Translate Tamil to any languages.

செவ்வாய், 31 மார்ச், 2015

பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!

யாழ்பாவாணன் எழுதுவதெல்லாம்
பா (கவிதை) அல்ல - வெறும்
பா (கவிதை) நடையே - அதை
படியெடுத்தால் பாவாக்க (கவிதையாக்க) முடியாதே!
புதிதாய்ப் பாப்புனைய (கவிதையாக்க) விரும்புவோர்
புதுப்பா (புதுக்கவிதை) புனைய (ஆக்க) விரும்புவோர்
பாவலர் மூ.மேத்தா அவர்களின்
கண்ணீர்ப் பூக்களைப் படிக்கலாம்...
பாவலர் வைரமுத்து அவர்களின்
கவிராஜன் கதை படிக்கலாம்...
படித்துச் சுவைத்ததைப் பகிராமலே
படித்துச் சுவைத்ததைப் போலவே
பாப்புனையத் (கவிதையாக்கத்) தான் முயன்றாலும்
பாப்புனைய (கவிதையாக்க) எண்ணமிடல் (கற்பனை) வேண்டுமே!

கால்களை மேயும் கண்களால் கண்டதை
மீளவும் உள்ளக் கண்ணால் பார்த்தே
எண்ணமிட்டுப் (கற்பனை செய்து) பாரும்...
"வாலை ஒருவள் வந்த வழியைப் பாரேன்
காலைத் தூக்கி வைத்து நடப்பதைப் பாரேன்
வைத்த கால்ப் பெருவிரலின் போக்கைப் பாரேன்
நேர்கோடு ஒன்றில் பயணிப்பதைப் பாரேன்
நடைபயிலும் வாலையின் சுடும்காலைப் பாரேன்
சித்திரை வெயிற்றரை வாட்டுவதைப் பாரேன்" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"கால்நடைகள் நடக்கும் வீச்சுநடை போல
வீசும்காற்றுக்குத் தள்ளாடும் கமுகு போல
கண்முன்னே மண்விழுவான் நெழிவார் போல
வழியெதிரே ஆடியாடி விழுவார் போல
விழிமங்கக் குடித்தவர் வழியிலே வீழவே
வந்தகாற்று உடைபிடுங்க ஆளோ அம்மணம்!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

முகம் பார்க்கும் கண்ணாடியிலே கொஞ்சம் - தங்கள்
மூஞ்சியைப் பார்த்தால் பாப்புனைய முடியாதாம்
தெருவால போறவங்க மூஞ்சியைப் பார்த்தே
எத்தனை எத்தனை பாப்புனையலாம் பாரும்...
"செக்கச் சிவந்த பொட்டு இட்டவளே
கழுத்திலே மின்னும் கொடி போட்டவளே
கிட்ட வந்தவேளை கண்டுகொண்டேன் - உன்னை
எட்ட விலத்தி நடக்கிறேன் என்னவளைத் தேடி" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"திறந்த சட்டைக்குள்ளே தெரிவது தங்கச்சங்கிலி
தலையை வாரிவிடும் கையிலே மின்னுவது மோதிரம்
எல்லாமே தங்கப்பூச்சோ வாடகையோ - உன்
நடிப்பைக் கண்டு நானும் விலகினேனே - என்
தங்கமான என்னவனைத் தேடியே" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

"நெஞ்சிலே தெரிவது எலும்பும் தோலுமே" என்று
கண்ணுக்கு எட்டிய ஆணைப் பார்த்தும்
"நெஞ்சிலே தெரிவது நீர்வீழும் வீழ்ச்சியோ" என்று
கண்ணுக்கு எட்டிய பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்கு மேலேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!
"நெடுநாள் அடக்கம் எவளை முடக்குமோ" என்று
எட்டி நடைபோடும் ஆணைப் பார்த்தும்
"நெடுநாள் முடக்கம் என்றோ அம்மாவாக்கவே" என்று
எட்டி நடைபோடும் பெண்ணைப் பார்த்தும்
வயிற்றுக்குக் கீழேமேயும் விண்ணர்கள் எழுதலாம்!

வழியிலே கண்டவர் வயிற்றைப் பார்த்து
வழியிலே நின்றவர் பேச்சைக் கேட்டு
பாப்புனைதல் (கவிதையாக்கல்) என்ற மலையின்
அடியில் ஊரும் எறும்பாகிய நாமும்
துளிப்பா (கைக்கூ) ஆயினும் புனைய முடியாதோ?
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
தப்பாமல் நீண்டு மின்னும் வயிறானவள்
நமக்கு ஆகாதவள் ஆச்சே!" என்று
ஆண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!
"அக்காவின் நிறைமாத வயிற்றைப் போல
நீண்டு மின்னும் குடிகாரன் வயிறாச்சே
நமக்கு ஆகாதவன் ஆனானே!" என்று
பெண் பாவலர் எண்ணமிட்டு (கற்பனை செய்து) எழுதலாமே!

கல்லெறியோ சொல்லடியோ விழுந்தாலும் - நீ
மேலேமேய்வதையோ கீழேமேய்வதையோ விட்டிட்டு
நாட்டுக்கு நல்ல செய்தி சொல்ல - உன்
பாட்டுக்குச் சொல்லெடுத்து அடியமைத்து
பாப்புனைய (கவிதையாக்க) விரும்புங்கள் உறவுகளே!
பேச்சளவில் பாவலர் என்றெவர் சொன்னாலும்
எழுத்தளவில் எண்ணமிடலை (கற்பனையை) வைத்தே உணரலாம்
பாப்புனைய விரும்பும் உறவுகளே! - கொஞ்சம்
எண்ணமிடலை (கற்பனையை) வளப்படுத்தினால் பாரும்
பாவலராக வேறென்ன தகுதிவேண்டும் உமக்கு!

சனி, 28 மார்ச், 2015

கற்பழிப்புச் செய்திகளும் ஊடகங்களும்


கற்பு + அழிப்பு = கற்பழிப்பு என்று யாவரும் அறிந்ததே! கற்பு என்பது அறம் அல்லது ஒழுக்கம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இதனடிப்படையில் ஊடகங்களும் தம்விருப்பிற்கு ஏற்றாற் போல கற்பழிப்புச் செய்திகளை வெளியிடுகின்றன.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல; ஆணுக்கும் உரியதே! ஊடகங்கள் இதனை மறந்து விடுவதாகப் பலரும் பேசுவதுண்டு. இயற்கையும் பெண்ணுக்குப் பாதிப்பைத் தருவதால் ஊடகங்களை எதிர்க்க எவருமில்லை என்ற பேச்சு உலாவுகின்றது. ஊர்திகள் மோதுண்டால் மோதிய ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகள்; பெண்ணைச் செய்தி ஆக்கும் ஊடகங்களையோ பெண்ணின் கற்பை அழிக்கும் ஆண்களையோ தீமூட்ட முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம்.

என் நிலை என்ன வென்றால் ஊர்திக்குத் தீமூட்டும் நம்மாளுகளின் செயலைப் பெரிதாகப் பரப்பும் ஊடகங்கள்; பெண்ணின் கற்பை அழிக்கும் கற்பில்லாத ஆண்களைச் செய்தியாக்கவோ கற்பில்லாத ஆண்களின் செயலைப் பெரிதாகப் பரப்ப முன்வராமை தான் இந்நிலை தொடரக் காரணம். இந்நிலை தொடருவதால் தான் பல பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அப்படியாயின், கற்பழிப்புச் செய்திகளை எழுதுவது எப்படி?

நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான். இந்நிகழ்வை இப்படியும் சிலர் எழுதலாம்.

அரைகுறை ஆடை அணிந்து சென்ற பெண்ணைக் கண்ட ஆண் அவளைக் கெடுத்துவிட்டான்.

நடுவழியே தனியே சென்ற பெண்ணை ஆண்கள் சிலர் கெடுத்துவிட்டனர்.

மது அருந்திய ஆணை நம்பி நடுவழியே சென்ற பெண், அவனாலே கெடுக்கப்பட்டாள்.

இவ்வாறு எழுதுவோர் பெண்ணின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் தரவுகளையும் எழுதுவர். இப்படி எழுதுவதால் பெண்ணின் பக்கம் தான் முழுப்பிழை என்றாகிவிடுகிறது. இதனால் ஆண்கள் சுத்தமானவர்கள், பெண்களே தவறுக்குக் காரணம் என்றாகிவிடுகிறது.

இவற்றை இப்படி மாற்றி எழுதினால் எப்படி இருக்குமென்று பாருங்களேன்.

இளமை முற்றிய ஆணோ நடுவழியே அழகு முற்றிய பெண்ணைக் கண்டதும் கெடுத்துவிட்டான்.

ஆண்கள் சிலர் நடுவழியே தனியே சென்ற ஏதுமறியாப் (அப்பாவி) பெண்ணைக் கெடுத்து விலங்குகளாயினர்.

பக்கத்து வீட்டாளை நம்பிப் பணியிடத்திலிருந்து வீடு திரும்பிய பெண் அவனாலேயே கெடுக்கப்பட்டாள். பக்கத்து வீட்டாளைக் காவற்றுறை வலைவீசித் தேடுகின்றனராம்.

இப்படி, எப்படி எழுதினாலும் கூட கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்க முடிவதில்லையே!

எடுத்துக்காட்டாக நள்ளிரவில் நடுவழியே முள்ளூர் ஆண் கல்லூர் பெண்ணின் கற்பை அழித்துவிட்டான் என்றதும் கல்லூர் மக்கள் கல்லெறிந்தே முள்ளூர் ஆணைக் கொல்ல முயன்றனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

பள்ளிக்கூட ஆசிரியை மாணவன் ஒருவரை வீட்டிற்கு அழைத்துக் கற்றுக்கொடுப்பதாகக் கூறித் தன் பாலியல் பசிபோக்கப் பாவித்தவேளை கண்ணுற்ற அயலண்டை ஆள்கள் ஆசிரியையை மரத்தில் கட்டிவைத்து ஊரைக்கூட்டி நோகடித்தனர். அவ்வழியே வந்த காவற்றுறை நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

இவ்வாறு கற்பழிப்பு நிகழ்வுகளைத் தடுக்கவல்ல அல்லது கற்பழிப்பு நிகழ்வுகள் தொடராமல் இருக்க உதவும் வகையில் ஊடகங்கள் கற்பழிப்புச் செய்திகளை வெளியிடலாமே!

இது பற்றிப் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தன்பக்கக் கருத்துகளை எப்படி எழுதுவார். ஊடகவியல் அறிஞர் மு.வி.நந்தினி அவர்களின் "கற்பழிப்பு நியூஸ் எழுதுவது எப்படி?" என்ற பதிவைப் படித்தால் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறேன். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்துப் பாருங்கள்.

http://mvnandhini.com/2015/03/27/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5/

ஞாயிறு, 22 மார்ச், 2015

நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!

என் நிறம், மணம், குணம் ஏதுமறியாது
எனது அடி, நுனி, அத்தனையும் அறியாது
2010 இலிருந்து
தமிழ்நண்பர்கள்.கொம் இலிருந்து
என்னுடைய எழுத்தில்
என்னை அடையாளம் கண்டு
என்னையும் ஒரு பதிவராகக் கணக்கிலெடுத்து
உறவைப் பேணி வரும்
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
எங்கிருந்தோ என் பதிவை நாடி - தங்கள்
எண்ணங்களைக் கருத்து வண்ணங்களாக
பின்னூட்டமிட்டும் - எனது
பதிவுகளைப் பகிர்ந்தும் - எனது
தளங்களை அறிமுகம் செய்தும்
சின்னப்பொடியன் (யாழ்பாவாணன்) என்னை
வலைப்பதிவராக (Blogger) உயர்த்திய
பதிவர்கள் எல்லோருக்கும் நன்றி!
உங்கள் ஒத்துழைப்பும் வழிகாட்டலும்
என்னை வளப்படுத்தி, நெறிப்படுத்தி
எனது திறமைகள் எல்லாவற்றையும்
ஏழாம் எண் ஆளென - தமிழில்
ஏழு வலைத் தளங்களூடாக
(நடைபேசியில் http://tik.ee/kasig1)
வெளியிடப் பின்னூட்டியாக (Feedback) இருந்து
என்னை ஆளுமை செய்கிறது என்பதை
நன்றியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!
http://eluththugal.blogspot.com/
http://yppubs.blogspot.com/
http://paapunaya.blogspot.com/
https://mhcd7.wordpress.com/
http://yarlpavanan.wordpress.com/
https://ial2.wordpress.com/ 
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
http://www.yarlsoft.com/
(கட்டியமைக்கிறேன், விரைவில் அறிமுகம் செய்வேன்)
ஆகிய வலைத் தளங்களின்
வடிவமைப்பை நிறைவு செய்யும் நோக்கில்
அடிக்கடி தங்கள் பதிவை நாடி
என் கருத்துகளை பின்னூட்டமிட முடியாமை
எனக்குத் துயரம் தான்...
ஆயினும் - தங்கள்
வலைப்பூக்களை - தங்கள்
பதிவுகளை நாடி வருவேன்!
நன்றி மறவேன்! நாளும் தொடர்வேன்!


சனி, 21 மார்ச், 2015

இப்படியானவர் கூடினால் எப்படியான பிள்ளை பிறக்கும்?

பேர்னாட்ஷா என்ற அறிஞரிடம் அழகிய நடிகை ஒருவள் "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறக்குமே!" என்று கேட்டாள்.

அதற்கு அறிஞர் பேர்னாட்ஷா என்ன கூறியிருப்பார்?

அந்த அழகிய நடிகையைப் பார்த்து "நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற அழகுடன் உங்களுடைய அறிவும் இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?" என்று அறிஞர் பேர்னாட்ஷா கேட்டதும் அந்த நடிகை அவ்விடத்தை விட்டு அகன்று போய்விட்டாளாம்.

இந்தத் தகவலை நாளேடு ஒன்றில் படித்தேன். படித்ததும் "இப்படி நானும் எழுதினால் என்ன?" என்று எழுதியதைக் கீழே தருகின்றேன். எனது கைவண்ணத்தையும் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.

இல்லாள் வள்ளி இல்லாத வேளை அயலாள் பொன்னி அறிஞர் பேர்னாட்ஷா பற்றி நாளேடு ஒன்றில் படித்ததாகக் கூறிப் பொன்னனிடம் கேள்வி கேட்கின்றாள்.

பொன்னி: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற கதை/பாட்டுப் புனையும் ஆற்றலுடன் உங்களைப் போன்ற அழகும் இணைந்த பிள்ளை பிறக்குமே!

பொன்னன்: நானும் நீரும் கூடினால்; என்னைப் போன்ற வேளாண்மை செய்யும் ஆற்றலுடன் உங்களது நிறைவேறாத விருப்பமும் (ஆசையும்) இணைந்த பிள்ளை பிறந்தால் என்ன செய்வது?"

பொன்னி: நீங்கள் அழகு இல்லாதவரா? எனக்கு நிறைவேறாத விருப்பம் (ஆசை) இருப்பதை எப்படி அறிவீர்?

பொன்னன்: எனக்கு வேளாண்மை செய்தமையால் உடற்கட்டு இருக்கலாம். அது அழகில்லையே! நானும் நீரும் கூடிப் பிள்ளை பிறந்தால் எப்படி இருக்கும் என்கிறியே - அது உன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!

பொன்னி: உடற்கட்டு மன்னவரே! நானும் நீரும் கூடினால் பிள்ளை பிறக்காதா? பிறகேன் நிறைவேறாத விருப்பம் (ஆசை) என்பீர்?

பொன்னன்: பிள்ளாய்! என் இல்லாள் வள்ளிக்கு இந்தக் கதை தெரிந்தால். நீ உயிரோடு இருக்கவே உனக்குக் கொள்ளி வைப்பாளே! அப்படி என்றால் உன் எண்ணம் நிறைவேறாத விருப்பம் (ஆசை) தானே!

அந்த நேரம் வள்ளி வீட்டிற்குள் நுழையப் பொன்னி வாயடைத்துப் போட்டாள். பொன்னனும் மூச்சு விடவில்லை. ஏதோ வள்ளியும் பொன்னியும் பறைய, பொன்னன் வீட்டு முற்றத்தில் இறங்கினான்.

ஞாயிறு, 15 மார்ச், 2015

எனக்குக் காதல் வரவில்லை!

1.
தோழி: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

தோழர்: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் உங்க வீட்டில எத்தனை கோடியும் கொடுக்க வசதி இல்லாமையே!

2.
நண்பர்: இத்தனை நாள் எத்தனையோ வழிகளில் பழகியிருந்தும் என்னைக் காதலிக்க மாட்டேன் என்கிறீர்களே!

நண்பி: இத்தனை நாள் பழகிய அத்தனை வழிகளிலும் நீங்கள் எத்தனை கோடியும் உழைத்துக் கொடுக்க வசதி இல்லாதவரே!

வியாழன், 12 மார்ச், 2015

இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தமிழீழம் அமைக்க வாக்கெடுப்பு நடாத்துவது சரியா? தவறா?

இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!

சிறுபான்மை இனங்களை நசுக்கும் பேரினவாதிகளின் செயலால்; சிறுபான்மை இனங்களைக் காப்பாற்ற அவர்களுக்கெனத் தனிநாடு அமைத்துக் கொடுத்தால் நல்ல தீர்வாக அமையுமெனச் சிலர் கருதுகின்றனர். சிறுபான்மை இனங்கள் அதிகம் தமிழைப் பேசுவதால் அத்தனிநாட்டைத் தமிழீழம் என்கின்றனர்.

சிங்களப் போராளிக் குழுக்களான சேகுவாரா, ஜேவிபி மற்றும் தமிழ் போராளிக் குழுவான புலிகள் போன்றவற்றை ஒடுக்கிவிட்டதால், இனிப் போர் மூளாது என்ற முடிவுக்கு வர இயலாது. முதலாளித்துவ அரசை மாற்றி சோசலிச அரசை உருவாக்க முனையும் சிங்களப் போராளிக் குழுக்கள் மீளவும் உருவெடுக்கலாம். அதே போல தமிழ் போராளிக் குழுக்களும் உருவெடுக்கலாம்.

எனவே, அமைதியான இலங்கையைப் பேண; இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்கு நல்ல தீர்வு தேவைப்படுகிறது.

1. சரி, சிறுபான்மை இனங்கள் மகிழ்வாக வாழத் தமிழீழம் அமைக்க வாக்கெடுப்பு நடாத்தலாம்.

2. தவறு, ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கக்கூடிய தீர்வு அமைந்தால் போதுமே!

எந்தவொரு தீர்வானாலும் ஐக்கிய நாடுகள் சபை தான் முன்வைக்க வேண்டும். இல்லையேல் இலங்கையில் அமைதி தோன்ற வாய்ப்பில்லையே! இப்படி நான் எண்ணிப் பார்க்கிறேன். என்னால் என்னத்தைப் பண்ண இயலும்? எப்போதும் சிக்கலை(பிரச்சனையை) அலசுவதை விட தீர்வுகளை அலசுவது மேல். உங்கள் எண்ணத்தில் தோன்றும் தீர்வுகளை முன்வைத்தால், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கலாம்.

எனது தீர்வு ஒன்று மற்றைய வலைப்பூவில் இட்டிருக்கிறேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்.
https://mhcd7.wordpress.com/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/

வெள்ளி, 6 மார்ச், 2015

தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாழ்க


எழுதுகோல் பிடிக்கத் தெரிந்தவர்கள்
பழுதின்றி எழுதத் தெரிந்தவர்கள்
எழுதியதை வாசிக்கத் தெரிந்தவர்கள்
வாசித்ததைப் புரிந்து கொண்டவர்கள்
எல்லோரும் தான்
தமிழ் மீது பற்றுள்ள எல்லோரும் தான்
எவ்வேளையும் மீட்டுப் பார்க்க வந்ததே
எங்கள் தமிழ் நண்பர்கள் தளத்தின்
மாதாந்த மின் இதழ்!
வாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ்!
உலகம் தமிழ் படிக்க வழிகாட்டும்
தமிழ் நண்பர்கள் மின் இதழே வாழ்க!
தூங்கிக்கொண்டிருக்கும்
உலகத் தமிழினத்தைத் தட்டியெழுப்ப
வந்திருக்கும் மின் இதழுக்கு
படைப்பெழுதிய எல்லோருக்கும்
மின் இதழாக்கிய மேலாளர்களுக்கும்
தமிழை விரும்பும் ஒவ்வொருவருக்கும்
பயனளிக்கத் தொடர்ந்து வரும் மின் இதழை
வரவேற்பதோடு வாழ்த்துகிறேன்!
வாழ்க தமிழ் நண்பர்கள் தள மேலாளர்கள்!
வாழ்க தமிழ் நண்பர்கள் தளப் படைப்பாளர்கள்!
வாழ்க தமிழ் நண்பர்கள் மின் இதழ் வாசகர்கள்!
வாழ்க தமிழை விரும்பும் ஒவ்வொருவரும்!
தமிழ் நண்பர்கள் மின் இதழைக் கண்ட மகிழ்வில்
என்னுள்ளத்தில் எழுந்த வரிகளை
தங்களுடன் பகிர்ந்தமைக்கு உதவிய
என் தமிழுக்கு நானடிமை!

தமிழ் நண்பர்கள் - மின் இதழ்கள்
https://mega.co.nz/#F!YcIBmAzB!YD0Ot8974jY2VdKQa0gTIw

மேற்காணும் இணைப்பைச் சொடுக்கி இதுவரை வெளிவந்த தமிழ் நண்பர்கள் - மின் இதழ்களைப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

செவ்வாய், 3 மார்ச், 2015

படியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்?


படியெடுத்துப் பதிவெழுத அஞ்சுவோருமிருக்க
படியெடுத்துப் பதிவெழுதும் பெரியோருமிருக்க
படியெடுத்துப் பதிவெழுதத் தெரியாதோருமிருக்க
படியெடுத்துப் பாப்புனைவது எப்படி என்றால்
படியெடுத்தாலும் பிடிபடாமல் இருக்கவும் வேண்டுமே!

படியெடுத்தாலும் பிடிபடாமல் இருக்கத் தானே
சின்னப்பொடியன் யாழ்பாவாணனா பாவரசர் கண்ணதாசனா
படியெடுத்துப் பாப்புனைவதில் யார் பெரியவர்?
என்றாவது எப்பன் அறிந்திருந்தால் தானே
எப்பவும் படியெடுத்துப் பாப்புனையவாவது விரும்புவீர்?

மூ.மேத்தாவின் புதுக்கவிதை அடிகளா
வைரமுத்துவின் மரபுக்கவிதை அடிகளா
கண்ணதாசனின் பட்டுக்கோட்டையாரின் அடிகளா
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் பாப்புனைந்தால்
படியெடுத்தது எவரது அடிகளென அறீவீரே!

உள்ள எல்லா இலக்கியங்களிலும் சுழியோடி
மெள்ள நல்ல எண்ணங்களைப் பொறுக்கி
வெள்ளமெனத் தான் வடித்த பாக்களிலே
துள்ளியெழ நுழைத்து இருந்தும் கூட
கண்ணதாசன் படியெடுத்துப் பாப்புனைந்ததை எவரறிவார்?

கம்பனின் அழகுத் தமிழ் அடிகளா
காளமேகத்தின் புலமைத் தமிழ் அடிகளா
திருக்குறளின் குறளடியா திருப்புகழின் இசையடியா
அடிக்கு அடி படியெடுத்துப் பாப்புனைந்த
கண்ணதாசன் சொல்லியும் நம்ம மறுக்கிறீரே!

பிறரடி படியெடுத்துப் பிறர் கண்பட
யாழ்பாவாணன் பாப்புனைவதில் சிறியவரே...
பிறர் கண்ணில் விழுந்து விடாதபடி
பிறர் பாவடியின்றி நற்பொருள் படியெடுக்கும்
கண்ணதாசன் பாப்புனைவதில் பெரியவரே!

படியெடுத்துப் பாப்புனைவதில் சிறியவர் யாழ்பாவாணன்
படியெடுத்துத் தானும் சொல்லெறி வேண்டிக்கட்டுவார்
படியெடுத்துப் பாப்புனைவதில் பெரியவர் கண்ணதாசன்
படியெடுத்தாலும் படிப்பவர் உள்ளங்களைக் கட்டிப் போடுவார்
படியெடுக்கும் நுட்பமறிந்து பாப்புனைய வாருங்களேன்!

யாப்பறிந்த பின்னரே பாப்புனையலாம் என்பது
பாப்புனைய விரும்பும் உறவுகள் எல்லோருமே
அறிந்தாலும் தெரிந்தாலும் பாப்புனைய விரும்பினால்
கண்ணதாசன் பாக்களைப் பார்த்தேனும் பாப்புனையலாமே...
பாக்களைப் பார்த்தேனும் பாப்புனைந்தாலும் பாவலரே!

"தாலிக் கயிற்றை மாட்டப்போய் - பெண்ணே
தூக்குக் கயிற்றில் மாட்டிவிடாதே!" என்று
நானோர் ஏட்டில் படித்தேன் - அதனை
அப்படியே படியெடுத்துக் கொஞ்சம் அழகாக்கி - என்
கைவண்ணத்தில் புனைந்த பாவைப் படிப்பீரே!

"அடிநுனி முன்பின் ஏதுமறியா ஆணை
நம்பித் தலையை நீட்டும் பெண்ணே - உன்
கழுத்தில் விழுவது தாலிக்கயிறா தூக்குக்கயிறா - பின்
விளைவைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தாயா?" என்ற
யாழ்பாவாணன் கைவண்ணம் எப்படி என்பீர்!

"மனைவியைத் தெரிவு செய்வதில் தோற்பவன்
மரணத்தைத் தெரிவு செய்வதில் வெல்கிறான்." என்று
கண்ணதாசன் எழுதிய வரிகளைப் படித்தேன் - அன்று
எண்ணிப் பார்த்தேன் படியெடுத்துப் பாப்புனைய - என்
கைவண்ணத்தில் புனைந்த பாவைப் படிப்பீரே!

"பெண்ணுள்ளம் என்னவென்று அறியாதவனே - நீ
நல்லதோர் இல்லாளைத் தெரிந்தெடுக்கத் தவறினால் - நீ
மெல்லச் சாவைத் தெரிந்தெடுத்து இருப்பாயே!" என்ற
யாழ்பாவாணன் கைவண்ணம் இப்படி என்றால் - உங்கள்
கைவண்ணம் எப்படியென வெளிக்கொணர முன்வருவீரே!

பாப்புனைய விரும்பும் இனிய உள்ளங்களே!
யாழ்பாவாணனைப் போலப் பிறரடிகளை அல்ல
கண்ணதாசனைப் போல நற்பொருளைத் தானே
படியெடுத்துப் பாப்புனைவதற்கும் பழகுங்கள் என்றே
நானழைப்பது பாப்புனைய விரும்புங்கள் என்பதற்கே!

ஞாயிறு, 1 மார்ச், 2015

வரலாற்று உண்மை!


ஓ! நம்ம ஆளுங்களா...
ஒரு சான்றை அழித்து
இன்னோர் சான்றை ஆக்கினால்
ஆக்கிய சான்று என்ன சொல்லும்?
முன்னைய சான்றை முதன்மைப்படுத்தவா
என்னை ஆக்கினாய் என்று கேட்காதா?

ஓ! நம்ம ஆளுங்களா...
ஒர் எடுத்துக்காட்டாக
குபேரன் இராவணனுக்கு வழங்கி
இராவணன் ஆண்ட இலங்கையில்
சிங்களம், பௌத்தம் அடையாளமிட்டாலும்
இலங்கை; தமிழரின் நாடென்பதை
உலகம் ஏற்றுக்கொள்ளுகிறதே!

ஓ! நம்ம ஆளுங்களா...
ஒரு உண்மையைச் சொல்லட்டுமா?
வரலாறு என்பது
அழிக்க முடியாத ஒன்றே - அந்த
வரலாற்றையே அழிக்க முடிந்தால்  - அந்த
புதிய வரலாறே - அதற்கு
முன்னைய வரலாற்றின் சான்று!

அ... ஆ... ஆள்களின் செய்தீகள்


"அ-மனிதர்கள்!" என்றதும்
"அ" இற்குப் பொருள் தேடியே
படிக்கின்ற வேளை...
"ஆ" என்று ஆட்டுவித்த - அந்தந்த
நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டிய
அருமையான பதிவை - நானும்
படித்தமையால் பகிர்கிறேன் - நீங்களும்
படிக்க மறந்துவிடாதீர்கள்...
.
1990 இல் பாவலர் முத்துநிலவன் எழுதிய
பாவொன்றே பதிவின் கருப்பொருள்

இலங்கையிலே செத்ததுவும் மனிதர், அஸ்ஸாம்
      எரிந்ததிலே செத்ததுவும் மனிதர், பஞ்சாப்
கலங்கையிலே செத்ததுவும் மனிதர், டெல்லிக்
      கலவரத்தில் செத்ததுவும் மனிதர், காஷ்மீர்
குலுங்கையிலே செத்ததுவும் மனிதர், பாபர்
      கோவிலிலே செத்ததுவும் மனிதர், அறிவு
மழுங்கையிலே செத்ததெல்லாம் சிவந்த ரத்த
      மனிதர்கள்! மனிதர்கள்! மனிதர் கள்தான்!

கருப்பொருள் புரிந்தால்
ஒருகணம் எண்ணிப்பாருங்கள்
வரலாறு நம்மாளுகளை திருத்தும்
என்பது பொய்யாகி
நம்மாளுகள் வரலாற்றைத் திருத்தும்
இழிசெயலை எண்ணிப்பாருங்கள்
அதற்கு முன்
"அ-மனிதர்கள்!" பதிவைப் படிக்க
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குங்கள்!
http://valarumkavithai.blogspot.com/2015/02/blog-post_28.html

"வரலாறு என்பது
அழிக்க முடியாத ஒன்றே - அந்த
வரலாற்றையே அழிக்க முடிந்தால்  - அந்த
புதிய வரலாறே - அதற்கு
முன்னைய வரலாற்றின் சான்று!" என்று
"அ-மனிதர்கள்!" எவரையாவது கண்டால்
காதிற்கு எட்டும்படி சொல்லிவையுங்கள்!