Translate Tamil to any languages.

செவ்வாய், 28 ஜூலை, 2015

அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?

அறிஞர் அப்துல்கலாம் அவர்களை
அறியாத எவரும் இங்கில்லை...
அறிஞர் அப்துல்கலாம் அறிந்த
அறிவியலைத் தான் அறிந்தே
ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல
ஒவ்வொரு தமிழனும் முயன்றே
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும் - அதுவே
அறிஞர் அப்துல்கலாமிற்கு - நாம்
செய்யப் போகின்ற பணியென்பேன்! - ஆம்
என்றே அவரே நெறிப்படுத்துகிறார் - பின்
என்றே திறமையை வளர்க்க
வழிகாட்டிக் கற்கத் தூண்டுகிறாரே!
அப்துல்கலாம் போன்று அறிஞராக
எண்ணிய ஒவ்வொரு உறவும்
என்றே சுட்டிக் காட்டுவது
தன்னம்பிக்கை இருந்தால் - நீ
தலைநிமிர்ந்து நடைபோடு என்றே! - நீயே
என்று எண்ணிக்கொண்டால் - என்றும்
அப்துல்கலாம் போன்று அறிஞராகலாம்
என்பதைக் கருத்திலெடு என்கிறாரே!
அறிஞர் அப்துல்கலாமிற்கு;
நாம் என்ன செய்யப் போகிறோம்?
என்றால் துயர் பகிர்வதல்ல;
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும்!

படங்கள்: கூகிளில் தேடித் திரட்டியவை

ஞாயிறு, 26 ஜூலை, 2015

குடித்த பின் விளைவு

குடிகாரன் பேச்சுப் பிழை என்றால்
பார்வையும் அல்லவா பிழைக்கிறதே
"குடி மயக்கியது ஓ!"

குடிகாரியின் பார்வை பிழை என்றால்
தெருவழியே வயிற்றால அடிக்கிறாளே
"குடி கலக்கியது ஓ!"

வியாழன், 23 ஜூலை, 2015

சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு


கட கட வென கொத்துற சாப்பாடு
ஆவ் ஆவ் வென வறுக்கிற சாப்பாடு
ஊ ஊ வென உறிஞ்சிற சாப்பாடு
சூ சூ வென சூப்பிற சாப்பாடு
சா சா வென நக்கிற சாப்பாடு
என்றெல்லாம் பலரை இழுக்கிற
தெருத் தெருவாய்
சுடும் நாய்ச் (HOT DOGS) சாப்பாடு
என்றவாறு பல உணவகங்கள் இருக்க
ஆங்கொன்றில்
நம்மாளு மூக்குமுட்ட உண்டாராம்...
அடுத்தநாளு
வயிற்றால அடிக்க... வயிற்றால அடிக்க...
மருத்துவரை நாடினாராம்!
மருத்துவரும்
நம்மாளின் நாடி பிடித்துப் போட்டு
நல்ல பேதி  குடித்தாச்சு
இன்னும் நாலு தடவை
வயிற்றால அடிக்கலாம் - அதன் பின்
'அண்ணா' கோப்பி பருக
அல்லது
'அறிவு' தேன் பருக
நின்று விடும் - ஆனால்
நீண்ட ஆயுளுக்குப் பாரும்
ஆறு மாதத்துக்கு ஒருக்கால்
மருத்துவரை நாடி
கடுக்காய்ப் பேதி குடிக்கவேணும்
முடியாவிட்டால்
ஆறு மாதத்துக்கு ஒருக்கால்
வயிற்றால அடிக்க வைக்கிற
சாப்பாடு விக்கிற உணவகங்களில
மூக்குமுட்ட உண்டு களிக்கலாமே!

*பேதி மருந்து - வயிற்றால அடிக்க வைக்கும் மருந்து

சனி, 18 ஜூலை, 2015

பாப்புனைய முன் இதைப் படியும் காணும்!


பாப் புனையும் வேளை - அதாவது
கவிதை எழுதும் வேளை - நாம்
எழுதுவது எல்லாம் பா/கவிதை என
எந்த அளவுகோலை வைத்து - நாம்
எடை போடுகிறோம் என்றறியாத
பா/கவிதை புனையும் உள்ளங்களே
"கவிதை என்பது உணர்வு கடத்தி..." என்ற
பதிவைக் கொஞ்சம் படித்தால்
தெளிவாகப் பா/கவிதை புனையலாமே!

"எதுகை இருக்கிறது
மோனை இருக்கிறது
பாயாசத்து முந்திரியாய்
படிமமும் இருக்கிறது
மொக்கையாக இல்லாது
ஒரு செய்தியும் சொல்லி இருக்கிறேன்
கவிதைக்கு வேறென்ன வேண்டும்" என்கிறான்

இதனைப் படித்ததும் - தாங்கள்
எழுதிய/ புனைந்த பா/கவிதை இல்
எதுகை, மோனை, படிமம் - அத்தோடு
அழகான செய்தியும் இருப்பதை
உறுதிப்படுத்தினால் மட்டும் போதாதே!
மேலும்,
என்ன தான் இருக்க வேண்டுமென
அடுத்துவரும் அடிகளைப் படியுங்க...

கவிதை
இலக்கண அறிவை விளம்பிட உதவும்
விடைத்தாளும் இல்லை
கவிதை வெறும் சொல்லடுக்கு இல்லை
கவிதை செய்தித் தாளும் இல்லை
கவிதை விளம்பரச் சாதனமும் இல்லை
தான் உணர்ந்ததை
பிறர் உணரச் செய்பவை
கவிதையாய் இருக்க முடியும்
ஏனெனில்
கவிதை ஒரு உணர்வு கடத்தி!
இவ்வாறு
அடுத்துவரும் அடிகளில் - அறிஞர்
உணர்த்த வருவது என்ன?

இலக்கண அறிவிற்குள் இறுக்காமல்
சொல்களை அடுக்கி அழகாக்காமல்
செய்தி மணம் வீசாமல்
விளம்பர முகம் வெளிப்படாமல்
நாம் உள்வாங்கிய உணர்வை
பிறர் உணரும் வண்ணம்
வெளிப்படுத்தும் ஊடகமே கவிதையென
அறிஞர் உணர்த்துவதைக் காணும்!

கவிதை வழியே நல்ல கோட்பாடுகளை (தத்துவங்களை)
எளிமையாகப் புகுத்தும் வல்லமை கொண்ட
அறிஞர் ரமணி அவர்களின் கவிதையை
ஒன்றுக்கு நான்கு தடவை படிக்க
பா/கவிதை புனையும் ஆற்றலும் திறனும்
தங்களுக்கு வந்து சேருமென்ற நம்பிக்கை
என் உள்ளத்தில் நிறைந்தமையால் பகிருகிறேன்!
பா/கவிதை புனைய விரும்பும் ஒவ்வொருவரும்
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படித்து
பயனீட்ட முன்வாருங்களென அழைக்கின்றேன்!
http://yaathoramani.blogspot.com/2015/07/blog-post_16.html

ஞாயிறு, 12 ஜூலை, 2015

அழியுமினம் தமிழினமே!


இந்தியா, இலங்கை இரண்டுமே
ஒரே நிலப்பரப்பாயிருந்த
குமரிக்(லெமூரியா)கண்டத்தில்
சைவமும் தமிழும் தான்
தொடக்கத்தில் காணப்பட்டதாமே!
இந்தியா, இலங்கை இரண்டும்
கடற்கோளால்(சுனாமியால்) துண்டுபட்டும்
சைவமும் தமிழும் தான்
மங்காமல் பேணப்பட்டதாமே!
சித்தார்த்த(புத்த)னின்
நல் வழிகாட்டலை விரும்பியே
சோழ மன்னன் ஆட்சியில் தான்
இந்தியாவில் தமிழர்
பௌத்தத்தைக் கடைப்பிடிக்க முயன்றனரே!
குமரிக்(லெமூரியா)கண்டமீன்ற
இந்தியா அண்ணன் என்றால்
இலங்கை தம்பி போல
இலங்கையரும்
பௌத்தத்தைக் கடைப்பிடித்தனரே!
இந்தியாவில் ஆரியம்
தான் தோன்றித்தனமாக நுழைய
பௌத்தத்தை விரும்பியோர்
சிங்களத்தாலே தான்
பௌத்தத்தைப் பின்பற்ற வேண்டியுமிருந்ததே!
அண்ணன் மாறினால்
தம்பி என்ன செய்வான்?
இலங்கையிலும்
சிங்களத்தாலே தான்
தமிழர் பௌத்தத்தைப் பின்பற்றலாயினரே!
இலங்கையில்
சிங்களத்தாலே பௌத்தத்தைப் பின்பற்றிய
தமிழர் சிங்களவரானது போல
இந்தியாவிலும் பாரும்
தமிழிலிருந்து பிரிந்த மொழிகளால் ஆன
மலையாளி, தெலுங்கர், கன்னடத்தார் என
தமிழர் மாறிவிட்டனர் போலும்!
இன்றைய நிலையில்
இலங்கையில் தமிழர்
சிங்களவராலும்
இந்தியாவில் தமிழர்
மலையாளியாலும்
தெலுங்கராலும் கன்னடத்தாராலும்
துன்புறுவதைப் பார்த்தால்
தமிழராலே
தமிழர் அழிவதாகத் தெரிகிறதே!
நான் நினைக்கின்றேன்
உலகெங்கும்
தமிழர் தான் வாழ்ந்திருப்பார்கள்...
உலகத்தையே
தமிழர் தான் ஆண்டிருப்பார்கள்...
எப்படியிருந்தும்
மதம் மாறியோ மொழி மாறியோ
தமிழரே தமிழராலே அழிந்து
தனக்கென்று
நாடு ஒன்று இன்றியே
அழியுமினம் தமிழினமாச்சே!

முயற்சி செய்


"முடியாது" என்பது
மனித அகரமுதலியில்
இருக்க முடியாது - அப்ப
முடியும் என முடிந்த வரை
முயற்சி செய்!

வியாழன், 9 ஜூலை, 2015

ஒரு வெளியீட்டிற்காக...

நகைச்சுவையெனக் கூகிளில் தேடிய வேளை கீழ்வரும் படம் என் கண்ணில் சிக்கியது. அதைக் கொஞ்சம் படித்த வேளை, அதனை நம்மாளுங்க பார்க்க வைக்க எண்ணினேன். விளைவு தொடர்ந்து படியுங்க.
படத்தின் உரிமம் : வேடந்தாங்கல் (http://sakthistudycentre.blogspot.com/2013/08/free-hospital.html)

படத்தைப் பாருங்க...
இலங்கை என்றால் கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரை என நினைவூட்டுக.
இந்தியா-தமிழ்நாடு என்றால் சென்ன மெரீனாக் கடற்கரை என நினைவூட்டுக.

அடுத்துப் படத்திலுள்ள பேச்சைப் படியுங்க...
பெண் பிள்ளை உடனே கிளம்பணும் என்கிறாள்
ஆண் பிள்ளை அப்பா, அம்மா தேடுவாங்களா என்கிறான்
மீண்டும் பெண் பிள்ளை பள்ளிக்கூடத்தால மகனும் மகளும் வந்து தேடுவாங்களே என்கிறாள்

அடுத்துப் படத்திலுள்ள ஆள்களை அடையாளப் படுத்துங்க...
இளமை பேசும் இருவரில் எவரையும் அடையாளம் காணமுடியவில்லையா?

அப்ப உள்ளத்தில் எண்ணிப் பாருங்க...
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்க: நான் வேலைக்குப் போனதும் என் பெண்டாட்டி இப்படித்தானோ...?

வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மார்: எந்த மாட்டையும் கன்றுகளையும் மேய்க்கப் போனாரோ...?

தெருச் செய்தி: கடற்கரையில் காதல் பண்ணும் இளசுகளை விட இளசுகள் போன்ற பெரிசுகளே அதிகமாம்...

படம் பார் பேச்சைப் படி
ஆளைப் பிடி என்று
கூகிளில் தேடிய படத்தை வைத்து
காதல் மாசடைகிறது
குடும்பம் உடைந்து போகிறது
இந்த நொடிப்பொழுதில்
நம்மாளுங்க இப்படித்தானுங்க என்று
ஒரு வெளியீட்டிற்காக...
இரண்டு பிள்ளைக்கு அப்பன்காரங்களும் 
வேலையில்லாதவரைக் கட்டிய பெண்டில்மாரும் 
உள்ளத்தில் எண்ணியதையும் தந்து
தெருச் செய்தியாக நாட்டுநடப்பையும்
சொல்லி முடித்திருக்கிறேன்! - இனி
உங்கள் எண்ணங்களை வெளியிடுங்களேன்!


சனி, 4 ஜூலை, 2015

முகநூல் வழிக் கொள்ளை!

வெடிப்பதோ படித்தவர்/நல்லவர் போல
அடிப்பதோ பகற்கொள்ளை பாரும்...
இப்படித் தான் இணையத்தில் உலாவி
எப்படித் தான் ஏமாறுவார் பாரும்...

இந்தக் கவிதைக்கான பாடுபொருள்
அந்தத் தளத்தில் இருக்கே - அதன்
இணைப்பு இங்கே பாரும்...
சொடுக்கியே அங்கே படியும்!
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/Cheating-Through-Facebook.html


மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html

புதன், 1 ஜூலை, 2015

உங்களுக்கு மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) தெரியுமா?

துளிப்பா (ஹைக்கூ) பற்றியும் அறிந்திருப்பியள்
சென்ரியு என்றொன்றும் இருக்கிறாதாம்
இன்னும் எத்தனையோ இருக்கலாம்
என்றாலும்
குறள்வெண்பா என்பதும் யாவருமறிந்ததே
இணைக்குறள் ஆசிரியப்பா என்பதும்
நீங்கள் அறியாமல் இருக்கமுடியாதே
என்றாலும்
குறும்பா (லிமரிக்) பற்றியும் அறிந்திருப்பியள்
ஆனாலும்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியும்
உங்களுக்குத் தெரிந்து இருக்கலாம்
எப்படியாயினும் - எனக்கு
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றித் தெரியாமையால்
நான் படித்ததைப் பகிருகிறேன் இங்கே!

குறும்பைச் சொல்லிச் சிரிக்க வைக்கும்
ஐந்தடிக் குறும்பாவை விட
நையாண்டி பண்ணிச் சிரிக்க வைக்கும்
நான்கடி மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு)
எப்படி என்று எண்ணிப் பாருங்களேன்!

"1, 2 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்,
3,4 வரிகள் ஒரே வித ரைமிங்கிலும்
முடிய வேண்டும்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://kaalapayani.blogspot.com/2009/05/blog-post_11.html

"மிக எளிதான வடிவம்.
மொத்தம் நான்கே வரிகள்.
aa bb என்ற rhyming pattern.
பொதுவாக க்ளெரிஹ்யு கவிதைகள்
ஹாஸ்ய ரசம் ததும்புவனவாக இருந்தாலும்
சீரியஸ் விஷயங்களைக் கூட
நச் எனச் சொல்லலாம்." என்று கீழுள்ள
பதிவை ஆக்கியோர் சொல்லுகிறார் பாரும்!
இணைப்பு:
http://wp.me/pTWRs-69v

"திரையில் அழகாய் மின்னிய பெண்ணவள்
விரைவாய் வீட்டிற்குப் போனதும் அழகற்றவள்
அழகுப்படுத்தினால் எவளும் அழகாய் மின்னலாம்
அழகாய் மின்னயவளை நம்பியவன் ஏமாளி!

தேடல் உள்ளவரை அறிவு பெருகுமே
தேடிப் பொறுக்கிப் படித்தவர் அறிவாளி
பாராமுகமாய் படிப்பைக் கசக்குது என்றவர்
மக்கள்முன் பாராமுகமாய் ஒதுங்கிடும் அறிவிலி!

வாக்குப் போட்டவர் நாட்டில் அலைகின்றார்
வாக்குப் பெற்றவர் நாட்டைக் கவனிக்காராம்
தேர்தல் வந்தால் வேட்பாளர்கள் வருவார்கள்
வென்றதும் நாடாளுமன்ற நாற்காலி துடைப்பாராம்"
என்றவாறு
நான் எழுதிக் கிறுக்கிய கிறுக்கலை
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) என்றெண்ணாமல் - கொஞ்சம்
மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கிப் பார்த்தே
நன்றே படித்துத் தேறி வந்தே - என்
மகிழ்வூட்பாவில் (க்ளெரிஹ்யு) பிழை கண்டுபிடியுங்களேன்!

கீழுள்ள பாவில் என்னை நறுக்கியே
எழுதிப் பார்த்தேன் படித்துப் பாரும்

"யாழ்பாவாணன் பாப்புனையக் கற்றுத்தர வந்தாராம்
வாழ்க்கையில் தொல்லையாம் அடிக்கடி தொடராராம்
பாப்புனைய விரும்பும் உள்ளங்களோ தளராராம்
பாப்புனைய உதவும் பதிவுகளைப் பகிருவாராம்" என

முதலிரு அடிகளில் யாழ்பாவாணனின் இழுபறியும்
ஈற்றிரு அடிகளில் பிறர் பதிவுகளின் பகிர்வும்
நன்றே நடைபெறுவதைப் பாரும் -என்றே
இருவேறு வெளிப்பாட்டைப் பகிர்ந்தேன் - இது தான்
மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) எழுதவுதவும் தகவலா?
எதற்கும் மேலுள்ள இணைப்புகளைச் சொடுக்கி
தெரிந்து கொண்டால் எழுதுவீர் மகிழ்வூட்பா!
பாப்புனைய விரும்பும் உள்ளங்களே - இப்படித் தான்
புதிய புதிய தகவலைத் தேடித் தேடியே
புதிய புதிய பாவண்ணங்களில் இறங்கியே
புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்தியே - நீங்கள்
உங்களைப் பாவலராக அடையாளப்படுத்த முயலுங்கள்!

இதென்னங்க மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) - அன்று
சங்க இலக்கியத்தில் இடம்பெற்று இருந்த
நையாண்டிப் பாடல் (வசைப்பாடல்) ஒன்றைப் பாரும்...
"ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ" என்று
கேலியும் கிண்டலுமாய் கம்பர் விட்ட
விடுகதை ஔவையார் காதில் பட்டதும்
தன்னை நையாண்டி செய்த கம்பரை
ஔவையார் வசைபாடித் தீர்க்கிறார் பாரும்!

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி - இந்த
சங்க இலக்கியப் பாடல் விளக்கமறியலாம்...
http://thamizharukkaaga.blogspot.com/2012/05/blog-post_20.html