எழுதுங்கள் எழுதுங்கள் - உங்கள் உள்ளத்தில் ஏற்பட்ட நோவை உடலில் ஏற்பட்ட வலிகளை எழுதும் போது மறக்காமல் எதுகை, மோனை அமைய எழுதுங்கள் எழுதுங்கள் - உங்களுக்கும் கவிதைகள் எழுதத்தான் வருமே! பலவாண்டுகள் பக்குவமாய் பழகி பலரும் பார்க்கத்தான் காதலிப்பதாய் காலம் கடத்திப் போட்டு காலமானதும் அண்ணா என்றாளே! எழுதுங்கள் இப்படித்தான் எழுதுவது கவிதை ஆகலாம்!
2.
கவிதை என்பதும் பாடல் என்பதும் வேறுபாடு உள்ளதாய் எனக்குத் தெரியவில்லை. "காசுள்ளவரை சூழவிருந்தவர்கள் காசில்லாத வேளை பார்த்து எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்! " என பணத்துக்காய் உறவுகளென்று எழுதி முடிப்பது கவிதை! "பணம் இருந்தால் பறந்து வருவார் குணம் இருந்தால் பறந்து போவார் (பணம்) பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா (பணம்)" என மனித உள்ளத்தை உரித்துக் காட்டினால் கவிதை என்றாலும் பாடல் என்கிறாங்க. ஓ! இரண்டிலும் இசை வேறுபாடு இருக்காம் எழுதுங்க உறவுகளே! நல்லது எல்லாம் - அவை கவிதையா பாடலா வாசகர் தீர்ப்புக் கூறட்டும்!
3.
காசுள்ளவரை சூழவிருந்தவர்கள் காசில்லாத வேளை பார்த்து எங்கேயோ ஓடிப்போய்விட்டனர்! தேடிப் போகத் தான் எனக்கு விருப்பம் இல்லை பணம் உள்ளவர் கை தானே அவர்களை இழுத்திருக்கும்! என் கை நிறைய ஒரு நாள் பணம் இருக்கலாம் அந்த வேளை பார்த்து என் பக்கம் அவர்கள் திரும்பலாம்! பணம் பத்தும் செய்யும் என்பது இந்தத் திருவிளையாடல் தானோ!!
4.
பணம் இருந்தால் பறந்து வருவார் குணம் இருந்தால் பறந்து போவார் (பணம்) குணம் இருந்தால் பிணம் என்பார் பணம் இருந்தால் கடவுள் என்பார் (குணம்) பணம் எங்கும் பாயும் என்பதா பணம் பத்தும் செய்யும் என்பதா குணம் உள்ளவர் வேண்டாம் என்பதா (பணம்)(குணம்) பணம் உள்ளவரை தான் உறவா குணம் உள்ளவரை தான் விறகா நோய் வந்தபின் தான் உணர்வா (பணம்)(குணம்) மருந்து உண்ணப் பணம் வேண்டுமா உடலைப் பேணப் பணம் போதுமா உடல் நொந்த பின்னே தெரியுமா (பணம்)(குணம்) பணத்தைக் கண்டு உள்ளம் இழுக்குமா குணத்தைக் கண்டு உள்ளம் வெறுக்குமா சாவைக் கண்டதும் எண்ணத் தோன்றுமா (பணம்)(குணம்) ========================================================== தன்முனைக் கவிதைகள்
(SELF -ASSERTIVE
VERSES) https://ypvnpubs.blogspot.com/2021/05/self-assertive-verses.html
மேற்படி பயிலரங்கில்
முழுமையாகப் பங்கெடுக்கும் பயிலுநர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும்.
விரும்பும் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.
கொரோனா (Covid-19) உலகெங்கும் உலாவி
உயிர்களைப் பறிப்பதும் உறவுகளைத் தனிமைப்படுத்துவதுமாக நகர்ந்தாலும் நம்மாளுங்க
அதிலிருந்து தப்பிக்கப் போராடிய வண்ணம் வாழ்கின்றனர். அந்த வகையில் தமது அறிவினைப்
பெருக்கப் பலரும் இணையவழிப் பயிலரங்கினைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில்
தான் யாழ்பாவாணன் கலைப்பணி மன்றமும் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை
உருவாக்கப் பயிலரங்குகளை நடாத்தி வருகிறது.
இதுவரை புதுக்கவிதைப்
பயிலரங்கம், நகைச்சுவைப்
பயிலரங்கம், மரபுக் கவிதைப் பயிலரங்கம்-01 நடாத்தியிருந்தோம். தற்போது மரபுக் கவிதைப் பயிலரங்கம்-02 நடைபெறுகிறது. கீழ்வரும் இணைப்பில் அதற்கான காணொளிகளைப் பார்க்கலாம்.
நாம் நடாத்தும்
மரபுக் கவிதைப் பயிலரங்கப் பிந்திய காணொளிகளைக் கீழே பார்க்கவும்.
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 05
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 06
மரபுக்கவிதைப் பயிலரங்கம்
- தொகுப்பு - 02 - தொடர் - 07
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 08
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 02 - தொடர் - 09
யாழ்பாவாணன்
கலைப்பணி மன்றம் இணைய வழியில் இலக்கியப் படைப்பாளிகளை உருவாக்க நடாத்தும்
பயிலரங்குகளில் விரும்பும் உள்ளங்களை இணையுமாறு பணிவோடு அழைக்கின்றோம்.
17/07/2020 இல் தொடங்கி மரபுக்
கவிதைப் பயிலரங்கம் நடத்துவதாகக் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தேன். அதன்படிக்கு
24/07/2020 , 03/08/2020 நடந்த பயிலரங்கப்
பதிவுகளை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள்
கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 01
- தொடர் - 02
மரபுக்கவிதைப்
பயிலரங்கம் - தொகுப்பு - 01
- தொடர் - 03
07/08/2020 வெள்ளி அன்று
மரபுக்கவிதைப் பயிலரங்கம் இடம்பெறவில்லை. அன்றைய நாள் யாழ்பாவாணனின் நகைச்சுவைப்
பயிலரங்கம் இடம்பெற்றது. அதனை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன்
பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.
இனி இயல்பாகவே
மரபுக்கவிதைப் பயிலரங்கம் தொடரும். தங்களுக்குத தெரிந்த மரபுக்கவிதை பயில
விரும்பும் எல்லோருக்கும் இந்தப் பயிலரங்கம் பற்றிய தகவலப் பகிர்ந்து உதவுங்கள்
இவ்வாறான பயிலரங்குகள் பலருக்கு நன்மை தர வேண்டும் என்பதே எமது நோக்கு அதனை நாம்
தொடர்ந்து செய்வோம்.
வலை வழியே அதிகம் உலா
வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 03/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந்.
நேரம்) Zoom செயலி ஊடாக இடம்
பெற்றது.
கனடா, இந்தியா, இலங்கை அறிஞர்கள்
பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம்
பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள்
பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.
வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 10/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந்.
நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது.
கடந்த நிகழ்வுகளில் பேசிய அறிஞர்கள் பேச்சுத்
தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது
நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube)
பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள்
பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.
வலை வழியே அதிகம் உலா
வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 26/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந்.
நேரம்) Zoom செயலி ஊடாக இடம்
பெற்றது. இந்தியா, மலேசியா, இலங்கை அறிஞர்கள்
பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம்
பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள்
பின்னூட்டத்தினைப் பகிருமாறு பணிகின்றேன்.
வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம்நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)பகிரும் பணியில் முதலாவதாகத் தமிழகத் தமிழறிஞர்
ஒருவரைச் சந்தித்தேன். அவர் மணிவானதி வலைப்பூ (Blog), வலையொளி (Youtube) நடாத்துகிறார். அவரைப் பற்றி முழுவதும் அறியக்
கீழுள்ள காணொளியைப் (Video)
பார்க்கவும். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு
பணிகின்றேன்.
வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 19/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல.
இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம்
பெற்றது. சிங்கப்பூர், இந்தியா, இலங்கை
அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக
இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப் பகிருமாறு
பணிகின்றேன்.
இணைய வழி நேர்காணல்
வலைப்பதிவர்களை, அறிஞர்களை, கலைஞர்களை ஒளிஒலி (Video) மூலம் https://meet.jit.si/yarlpavanan ஊடாக நேர்காணல் செய்து வலையொளியில் (Youtube)பகிரும் அடுத்த
பணியையும் தொடங்கியுள்ளேன். விரைவில் முதலாம் நேர்காணலை வலையொளியில் (Youtube)காணலாம்.
மேற்காணும் ஒளிஒலி (Video) பதிவினைக் கவனித்துப் போதிய வழிகாட்டலைப்
பெறவும். இந்த ஒளிஒலி (Video) பதிவு, கூகிள் அட்சென்ஸ் பயன்படுத்தக்கூடிய மொழிகளில்
தமிழைச் சேர்க்க முன் ஆக்கப்பட்டது. ஆகையால், கூகிள் அட்சென்ஸ் தமிழுக்குப் பாவிக்க
இயலாது என்பதைத் தவிர்க்கவும். தற்போது தமிழ் வலைப்பக்கங்களில் கூகிள் அட்சென்ஸைப்
பாவிக்கலாம்.
மாற்றாரின் பதிவுகளைப்
போல
எழுத முயன்றல் கூட
சொந்தமாக எழுத வருமே!
நானும் அப்படித் தான்
மூ.மேத்தாவின் பாவரிகளைப் போல
எழுத முயன்ற பின்னே
ஈழத்துப் பத்திரிகைகளில் வெளியான
பாவரிகளைப் பார்த்தும் - அதே போல
எழுத முயன்ற பின்னே
பா/கவிதை நடை போல
சொந்தமாக எழுதப் பழகிக்கொண்டேன்!
கட்டுரை எழுதுவது எப்படி? என அறியாதவர் இருக்க முடியாது. ஆயினும், அக்கட்டுரை வாசகர் உள்ளத்தைத் தொட எப்படி எழுதுவது என்பதை இப்பதிவில் நீங்கள் காணலாம். அதனால், இப்பதிவை உங்களுடன் பகிருகிறேன்.
‘புதிய தலைமுறை’ இதழில் பணிக்கு சேரும்போது ‘எழுதுவது எப்படி?’ என்று மாலன், தான் எழுதிய பதினாறு பக்க சிறுநூல் ஒன்றை தந்தார். சி.பா.ஆதித்தனாரின் ‘இதழாளர் கையேடு’ போன்ற அந்நூல் ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு மிகவும் பயன்படும். பல பத்திரிகை ஆசிரியர்கள் அந்த நூலை ஜெராக்ஸ் போட்டுக்கொண்டு திருப்பித் தருகிறோம் என்று கேட்டார்கள். அதுமாதிரி ஒருவரிடம் போன copy இன்னமும் எனக்கு திரும்ப வரவில்லை. மாலன் சார், ஒரு soft copy கொடுத்தால் மகிழ்ச்சி.
அது மட்டுமின்றி அவ்வப்போது நம்முடைய கட்டுரைகளை திருத்தும்போது என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது என்பதை கவனித்து, அடுத்தமுறை அந்த தவறை திருத்திக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்.
ஒருமுறை ‘இந்தித் திணிப்பு’ குறித்து நான் எழுதியிருந்த கட்டுரை ஒன்று அரைகுறையாக வெந்திருந்தது. அதை வாசித்துவிட்டு, ‘கட்டுரை எழுதுவது எப்படி?’ என்று ஒரு மடலில் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். முடிந்தவரை அதை இன்றுவரை கடைப்பிடிக்கிறேன்.
‘யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்று மாலன் சாரின் அனுமதியில்லாமலேயே அதை இங்கு பகிர்கிறேன். அவருக்கு தகவல்களை பரப்புவதில் பேரார்வம் உண்டு. எனவே எனக்கே எனக்காக கொடுத்த அறிவுரைகள் பலருக்கும் பயன்பட பகிர்வதை ஆட்சேபிக்க மாட்டார் என்றும் கருதுகிறேன். இப்போது சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் கட்டுரைகள் எழுதிவருகிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி இவர்களுக்கும் மூத்தப் பத்திரிகையாளரின் அனுபவ அறிவுறுத்தல்கள் உதவக்கூடும்.
எவரும் திறன்பேசி
வழியே முகநூலில் மேய்ந்து கொண்டிருப்பதைக் காண்பீர். அவர்கள் நீண்ட நாளாக வலைப்பூவை
மறந்து இருக்கலாம். ஆயினும், வலைப்பூவில் பதிந்தவை முகநூலைப் போலல்லாது என்றும் கண்ணுக்குக்
காட்சி தருமே! திறன்பேசி வழியே மூகநூலில் துளித் துளியாகப் பதிவுகளை இட்டாலும் அவற்றைத்
திரட்டி வலைப்பூவில் பதிவு செய்யலாம் வாங்க! இதோ எனது எடுத்துக்காட்டைப் பாருங்க.
"சிரிப்பு
உள/உடல்
நலம் பேண
நல்ல மருந்து
என்பேன்" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.
"கோபத்தின்
போது 13 நரம்புகள் இயங்குமாம்
சிரிப்பின்
போது 65 நரம்புகள் இயங்குமாம்
ஆகையால்,
கோபத்தை
விட சிரிப்பு
உடலெங்கும்
செந்நீர் (குருதி) சீராகப் பரவ
உதவுவதால்
நோய்களை விரட்டலாம்!" எனத் தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.
"எளிமையான
புதுக்கவிதையை
இறுக்கமான
புதுக்கவிதையாக
நறுக்கென
வெளிப்படுத்தியவர்
கவிக்கோ
அப்துல் ரகுமான்" என அவரது இழப்புச் செய்தி கேட்டதும் எழுதியது.
"பணம்
உள்ளவரை உறவு" என்ற தலைப்பில்
"பணத்தைத்
தேடும்வரை தெரியாது
படுக்கையில்
கிடந்தால் தெரிகிறது...
தலையணைக்குக்
கீழே உள்ள
பணத்தைக்
கணக்கெடுக்க வரும்
உறவுகளை
எண்ணிப் பார்க்கலாம்!" என்றவாறு தோழி ஒருவரின் பதிவில் கருத்திட்டுள்ளேன்.
"நேற்றைய
நல்லவை இன்று வழிகாட்டும்
நாளைய விடியலில்
எண்ணியவை தான்
(எடுத்துக்காட்டாகச்
சேமித்து வைத்த பணம்)
இன்று நாம்
வாழத் துணைக்கு வருமாயின்
நாளையை நாளைக்கே
பார்ப்போமாயின்
இன்று எப்படி
வாழ்வது? - எனவே
முன்கூட்டியே
திட்டமிட்டால் - எவருக்கும்
இன்றைய வாழ்வு
சறுக்காது!" என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.
"எந்த
முகத்துக்கும் அஞ்சாமல்
சொந்த முகத்தைக்
காட்டுங்கள்
உண்மையானவராயின்..."
என்றவாறு ஒரு பதிவுக்குப் பதிலிட்டுள்ளேன்.
தங்கள் உழைப்பிற்கு
கிடைத்த வெற்றியாகும்!" என்றவாறு
இ.பு.ஞானப்பிரகாசன்
அவர்களின் வலைப்பூவிற்கு
நான்காம்
பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்த வேளை எழுதியது.
முகநூலில்
(Facebook) துளித் துளியாக எழுதினாலும் ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க இயலாதே!
துளித் துளியாக எழுதியதை ஒரே நேரத்தில் முழுமையாகப் பார்க்க வலைப்பூக்களில் (Blog)
எழுதலாம் வாங்க!!