Translate Tamil to any languages.

திங்கள், 27 ஜூன், 2016

கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!

'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் ஆள்கள்; உங்களுக்கு தெரிந்த ஒரு குழுவினர் தான், அவர்கள் புதிய வலைத்திரட்டியை அறிமுகம் செய்ய இருக்கிறார்களாம். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்த்த பின்னர், இணைந்து கொள்ளுங்கள்.

ஏற்கனவே பல திரட்டிகளுக்கு மூச்சுப் போயிற்று, இருக்கிற சில மூச்சுப் போகும் நிலையில் நொந்து போய் இருக்கின்றன. இந்த வேளை பார்த்துத் தலையைக் காட்டும் ஊற்று - வலைத்திரட்டிக்கு ஐந்தாறு வலைப்பதிவர்களை இணைத்துக்கொடுக்க ஊருக்க உலாவினால், எல்லோரும் முகநூல் பக்கம் பாய்ந்து போயிட்டார்களாம்.

இதனால், சகலரும் ஒரு உண்மையை அறியுமாறு வேண்டிக்கொள்கின்றேன். முகநூல் பக்கம் உலாவும் பதிவர்களை விட வலைப்பூக்களைப் பேணும் பதிவர்கள், தரமான பதிவர்கள் என்பதே அந்த உண்மை! அதாவது வலைப்பூக்களைப் பேணத் தகுதி அதிகம் தேவைப்படுகிறது என்பதும் உண்மையே! சிறந்த பதிவை அல்லது தரமான பதிவை நம்பியே வலைப்பூக்களை நாடும் வாசகர் உள்ளனர்.

நீலாவதி (Neelavathi Neela) நீலா என்னும் கூகிள்+ நண்பர் தனியாகப் பொருள் தரும் 45 தமிழ் எழுத்துகளை அறிமுகம் செய்திருக்கிறார். கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்.

தனியாகப் பொருள் தரும் 45 தமிழ் எழுத்துகளையும் பாவித்துத் தமிழை அழகுபடுத்தும் பதிவர்கள் முகநூலை விட வலைப்பூக்களில் தான் அதிகம் உலாவுகின்றனர். ஏனெனில் தரமான படைப்பாளிகளை வலைப்பூக்களில் தான் அதிகம் காணலாம். ஆயினும், கூகிள்+, முகநூல் பக்கங்களிலும் தரமான படைப்பாளிகள் தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.

எப்படி இருப்பினும் வலைப்பூக்களின் நிறம் தெரியாதோரும் வாசகர் இன்றி வலைப்பூக்களைப் பேண முடியாதோரும் முகநூல் பக்கங்களில் உள்ளனர் என்று சொல்லிவிட முடியாது. அறிந்தவர், தெரிந்தவர், உறவுக்காரர் எல்லோரும் வாசகராகலாம் என முகநூல் பக்கம் தாவுவோர் இருக்கலாம்.
எனவே,
சிறந்த பதிவை அல்லது தரமான பதிவை நம்பியே
வலைப்பூக்களை நாடும் வாசகரை நம்பியே
வலைப்பூக்களைப் பேணும் பதிவர்களே
சிறந்த படைப்பாளிகள்! - ஆயினும்
முகநூலிலும் சிறந்த படைப்பாளிகள்
சிலர் இருக்கலாம் - எல்லோருமல்ல!

நகைச்சுவையாக நண்பர்கள் கூறியது:
முதலாம் நண்பர்: அன்று வலைப்பூக்களில் பதிவைப் பதிவு செய்த பின்னர், முகநூல் வாசகரை ஈர்க்க முகநூலில் இணைப்பைப் பகிர்ந்தோம்.
இரண்டாம் நண்பர்: இன்று முகநூலில் பதிவைப் பதிவு செய்த பின்னர், அதன் இணைப்பை வலைப்பூக்களில் பகிரும் நிலை வந்தாச்சே!

காலம் இப்படி மாறிப்போச்சண்ணே! எப்படிச் சொன்னாலும் வலைப்பூக்களைப் பேண புதிய பதிவர்களை உருவாக்க வேணும் போல கிடக்கு. அதுவரை வலைப்பூக்களைப் பேணும் பதிவர்களே சிறந்த படைப்பாளிகள்! அது தானே அக்கா உண்மை!

மாற்றுக் கருத்து இருப்பின் முன் வையுங்க பார்ப்போம்!
கருத்து மோதல் வலுக்கட்டும் பார்ப்போம்!

முடிவு வாசகர் உள்ளத்திலே!

வெள்ளி, 17 ஜூன், 2016

நீங்களும் மின்னூல் அனுப்பலாம் - 2016

இப்பதிவு ஆடி 13, 2013 அன்று "தூயதமிழ் பேணும் பணி" என்ற எனது வேர்ட்பிரஷ் வலைப்பூவில் வெளியானது. சில மாற்றங்களுடன் இதனை மீள்பதிவு செய்கிறேன்.
உலகெங்கும் தமிழை மறந்த தமிழருக்கு ஆங்கிலம், கிந்தி, பிரெஞ்சு, டொச்சு என எம்மொழியிலும் தமிழ் கற்பிக்கும் நூல்கள் முதன்மையாகத் தேவைப்படுகிறது.
தமிழ் வாழத் தமிழ் இலக்கியங்கள் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழ் இலக்கியங்களை ஆக்குவோருக்கான கவிதை, பாட்டு, கதை, நாடகக் கதை, திரைக் கதை, நகைச்சுவை, கட்டுரை எழுத உதவும் நூல்கள் இரண்டாவதாகத் தேவைப்படுகிறது.
நம்மாளுகள் இலக்கியங்களை ஆக்கினால், அதனை வெளியிடுவதற்கான அறிவைப் பெற உதவும் அச்சு இதழியல், மின் இதழியல் சார்ந்த நூல்கள் மூன்றாவதாகத் தேவைப்படுகிறது.
இத்தனையும் இருந்தால் போதாது. நாம் தமிழர் எனக் கூறி நீண்ட நாள் வாழ்ந்து தாய்த் தமிழைப் பேண உளநலம், உடல் நலம், நெடு நாள் வாழ உதவும் மருத்துவ நால்கள், வழிகாட்டல் மற்றும் மதியுரை (ஆலோசனை) நால்கள் நான்காவதாகத் தேவைப்படுகிறது.
எல்லாம் சரி, நாம் தமிழர் எனக் கூறினால் நமது வரலாற்றுப் பின்புலம் தேவைப்படுகிறது. தமிழர் வரலாற்று நால்கள், தமிழர் ஆய்வு நால்கள், தமிழ் வரலாற்று நால்கள், தமிழ் ஆய்வு நால்கள் எனத் தமிழரின் அடையாளத்தையும் தமிழின் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடிய நால்கள் ஐந்தாவதாகவும் அதிகமாகவும் தேவைப்படுகிறது.
மேற்படி எதிர்பார்ப்புடன் தான் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண எனது மின்னூல் களஞ்சியத்தை மேம்படுத்துகிறேன். தற்போது நான்கு இணையச் சேமிப்பகங்களில் மின்நூல்கள் திரட்டிப் பகிரவோ பதிவிறக்கவோ வசதி செய்துள்ளேன். எனினும் நூறாயிரம் (இலட்சம்) மின்நூல்களைத் திரட்டிப் பேண முயற்சி செய்கின்றேன்.

இதற்கெனத் தனி வலைப்பக்கத்தைப் பேணுகின்றேன். அதனைப் பயன்படுத்தி நான்கு இணையச் சேமிப்பகங்களில் இருந்தும் தங்களுக்கு வேண்டிய மின்நூல்களை பகிரவோ பதிவிறக்கவோ முடியும். முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மின்னூல் களஞ்சியத்தைப் பார்வையிடுங்கள்.

யாழ்பாவாணன் ஆகிய நானொரு சின்னப்பொடியன், மேற்காணும் எல்லை மீறிய பணித் திட்டத்தை என் உள்ளத்தில் விதைத்து இறங்கிவிட்டேன். என்னிலும் பெரியோர்களாகிய நீங்கள்; தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பி எனக்கு உதவினால், இப்பணித் திட்டத்தை மேலும் மேலும் மேம்படுத்த இடமுண்டு.

இக்களஞ்சியங்களில் இல்லாத மேலே கூறிய வகைகளில் தேவைப்படும் நூல்களை நீங்களும் அனுப்பலாம். மின்னூல்கள் HTML Help File ஆகவோ Acrobat Adobe Reader File ஆகவோ இருக்கலாம். உங்களைப் போன்றவர்களால் தான்தமிழறிஞர்களின் மின்நூல் களஞ்சியம்மேம்பட இருக்கிறது.
தாங்கள் தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பும் போது; தங்கள் இணையத்தள முகவரி, மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, நடைபேசி இல, தொலைபேசி இல எனத் தங்களைத் தொடர்புகொள்ளக்கூடிய தகவலையும் அனுப்புங்கள்.
ஏனெனில், எனது தளத்தில் தமிழறிஞர்களின் மின்நூல்களை வழங்கியோரின் விரிப்பைத் தனிப் பக்கமாக வெளியிட இருப்பதால் தான் இதனைத் தெரிவிக்கின்றேன். தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்ப விரும்பும் நண்பர்கள் எல்லோருக்கும் இது பொருந்துமென நம்புகிறேன்.
உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களை அனுப்ப விரும்புவோர் Email: yarlpavanang1@gmail.com, Mobile: 0094750422108 ஊடாகத் தொடர்புகொள்ளலாம்.

மாற்றுவழி: தங்கள் மின்னஞ்சலில் நூல்கள் அனுப்பக் கடினமாயின் http://www.filesovermiles.com என்ற தளத்திற்குச் சென்று நூல்களைப் பதிவேற்றி; அதற்கான கடவுச்சொல்லை (Password) வழங்கி இணைப்பைப் (Url) பெறுக. அவ்விணைப்பையும் (Url) கடவுச்சொல்லையும் (Password)மின்னஞ்சலில் எமக்கு அனுப்பி வைக்குக. இச்செயற்பாடு ஒரு முறை பதிவிறக்கியதும் செயலற்றுப் போய்விடும். அதாவது, மீளப் பதிவிறக்க இயலாது.

மேலும், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி, மின்நூலாக்கி, இக்களஞ்சியங்களில் பகிரும் நோக்கில் கருத்துக்களம் ஒன்றையும் பேணுகின்றேன். அதில் உங்கள் பதிவுகளை இடம்பெறச் செய்தும் உதவலாம். மேலதிக விபரங்களுக்கு:
 http://www.ypvnpubs.com/2016/04/blog-post_24.html

செவ்வாய், 14 ஜூன், 2016

படித்துச் சுவைக்கச் சில பதிவுகள்

வலைப் பக்கம்
சில நாள்களாக வரமுடியவில்லை...
வலைப் பக்கம் வந்து பார்த்ததில்
சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன!
வலை வழியே
வழிகாட்டலும் மதியுரையும் வழங்கும் நான்,
இன்று வழிகாட்டலும் மதியுரையும்
வெளிக்கொணரும் பதிவுகளைத் தானே
உங்களுடன் பகிரலாமென எண்ணி வந்தேன்!

அமெரிக்காவில் வாழ்ந்தால் என்ன
ஆபிரிக்காவில் வாழ்ந்தால் என்ன
இந்தியாவில் வாழ்ந்தால் என்ன
ஈழத்தில் வாழ்ந்தால் என்ன
தமிழரின் முதலீடு
"கல்வி" என்ற ஒன்றே! - இதை
பெற்றோர் எண்ணிப் பார்த்து
பிள்ளைகளுக்குக் கல்வியை ஊட்டலாமே!
"உங்கள் குழந்தைகளைப் படிக்கவைப்பதைக்
குதூகலமாக ஆக்கிக்கொள்ள
இதோ 10 மிகச் சிறந்த வழிகள்." என்ற
பதிவைப் படித்தால் புரியும்
சிறார்களுக்கு
கல்வியை ஊட்டுவது எப்படியென...

காதலித்துப் பிரிந்தவர்கள் கூறும்     
"பள்ளிக் காதல் படலை வரை" என்பது
பொழுதுபோக்குச் செயல் முடிந்ததென்றா...
திருமணமாகிப் பிரிந்தவர்கள் கூறும்
"வர வர வாழ்க்கை கசக்குதையா" என்பது
உண்மையான உறவு உடைந்ததென்றா...
பொருந்திய உறவுகள் ஏனோ
பொருத்தம் இன்றி உடைவதோ
"பொருத்தமான வாழ்க்கைத்
துணைவரைத் தேர்ந்தெடுப்பது எப்படி?" என்ற
பதிவைப் படித்தால் புரியும்
இளசுகளுக்கு (காதலருக்கோ இணையருக்கோ)
எத்தனை பொருத்தம் தேவையென்றுணர...

தொலைபேசி இருந்த வேளை
அறியாத நோய்கள் எல்லாம்
திறன்பேசி வந்த வேளை
அறிய வைக்கப் பலருண்டு - அது பற்றி
சுவையூட்டி உணவுகள் சாவைத் தருமென...
நானுமொரு பதிவு இட்டிருந்தேன்
"பரோட்டா, பீட்சா சாப்பிட்டால்
மலக்குடல் புற்றுநோய்" என்று
நண்பர் ஒருவர் போட்டிருந்தார் - அதிலும்
கலக்கப்படும் கலவைகள் தானே
ஆளை முடிக்கும் உணவாக்கிறதே!
எதற்கும் ஒருக்கால் உண்ணுமுணவில்
நாங்கள்
அக்கறை காட்ட வேண்டுமெனில்...

உண்மை முகவரி அறியாது
முகநூல் பொத்தகத்தில் முகம்வைத்து
ஏமாறும் உள்ளங்களைப் போல
திறன்பேசி, இணையம் வழியே
பணக் கொடுக்கல் வாங்கல் செய்யும்
நம்மாளுங்க ஏமாறாமல் இருக்க
"ஆன்லைனில் பறிபோகும் பணம்...
வங்கிகளே உடந்தையா?" என்ற
பதிவைக் கொஞ்சம் படித்தால்
நீங்களும்
சரியான வழியில் செல்லலாமே...

நல்ல ஆள்களைப் பார்த்து
நம்ம ஆளுங்க திருந்தாவிட்டால்
நம்ம ஆளுங்க நல்ல ஆளில்லைங்க...
"பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்" என
எங்கள் வலைப்பூவில் (Blog) வரும்
நல்ல ஆள்களைப் படித்தாவது
நம்ம ஆளுங்க நல்ல ஆளுங்க ஆவது
நன்மைகள்
வீட்டிற்கும் நாட்டிற்கும் வந்து சேரவே...

இப்படி ஐந்தாறு பதிவில
எப்படி நாம் வாழலாமென
அப்படியே சொல்லியிருக்கக் கண்டு
அப்படியே பொறுக்கி எடுத்த
வழிகாட்டலும் மதியுரையும் - என்றும்
எவருக்கும் பயன்தருமெனப் பகிருகிறேன்!

சனி, 4 ஜூன், 2016

இன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்!

மொழி எம் அடையாளம் என்பதால்
நாம் பேசும் தமிழ் உணர்த்துவது
தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே!
தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே!
தமிழை உணர்ந்து தமிழை வாழவைக்க
நாளும் தம்பிள்ளை தமிழறிய அறிவூட்டும்
பெற்றோரை நாமும் பாராட்ட வேண்டும்!

உலகில் மூத்த மொழி எங்கள் தமிழென
உலகம் எங்கும் தமிழை வாழ வைக்க
அறிஞர்கள் எடுக்கும் முயற்சியைப் போற்றினாலும் கூட
புலம்பெயர் வாழ் சிறார்கள் வெளிக்காட்டும்
தமிழ்ப் பற்றைப் பாராட்ட வேண்டும்! - நாம்
என்றும் அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்!
இன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்!
(புள்ளி ஆறு என்பது சுவிஸில் அதியுயர் புள்ளியாம்)

சுவிற்சர்லாந்து தமிழ் கல்விச் சேவை நடாத்திய
சுவிஸ் நாடெங்கும் நிகழ்ந்த போட்டித் தேர்வில்
தமிழில் சிறந்த பெறுபேறு பெற்ற பிள்ளை
எங்கள் வீட்டுச் செல்லப் பிள்ளை - அவள்
எங்கும் தமிழைப் பரப்பிப் பேண முயல்வாள்!
இனியவள் உலகெங்கும் தமிழால் வெல்ல
இனிதே நாமும் இன்றே வாழ்த்தி நிற்கிறோம்!



சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து நிமிருமவள்
என் இல்லாளின் இளையவள் மகள்
இவள் அம்றிதா என்ற செல்லமகள்
'நன்றி' என்பாள் நம்மாளுங்க காதுகிழிய - அப்படி
இவள் உச்சரித்தால் தமிழ் அழகு - என்றும்
இவளைப் போலத் தமிழைப் பேணும்
சிறார்கள் எல்லோரையும் பாராட்டி வாழ்த்துவோம்!