Translate Tamil to any languages.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

பொழுது போக்கிற்காக...


ஒரே ஒரு கேள்வி தான். ஆறாள் கூறும் பதில்கள் வேறுவேறு தான். இவங்கட பேச்சே நல்ல நாடகமாச்சு...

முதலாம் ஆள் : படங்களில வாறது போல 'I Love You' சொன்னீங்களே! முடிவு என்ன ஆச்சுங்க?

இரண்டாம் ஆள் : கவுண்டரின் மனைவியிடம் செந்தில் போய்க் கேட்டது போலக் கேட்டு, அதைப் பார்த்த கவுண்டர் எனக்கு உதைச்சுப் போட்டான் அண்ணே!

மூன்றாம் ஆள் : விவேக் சரளாவிடம் போய்க் கேட்டது போலக் கேட்க, 'இஞ்சாருங்கோ' என்றதும் வடிவேலு வந்து "என் பெண்டாட்டியோட என்னடா விளையாட்டு" என்று அடிச்சு விரட்டிட்டான் அண்ணே!

நான்காம் ஆள் : ஆண்களை "Love" பண்ணினால், நடிகர்களின் பேச்சுப் போல "பொழுதுபோக்கிற்காக" என்று கெடுத்துப்போடுவாங்களே! வழியாலே போகும் பெண்கள் இப்படியெல்லோ முணுமுணுத்துக்கொண்டு போறாங்களே!

முதலாம் ஆள் : உங்கட நிலைப்பாடு என்னவாச்சு?

ஐந்தாம் ஆள் : நானும் ஒருத்தியைக் கேட்டேன். "Love" பண்ண (சந்திக்க) வரும் ஒவ்வொரு முறைக்கும் ஆயிரம் உரூபா கேட்கிறாளே!

ஆறாம் ஆள் : ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பெட்டையளைச் சுத்துற பொடியளாலே தான்,  பெட்டையளும் எடுப்புக் (லெவல்) காட்டுகினம்.

முதலாம் ஆள் : அட பொடியங்களே! பொழுது போக்கிற்காகப் பெட்டையளைச் சுத்துற வேலையை நிற்பாட்டிப் போட்டு; ஒழுங்காய் படிச்சா, நல்ல வருவாய் எடுத்தா எந்தப் பெட்டையும் உங்கட காலில விழுவாள்களே!

திங்கள், 29 செப்டம்பர், 2014

நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே!


இப்பவெல்லாம்
பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல
இருந்த இடத்திலே இருந்துகொண்டே
எல்லாம்
நடைபேசியால நடத்திறாங்களே!
சும்மா சொல்லக் கூடாது
முந்த நாள் பெய்த மழைக்கு
நேற்று முளைத்த காளான் போல
சிறுசுகளும்
கட்டையில போகவுள்ள
கிடு கிடு கிழங்களும்
அட அட ஆளுக்காள்
வேறுபாடின்றிக் கையிலே
காவுறாங்க நடைபேசி!
பாட்டிக்குச் சுகமில்லை - ஒரு
வாட்டி மருத்துவரிடம் சொல்ல
உங்க நடைபேசியால பேசட்டுமா
என்றெல்லோ
சிலரைக் கேட்டுப் பார்த்தேன்...
அலைஎல்லை(Coverage) இங்கில்லாத இணைப்பிது
நானும்
மாற்றான் நடைபேசிக்கு அலையிறேன்
என்றாள் ஆச்சி...
நடைபேசியிலை
காசில்லை என்றான் காளை ஒருவன்...
நடைபேசியை இயக்க
மின்சக்தி(Charge) இல்லை என்றார் அப்பு...
உங்களுக்கு இல்லாத நடைபேசியா
இதோ தருகிறேன் என
எழுத்தெல்லாம் தேய்ந்த
பழசு ஒன்றை நீட்டினாள் புதுசு...
1234567899 என்று சொல்ல
டிக் டிக் எனத் தட்டியும்
தந்தாள் அந்த அழகி!
ஏங்க
நீங்க நல்ல அழகாய் இருக்கீங்க
உங்க நடைபேசிக்கு அழகில்லீங்க
நீங்க இதை வீசிடுங்க என்றேன்...
நடைபேசி எப்படி இருந்தாலென்ன
மின்சக்தி(Charge), காசு(Cash), அலைஎல்லை(Coverage) உள்ள
நடைபேசியாக இருந்தால்
சரி கிழவா என்று ஓடி மறைந்தாளே!

சனி, 27 செப்டம்பர், 2014

பாடல் எழுதலாம் வாங்க


பாட்டுக் கேட்டுப் பாட்டெழுத வாங்க
மெட்டுப் போட்டு பாட்டெழுத வாங்க
                                                                               (பாட்டுக்)
சொல்லைப் போட்டுப் படித்துப் பாருங்க
மெல்லக் கேட்டு இசைத்துப் பாருங்க
                           (                                                   (சொல்லைப்)
                                                                               (பாட்டுக்)
அடிமோனை சீர்மோனை வந்திச்சா
அடியெதுகை சீரெதுகை வந்திச்சா
அடிதொடை அழகாய் வந்திச்சா
நெடில்குறில் நினைப்பில் வந்திச்சா
கோலமகள் பொருளாக வந்திச்சா
பாலநிறம் உவமையாக வந்திச்சா
அசைகூட்டிச் சீரமைக்க வந்திச்சா
இசைகூட்டிப் பாவெழுத வந்திச்சா
                                                                                (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
வேலவனே உனைப்பாட வந்தேன்
காலையிலே உனைநாடி வந்தேன்
வேளைக்குப் பதவியுயரப் போறேன்
நாளைக்குத் தேர்வெழுதப் போறேன்
இலகுவாய்த் தேர்வெழுத வரட்டும்
இலகுதாள் எனக்காய் வரட்டும்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
வேலாவா எனவெழுத வந்திச்சா
                                                                        (பாட்டுக்)
                                                                                (சொல்லைப்)
கண்டேன் அவளைக் கண்டேன்
கண்டேன் அவனைக் கண்டேன்
கண்டேன் அவர்களோடக் கண்டேன்
கண்டேன் காதலெனக் கண்டேன்
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
கண்டேன் எனவெழுத வந்திச்சா
                                                                                 (பாட்டுக்)
                                                                         (சொல்லைப்)
என்னை மறந்து போவேன்
உன்னை மறந்து போவேனா?
உன்னை மறந்து போவேன்
உண்ண மறந்து போவேனா?
கண்னை மறந்து போவேன்
உறங்க மறந்து போவேனா?
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
மறந்து எனவெழுத வந்திச்சா
                                                                           (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
சின்ன இடை அழகைக் கண்டேனே
அன்ன நடை அழகைக் கண்டேனே
மெல்ல நடை நடந்து வந்தேனே
மெல்ல விலகக் கண்டு நொந்தேனே
செல்லமே உந்தன் இழுவை என்பேனே
எல்லாம் எந்தன் அகவை என்பேனே
என்றிசைக் கூட்டிப்பாட வந்திச்சா
காதல் வந்ததென எழுத வந்திச்சா
                                                                              (பாட்டுக்)
                                                                                   (சொல்லைப்)
எழுத எண்ணினால் எழுத வருமே
அழுத கண்ணீரையும் எழுத வருமே
எழுத முயன்றால் எழுத வருமே
முழுதாய் வாழ்வையும் எழுத வருமே
இசையோடு எழுத வந்தால் வருமே
இசையோடு இசைத்துப் பாட வருமே
                                                                            (பாட்டுக்)
                                                                           (சொல்லைப்)


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

ஆண்களே பதில் சொல்லுங்களேன்!


அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம்.

என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள்.

காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் பார்த்துக் காதலிக்கலாம்; குறைந்த சாதிப் பெண் என்று பெற்றோர் தடுத்ததால் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளிப்பதா? இவை எனது கேள்விகள்.

குறித்த ஆண் பதிவுத் திருமண நிகழ்வுக்கு ஒளித்த பின், தன் காதலியைச் சந்திக்கவும் இல்லை; நடைபேசியில் கதைக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரத்தைக் கணக்கிலெடுக்கவும் இல்லை. குறித்த பெண்ணின் துயரைப் போக்க தோழிகள் முயற்சி எடுத்தும் பயனில்லை. குறித்த பெண்ணின் நிலையைக் கருதி, குறித்த ஆணுக்கு என்ன தண்டனை வழங்கலாம்.

பெற்றோருக்காகத் தன் காதலைத் தூக்கி எறிபவர்களும் மனைவியை விவாகரத்துச் செய்பவர்களும் உள(மன) நோயாளர்களே! இவ்வாறான ஆண் உள(மன) நோயாளர்களைக் குணப்படுத்த வழி கூறுங்களேன்.

இங்கு நான் குறிப்பிட்ட ஆண் உள(மன) நோயாளி இல்லை என்றால், பெற்றோரின் பேச்சைத் தூக்கி எறிந்து போட்டு குறித்த பெண்ணைத் திருமணம் செய்வதே சரி. குறித்த பெண்ணின் துயரைப் போக்கி மகிழ்வான வாழ்வைக் கொடுக்க இதுவே சரியான வழி! இது எனது கருத்து.

இது பற்றிய உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துங்கள். இங்கு நான் குறிப்பிட்ட ஆண் போன்றவர்களால் பெண்கள் சாவதற்கு இடமளிக்கிறீர்களா? ஆண்களே பதில் சொல்லுங்களேன்.


கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html 
இதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)


வலையுலக உறவுகளே! எனது வலைப்பூக்களில் நான் பதிந்த பதிவுகளைத் தொகுத்து "எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள்" என்ற தலைப்பில் மின்நூல் ஒன்றை வெளியிடுகின்றேன். அதனை ஏற்றுத் தங்கள் நண்பர்கள் ஊடாக உலகெங்கும் சென்றடைய ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூலில் காணப்படும் குறை, நிறைகளை வெளிப்படையாகவே தங்கள் வலைப்பூக்களில் வெளியிடலாம். உங்கள் கருத்துகளும் மதிப்பீடுகளும் எனது அடுத்த வெளியீட்டைச் சிறப்பாக மேற்கொள்ளப் பின்னூட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

எனது மின்நூலைப் பதிவிறக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
https://app.box.com/s/pjaolpl1kv8ai7n3rf6bq759t99f1u4e

எனது மின்நூலைப் பிளாஷ் வியூவரில் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://fliphtml5.com/homepage/insb

எனது மின்நூலின் PDF பதிப்பை கீழே விரித்துப் படிக்கலாம்.

எனது மின்நூலைப் படித்துச் சுவைத்தீர்களா? இது பற்றித் தங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

பதிவர்களும் பதிவுகளும்

என்னைப் பாடச் சொன்னால்
என்னென்னமோ பாடுவேன்
ஆனால்,
என்னை எழுதச் சொன்னால்
என்னென்னமோ எழுதுவேன்
எப்படியோ
பாடினால் பொருள் இருக்காது
எழுதினால் தமிழ் இருக்காது
அதுக்குத் தானே
வலைப்பக்கங்கள் (Web Pages)
வலைப்பூக்கள் (Blogs)
கருத்துக்களங்கள் (Forums)
அப்படி எழுத உதவுகிறது என்பேன்!
ஆனாலும் கூட
அச்சு ஊடகங்களில் எழுதுவோரை விட
மின் ஊடகங்களில்
சிறப்பாக எழுதுவோரும் இருப்பதை
எவரும் மறுப்பதற்கு இல்லையே!
அதனால் தான் பாருங்கோ
எடுத்துக்காட்டுக்கு
"நன்றி அஆ வலைப்பூ" என
அச்சு ஊடகங்கள்
சிறந்த பதிவர்களின் பதிவை
மீள்பதிவு செய்கின்றனவே!
ஆனாலும் பாருங்கோ
சில பதிவர்கள்
அச்சு ஊடகப் பதிவுகளை
மின் ஊடகங்களில் பதிகின்றனரே!

திங்கள், 22 செப்டம்பர், 2014

நாலுகாசு வைப்பிலிட்டு


கடன் படாதீர்!
கடன் பட்டால் கலங்கி நிற்பீர்!
உறவுக்குப் பகை கடன்!
கடனுள்ள வரை காதலும் வராது;
மனைவியும் கிட்ட நெருங்காள்!
அடடே! அப்படியுமா...
இன்னும் இன்னும்
எத்தனையோ சொல்லி எச்சரித்தாலும்
நம்மாளுகள்
வைப்பக அடகுநகைப் பகுதியில் தான்
விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே!
விரலுக்கேற்ற வீக்கம் போல
வரவுக்கேற்ப செலவமைத்து
கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால்
நீங்களும்
கடனை நாட மாட்டியள்
வைப்பகங்களையும்
மூடித்தான் ஆகவேண்டி வருமே!
அடேங்கப்பா!
வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான்
அதுக்காகப் பாருங்கோ...
கடன் பட்டால்
தூக்குப் போட்டுச் சாகவேண்டி வருமே!
கடன்பட்டு
விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமாயின்
விருப்பங்களையே கைவிடுங்கள்...
வாழ்க்கையில் மகிழ்வைச் சேகரிக்க
நாலுகாசு வைப்பிலிட்டு - அந்த
காசை வைச்சு
விருப்பங்களை நிறைவேற்றலாமே!

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

மாணவன் ஆசிரியையைக் கொல்லலாமா?

அம்மா, அப்பா, ஆசிரியர் ஆகியோர் கடவுளாம்
(மாதா, பிதா, குரு தெய்வம்)
அன்றொரு நாள் படித்த நினைவு...
இன்றெங்கு பார்த்தாலும்
தலை கீழாகத் தான் நடக்கிறதே!
அன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
இன்று
அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
என்றாகிப் போனதால்
முதியோர் இல்லங்களுக்கு உள்ளே
பெத்தவங்களையே தள்ளி விடுகிறாங்களே!
சரி... சரி...
பெத்தவங்களைத் தான் விடுவோம்
ஆசிரியர்கள்
மாணவர்களைக் கெடுப்பது போய்
மாணவர்கள்
ஆசிரியர்களைக் கொல்ல வந்தாச்சு என்றால்
நாடு எப்படி ஐயா உருப்படும்?
அன்று
ஆசிரியர் - மாணவி
ஆசிரியை - மாணவன்
தகாத உறவு பற்றிய செய்தியை
கேட்டிருப்போம்... படித்திருப்போம்...
இன்று சென்னையில்(09/01/2012)
மாணவன் ஒருவன்
ஆசிரியை ஒருவரை
கொலை செய்த செய்தியைக் கேட்டு
உலகமே சிலிர்த்துப் போய்விட்டது!
உலகைக் கலக்கும் செய்தியாக
திரைபடங்களில் வரும் காட்சியாக
சீர் கெட்ட குழுச் செயலாக
மக்களாய(சமூக)த்திற்கு எச்சரிக்கையாக
நிகழ்ந்துவிட்ட கொலைச்செயலைப் பார்த்தாயினும்
மக்களாய(சமூக)ம் விழிப்படைய வேண்டுமே!
மக்களாய(சமூக) மேம்பாட்டுக்காக பாடுபடும் எவரையேனும்
கொல்ல முயற்சி எடுப்போரையும்
கொல்லத் தூண்டுபவரையும்
மக்களாய(சமூக)மே உணர்ந்து கட்டுப்படுத்தாவிடின்
எங்கும் எதிலும் கொலைவெறியே!

ந.கோபிநாத்தின் "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலறிமுகம்

தமிழ் நண்பர்கள்.கொம், முகநூல்(Facebook).கொம் ஆகிய தளங்களில் நண்பராக இணைந்து பல கருத்துக்களைப் பகிர்ந்த அறிமுகத்தில் நண்பர் ந.கோபிநாத்தின் உறவு மலர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக அவரது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" என்ற நூலைப் பார்க்க முடிந்தது. அந்நூலைப் படித்துச் சுவைத்துப் பெற்ற சில உண்மைகளை நண்பர்கள் எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

நண்பர் ந.கோபிநாத் புலம் பெயர்ந்து இலண்டனில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவருடலில் ஓடும் செந்நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வியல் சூழல் கலந்திருப்பதை அவரது படைப்புகளே சான்று பகருகின்றன. புலம்பெயர் படைப்பாளிகள் பலர் பல நூல்களை வெளியிட்டு தங்கள் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நண்பர் ந.கோபிநாத் தனது "மண்ணிழந்த தேசத்து மலர்கள்" நூலை வெளியிட்டு தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி உள்ளாரென நான் உணருகிறேன்.

உள்ளூர் படைப்பாளியோ புலம்பெயர் படைப்பாளியோ இலங்கைத் தமிழரைப் பற்றி எழுதுவதாயின் போரியல் இலக்கியம் அல்லது போர்க் கால இலக்கியம் சார்ந்தே இருக்கும். காரணம் ஐம்பது ஆண்டுகளாக இலங்கைத் தமிழர் போர்ச் சூழலில் சிக்குண்டு வாழ்ந்தமை தான். போர் இடம்பெறும் சூழலைப் படம் பிடித்துக் காட்டுவது போரியல் இலக்கியம். போரினால் விளைந்த பாதிப்பினை வெளிக்காட்டுவது போர்க் கால இலக்கியம். அப்படியாயின் நண்பர் ந.கோபிநாத் எவ்வகை இலக்கியத்தை நூலாக்கினார் என்றால் இரண்டும் கலந்திருந்தாலும் போர்க் கால இலக்கியமே அதிகம் என்பேன்.

எழுதுகோல் ஏந்தியோர் எல்லோரும் எழுத்தாளர் ஆகவில்லையே! காரணம் எழுதும் வேளை தன் எண்ணங்களைக் கொட்டி விட்டால் போதுமென நினைத்திருக்கலாம். ஓர் எழுத்தாளன் தன் எண்ணங்களைக் கொட்டும் போது அளந்து தான் கொட்ட வேண்டும். எழுத்தாளர் எழுதுகோலைப் பிடித்ததும் தன் மொழியாளுமையைச் சரி பார்க்க வேண்டும்; பின் இலக்கியப் படைப்புகளைப் படித்துப் பட்டறிவை வளர்க்க வேண்டும்; பின் எழுதலாம்.

எழுத்தாளன் எழுதும் வேளை தனது பக்கக் கருத்துகளைத் தொகுத்துப் புனையக்கூடாது. வாசகரை வாசிக்கத் தூண்டும் வகையில் எளிய நடையில் எழுதுவதோடு, வாசகர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு எழுதவேண்டும். அதாவது, வாசகர் களிப்படையவோ நிறைவடையவோ வேண்டும். நண்பர் ந.கோபிநாத்தின் படைப்புகளில் இவை வெற்றிகரமாகப் பேணப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக வரி(வசன)க் கவிதை எழுதுபவர் கவிதை நடையைப் பேணத் தவறினால் உரைநடையாகிவிடும்; புதுக்கவிதை என்றெழுதப் போய் உணர்வுகள், ஓசை(ஒலி) என கவிதை வீச்சாகக் கருதி அடிகளை ஆக்கத் தவறினால் உரைநடை வரியை உடைத்து சொல்களை அடுக்கியது போல ஆகிவிடும்; யாப்பிலக்கண(மரபு)க் கவிதை எழுதப் போய் பாவிலக்கணத்தை இறுகப் பற்றினால் எவரும் படிக்க வாய்ப்பிருக்காது. பாவிலக்கணம் தெரியாதவர்களும் படிக்கும் வகையில் சீர்கள் அமையும் வண்ணம் அசை, தளை, அடி, தொடை பார்த்துப் புனைந்தால் மட்டுமே எவரும் மரபுக் கவிதைகளைப் படிக்க விரும்புவர்.

நண்பர் ந.கோபிநாத் கவிதை இலக்கணங்களை எளிமையாக வாசகர் விரும்பிப் படிக்கும் வண்ணம் கையாண்டுள்ளார். புதுக்கவிதை, மரபுக் கவிதை எதுவாயினும் வாசகர் விரும்பிப் படிக்கும் வகையில் 116 பக்கங்களில் 40 கவிதைகளைத் தந்துள்ளார். எல்லாம் பல வகைப் பாடுபொருளைக் கொண்டிருந்தாலும் இலங்கைத் தமிழரின் துயரை வெளிப்படுத்தும் சிறந்த நூலாகும்.

முதலில் நூலை மேலோட்டமாகத் தட்டிப்பார்த்த போது பல பக்கங்கள் வெளியாக(Blank) இருந்தது. அதாவது, இடைச் செருகல்(Fillers) ஏதுமில்லை. (சிலர் வெளிகளை(Blank)ப் பார்த்து ஓரிரு வரிகளாயினும் சிறு கவிதைகளைத் திணித்து விடுவர்.) ஒவ்வொரு கவிதையும் தனிப் பக்கங்களில் சிறப்பாக அழகுற அச்சிடப்பட்டுள்ளது. ஈழத்துச் சிறந்த பாவலர்(கவிஞர்) பண்டிதர் சா.வே.பஞ்சாட்சரம் அவர்கள் வழங்கிய அணிந்துரையைப் படித்தால் நண்பர் ந.கோபிநாத் நல்ல பாவல(கவிஞ)ருக்கான தகுதிகளைக் கொண்டிருக்கிறார் என்பது புரியும்.

இரண்டாவதாக நண்பர் ந.கோபிநாத்தின் நூலின் தகுதியைப் பார்க்க வேண்டியுள்ளது. விளம்பர(பிரச்சார) மணம் வீசாது திணிப்புகள்(Fillers) சேர்க்காது அளவாகவும் தெளிவாகவும் சொல்ல வந்த செய்தியை நல்ல தமிழில் வெளிப்படுத்தி உள்ளார். சிறந்த எண்ணங்களை, நல் வழிகாட்டலை புதிய அணுகுமுறையில் சொல்லப்பட்டுள்ளது. புதுக் கவிதைகளாகவோ மரபு சார்ந்த புதுக் கவிதைகளாகவோ வெண்பாவைப் போலவோ(சில வெண்பாவாக உள்ளன) வாசகர் படிக்க இலகுவாக அமைந்திருப்பது சிறந்த நூலுக்கான சான்றாகவே நான் கருதுகிறேன்.

காணாமல் போன மகன் - பக் 29
"நெஞ்சிலே புண்பட்டுச் செத்தாலும் முதுகில் புண்பட்டுச் சாகாதே" என்றொரு தாய் சொல்வதாகப் புறநானூற்றுப் பாடல் விளக்கத்தை பத்திரிகை ஒன்றில் படித்தேன். "காணாமல் போன மகன்" என்ற கவிதையில் தமிழரைக் காட்டிக் கொடுக்கும் துரோகியிடம் வீரமுள்ள தமிழ்த் தாய் வேண்டுவதைப் பாரும். தன் மகனும் துரோகி என்றால் சாகட்டுமென ஒப்பாரி அல்லவா வைக்கிறாள்.
எங்கும் என்மகனை உன்வழியிற் கண்டியெண்டால்
இங்கு கதறுமெந்தன் ஈனநிலை சொல்லாதே,
சங்கு நெரித்து அவனைச் சாய்த்துவிடு! என்மகனும்
எங்கும் உனைப்போல இருப்பதிலும் சாவதுமேல்.
என்றவாறு புதிய புறநானூற்றுக் கவிதை ஒன்றை நண்பர் ந.கோபிநாத் வடித்துள்ளார்.

யாழ்ப்பாணக் குமரிகள்! - பக் 73
கவிஞரின் மக்களாய(சமூக)ப் பார்வையை கீழ்வரும் வரிகளில் காணலாம்.
மாதவி டாயெனில் பத்தியமாய் - பல
சாத்திரங்கள் - தமிழ்
சொன்னபடி - அவள்
காத்துக் கறுப்புக ளண்டிடாமல் - தனிக்
காவலிட்டு - வேப்பம்
வேலியிட்டு - நல்ல
உழுந்துடன் சீனட்டி நெல்லுடைத்து - கழி
அஞ்சுநாட்கள் - உண்டு
பூரித்தாளாம்!
இதென்னடாப்பா, நண்பர் ந.கோபிநாத் இப்படி மருத்துவ மதியுரை வழங்குகிறாரோ தன் பெண் குஞ்சை இப்படித் தான் வளர்க்கிறாரோ தன் சகோதரியைத் தன் தாய் இப்படித் தான் வளர்த்தாளோ என்று கேட்குமளவுக்கு குமரி வளர்ப்பை விவரிக்கிறார்.

தாய் திருப்பார்வதி அன்னை - பக் 80
தாய் திருப் பார்வதி அன்னை - எம்
தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்
ஊட்டினள் ஓர்துளித் தாய்ப்பால் - ஈழ
நாட்டினர் நெஞ்சங்கள் நேர்கொண்டு எழவே!
பிரபாகரனை ஈன்ற தாயை இப்படிப் பாடும் போதே நல்ல தமிழைக் கையாளுகிறார். ஆணை 'ஒருவன்' என்பது போல பெண்ணை 'ஒருவள்' என்றழைக்கலாம் என பாவலர் பாரதிதாசன் 'பிழையின்றித் தமிழெழுத' என்ற நூலில் குறிபிட்டுள்ளார். அதனை 'தலைவனை ஈன்றிட்ட தவமிழைத் தொருவள்' என்ற அடியில் பார்க்க முடிகிறது. இவ்வாறு பல இடங்களில் நண்பர் ந.கோபிநாத் நல்ல தமிழைக் கையாண்டிருக்கிறார். பிறமொழிச் சொல்களைக் கலக்காது நல்ல தமிழ் சொல்களை எல்லாக் கவிதைகளிலும் கையாண்டிருப்பது பாராட்டத்தக்கது.

எஞ்சியிருக்கும் உணர்வுகள் - பக் 82
கவிதைக்கு ஓசை(ஒலி), இசை அதற்கேற்ப வந்தமையும் சொல்கள் தான் உயிர் ஊட்டுகிறது. இங்கும் அதனைக் காண முடிகிறது.
தட தட படையணி,
தட் தட் தட் தட் வெடியொலி,
சட சட அணிவகுப்பு,
அணி அணி!
பெண் அணி,
ஆண் அணி,
பெரும் அணி
அணி அணி!
ஈழத்தமிழ் போராளிகள் அணிவகுத்து நிற்பதை இவ்வாறு அழகாக இசைத்துக் காட்டுகிறார் நண்பர் ந.கோபிநாத் அவர்கள்.

காதலுக்கும் முன்னராய் - பக் 93
காதலென்ற உணர்வு உந்தப் பெற்றால் ஆணுக்குப் பெண்ணழகாகவும் பெண்ணுக்கு ஆணழகாகவும் பேச்சில் தேன் போன்று தித்திக்க அன்பாகப் பேசவும் வரும். ஆனால், முதலில் பேச்சைத் தொடுப்பது யார் என்ற சிக்கலும் வரும்.
அதிகாலைப் பேரழகி அன்னநடை போட்டு
குதிமேலாய் பாதணியிற் போவாள், மதிகிடந்து
முகம், முகப்பொலிவை முற்றாய் விழுங்கிவிடும்
பேசப் பலனிலாப் பார்வை.
(இங்கு 'மதிகிடந்து முகம்' என்பது `மதிகிடந்து மூசும்` என வரவேண்டும். நூல் பதிப்பில் தவறு நடந்துவிட்டதாக நூலாசிரியர் உறுதிப்படுத்துகிறார்.)
ஒருவளைப் பார்த்த ஒருவனின் உள்ளம் எப்படியிருக்கிறது என்று கவிஞர் படம் பிடித்துக் காட்டுகிறார் இங்கே.

காதலாய்க் கருத்திலதாய் - பக் 102
பாவலன்(கவிஞர்) என்பான் தூரநோக்கோடு வழிகாட்டத் தவறக்கூடாது. இங்கே பாரும்:
எல்லார் குறைகளுக்கும் மேலிருந்து வார்க்குமந்த
வல்லான் முருகனுக்கும் வஞ்சகமோ? - இல்லாள்
இருக்க இரந்ததுதான் ரண்டகமோ? - நல்லாள்
ஒருத்தியெனைக் கொள்ளவினை நல்க.
என்றவாறு வழிகாட்டும் நண்பர் ந.கோபிநாத்தைப் பாராட்டலாம்.

தேனடையே தேனே! - பக் 107
"குவிந்த நெற்றிப்பொட்டில்
குற்றியிறங்கிய கூர்மூக்கில்
பிட்டியெடுத்த கன்னத்தில்
பிறையான கூர்நாடியில்
குப்பென் றுதிர்க்கும்
கடைவாய்ப் பற்சிரிப்பில்"
என்று தொடங்கும் கவிதையில் ஓராளின் முகவழகைப் படம் பிடித்துக் காட்டுகிறார். பற்சிரிப்போடு அந்தாளை அடையாளப்படுத்துமளவுக்கு அழகாகப் பாபுனைந்துள்ளார். கொஞ்சம் விட்டால் கம்பனையும் விஞ்சுவார் போலத் தெரிகிறது!

கண்ணீர் குளக்கட்டு - பக் 111
இது நண்பர் ந.கோபிநாத்தின் கடைசிப் பதிவு. இதில் உணர்வு வெளிப்பாடு அதிகம். இப்பதிவை முடிக்கையில் நாயின் நன்றியை அழகாகப் பதிவு செய்கிறார்.
முற்றத்தில் குரைத்த நாயின் சள்ளையில் அவர்கள் ஓங்கி உதைத்த உதைப்பில் 'அவுக்' என்று கத்தியபடி மரணப் பயத்தில் வேலிக்கரையில் ஓடிப்போய் நின்று உப்பிட்டு வளர்த்த நன்றியை கண்ணீராய் சொரிந்து கொண்டிருந்தது அது. குரைக்கவில்லை.
படையினரின் உதைப்பால் நாய் சுருண்டாலும் நன்றி மறக்கவில்லைப் பாரும். இவ்வாறு நண்பர் ந.கோபிநாத் அவர்களின் எல்லாப் பதிவுகளும் நன்றாக அமைந்திருக்கிறது.

நண்பர் ந.கோபிநாத் அவர்களின் நூலைப் படித்து விட்டு, குறை அல்லது நிறை சொல்லத் தகுதியற்றவன். ஆயினும், நான் படித்து உள்வாங்கிய அளவில் எனக்குக் கிடைத்த மகிழ்வையும் நிறைவையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதை இங்கு பதிவு செய்துள்ளேன். சிறந்த படைப்பாளியின் சிறந்த நூலைப் படித்த நிறைவு எனக்கு ஏற்பட்டது. எடுத்துக்காட்டுகள் சிலவற்றைக் காட்டி அதனை மெய்ப்பிக்க முனைந்திருக்கிறேன்.

புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் இலங்கைத் தமிழர் பற்றிய உண்மைகளைப் பதிவு செய்து நூலாக்கிய நண்பர் ந.கோபிநாத் அவர்களின் முயற்சிக்குப் பாராட்டினால் போதாது, அவரது வெளியீட்டு முயற்சி வெற்றியளிக்க நம்மாளுகள் ஒத்துழைக்க வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களிடம் இன்னும் பல வெளியீடுகளை வெளிக்கொணரவைக்க; நாம் அவருக்கு ஒத்துழைப்பை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும். நண்பர் ந.கோபிநாத் அவர்களே, உங்கள் பணி தொடரவேண்டும்; இன்னும் பல படைப்புகளை ஆக்கி வெளியிட எனது வாழ்த்துகள்.

வியாழன், 18 செப்டம்பர், 2014

தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்


பாபுனையும் போது
இசை (ஓசைநயம்) கருதி
சொல் எடுத்தாள முனைவோம்...
என்னமோ
வாசிக்கையிலே
"பட்டி தொட்டி எங்கும் பார்
கொட்டி முட்டி நாறுது பார்
நம்மவர் வீட்டுக் குப்பை!" என்று
அமைந்திருந்தால்
அழகான பா/கவிதை என்பீர்!
இசை (ஓசைநயம்) அமைய
பாபுனையும் போது - நம்
முயற்சி எப்படியோ
அப்படித்தானே
பா/கவிதை அமையும் என்பதை
நாமறிவோம் - அதை
பாவலர் ரமணி அவர்கள் - தங்கள்
பாவண்ணத்தில் அளந்து விட்டதை
பாபுனைய விரும்பும்
உங்கள் எண்ணத்தில் வெளிப்படுத்த
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி
கொஞ்சம் படித்துத் தேறுங்களேன்!

" சந்தம் ஒன்னு நெஞ்சில் நின்னு
http://yaathoramani.blogspot.com/2014/09/blog-post_16.html "

பாபுனைய விரும்பும் வேளை
நாம் தேடித் தேறிய
சொல்களின் கூட்டழகு
அடிகளின் நடையழகு
படிக்கையில் உணரும் இசையழகு
எல்லாம் தானே துணைக்கு வருவதால்
தேடல் முயற்சியும் தேறல் உணர்வும்
நல்ல பாவலனாக்கப் பணி செய்யுமே!

புதன், 17 செப்டம்பர், 2014

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.

என்னைப் பற்றி...
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,

தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.

எனது வலைப்பூ முயற்சிகள்.... 
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/

எனக்களித்த விருது...
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்...
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://muthuputhir.blogspot.com/
http://kavithaivaanam.blogspot.in/
http://enganeshan.blogspot.in/
http://psdprasad-tamil.blogspot.in/
http://chellappatamildiary.blogspot.com/
http://writeinthamizh.blogspot.in/
http://marabukkanavukal.blogspot.in/
http://www.kaviaruviramesh.com/
http://www.rishvan.com/
http://www.hishalee.blogspot.in/


வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்

இன்றைய நுட்பங்களில் வலைப்பூக்கள் சிறந்த ஊடகங்களாக மின்னுகின்றன. சிறந்த வலைப்பதிவர்களின் வலைப்பூக்கள் பலரது கைவண்ணங்களாலும் நாவண்ணங்களாலும் அறிமுகம் செய்யப்படுகின்றது. அது பலரைத் தமிழ்மணம் பேண ஊக்கமளிக்கிறது. அந்த வகையில் அடுத்தொரு முயற்சியாக வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள் பகிரப்படுவதனைக்  கருத்திற்கொள்ளலாம். இம்முயற்சி மேலும் வலைப்பதிவர்களின் செயற்றிறனைப் பெருக்கிக்கொள்ளப் பின்னூட்டியாக இருக்கும் என்பதை நினைவூட்டுகிறோம்.

இம்முயற்சியைத் தொடக்கிவைத்தவர்களுக்குக் காலில் வீழ்ந்து வணங்கி யாழ்பாவாணன் வெளியீட்டகம் நன்றி தெரிவிக்கின்றது. இவ்வாறான முயற்சிகளுக்கு யாழ்பாவாணன் வெளியீட்டகம் என்றும் ஒத்துழைப்பு வழங்கும். உலகெங்கும் தமிழைப் பேண வலைப்பதிவர்களின் ஒத்துழைப்புத் தேவையாக இருக்கிறது. எனவே, வலைப்பதிவர்களின் சிறந்த முயற்சிகளுக்கு நாமும் மதிப்பளிப்பதையே விரும்புகின்றோம்.

உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் தம்பி ரூபன் அவர்களுக்குக் கீழ்வரும் அறிஞர்கள் விருது வழங்கி மதிப்பளித்திருக்கிறார்கள் என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அறிஞர் கரந்தை ஜெயக்குமார் அவர்கள்

அறிஞர் விஜயா அம்மா அவர்கள்

கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

இவ்வாறு உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேணும் வலைப்பதிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அத்தனை பேருக்கும் யாழ்பாவாணன் வெளியீட்டகம் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றது.

தம்பி ரூபன் அவர்கள் உங்கள் யாழ்பாவாணனுக்கும் தனது விருதுகளைப் பகிர்ந்துள்ளார். அவை பற்றிய விரிப்பைக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் பார்க்கலாம்.

வலைப்பதிவர் விருது சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்குமா?
http://wp.me/pTOfc-b9
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும்  வலைப்பதிவர் விருதா?
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_16.html

திங்கள், 15 செப்டம்பர், 2014

கிழிஞ்சு போச்சு

திரைப் படங்களிலே
அரை குறை ஆடை ஆட்டமே
பாலுணர்வத் தூண்டுகிறதே!
அடப் போடா... அடிப் போடி...
அப்படிக் காட்டாட்டா
யாருங்கடா... யாருங்கடி...
படம் பார்க்கப் போவாங்க...?
படம் பார்த்தவங்களைப் பார்த்தா
மாற்றான்/மாற்றாள்
விழி உருள நோக்க
நடிகர்/நடிகைகளின் கோலத்திலேயே
திரைப்படக் கொட்டகைக்கு வெளியே
நடை போடுறாங்களே!
காலம் கடந்த பின்
காதுக்கு எட்டிய செய்தி
"எல்லாம் கிழிஞ்சு போச்சு!"

ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

பொழுதுபோக்கிற்காக...


நலமாக வாழ
நல்ல பொழுதுபோக்குத் தேவை என்பதற்காக
நம்ம இளசுகள்
விளையாட்டரங்கிற்குச் சென்று
உடற்பயிற்சி செய்வதாகவோ
கடற்கரைக்குச் சென்று
நீச்சலடிப்பதாகவோ
எண்ணிவிடாதீர்கள்...!
இன்னும்
சொல்லப் போனால்
இவங்க
மருத்துவரைச் சந்திக்க
ஒழுங்கு செய்வதன் நோக்கம்
என்னவென்று கேட்காதீங்க...!
எல்லாமே
பொழுதுபோக்கிற்காக
காதலிக்கப் போனதால
கிடைத்த அறுவடைகளே!

சனி, 13 செப்டம்பர், 2014

வெளிநாட்டில் உள்ளவருக்கு...

அவுஸ்ரேலியாவை, அமெரிக்காவை, ஆபிரிக்காவை
கண்டுபிடித்தவர்களை விட
உலகில் எந்தெந்த நாடுகள்
ஏதிலி(அகதி)யாக இருக்க
இடம் கொடுக்குமெனக் கண்டுபிடித்தவர்கள்
யாரென்றால்
இனமோதல்களால் புலம் பெயர்ந்த
இலங்கைத் தமிழர்களே!
புலம் பெயர்ந்த படைப்பாளிகள்
இருக்கும் வரை தான்
உலகின் முலை முடுக்கெங்கிலும் இருந்தும்
ஈழத்துத் தமிழ் இலக்கியம்
வெளிவர வாய்ப்புண்டாம்!
போன உறவுகளும் போன நாட்டில்
போன நாட்டு வாழ்வோராக
மாறிப் போன பின்னர்
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை
வெளிக்கொணர்வார்களென
எப்படி நம்பலாம்?
தமிழைப் பேண வேண்டுமாயின்
தமிழ் இலக்கிய வளர்ச்சியை
பேண வேண்டுமென்மதை உணர்ந்த
புலம் பெயர் படைப்பாளிகளே
உலகெங்கும்
தமிழ் இலக்கியம் பேணும்
படைப்பாளிகள் அணியை
இனிவரும் தலைமுறைக்குள்ளே
உருவாக்கிவிட முடியாதா?
ஈழவர் அடையாளம்
ஈழத் தமிழ் இலக்கியத்தில் தான்
வெளிப்பட வேண்டுமாயின்
நாளைய
புலம் பெயர் தலைமுறைகளே
இலக்கியம் படைப்போம்
இனித் தமிழ் அழிவதைக் காப்போம்
இப்படிக்கு
தமிழைக் காதலிக்கும் ஈழவர்!

இப்பதிவு ஈழத்தில் இருந்து ஏதிலி(அகதி)யாக வெளிநாடுகளுக்குச் சென்றவர்களிடம் ஈழத் தமிழர் பட்ட துயரங்களை எழுதுமாறு விண்ணப்பித்தது போல உள்ளத்திலே நினைத்து எழுதினேன்.

முதலாம் பகுதிக்குச் செல்ல
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_12.html

உள்நாட்டில் உள்ளவருக்கு...

இலங்கையை ஆண்ட பிரித்தானியா
பிரித்தாண்டு பழக்கியதால் தான்
இன மோதல்கள் மட்டுமல்ல
தமிழருக்குள்ளே ஒற்றுமையின்மையும்
தோன்றியிருக்கலாமென
நம்பத் தோன்றுகிறதே!
என்னவாக இருப்பினும்
உள்நாட்டில் உள்ளவருக்குத் தான்
எத்தனை எத்தனை துன்ப துயரங்கள்
எல்லாமே
நாளைய இருப்பைத் தேட
தூண்டியது மட்டுமல்ல
புதிய படைப்பாளிகளை
உருவாக்கவும் தவறவுமில்லை!
இடப்பெயர்வுகள்
படைப்பாளிகளுக்கு உணவு(தீனி) போட்டும்
படைப்புகள் வெளிவராமைக்கு
பொருண்மிய இழப்புகளா...
வெளியீட்டாளர்கள் இன்மையா...
வாசகரும் வாங்குவதில்லையா...
படைப்பாளிகள் முன்வராமையா...
படைப்புகள் ஆக்குவதை
படைப்பாளிகள் நிறுத்தினரா...
இப்படி எத்தனை சாட்டுகள்
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை
நலிவுறச் செய்கிறது என்பதை
எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறதே!
இளைய நெஞ்சங்களே...
போரும் அமைதியும்
மாறி மாறித் தொடர்ந்தாலும்
இலக்கியம் அழிந்தால்
இலக்கணம் இருக்காது எனின்
தாய் மொழியாம் தமிழும் சாகாதோ...
அப்படியாயின்
தமிழ் அழிவதைப் பார்த்துக்கொண்டிருப்பது
படைப்பாளிகளின் வேலையா?
கையெழுத்துப் படிகளாகவோ
இலவச இணையத்தள வசதியோடு
இணையத் தளப் பதிவுகளாகவோ
வேறு
இயன்ற வழியில் முயன்று பார்த்தோ
தமிழ் மொழி அழியாது பேண
ஈழத்து உண்மைகளை உலகமறிய
தமிழரின் அடையாளத்த வெளிப்படுத்த
போர் நெருக்கடிகளிலும்
இலக்கியம் படைக்க அழைப்பது
தமிழைக் காதலிக்கும் உங்களில் ஒருவர்!

2004 கடற்கோளின் பின்னரான ஈழப் போர்ச் சூழலில் எழுதியது.

அடுத்த பகுதிக்குச் செல்ல
http://eluththugal.blogspot.com/2014/09/blog-post_71.html

வெள்ளி, 12 செப்டம்பர், 2014

யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடனா?

நண்பர் கிங்ராஜ் தளத்தில்
http://kingrajasc.blogspot.com/2014/09/blog-post_10.html
"ஒரு கடி" என்ற தலைப்பில்
“அந்தக் கப்பல் ஏன் ரொம்ப ஆடி ஆடி வருது?”
“அதுவா அது ‘சரக்கு கப்பல்’ அதுதான் ஆட்டம் அதிகம் இருக்கு”

என்றவாறு எழுதியிருந்ததைப் படித்ததும் இப்படி எழுத எனக்கும் தோன்றிச்சு! அதைக் கொஞ்சம் படித்த பின் கருத்துப் பகிர்வோமா...

நெடுநேரம் எண்ணிப் பார்தேன்
தென்னை மரம் ஏன் ஆடுது என்று
பின்னர் தான் தெரிந்து கொண்டேன்
அது தானே கள்ளையும் தருகிறது என்று

இப்படி நான் எழுதியதைப் படித்த பெரியோர் "யாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடன்" என்பார்கள். உண்மையில் இதனைப் பாவரசர் கண்ணதாசன் தனது புத்தகமொன்றில் பதிவு செய்திருப்பதை படித்த பெரியோர் அறிந்தமையால் அப்படிச் சொல்ல முடிந்திருக்கிறது. அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்தல் இலக்கியத் திருட்டு என்றே கூறவேண்டும்.

என்ன காணும் வலைப்பதிவு உலகில் யாழ்பாவாணன் தானே அடுத்தவர் பதிவை இடையிடையே புகுத்தி எழுதுகிறார்; இன்னும் பிறர் கண்ணில் சிக்கவில்லையா என்கிறீர்களா? அதற்கு முன் அங்கே படித்தேன்; அதில, இதில, உதில ஏட்டில் இருந்தது; அந்த, இந்த, உந்த இணைப்பில் இருந்தது என்றெழுதித் தப்பிக்கிறார் போலும்.

வலைப்பதிவர்களே! அடுத்தவர் பதிவுக் குறிப்புகளைத் தங்கள் பதிவுகளில் சான்றுக்காக இடையிடையே புகுத்தலாம். ஆயினும், புகுத்திய பதிவுக் குறிப்பை எழுதியவர் அல்லது வெளியிட்டவர் விரிப்பைச் சுருக்கிச் சுட்டியிருப்பின் இலக்கியத் திருட்டு இல்லை என்பேன். இல்லையேல் அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் வண்ணங்களில் வெளிப்படுத்த முன்வாருங்கள். எடுத்துக்காட்டாகப் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தை என் வண்ணத்தில் காட்டுகிறேன் பாரும்.
1
நல்ல நண்பர் வந்தார்
மெல்லத் தள்ளாடியே வந்தார்
சொல்லத் தடுமாறினார் - அவர்
மதுக்கடையில் இருந்து வந்ததை...
2
அங்குமிங்கும் ஆடும் பனையைப் பார்த்து
காற்றோடு பனை மரம் மோதுகிறதா
காற்றும் வேகமாய் அடித்து வீசுகிறதா
என்றெல்லாம் எண்ணிய பின்
பனையும் கள்ளைத் தருமெனப் படித்தேன்!
3
ஆடி ஆடித் தள்ளாடி வந்தால்
பாடிப் பாடிப் பாவாணனும்
அரை வயிற்றிற்கு உள்ளே தள்ளுவார்
நரைக் கிழவி விற்கும் குடிதண்ணீரென
என் காதலி
தன் தோழிக்குச் சொன்னாளாம்!

என் பாவண்ணத்தில் பாவரசர் கண்ணதாசன் எண்ணத்தைப் படித்தீர்களா? நண்பர் கிங்ராஜின் கப்பல் கடியைப் படித்தீர்களா? எவரது எண்ணத்தையும் எவரும் தங்கள் கைவண்ணத்தில் எழுதலாம். அது இலக்கியத் திருட்டு அல்ல. அப்படி என்றால், வலைப்பதிவர்களே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்களேன்.

அடுத்தவர் ஒப்புதல் இன்றி அடுத்தவர் பதிவை நேரடியாகப் பதிவு செய்து இலக்கியத் திருடனென்று பெயரெடுக்காமல், அடுத்தவர் எண்ணத்தைத் தங்கள் கைவண்ணத்தில் ஆக்கிச் சிறந்த படைப்பாளி ஆக முன் வாருங்கள். இதற்குத் தான் பிறரது படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்க வேண்டுமென எனக்கு வழிகாட்டிய படைப்பாளிகள் சொன்னார்கள்.

வியாழன், 11 செப்டம்பர், 2014

சுகப்பிரியனின் சொல்லக்கூடாத உண்மை…


தமிழ்நண்பர்கள்.கொம் என்ற தமிழ்ப் படைப்புகளின் களம் என்ற வலைத்தளத்தை எவரும் மறக்க முடியாது, தமிழ்நண்பர்கள்.கொம் ஒரு தானியங்கித் திரட்டியும் கூட. நான் வலைப்பதிவர்களிடையே அறிமுகமாக அல்லது நானொரு வலைப்பதிவராக மின்ன தமிழ்நண்பர்கள்.கொம் தளமே பின்னூட்டி. நான் இன்றும் எனது வலைப்பூக்களில் வெளியிடும் பதிவுகளில் பெரும்பாலானவை தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் வெளியானவை தான். அந்த வகையில் 05/01/2012, வியாழன், - 10:49am அன்று வெளியான அறிஞர் சுகப்பிரியனின் "சொல்லக்கூடாத உண்மை…" என்ற கவிதைக்கு நான் வழங்கிய மதிப்பீட்டுப் பதிவை கீழே படியுங்கள்.

முதலில் அறிஞர் சுகப்பிரியனின் கவிதையிலிருந்து சில வரிகளைக் கீழே படியுங்கள்.

ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத்
தோன்றுகிறது எனக்கு !

இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது !

இயற்கையின் படைப்பில்
அழகானவர்கள் நீங்கள் என்பதை
என்றும் மறுப்பதற்கில்லை..

ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில்
விழுந்து விடுவதும் உண்மை !

அப்படி இருக்க
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும்
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய
வலம் வருவதன் மூலமும்
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ?

உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்..
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் !

ஆனால் உடைக் குறைப்பு செய்வது
தனிப்பட்ட விஷயம் இல்லையே !

சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும்
மாறியதை வரவேற்கலாம் !
அத்தோடு நில்லாமல்..

கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்..
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்..
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள்
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்..
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்..
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில்
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்..

இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய்
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம்
என்ன சொல்ல வருகிறீர்கள் ?

உடல் பிதுங்கி
அங்கங்கள் அங்கங்கே அப்படியே
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க
நீங்கள் அணியும் உடைகள்
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ?

இப்பதிவை முழுமையாகப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://tamilnanbargal.com/node/37485

யாம் இருக்கப் பயமேன்
எடுத்து விடு நண்பா
பெண்களின் ஆடைகளில் உள்ள
பொட்டுக் கேட்டை மட்டுமல்ல
மக்களாய(சமூக)த்தின் பொட்டுக் கேட்டையும் தான்!
பெண்களே...
மக்களாய(சமூக)த்தின் கண்களே...
அருமையான அழகை பேணுங்கள்
ஆனால்
அழகற்ற உடலை அழகுபடுத்த
பொட்டுக்கள், வெட்டுகள் நிறைந்த
வலை போன்ற ஆடைகளை அணிவது
உங்கள் கற்புக்கு கேடு வருமே!
அடிப் பெண்ணே!
ஆள் பாதி ஆடை பாதி என்பது
ஆளின் அறிவை அழகுபடுத்துவது
அவ்வவ் ஆளின் செயல் பாதி
அவ்வவ் ஆள் அணியும் ஆடைகள் பாதி
(ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் ஆடைகள்)
என்றறிவீர்களா?
பிறந்த உடலை மூடிமறைக்க அமைத்த
ஆடைகளைக் கிழித்து
பிறந்த உடலைக் காட்டும்
போர்வை ஆக்கலாமா?
இத்தனை உண்மைகளை
அவிழ்த்துக் காட்டிய
அறிஞர் சுகப்பிரியனைப் பாராட்டுகிறேன்!
அறிஞர் சுகப்பிரியனின் கவிதையில்
பிறமொழிகள் புகுந்திருப்பது
தவிர்க்க இயலாத ஒன்றாயினும்
பிறமொழிச் சொல்களை
அடைப்புகளுக்குள் இட்டு - அதற்கான
தமிழ்ச் சொல்களை நேரடியாகப் பாவித்தால்
தூய தமிழ்க் கவிதையாயிருக்குமே!
சொல்லக்கூடாத உண்மை என்று
சொல்லிவைத்த அறிஞரின் எண்ணங்கள்
நடப்புக்காலத்தில் உலாவரும்
நம்ம பெண்களின் ஆடை வண்ணங்களும் - அதன்
அறுவடையாக எழும்
தமிழ்ப்பண்பாடு சீரழியும் நிலையுமே!
அறிஞர் சுகப்பிரியனின் பாடுபொருள்
நிறுத்துப் பார்க்கப்பட வேண்டிய
நல்ல படைப்புக்குச் சான்றாயினும்
இதைவிடச் சிறந்த படைப்புகளை
சுகப்பிரியனிடம் எதிர்பார்க்கிறேன்!

குறிப்பு: 05/01/2012, வியாழன், - 8:49pm அன்று தமிழ்நண்பர்கள்.கொம் இல் வெளியான " 'சொல்லக்கூடாத உண்மை…' என்ற பாவிற்கான திறனாய்வு http://tamilnanbargal.com/node/37497 " என்ற பதிவைச் சிறு மாற்றங்களுடன் மீழ்பதிவு செய்துள்ளேன்.

புதன், 10 செப்டம்பர், 2014

பொங்கின புக்கை

தைப்பொங்கலை ஒட்டிப் பல பொங்கல்கள் வருமே! அந்த வேளை இப்படி இருவர் நாடகமாடினர்.

முதலாமவர் : ஒருவரையும் நம்பிப் பிழைக்க ஏலாதுங்க...

இரண்டாமவர் : எல்லோரும் ஒருவரையே நம்பிப் பிழைக்கிறாங்களே!

முதலாமவர் : எப்படி அப்பா இப்படிப் போட்டுடைப்பா...

இரண்டாமவர் : பகலவனை நம்பித் தானே!

முதலாமவர் : அதெப்படியப்பா...?

இரண்டாமவர் : தைப்பொங்கலை வைச்சுத்தானப்பா...
...
முதலாமவர் : எடுத்துக்காட்டுக்கு ஏதாச்சும் சொல்லப்பா...

இரண்டாமவர் : பொங்கின புக்கையை விடத் தண்டின புக்கை தானே அதிகம்... கொஞ்சம் மூளைக்கு வேலை கொடேன்...

சனி, 6 செப்டம்பர், 2014

பட்டம் போல பறக்கும் கெட்ட பெயர்


அப்பு, ஆச்சி சொன்னாங்க...
பேரன், பேத்தியைப் போல
நல்ல பெயர் எடுக்க வேணுமென்றே!
விடிய, விடிய
விழுந்து, விழுந்து படித்து
பட்டங்கள் பல பெற்றாங்க...
பகையைக் கிட்ட நெருங்காமல்
எட்ட நின்று பழகி
ஒழுக்கம் பேணினாங்க...
எல்லாவற்றையும்
சொல்லி என்ன பயன்?
நீங்களா உணர்ந்தெல்லோ
வாழப் பழகணும் என்றுரைப்பது
அப்பனும் ஆத்தாளும் பாருங்கோ!
விடிய, விடிய இராமாயணம்
விடிஞ்சாப் பிறகு கேளும்
இராமன் சீதைக்கு என்ன முறையாம்
காற்றோடு நேற்று முடிந்த கதையாம்
இன்றைய இளசுகளின் பேச்சிது!
இப்படித் தான் பாரும்
முன்னோரின் பெறுமதி அறியாமலே
இந்நாளில் நம்மாளுகள்
பட்டம் பறக்குமாப் போல
தங்கட பெயரும் பறக்குதாம் என்கிறாங்க...
பெண்ணின் கழுத்தில் கைவைத்து
சங்கிலி அறுத்தவர் சங்கிலிமுருகனாம்...
ஆணின் தோளில் கைபோட்டவள்
ஆண்களை வீழ்த்தும் அலமேலுவாம்...
பகல் திருட்டுப் பண்ணும் இணையர்
பொன்நிலவனும் வெண்ணிலாவுமாம்...
அட, கெட்ட கேட்டுக்கு
இப்படி இன்னும் அடுக்கினால்
எனக்கும் நொட்டை சொல்லுவியளே!
நல்ல பெயரெடுக்க
நெடுநாள் எடுக்கும் பாருங்கோ...
ஆனால்,
மணித்துளிகளில் கெட்ட பெயர்
வேண்டிச் சுமக்கிறதால தான்
வானில் பறக்கிறாங்கள் போலும்!
என்ன காணும்
பொடி, பெட்டைகளே...
எப்பன் பிடரியைத் தேய்த்து
பின்விளைவை எண்ணிப் பாருங்களேன்...
தமிழ் இலக்கணம் என்றால்
தொல்காப்பியரைக் கூப்பிடுறாங்க...
உலகிலுள்ள அத்தனை அறிவையும்
தேடிப்படிக்கத் தேடுகிறாங்க
திருக்குறள் எழுதிய வள்ளுவரை...
பட்டம் போல பறக்கும்
கெட்ட பெயருக்கு ஏது பெறுமதி?
உற்றாரும் ஊராரும் நாடும் உலகும்
உன்னை நாடும் வகையில் - நீ
என்ன தான் நல்லது செய்தாய்?
தொல்காப்பியரைப் போல
வள்ளுவரைப் போல
ஏதாவது செய்தாயா?
அது தான் முடியாவிட்டாலும்
அழகு தமிழில்
கம்பனைப் போல காவியம் படைத்தாயா?
சரி! அதை விடுவம்...
ஆகக்குறைந்தது
என்ன தான் நல்லது பண்ணினாய்
உனக்கென்று நற்பெயர் வந்து சேர?
பட்டம் போல பறக்காது
எட்டுத் திக்காரையும்
உன்னை நாட வைப்பது
நீ தேடும் நற்பெயரே!


இப்பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே. இதனைக் கருத்திற் கொண்டு தங்களைத் தாக்கியதாக எவரும் எண்ண வேண்டாம்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

தீபாவளிக் கவிதைப் போட்டி முடிவு நாள் நீடிப்பு


தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில் பங்கெடுத்தும்
பல நண்பர்களைப் பங்கெடுக்கச் செய்தும் உதவிய
எல்லோருக்கும் ரூபன் குழுவினர் சார்பில்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டி
முடிவு நாளை கொஞ்சம் நீடித்தால்
மேலும், பல உறவுகளை இணைக்க
வழிபிறக்கும் என்ற கருத்தை ஏற்று
இந்திய நேரப்படி 15/09/2014 நள்ளிரவு 12 மணி வரை
போட்டி முடிவு நாள் நீடிக்கப்படுகிறது!
மேலதிகத் தகவலைப் பெற:
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014_09_01_archive.html

தமிழை விரும்பும் உறவுகளே!
உலகெங்கும் தமிழைப் பேணப், பரப்ப உதவும்
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்காதோர் பங்கெடுக்க வாருங்கள்...
இதுவரை பங்கெடுக்காத நண்பர்களைக் கூட
பங்கெடுக்கச் செய்து உதவலாம் வாருங்கள்...
உங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் - மேலும்
பல போட்டிகளை நடாத்த ஊக்கம் தருமே!

வியாழன், 4 செப்டம்பர், 2014

தமிழரில்லாத இலங்கை

தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறிக்கொண்டு வருவதை
நினைவூட்டலாமா...
மாறிவிடும் என்பதை
'நினைவிற் கொள்க' என்று
எடுத்துக் கூறலாமா...
எதைக் கூறுவதென்று
என் உள்ளம்
குழம்பி நிற்கின்றதே!
ஆளுக்கொரு கட்சி
ஆளுக்கொரு இயக்கம்
ஆளுக்கொரு கொடி
எத்தனையோ பிறந்து இருந்தன...
'தமிழருக்கு விடுதலை' பெற்றுத் தருவதாக
எல்லோருமே கூறி நின்றன...
பின்னர்
'தமிழரை ஆள்வது யார்?' என்று
ஆளுக்காள் போட்டி போட்டு
அழிந்து போயின என்றோ
அழிவதற்குத் தயார் என்றோ
பார்க்கக் கூடியதாக இருக்கிறதே!
1983 ஆடிக் கலகம்
சுடுகலன் போரை அறிமுகம் செய்ததா?
எந்தெந்த நாடுகளுக்கு
ஏதிலியாகப் போகலாம் என்பதை
அறிமுகம் செய்ததா?
தமிழரின் இலங்கை
தமிழரில்லாத இலங்கையாக
மாறுவதைக் கண்டு உணரலாமே!
புலிகளை அழித்ததும்
வன்முறைப் போருக்கு
முற்றுப்புள்ளி வைத்தாச்சே...
சுடுகலன் ஏந்துவோர்
எவராயினும் இருப்பின் அழிக்கப்படுவார்களே...
இன்றைய ஈழத் தமிழர்
இப்படித்தான்
முணுமுணுப்பதைக் காணலாமே!
ஈழத் தமிழரின்
முணுமுணுப்புக்குள்ளே
மறைந்திருப்பது என்ன?
தனிப் பெரும்
சிங்களத் தலைமையை ஏற்பது
நன்று என்று தானே இருக்கும்!
எப்படியாயினும்
தமிழர் நலம் பேணுவதாயின்
கட்சிகளோ இயக்கங்களோ
ஒன்றிணைய மறுத்தால் நடப்பதென்ன?
கட்சிகளாயின்
தடைபோட்டுச் செயலிழக்கச் செய்யலாமே...
இயக்கங்களாயின்
புலிகளை இல்லாது ஒழித்தது போல
அழிந்து போகச் செய்யலாமே...
அப்படியாயின்
யார் நலனை யார் பார்ப்பது?
உலகெங்கும் வாழும்
ஈழத் தமிழினமே
உண்மையைக் கூறுவீர்களா?
ஈழத் தமிழர் நலன் பேணாத
எந்தச் சக்தியும் இருந்தும்
பயனில்லைக் கண்டியளோ!

புதன், 3 செப்டம்பர், 2014

பேருக்கும் புகழுக்கும் வருவாய்க்கும்


தோழி-1: உவள் பூமா, தன்னைப் பாமா என்று கூப்பிடச் சொல்லுறாளே!

தோழி-2: அவள் பாமா நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்று மின்னுவதால்; தான் தான் அவள் என்றால் அத்தனையும் தனதென்று முழங்கலாமென்று தான்...


தோழர்-1: நற்பெயர், நற்புகழ், நல்வருவாய் பெற்றுக்கொள்ள ஒரு வழி சொல்லப்பா!

தோழர்-2: அதுக்கா, உன் பெயரை 'பில்கேட்ஸ்' என்று மாற்றிக்கோ!

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

உன் கழிவறையில் முணுமுணுப்பது பாட்டா? கவிதையா?

நேர்காணல் (பேட்டி) காணும் ஊடகவியலாளர்
"உங்களால் பாட முடியுமா?" என்று கேட்க
"கழிவறையில் முணுமுணுப்பேன் - ஆனால்
பாட்டா பாடவே வராது" எனப் பதில் தரும்
நம்ம திரைப்பட நடிகைகள்
கழிவறையில் படிப்பது
பாட்டா? கவிதையா?
பாட்டும் கவிதை தானே
ஓசை அழகு கவிதைக்கு அழகென்றால்
இசையோடு இசையும் பாவரிகளே
பாட்டிற்கு அழகு என்பேன்!
"என்னடி மீனாச்சி சொன்னது என்னாச்சு" என்ற
பாவரிகளில் எதுகை முட்டுவதே இசை!
"என்னத்தான் உன்னைத்தான்" என்றும்
"மயக்கமா கலக்கமா" என்றும்
பாடும் போது பாரும்
ஈற்றில் வரும் "தான்" உம் "மா" உம் தானே
இசையோடு இசைய வைக்கிறதே!
எழுதுதாளை எடுத்து
எழுத்துகோலைப் பிடித்ததும்
கவிதை வந்து விடுமா?
கவிதை வரும் வரை
எத்தனையோ எண்ணுவோம்
ஈற்றில் ஏதாவது கிறுக்குவோம்
ஓசை அழகோடு அமைந்தால்
கவிதை என்கிறோம் - அந்த
முயற்சி தானே பாடல் எழுதவும்
வழிகாட்டி நிற்கிறதே!
"பள்ளிக்குப் போகும் தோழியின்
துள்ளிப் பறக்கும் தோள் துண்டை (சோலை)
அள்ளிக் கொண்டு போனது காற்று!" என
பள்ளி, துள்ளி, அள்ளி என அமைத்து
பா/கவிதை புனைவது போலத் தான்
"என்னை நீ பார்த்த போதும்
உன்னை நான் பார்த்த போதும்
கண்கள் தானே இணைந்த போதும்
எண்ணம் தானே இணையாத போதும்
காதல் தானே துணையாக வருமா?" என
போதும், போதும், போதும், போதும் என
இசையோடு இசையும் வரிகளால்
பாடல் புனைவது இலகு அல்ல!
வழிநெடுகப் படித்தாலும் சரி
கழிவறையில் முணுமுணுத்தாலும் சரி
பாடிப் பாடிப் பழகினால் வரும்
பாடல் புனையும் ஆற்றல் என்பேன்!
"எண்ண எண்ணப் பெண்களடா
 வண்ண வண்ணக் கண்களடா" என
எடுப்பு (பல்லவி) எழுதிப் பின்
"மின்ன மின்ன நடப்பாளவை
கன்னம் நோகவே அடிப்பாளவை" என
தொடுப்பு (அனுபல்லவி) எழுதிப் பின்
"காதல் வந்து அவளைத் தொடர
மோதல் வந்து அவள் அடிக்க
கன்னம் சிவக்க அடி வேண்ட
கனவும் கலைய நானும் விழித்தேனே!" என
கண்ணி (சரணம்) அமைத்து கவிதை எழுதி
கழிவறையில் முணுமுணுத்தாலும் பாடலாகுமா?
கவிதை எழுதிப் பாடிப் பாருங்கள்
பாடலாக இருந்தால் பரவாயில்லை
பாடல் போலப் பாடிப் பாருங்கள்
பாடலாக இருந்தால் எழுதுங்களேன்...
ஈற்றில் என்னை மறந்தாலும்
எங்கள் தாய்த் தமிழை மறவாது
பாடலாக எழுதியே வெளிப்படுத்தவே
பாப்புனையத் தானே விரும்புங்களேன்!


யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்-012 வரை எழுதிய, நான் புதுக்கவிதை விரும்பிகளையும் இணைத்துச் செல்லவே இடைவெளி விட்டேன். ஆயினும், விரைவில் இதனைத் தொடரவுள்ளேன்.