Translate Tamil to any languages.

திங்கள், 25 நவம்பர், 2019

சிரிப்போம் சிந்திப்போம்



சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் ஒரே இலக்கியம் நகைச்சுவை ஆகும். ஓர் உண்மையைக் கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ எழுதும் போது நகைச்சுவை மலரும். எழுதுகோல் ஏந்திய உங்களுக்கு, நகைச்சுவை எழுதுவது இலகுவாக அமையும். முயன்றால் முடியாதது ஏதுமில்லை.

1.
பெண்: உங்கள் அழகும் எடுப்பும் என்னை விரும்பத் தூண்டுதே!

ஆண்: இல்லாள் அறிந்தால், அகப்பைக் காம்பாலே அடிப்பாளே!

2.
ஆண்: அவனைத் தான் கட்டுவேனெனக் கட்டினாய்! முதலிரவுக்கு முன்னமே ஓடி வந்திட்டியேடி!

பெண்: அவர் போட்டிருந்த நகை போலி, பாவித்த ஊர்த்திகள் வாடகைக்குப் பெற்றவை, இருக்கிற வீடும் வாடகையாம், அதேவேளை ஆளுக்கு வருவாயும் இல்லையே!

3.
ஒருவர்: ஒரு காலத்திலே ஊரே உனக்குப் பின்னாலே அலைந்துதே! இப்ப ஒரு நாயும் கூட உனக்குப் பின்னாலே வருவதில்லையே!

மற்றவர்: நானோ அரைச் சதத்திற்கு வழியின்றி அலைவதை அறிந்திட்டினம் போல...

இவை மூன்றும் எனது புனைவு. முதலாவதில் ஆளை அறியாது விரும்புவது தவறென்பதையும் இரண்டாவதில் வெளித்தோற்றத்தை நம்பி ஏமாறக்கூடாது என்பதையும் மூன்றாவதில் பணமுள்ளவரை தான் உறவு என்பதையும் உணர்த்த முயன்றிருக்கிறேன். வாசித்த பின், சிந்தித்த பின், சிரிக்கும் போதே இவை மூன்றும் உணர முடியும். இனி இவற்றை விடச் சிறந்த நகைச்சுவைகளை உங்களாலும் எழுத முடியுமென நம்புகின்றேன்.

இழுப்பு

கிழடு: முடி கொட்டி வழுக்கை விழுந்து
படியேறி இறங்க முடியாமல்
நரம்புகள் சுருங்கிப் போய்
உடலுறுப்புகள் இயங்காத நிலையில
என்பின்னால் அலைந்து வருவதேன்?

குமரி: வழுக்கை விழுந்தாலும் வருவாய் குறையாதே!
நரம்புகள் சுருங்கினாலும் ஆயுள் குறையாதே!
நீர் நலமாக வாழத் தான் நானிருப்பேன் - உன்னை
தோள் கொடுத்து நிமிர்த்துவேன் நானே!
உள்ளம் கோணாமல் உதவலாம் தானே!

கிழடு: கட்டையிலே போற எனக்கு
உருகிற சட்டைக்காரியே - உன்
இழுப்பு என்னவென்று அறியேனே!

குமரி: தெருவழியே தேயும் பெட்டை நான் - உன்
வருவாயில் நனையலாமென நாடினேன் பார்!
என்னை இழுத்து அணையுங்களேன்!

கிழடு: அடியே! ஏமாளி! - நானோ
தெருப் பிச்சைக்காரன் அறியாயோ...
பணப் போதை தான்
என்னை இழுப்புச் செய்யத் தூண்டியதோ!

செவ்வாய், 12 நவம்பர், 2019

ஆழ் துளைக் கிணற்றில்


கண்ணீர்!


வாழையடி வாழையாக
ஆளுக்காள் சொல்லுறாங்க...
கண்ணாதாசனும் சொன்னதாக
சொல்லிக்கொள்கிறாங்க...
தென்னையை நட்டு வளர்த்தால்
இளநீர் குடிக்கலாமாம்...
பனையை நட்டு வளர்த்தால்
பதநீர் குடிக்கலாமாம்...
பிள்ளையைப் பெத்து வளர்த்தால்
பெற்றவர்கள் கண்ணீர் வடிப்பினமாம்...
இதெல்லாம்
முதியோர் இல்லத்து மூத்த மூதாட்டி
முழங்கியதை நான் சொன்னேன்!
அடேய்! பிள்ளைகளே!
முதியோர் இல்லத்தில தான் - உங்களை
பெற்றவர்கள் தான் கண்ணீர் வடித்தால்
நீங்கள்
எங்கேனும் தான் மகிழ்வாக வாழ்வீரோ?




ஆழ் துளைக் கிணற்றில்



இந்தியா - தமிழ்நாடு
மணப்பாறை - சுஜித்
ஆழ் துளைக் கிணற்றில்
வீழ்வதற்கும்
மீட்கமுடியாமைக்கும்
இந்தியத் தொழில் நுட்ப வல்லுநர்கள்
பதில் தரமுடியாவிட்டாலும்
குழந்தை சுஜித்
"இனியாவது இப்படியாவது நிகழாது
முற்காப்பில் கவனம் தேவை" என
உலகிற்கு ஒரு செய்தியை
சொல்லிச் சென்றிருப்பதை உணருவோம்!
குழந்தை சுஜித் இழப்பு
எவராலும் தாங்கிக்கொள்ள
இயலாது போனாலும் கூட
பாதிக்கப்பட்ட உள்ளங்களோடு
எனது துயரையும் பகிருகிறேன்!
அப்துல் கலாம் அவர்களை ஈன்ற
தமிழகமே விழித்தெழு...
இனியும் இந்தியா தூங்கினால்
நாம் இன்னும்
எத்தனையோ உயிரை இழக்க நேரிடுமே!




முயன்று பாருங்கள்!

ஒவ்வொருவருக்குள்ளும்
ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ
கலையாற்றல் இருக்கிறது.
எவரெவரோ
தன் தன் கலையாற்றலை
தாமாக உணர்ந்து
வெளிக்கொணர முற்படுகிறாரோ
அவர் தானே கலைஞர் ஆகின்றார்!
தம்பி, தங்கைகளே
உங்களுக்குள்ளும் கலையாற்றல் இருக்கு
நீங்களும் அதனை வெளிப்படுத்தினால்
கலைஞர் ஆகலாமே!
அக்காள் தேனீர் நீட்டினாள்
குவளையைத் தூக்கினேன்
குவளைச் சூட்டிலே கையை விட்டிட்டேன்
"அக்காள் தந்த
தேனீர் குவளைச் சூட்டிலே
நானும் கையை விட்டதால்
சுட்டுக் கொண்டிருந்த தேனீர்
காலில் விழுந்து காலைச் சுட்டதே!" என
நானெழுதியதைக் கண்டவர் சிலர்
கவிதை மாதிரி இருக்கென்றனர்.
உங்களுக்கும் இப்படி ஏதும்
பட்டறிவு இருந்தால் போதுமே
"சுட்ட தண்ணீர் பேணியில
தொட்ட கையை விட்டதால்
பட்ட கால் பொக்களித்ததே!" என
நீங்களும் எழுதலாம் தானே!
முயன்றால் முடியாதது ஏது?
உங்கள் கலையாற்றலை
நீங்களே வெளிக்கொணர முயன்றால்
நீங்களும் கலைஞர்கள் தானே!