகளே!
நல்லது எல்லாம் - அவை
கவிதையா பாடலா
வாசகர் தீர்ப்புக் கூறட்டும்! 

3. 
காசுள்ளவரை சூழவிருந்தவர்கள்
காசில்லாத வேளை பார்த்து
எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்!
தேடிப் போகத் தான்
எனக்கு விருப்பம் இல்லை
பணம் உள்ளவர் கை தானே
அவர்களை இழுத்திருக்கும்!
என் கை நிறைய
ஒரு நாள் பணம் இருக்கலாம்
அந்த வேளை பார்த்து
என் பக்கம் அவர்கள் திரும்பலாம்!
பணம் பத்தும் செய்யும் என்பது
இந்தத் திருவிளையாடல் தானோ!!

4.
பணம் இருந்தால் பறந்து வருவார்
குணம் இருந்தால் பறந்து போவார்
(பணம்)
 
குணம் இருந்தால் பிணம் என்பார்
பணம் இருந்தால் கடவுள் என்பார்
(குணம்)
 
பணம் எங்கும் பாயும் என்பதா
பணம் பத்தும் செய்யும் என்பதா
குணம் உள்ளவர் வேண்டாம் என்பதா
(பணம்)(குணம்)
 
பணம் உள்ளவரை தான் உறவா
குணம் உள்ளவரை தான் விறகா
நோய் வந்தபின் தான் உணர்வா
(பணம்)(குணம்)
 
மருந்து உண்ணப் பணம் வேண்டுமா
உடலைப் பேணப் பணம் போதுமா
உடல் நொந்த பின்னே தெரியுமா
(பணம்)(குணம்)
 
பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா
குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா
சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா
(பணம்)(குணம்)
 
==========================================================
தன்முனைக் கவிதைகள் (SELF -ASSERTIVE VERSES)
https://ypvnpubs.blogspot.com/2021/05/self-assertive-verses.html
 

புதன், 18 நவம்பர், 2020

தொடரும் இணையவழிப் பயிலரங்குகள்

 

மேற்படி பயிலரங்கில் முழுமையாகப் பங்கெடுக்கும் பயிலுநர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். விரும்பும் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.

கொரோனா (Covid-19) உலகெங்கும் உலாவி உயிர்களைப் பறிப்பதும் உறவுகளைத் தனிமைப்படுத்துவதுமாக நகர்ந்தாலும் நம்மாளுங்க அதிலிருந்து தப்பிக்கப் போராடிய வண்ணம் வாழ்கின்றனர். அந்த வகையில் தமது அறிவினைப் பெருக்கப் பலரும் இணையவழிப் பயிலரங்கினைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் யாழ்பாவாணன் கலைப்பணி மன்றமும் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்கப் பயிலரங்குகளை நடாத்தி வருகிறது.

இதுவரை புதுக்கவிதைப் பயிலரங்கம், நகைச்சுவைப் பயிலரங்கம், மரபுக் கவிதைப் பயிலரங்கம்-01 நடாத்தியிருந்தோம். தற்போது மரபுக் கவிதைப் பயிலரங்கம்-02 நடைபெறுகிறது. கீழ்வரும் இணைப்பில் அதற்கான காணொளிகளைப் பார்க்கலாம்.

https://www.youtube.com/playlist?list=PLOeklr9CgQp88wE7YWRVbO86IQsPy3lCi

நாம் நடாத்தும் மரபுக் கவிதைப் பயிலரங்கப் பிந்திய காணொளிகளைக் கீழே பார்க்கவும்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 05


மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 06

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 07

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 08

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 09

யாழ்பாவாணன் கலைப்பணி மன்றம் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்க நடாத்தும் பயிலரங்குகளில் விரும்பும் உள்ளங்களை இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

மரபுக் கவிதைப் பயிலரங்கச் செயற்பாடுகள்

 


17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்துவதாகக் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தேன். அதன்படிக்கு 24/07/2020 , 03/08/2020 நடந்த பயிலரங்கப் பதிவுகளை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.

மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் - 02


மரபுக்கவிதைப் பயிலரங்கம் - தொகுப்பு - 01 - தொடர் - 03

07/08/2020 வெள்ளி அன்று மரபுக்கவிதைப் பயிலரங்கம் இடம்பெறவில்லை. அன்றைய நாள் யாழ்பாவாணனின் நகைச்சுவைப் பயிலரங்கம் இடம்பெற்றது. அதனை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.

இனி இயல்பாகவே மரபுக்கவிதைப் பயிலரங்கம் தொடரும். தங்களுக்குத தெரிந்த மரபுக்கவிதை பயில விரும்பும் எல்லோருக்கும் இந்தப் பயிலரங்கம் பற்றிய தகவலப் பகிர்ந்து உதவுங்கள் இவ்வாறான பயிலரங்குகள் பலருக்கு நன்மை தர வேண்டும் என்பதே எமது நோக்கு அதனை நாம் தொடர்ந்து செய்வோம்.


புதன், 15 ஜூலை, 2020

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – மூன்றும்நான்கும்

நீங்களும் மரபு கவிதைப் பயிலரங்கில் பங்குபற்றலாம்.

வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 03/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது.

கனடா, இந்தியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.


வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 10/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது.

கடந்த நிகழ்வுகளில் பேசிய அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.


ஞாயிறு, 5 ஜூலை, 2020

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – இரண்டு


வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 26/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது. இந்தியா, மலேசியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.





வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம்  நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)  பகிரும் பணியில் முதலாவதாகத் தமிழகத் தமிழறிஞர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் மணிவானதி வலைப்பூ (Blog), வலையொளி (Youtube) நடாத்துகிறார். அவரைப் பற்றி முழுவதும் அறியக் கீழுள்ள காணொளியைப் (Video) பார்க்கவும். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.

செவ்வாய், 23 ஜூன், 2020

புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – ஒன்று


வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 19/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது. சிங்கப்பூர், இந்தியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.



இணைய வழி நேர்காணல்

வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம் https://meet.jit.si/yarlpavanan ஊடாக நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)  பகிரும் அடுத்த பணியையும் தொடங்கியுள்ளேன். விரைவில் முதலாம் நேர்காணலை வலையொளியில் (Youtube)  காணலாம்.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 07

வலைப்பூக்களால் வருவாய் இல்லையென
மூடிவைச்சிட்டு ஒதுங்கியோரும் - கொஞ்சம்
வலைப்பூக்களை மேம்படுத்தலாம் வாங்க...
முகநூல் பக்கம் போனோரும் - கொஞ்சம்
வலைப்பூக்களை மேம்படுத்தலாம் வாங்க...
ஓர் ஏழலில் ஒரு பதிவு போதும்
ஓர் அட்சென்ஸ் கணக்கும் போதும்
நண்பர்களை அணைத்துச் சென்றால்
கருத்துப் பதிவும் பக்கப் பார்வையும்
தானாக வந்து சேர்ந்து கொள்ளும்
அட்சென்ஸ் விளம்பரம் இணைத்து
இணையவழி வருவாயும் ஈட்டலாம்!

இனி எல்லாம் கூகிள் அட்சென்ஸ் தான்.
கூகிள் தமிழை ஏற்றுகொண்டது (அங்கீகரித்தது).
இனி எல்லாம் கூகிள் அட்சென்ஸ் தான்.
எல்லோரும் வலைப்பக்கம் வாங்க...
வாங்க... வலைப்பக்கம் எங்கும்
அட்சென்ஸ் விளம்பரம் இணைத்து
இணையவழி வருவாய் ஈட்டலாம்!
அதாவது, அட்சென்ஸ் ஊடாக
வருவாய் ஈட்டலாம் வாங்க...!

கொஞ்சம் அட்சென்ஸ் பற்றி
சொல்லித் தாவென்று கேட்க
எவரும் முன்வரலாம் - அவர்களுக்காக
இரு அறிஞர்களின் வழிகாட்டல்
பதிவுகளைப் பகிருகிறேன் இங்கே!

இனி தமிழ் பதிவர்களுக்கும் Google விளம்பர வருமானம் கிடைக்கும்
https://senthilmsp.blogspot.com/2018/02/google-adsense-income.html

இனி தமிழிலும் கூகிள் அட்சென்ஸ் (Adsense in Tamil) வசதிகள்


மேற்காணும் ஒளிஒலி (Video) பதிவினைக் கவனித்துப் போதிய வழிகாட்டலைப் பெறவும். இந்த ஒளிஒலி (Video) பதிவு, கூகிள் அட்சென்ஸ் பயன்படுத்தக்கூடிய மொழிகளில் தமிழைச் சேர்க்க முன் ஆக்கப்பட்டது. ஆகையால், கூகிள் அட்சென்ஸ் தமிழுக்குப் பாவிக்க இயலாது என்பதைத் தவிர்க்கவும். தற்போது தமிழ் வலைப்பக்கங்களில் கூகிள் அட்சென்ஸைப் பாவிக்கலாம்.

செவ்வாய், 31 அக்டோபர், 2017

எழுத்தும் பயனும்

1
எழுத்து, உனக்கு சோறு போடுமா?
எழுத்து, உனக்கு வருவாய் தருமா?
எழுத்து, உனக்கு நற்பெயரைக் கொடுக்குமா?
எழுத்து, உனக்கு நல்வாழ்வைக் கொடுக்குமா?
என்றெல்லோ வீட்டார் கேட்டுத் தொல்லை!
கலைத்தீபம், கவிமுரசு, கவியருவி,
இலக்கியச் செம்மல் என்றெல்லாம்
பட்டம் தந்து பொன்னாடை போர்த்ததும்
என் எழுத்து, எனக்களித்த பரிசென்றுரைக்க
"தாளில் கிறுக்கிக் கொடுப்பதும்
சால்வையைத் தோளில் போடுவதும்
பார்வைக்கு அழகாய் இருக்கும் - அதில்
பெறுமதி இல்லைக் காணும்" என
பெண்டாட்டி என்மீது எரிந்துவிழுவாள்!
"உனக்குப் பிள்ளை, குட்டி கிட்டாததும்
எழுத்து, எழுத்தென மூழ்கிக் கிடந்ததாலே!" என
மாமிக்காரி ஒப்பாரி வைப்பதும் நிகழும்!
"இணையம், வலைப்பக்கம் எனத் தலைகாட்டி
தூக்கத்தை விற்று நோய்களை வேண்டுறியே!" என
மாமன்காரன் அறம் பாடுவதும் நிகழும்!
"என்ர அப்பன் பண்டிதருக்குப் படிச்சவர்
இவர் என்னதான் எழுதிக் கிழிச்சென்ன!" என
என்ர அப்பன் என்னைத் திட்டுவார்!
"என்ர அப்பன் உடையாருக்குப் படிச்சவர்
இவர் எழுதித்தான் என்ன பண்ணுவார்!" என
என்ர அம்மாவும் பொரிந்து தள்ளுவார்!
இப்படிக் கேள்விக்கணைகள் காதைக் குடைந்தாலும்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
என் எழுத்தை விரும்பிப் படிப்பவர்
உள்ளம் நிறைவைத் தரும் வண்ணம்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
எழுதுவதால் தான் நானும் நிறைவடைகின்றேன்
வாசகர் உள்ளம் நிறைவடைய - நாளும்
நானும் என் எண்ணங்களை எழுதுகின்றேன்!
நல்லதை எழுதுங்கள் நல்லதை வாசியுங்கள்
உள்ளம் நிறைவடைய உணர்ந்து செய்யுங்கள்
உள (மன) நோய்கள் கிட்ட நெருங்காது
உண்ணான நெடுநாள் வாழலாம் பாருங்கோ!

2. எழுதப் பழகிய வேளை

சொந்தமாக எழுத முடியாவிட்டாலும்
மாற்றாரின் பதிவுகளைப் போல
எழுத முயன்றல் கூட
சொந்தமாக எழுத வருமே!
நானும் அப்படித் தான்
மூ.மேத்தாவின் பாவரிகளைப் போல
எழுத முயன்ற பின்னே
ஈழத்துப் பத்திரிகைகளில் வெளியான
பாவரிகளைப் பார்த்தும் - அதே போல
எழுத முயன்ற பின்னே
பா/கவிதை நடை போல
சொந்தமாக எழுதப் பழகிக்கொண்டேன்!
எழுதப் பழகியதை வைத்தே
என் எண்ணங்களைப் பகிருகிறேன்!
ஆனால், நான் எழுதுவது
கவிதை அல்லது பா அல்லது பாடல்
எது போலவும் இல்லாவிடினும்
நான் கிறுக்குவது தமிழில் தானே!

3. நீங்களும் எழுதலாம்

எனது திறமைகளை வெளிக்கொணர உதவும்
உடைமைகளைப் பொறுக்கிச் சென்றவருக்கு
தெரியவில்லைப் போலும்
கைக்கெட்டியதைக் கையாளலாம் என்றே!
கரிதுண்டால் பா/கவிதை புனைந்து
பாரதியார் - தன்
உள்ளக்கிடக்கையை வெளியிட்டது போல
நானும் என் கைக்கெட்டியதை வைத்து
எனது திறமைகளை அரங்கேற்றுகிறேன் - நாளும்
எனது திறமைகள் வெளிவருகின்றனவே!
'முடியாது' என்பது
நம்மாளுங்க (மனித) அகரமுதலியில்
இருக்கக்கூடாது என்றாலும்
'முடியும்' என்பதற்கு
பயிற்சியும் முயற்சியும் இருந்தால் போதுமே!
அப்படியாயின் - நீங்களும்
எப்படியாவது உங்கள் திறமைகளை
அரங்கேற்ற முன்வாருங்கள் - உங்கள்
நல்லெண்ணங்களைப் பகிருங்கள்
எழுத்தும் பயனும் என்னவென்று உணருவீர்!

செவ்வாய், 4 ஜூலை, 2017

யுவகிருஷ்ணா: கட்டுரை எழுதுவது எப்படி?

கட்டுரை எழுதுவது எப்படி? என அறியாதவர் இருக்க முடியாது. ஆயினும், அக்கட்டுரை வாசகர் உள்ளத்தைத் தொட எப்படி எழுதுவது என்பதை இப்பதிவில் நீங்கள் காணலாம். அதனால், இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.

‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.

அது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.

ஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.

‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.

திங்கள், 3 ஜூலை, 2017

வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 06

எவரும் திறன்பேசி வழியே முகநூலில் மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்பீர். அவர்கள் நீண்ட நாளாக வலைப்பூவை மறந்து இருக்கலாம். ஆயினும், வலைப்பூவில் பதிந்தவை முகநூலைப் போலல்லாது என்றும் கண்ணுக்குக் காட்சி தருமே! திறன்பேசி வழியே மூகநூலில் துளித் துளியாகப் பதிவுகளை இட்டாலும் அவற்றைத் திரட்டி வலைப்பூவில் பதிவு செய்யலாம் வாங்க! இதோ எனது எடுத்துக்காட்டைப் பாருங்க.

"சிரிப்பு
உள/உடல் நலம் பேண
நல்ல மருந்து என்பேன்" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"கோபத்தின் போது 13 நரம்புகள் இயங்குமாம்
சிரிப்பின் போது 65 நரம்புகள் இயங்குமாம்
ஆகையால்,
கோபத்தை விட சிரிப்பு
உடலெங்கும் செந்நீர் (குருதி) சீராகப் பரவ
உதவுவதால் நோய்களை விரட்டலாம்!" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"எளிமையான புதுக்கவிதையை
இறுக்கமான புதுக்கவிதையாக
நறுக்கென வெளிப்படுத்தியவர்
கவிக்கோ அப்துல் ரகுமான்" என அவரது இழப்புச் செய்தி கேட்டதும் எழுதியது.

"பணம் உள்ளவரை உறவு" என்ற தலைப்பில்
"பணத்தைத் தேடும்வரை தெரியாது
படுக்கையில் கிடந்தால் தெரிகிறது...
தலையணைக்குக் கீழே உள்ள
பணத்தைக் கணக்கெடுக்க வரும்

உறவுகளை எண்ணிப் பார்க்கலாம்!" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.
"நேற்றைய நல்லவை இன்று வழிகாட்டும்
நாளைய விடியலில் எண்ணியவை தான்
(எடுத்துக்காட்டாகச் சேமித்து வைத்த பணம்)
இன்று நாம் வாழத் துணைக்கு வருமாயின்
நாளையை நாளைக்கே பார்ப்போமாயின்
இன்று எப்படி வாழ்வது? - எனவே
முன்கூட்டியே திட்டமிட்டால் - எவருக்கும்
இன்றைய வாழ்வு சறுக்காது!" என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.

"எந்த முகத்துக்கும் அஞ்சாமல்
சொந்த முகத்தைக் காட்டுங்கள்
உண்மையானவராயின்..." என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.

"முகநூல் பக்கம் வாங்க...
போட்டிகள் பலர் நடாத்துவாங்க
பங்கெடுத்துப் பயனீட்டலாமுங்க
பல்கலைக்கழகம் போகாமலங்கோ
BA, MA, MPil, Phd, Dr என்ற மாதிரிங்க
A4 தாளில் எழுதிய பதிவுக்குங்க
பல பட்டங்கள் அள்ளிக்கொடுக்கிறாங்க...
வழங்குவோர் யாரென்று தெரியாதுங்க
பெற்றவங்க பரப்புரை சொல்லுதங்கோ
இப்பவெல்லாம்
பட்டங்களுக்கே பெறுமதி இல்லையங்கோ..." என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"முகநூலில இப்ப புதிதாய்
பாப்புனைவோர் சங்கம் தொடங்கியாம்
கவிதைப் போட்டி நடாத்துறாங்களாம்
முதலிடம் - கவிதைக் கடவுள்
இரண்டாமிடம் - கவிதைப் பிரம்மா
மூன்றாமிடம் - கவிதை மன்னன்
பட்டங்களும் சான்றிதழுமாம்
வழங்கப்படும் என்கிறாங்க...
"நீங்களும் பங்கெடுத்தால்... வென்றால்...
கவிதைக் கடவுள் ஆகலாமே!" என்கிறாள்
என்னுடைய நூறாவது காதலி!
"பண்டிதர், புலவர், வித்துவான்" போன்ற
பட்டங்கள் பரிசளிப்பாங்க என்றால்
நான் பங்கெடுப்பேன் என்றதும்
"உலகக் கவிதை மன்னர்கள் சங்கம்" என்று
முகநூலில தொடங்கினார்கள் என்றால்
அப்படியும் கொடுப்பார்கள் என்றாள்
என்னுடைய நூறாவது காதலி!
"பண்டிதர், புலவர், வித்துவான்" போன்ற
பட்டங்கள் பரிசளிப்பாங்க என்றால் - அவங்க
முத்தின பைத்தியங்கள் தானே...
படித்துப் பெறவேண்டிய பட்டங்களை
எவரும் பரிசளிக்கலாமோ? - இப்பவெல்லாம்
தகுதியற்றவர்கள் முகநூலில
கவிதைப் போட்டி நடாத்துகிறாங்களோ
என்றதும்
என்னுடைய நூறாவது காதலி
ஓடி மறைந்திட்டாளே! - எப்படியோ
நூற்றியோராவது காதலியைத் தேடணும்
அதற்குக் கூட
முகநூலில நிறைய வசதி இருக்கே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"சொந்த வேலை புரிவோருக்கு
ஓய்வு என்பதும் இருக்காது
ஓய்வு ஊதியம் என்பதும் கிடையாது
ஆனால்,
உள்ளத்தில் நிறைவு கிட்டுகிறதே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"உலகில் மே-18 ஆம் நாள்
ஈழத் தமிழர் உறவுகள்
முள்ளிவாய்க்காலில்
செந்நீர் (குருதி) வெள்ளத்தில் மூழ்கிய போதும்
உலகமே இரங்காத நாள்! - ஆயினும்
ஈழத் தமிழரின் உண்மை நிலையை
உலகம் எங்கும் ஆழப் பதித்த நாள்!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.
இறுதிப் போரில் (20/05/2009 வரை) நெருக்குண்டு
தப்பியோரில் நானுமொருவன்
போரில் புண்ணாகிய (உடல் புண், உளப் புண்) உறவுகளை
என்னாலும் மறக்க இயலவில்லை
இயலுமானோர் உதவியதாக - இதுவரை
எனக்கும் தெரியவில்லை! - என்றாலும்
தன்னம்பிக்கை என்ற ஊன்றுகோல் உதவியோடு
வாழ்வில் நடைபோடும் - எங்கள்
ஈழத் தமிழர் நிலையை
உலகம் எட்டிப் பார்க்கவில்லையே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"நான் பிறந்தாலும் 'லைக்'
நான் மணந்தாலும் 'லைக்'
நான் கிடந்தாலும் 'லைக்'
நான் இறந்தாலும் 'லைக்'
எதற்கெல்லாம் 'லைக்'
எனக்கோ தலையைச் சுற்றுது..." என்றவாறு தோழன் ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"ஆணுக்கு நிகர் பெண் என்பது பொய்!
ஆணைவிட உயர்ந்தவள் பெண் என்பது மெய்!
281 நாள் குழந்தையைச் சுமந்து ஈன்றவள் - அவள்
எங்கள் உலகில் உயர்வானவள் - அவளை
இப்படிப் பார்க்காத கண்களும் குருடே!" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.

"வெற்றிகள் கிடைத்து விட்டாலும்
சோர்ந்து விடாதே - இனியும்
வெல்வதற்குப் பயிற்சிகள் தேவை!
என்றும்
பயிற்சிகளும் முயற்சிகளும் தான்
அடுத்து வரும் வெற்றிகளை
தீர்மானிக்கப் போகின்றன!" என்றவாறு எனது பெறாமகளுக்கு வாழ்த்துக் கூறும் போது இழையோடியது.

"பதினாறு செல்வங்களும் பெற்று
சீரும் சிறப்புமாக
கண்ணை இமை காப்பது போல
ஒருவரை ஒருவர் காத்து
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!" என்றவாறு தோழி ஒருவரின் திருமண அழைப்புக்குப் பதிவு செய்தேன்.

"நாளும் விடிகிறது
பொழுதும் கரைகிறது
நமது செயலும் பதிவாகிறது
ஆனால், நல்ல செயல்களே
நம்மை அடையாளப்படுத்துகிறது!
எல்லாம்
இன்று போய் நாளை வர
நேற்றைய நடப்பு நினைவூட்டுமே!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"தங்கச்சியின் பேச்சும் உணர்வும்
எங்கள் தமிழர் உள்ளங்களில்
மாற்றத்தை ஏற்படுத்தினால் - அதுவே
தமிழுக்கு வெற்றி!" என்றவாறு மேற்காணும் ஒளிஒலி (Video) நாடாவைப் பார்த்ததும் எழுதியது.

"ஊருக்கு நல்லது செய்வோம்
சாக மாட்டோம், வாழ்வோம்!
நேரம் கரைவது போல
வாழ்க்கையும் கரைந்து போகும்
தன்னலம் கருதாது
பிறர் நலம் பேணி வாழ்வோர்
காந்தி, பாரதி போன்று
இன்றும் வாழ்வதைப் பாரும்!
சாவு பற்றி எண்ணாது
நேரத்தை வீணடிக்காது வாழ்வோம்!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"புகைத்தல்
உடல் நலத்திற்குக் கேடாகலாம் என்பது
அரச எச்சரிக்கை! - நானும்
வேற மாதிரி எச்சரிக்கிறேன்...
புகைத்தலால் தான்
புற்றுநோய் வந்து உயிரிழந்தேன்
இவ்வண்ணம் - உங்கள் முன்னே
புகையாக உலாவும் ஆவி!" என்றவாறு முகநூலில் பதிவிட்டேன்.

"வலைப்பூ நடாத்துவது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
பேணுவதென்பது இலகுவானதல்ல!
எழுதுவது என்பது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
வாசகர் விரும்பும் வகையில்
எழுதுவது இலகுவானதல்ல!
வெளியிடுவது என்பது
இலகுவானதாக இருக்கலாம் - அதனை
வாசகர் கண்ணிற்கு எட்ட
முயலுவது இலகுவானதல்ல!
மொத்தத்தில இலகுவானது என்று
சொல்வதெல்லாம் - ஈற்றில
எத்தனையோ தடைகளைக் கடந்த பின்னரே
வெற்றிகளைத் தந்திருக்கிறது!
தங்கள் தமிழ் பற்று
தங்கள் விடாமுயற்சி
தங்கள் ஆளுமை, ஆற்றல்
தங்கள் பதிவர்களுடன் உறவைப் பேணும் சிறப்பு
தங்கள் வாசகர் விருப்பறிந்து வெளியிடும் ஆற்றல்
என்றவாறு நீளும்
தங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்!" என்றவாறு
இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களின் வலைப்பூவிற்கு
நான்காம் பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்த வேளை எழுதியது.


முகநூலில் (Facebook) துளித் துளியாக எழுதினாலும் ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க இயலாதே! துளித் துளியாக எழுதியதை ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க வலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க!!