மகாகவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய
தமிழ் மொழி வாழ்த்து
தான தனத்தன தான தனத்தன
தான தந்தா னே
1.வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
2.வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
3.ஏழ்கடல் வைப்பினும் தன் மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!
4.எங்கள் தமிழ்மொரி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழிய வே!
5.சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
6.தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!
7.வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே!
8.வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!
இப்பாடலை எனது யூடியூப் விருப்பத்தேர்வாகக் களஞ்சியப்படுத்தி உள்ளேன். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பார்வையிடலாம்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!