Translate Tamil to any languages.
2-குறும் ஆக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2-குறும் ஆக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜூலை, 2026

முயன்றால் முடியாதது எது?

 



இலை மறை காயாய் மறைந்திருக்கும் கலைஞர்களை வெளி உலகுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்று எத்தனையோ பேர் சொல்லிக் கொள்கின்றனர். நானும் அதனை ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் "இலை மறை காயாக இருந்துவிடாமல் நாமும் எங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாமே" என்ற எண்ணம் உங்களுக்கும் வரலாம் தானே! அப்படியாயின் நீங்களே வெளிப்படுத்திப் பிறருக்குக் காட்சி கொடுக்கலாமே!

நீங்களும் மேடையேறிப் பேசி விளக்கலாம்
நீங்களும் கதை சொல்லி ஆகலாம்
நீங்களும் கட்டுரை எழுதிக் காட்டலாம்
நீங்களும் கவிதையை இசைத்துப் பாடலாம்
நீங்களும் ஆடிப் பாடி நடிக்கலாம்
நீங்களும் நகைச்சுவை சொல்லிச் சிரிக்க வைக்கலாம்
அடடே! உங்களுக்குள் இத்தனை திறமைகளா?
நீங்களும் வெளிப்படுத்த முன்வரலாமே!
இலக்கிய நாட்டம்/விருப்பம் உள்ளவருக்கு
தங்கள் வெளியீடுகள் தான்
தங்கள் முகவரியை வழங்கி வைக்குமே!

யாழ்ப்பாவாணன் கலைப்பணி மன்றம் இலை மறை காயாக இருக்கும் கலைஞர்களை வெளியுலகிற்கு அடையாளப்படுத்த உதவும். இருப்பினும் தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முன்வாருங்கள் எனப் பணிவோடு அழைக்கின்றேன்.

தகவல்: மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்

திங்கள், 13 ஏப்ரல், 2026

கடன் பற்றிய கருத்துகள்


எந்தக் கவிஞர் எழுதினாரோ
எனக்குத் தெரியவில்லை - அவை
உள்ளத்தைக் கொஞ்சம் உரசியது!

'உறவுக்கும் பகை கடன்!' என்று
ஒரு கடையில் அட்டை(தாள்) ஒன்று
தொங்கவிட்டிருப்பதைக் கண்டேன்.

'எங்கள் வாடிக்கையாளரே
எமக்குக் கடவுள் ஆகையால்
கடன் கொடுப்பதில்லை என்பதை
வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்துகிறோம்.' என
கடையொன்றில் அழகாய் எழுதி
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

'கான மயில் ஆட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து - எம்மிடம்
கடன் கேளாதீர் உறவுகளே!' என
கடை ஒன்றின் நுழைவாசலில்
எழுதப் பட்டிருந்ததை படித்தேன்.

அப்படி, இப்படி, உப்படி என்று
நானும் எழுதிப் பார்த்தேன்...

விற்பதும் வாங்குவதும்
கடனுக்கு இல்லைக் காண்பீர்
சிறந்த வணிகத்தில்
                    (துளிப்பா/ஹைக்கூ)

வாங்குவதும் விற்பதும்
வணிக வழக்கம் தான்
கடன் கொடுக்கல் வாங்கல்
வணிகத்திற்கு முரண்
                 (தன்முனைக் கவிதை)

பொருள்களை விற்றால் பணந்தான் தரவேணும்
நீதான் கடனை மற
        (இரு விகற்பக் குறள் வெண்பா)

வாங்கும் விற்கும் முறை தான்
வணிகம் என்று சொல்வார் படி
கடனை மட்டும் நாடா மல்தான்
நாளும் பழகிக் கொள்ள வேணும்
எப்பன் எண்ணிப் பாரும்
நன்றே நாளை விடியும் தானே!
                  (நேரிசை ஆசிரியப்பா)

உழைப்பே! பணம் ஈட்டுவதற்கே?
தாங்கள் கடன் கேட்டால் - நாம்
எப்படிப் பணம் ஈட்ட முடியும் காணும்!
கொஞ்சம் எண்ணிப் பாருங்கோவேன்!
                          (வசன கவிதை)

ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (காசி.ஜீவலிங்கம்)


ஞாயிறு, 14 டிசம்பர், 2025

தேவைக்கு மட்டும் கடவுளைத் தேடுகின்றார்.





சீடர்கள்: குருவே கடவுளை  வணங்குவோர் யார்? எங்கே?

குரு: கடவுளைப் பக்தர்கள் தான் வணங்குவர்! இதில் ஐயம் எதற்கு?

சீடர்கள்:  கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிறீர்கள்! எங்கு உள்ளவர்கள் அதிகம் கடவுளை வணங்குகின்றனர்!

குரு: தங்கள் உயிர் பிரியக்கூடாது என்றும் தங்கள் நோய்கள் மாறவேண்டும் என்றும் மருத்துவமனையில் தான் அதிகமானோர் கடவுளை வணங்குகின்றனர்!

சீடர்கள்:  அப்படி என்றால், அன்னதானம் சாப்பிடவும் அழகுப் பெண்களைத் திறன்பேசியில் படம் பிடிக்கவும் ஊர்வம்பு அலட்டவும் தான் கோவில்களுக்கு வருகின்றனரா?

குரு: வீணர்கள் வீண் வம்பு தும்பு பேசலாம் வேண்டாதவற்றைச் செய்யலாம். ஆனால், உண்மையான பக்தர்களுக்கே கடவுள் அருள் தருவார்!

சீடர்கள்: "நாம் கும்பிட்ட கடவுள், எம்மைக் கைவிட மாட்டார்" என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவருக்கு மட்டும் தான் பொருந்தும் போல...

குரு: ஆமாம்! கடவுளை நம்பினோர் கடவுளால் கைவிடப்படார்!

ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

காவோலை விழக் குருத்தோலை சிரிக்கலாமா?



அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
(கொன்றை வேந்தன் - ஔவையார்)
என்போரின் நடவடிக்கையே உயர்வானது.
உலகம் போற்ற மாற்றாருக்கு முன்மாதிரியாக
அம்மை, அப்பன் மீது
அளவு கடந்த பற்று வைத்து
உயிர் பிரியும் வரை உறவாடி
அம்மை, அப்பனைப் பேணி வருவோரே
உண்மையான பிள்ளைச் செல்வங்கள்!

அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்
(20ஆம் நூற்றாண்டுப் பிற்பகுதி 
மற்றும் பின்னரான இளசுகள்)
என்போரின் நடவடிக்கையே கீழ்த்தரமானது.
பிள்ளைகளைச் சுமந்த பெற்றோரை
மெள்ளச் சுமக்க முடியாமலே
காவோலை விழக்
குருத்தோலை சிரித்தது போலத்தான்
முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும்
பின்விளைவறியாப
பிள்ளைகளின் செயற்பாடு  கேடிலும் கேடு!

ஆக்கம்:
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

குட்டிக் காணொளிகள் ஊடாகச் சிந்திப்போம்

குறும் காணொளிகள் என்றால் ரிக்-ரொக் (டிக்-டொக்) ஊடகம் நினைவுக்கு வரும். உங்கள் யாழ்பாவாணனும் 'வாழ்தல் பற்றிய சிந்தனை' என்ற தொடர் காணொளிகளைப் பகிருகிறேன். நீங்களும் ரிக்-ரொக் (டிக்-டொக்) பயனராயின் என்னையும் நண்பராகச் சேருங்கள்.

@yarlpavanan

வாழ்தல் பற்றிய சிந்தனை

♬ original sound - Kasirajalingam Jeevalingam

இரண்டு காதல், ஒரு வாழ்வு பற்றிய காணொளி

@yarlpavanan

வாழ்தல் பற்றிய சிந்தனை

♬ original sound - Kasirajalingam Jeevalingam

100 விளுக்காட்டில் 90 வாழாமல் 10 வாழ்வதா பற்றிய காணொளி

@yarlpavanan

வாழ்தல் பற்றிய சிந்தனை

♬ original sound - user9484992544515 - Kasirajalingam Jeevalingam

தங்கள் வழிகாட்டல்களையும் மதியுரைகளையும் பின்னூட்டமாக இடுங்கள்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

ஒரு சொல் ஒரு படம் ஒரு கருத்து - மீம்ஸ்

 விளக்குப் பேசினால்...

மேற்படி மீம்ஸ்ஸை வைத்து முகநூலில் "கவிதை அரங்கேறும் நேரம்" குழுவினால்  கவிதைப் போட்டி நடாத்தப்படுகிறது. நீங்களும் பங்கு பற்றலாமே!

பணமா கடவுளா


மக்கள் சாவு


சனி, 26 பிப்ரவரி, 2022

காதல் பற்றிய காட்சியும் கருத்தும் (மீம்ஸ்)

 

எவரை எவர் காதலிப்பது என்று தெரியவில்லையே!


காதல் பண்ணக் குறுக்கே வந்தால் கொலையா?


காதலில் இதெல்லாம் இயல்பாய் போயிட்டுதே!


குழந்தை தொட்டுக் கிழடு வரை காதலாமே!



காதலுக்குக் கூடத் தகுதி தேவையாக இருக்கிறதே!



இந்தக் காட்சியும் கருத்தும் (மீம்ஸ்) பற்றிய தங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.



செவ்வாய், 28 ஜூலை, 2015

அறிஞர் அப்துல்கலாமிற்கு; நாம் என்ன செய்யப் போகிறோம்?

அறிஞர் அப்துல்கலாம் அவர்களை
அறியாத எவரும் இங்கில்லை...
அறிஞர் அப்துல்கலாம் அறிந்த
அறிவியலைத் தான் அறிந்தே
ஒவ்வொரு இந்தியன் மட்டுமல்ல
ஒவ்வொரு தமிழனும் முயன்றே
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும் - அதுவே
அறிஞர் அப்துல்கலாமிற்கு - நாம்
செய்யப் போகின்ற பணியென்பேன்! - ஆம்
என்றே அவரே நெறிப்படுத்துகிறார் - பின்
என்றே திறமையை வளர்க்க
வழிகாட்டிக் கற்கத் தூண்டுகிறாரே!
அப்துல்கலாம் போன்று அறிஞராக
எண்ணிய ஒவ்வொரு உறவும்
என்றே சுட்டிக் காட்டுவது
தன்னம்பிக்கை இருந்தால் - நீ
தலைநிமிர்ந்து நடைபோடு என்றே! - நீயே
என்று எண்ணிக்கொண்டால் - என்றும்
அப்துல்கலாம் போன்று அறிஞராகலாம்
என்பதைக் கருத்திலெடு என்கிறாரே!
அறிஞர் அப்துல்கலாமிற்கு;
நாம் என்ன செய்யப் போகிறோம்?
என்றால் துயர் பகிர்வதல்ல;
அப்துல்கலாம் போன்று அறிஞராகணும்!

படங்கள்: கூகிளில் தேடித் திரட்டியவை

சனி, 4 ஜூலை, 2015

முகநூல் வழிக் கொள்ளை!

வெடிப்பதோ படித்தவர்/நல்லவர் போல
அடிப்பதோ பகற்கொள்ளை பாரும்...
இப்படித் தான் இணையத்தில் உலாவி
எப்படித் தான் ஏமாறுவார் பாரும்...

இந்தக் கவிதைக்கான பாடுபொருள்
அந்தத் தளத்தில் இருக்கே - அதன்
இணைப்பு இங்கே பாரும்...
சொடுக்கியே அங்கே படியும்!
http://thillaiakathuchronicles.blogspot.com/2015/07/Cheating-Through-Facebook.html


மகிழ்வூட்பா (க்ளெரிஹ்யு) பற்றியறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்க.
http://paapunaya.blogspot.com/2015/07/blog-post.html

சனி, 9 மே, 2015

யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு - குறும்படம்

வழமை போல் நான் விரும்பும் பதிவர்களின் பதிவுகளை மேய்ந்த போது பாவலர் நா.முத்துநிலவன் ஐயா பக்கம் கண்ணில் பட்டது. நானும் பார்வையிட்டேன். பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்கள் "தண்ணீர்ப்பஞ்சம் - குறும்படம்" என்ற தலைப்பில் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
(படம்: வளரும் கவிதை தளத்தில் இருந்து) 

"தண்ணீர்ப் பஞ்சம் காரணமாகவே நான்காம் உலகப்போர் வரலாம்." எனத் தொடரும் அவரது பதிவில் "முடிந்தால் பகிருங்கள். அந்த நண்பருக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுங்கள்." என வழிகாட்டுகின்றார். அவரது பதிவைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

பாவலர் நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் வழிகாட்டலின் படி நானும் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படம் வெளிவர உந்துசக்தியான அறிஞர் யாழ். மதிசுதா அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்தும் கூறுகிறேன். இவ்வாறான விழிப்புணர்வுப் படங்களை நான் என்றும் வரவேற்கிறேன்.

உலகம் வெப்பமடைதல், வானில் ஓசோன் ஓட்டை எனப் பல காரணங்களை நீட்டி உலகெங்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு வரலாம் என அறிஞர்கள் ஆளுக்காள் பதிவுகளைப் பதிவார்கள் என நம்புகின்றேன். ஆயினும், "யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு" என்ற தலைப்பில் நான் சொல்ல வரும் செய்தி வேறு.

பத்து ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதியில் இருந்து மின்பிறப்பாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. அக்காலப் பகுதியில் மின்பிறப்பாக்கிகளின் (ஜெனரேட்டர்களின்) கழிவு எண்ணெய்களை (கழிவொயில்களை) நிலத்திற்குக் கீழே கருவிகளின் பின்னூட்டத்துடன் செலுத்திக்கொண்டு வந்தனர். 

அதன் தாக்கம் தற்போது நிலத்திற்குக் கீழே நன்நீர்ப் படையுடன் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்துவிட்டது. அதனால், யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பகுதிக்கு அண்மையாக உள்ள நன்நீர் ஊற்றுக் கிணறுகளில் கழிவு எண்ணெய் (கழிவொயில்) கலந்த நீரே வெளிவருகிறது. இதனால் குடிநீர்த் தட்டுப்பாடும் வேளாண்மைச் செய்கையைத் தொடர முடியாமையும் ஏற்படுகிறது.

இந்நிலை ஏற்படக் காரணம் அறிஞர்கள் தூக்கத்தில் இருந்தமையே! அதென்ன தூக்கம்? அதுதான் நிலத்திற்குக் கீழே செலுத்தியதை நடுக்கடலில் கலக்கவிட்டிருக்கலாம் என மாற்றறிஞர்கள் கருதுகின்றனர். இனியென்ன செய்யலாம்? காலம் கடந்து அறிவு (ஞானம்) வந்தென்ன பயன்?

இதற்கும் அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்திற்கும் என்ன உறவு? யாழ்ப்பாணத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு வலுப்பெற்றால் என்ன நிகழும்? ஒன்றரை மணித்துளியில் உறைப்பாகக் காட்சிப்படுத்திச் சொல்ல வந்த செய்தி என்ன? இவற்றிற்கு விடைகாணக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி அறிஞர் யாழ். மதிசுதா அவர்களின் இறுதித் துளி (Final Drop) என்ற குறும்படத்தைப் பாருங்கள்! முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


நன்நீரைப் பேணுவோம் நம்மவர் வாழ்வை வளப்படுத்துவோம்.



புதன், 18 பிப்ரவரி, 2015

சீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.

உலகெங்கும் வழிபடுவோர் பார்வைக்குக் காண்பிக்கப்பட்டுவரும் சீரடி சாய் பாபா அவர்களின் ஒன்பது நாணயங்கள் இலங்கை-யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவந்திருந்த வேளை நிகழ்த்தப்பட்ட அந்த ஒன்பது நாணயங்கள் பற்றிய தெளிவை ஒளிஒலிப் பதிவாக (Video) உங்களுடன் பகிருகிறேன். இதனை நீங்களும் பலருக்குப் பகிருங்கள்.


இலங்கை-யாழ்ப்பாண நகரில் திருமதி.யோகாம்பிகை (விமலா) சங்கரன் அவர்களால் பேணப்படும் யாழ்ப்பாணம் சீரடி ஸ்ரீ சாய் சங்கரா ஆலயத்தின் இணையத்தளப் பணிகளை நானே மேற்கொள்வதால் இவ் ஒளிஒலிப் பதிவைத் (Video) தங்களுடன் பகிர முடிந்திருக்கிறது. கீழே அவ்விணையத்தள முகவரி தந்துள்ளேன். அதனை விரித்துப் பயன்பெறலாம்.

ஓம் சாயிராம்
ஜெய் சாயிராம்

திங்கள், 19 ஜனவரி, 2015

மணிமேகலையின் பெற்றோர் யார்?

மணிமேகலை என்பவர் யார் என்று தெரியுமா? சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள். அவரது பெற்றோர் யாரென்று தெரியுமா? கீழ்வரும் இணையர்களில் எவராக இருப்பர்?

1. மாதவி-கோவலன்

2. கண்ணகி-கோவலன்

வியாழன், 4 டிசம்பர், 2014

என் இனிய உறவுகளே!


எனது வேலைப்பளு காரணமாக எனது வலைப்பூக்களில் பதிவுகள் இடவோ உறவுகளின் வலைப்பூக்களில் கருத்துப்பகிரவோ முடியவில்லை. 08/12/2014 திங்கள் தொடக்கம் வலைப்பூக்களில் வழமை போல் என்னைக் காணலாம்.

எல்லோரது ஒத்துழைப்புக்கும் எனது நன்றிகள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

புதன், 19 நவம்பர், 2014

தெருப் பார்த்த பிள்ளையார்...

முருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார்.

தாயைப் போலத் துணையைத் தேடிக் கண்டுபிடிப்பீரா? பிள்ளையாரோ அரச மர நிழலில் இருந்தவாறு தெருவால போற வாற பெண்ணுகளைப் பார்த்த வண்ணம் இருக்கிறார். தாயைப் போலத் துணையும் கிடைக்க வில்லை. பிள்ளையாரும் திருமணம் செய்யவில்லை.

அம்மையும் அப்பனும் உலகம் என்றுரைத்த பிள்ளையார் தானே, அவர்களைப் போலப் பிறரில்லை எனவும் எமக்கு வழிகாட்டுகிறார்.

செவ்வாய், 11 நவம்பர், 2014

உங்கள் வாழ்க்கைத் துணை எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?

நம்ம காளைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற வாலைகளுக்கு வலை விரித்தால் எவளாவது சிக்குவாளா? (குறிப்பு: பெண்களே, ஆண்களுக்குக் கழுத்தை நீட்டும் முன் சிந்தியுங்கள்.) காளைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.


  1. அன்பான பெண்
  2. அழகான பெண்
  3. கிராமத்து பெண்
  4. நகரத்து பெண்
  5. பணக்கார பெண்
  6. புகைத்தல், மதுப் பழக்கமுடைய பெண்
  7. ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள பெண்
  8. எந்த ஆணிடமும் தகாத உறவு வைக்காத பெண்.
  9. அவள் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.


நம்ம வாலைகள் தங்கள் உள்ளத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை வைத்திருப்பாங்க... அதற்கேற்ற காளைகளுக்கு வலை விரித்தால் எவனாவது சிக்குவானா? (குறிப்பு: ஆண்களே, பெண்களுக்குத் தாலி கட்டும் முன் சிந்தியுங்கள்.) வாலைகளின் எண்ணங்களைப் படித்த பின் உங்கள் எண்ணங்களைப் பகிரலாம்.


  1. அன்பான ஆண்
  2. அழகான ஆண்
  3. கிராமத்து ஆண்
  4. நகரத்து ஆண்
  5. பணக்கார ஆண்
  6. புகைத்தல், மதுப் பழக்கமுடைய ஆண்
  7. ஏழையானலும் குடும்பப் பொறுப்புள்ள ஆண்
  8. எந்தப் பெண்ணிடமும் தகாத உறவு வைக்காத ஆண்.
  9. அவன் வருவாயைத் தந்தால் போதும், எப்படியிருந்தாலும் பரவாயில்லை.


சமகாலச் சூழலில் நம்மாளுகள் பேசிக்கொண்ட விருப்பங்களைப் பொறுக்கித் தொகுத்து இரு பாலாரிடையேயும் உலாவும் எண்ணங்களை வெளிப்படுத்த முயன்று உள்ளேன். இத்தனை தெரிவுகளில் எத்தனை தெரிவுகளை காளையோ (ஆண்) வாலையோ (பெண்) விரும்புகின்றனர் என்பதை மணமாகாத இளசுகளைக் கேட்டால் புரிந்துகொள்ள இடமுண்டு. உங்கள் உள்ளத்தில் மாற்று எண்ணங்கள் இருப்பின் வெளிப்படுத்தலாம்.

திங்கள், 27 அக்டோபர், 2014

எந்த இணையத் தளத்திலும் முதன்மைப் பதிவாளராக...?

நண்பர்களே! எந்த இணையத் தளத்திலும் நீங்கள் இருந்தாலும் உங்கள் செயற்பாடுகளே உங்களை முதன்மைப் படுத்துகிறது என்பதை மறக்க முடியாதே! இன்று பலர் வலைப்பூக்களைத் திறக்கிறார்கள், கொஞ்ச நாளில் மூடி விடுகிறார்கள். அதனைப் பேணும் வேளை கீழ்வரும் தேவைகளை மறந்துவிடுகின்றனர். இது பற்றிய உங்கள் கருத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.


  1.  எமது சிறந்த படைப்பைப் பதிந்தால் போதும்.
  2.  மாற்றார் படைப்பைப் படித்த பின் எமது உளக்கருத்தைத் தெரிவித்தல்.
  3.  மாற்றார் சிறந்த படைப்பை எமது விருப்பப் பதிவில் சேர்த்தல் அல்லது எமது வலைப்பூவில் அறிமுகம் செய்தல்.
  4.  நல்ல பதிவருக்கு மேற்படி மூன்றும் தேவையே.

திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?


பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. மூன்று மணி நேரம் தான்
தம்பி, தங்கைகளே...
நல்ல செய்திகளை
உள்ளத்திலே பதியச் செய்ய
திரைப்படமே நன்று!
அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல.

  1.  அட போங்க! நம்ம இளசுகளுக்கு பிழையான வழிகாட்டலைச் செய்கிறது.
  2.  குடும்பத்தவர் ஒன்றிணைந்து பார்க்கக்கூடிய நிறைவு இன்றைய திரைப்படங்களில் இல்லை.
  3.  பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த திரைப்படம்; இன்று வணிக(பண) ஊடகமாக மாறிவிட்டது.
  4.  முதியோருக்குப் பிடிக்காவிட்டாலும், திரைப்படம் இளசுகளை வளைத்துப் போடுகிறதே!
  5.  தமிழ் திரைப்படத்தைச் சிறந்த தமிழ் இலக்கியமாகக் கருதினாலும்; அது ஆங்கிலப் படங்களின் சாயலில் தான் தலையைக் காட்டுகிறது.

புதன், 17 செப்டம்பர், 2014

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா?

வலைப்பதிவர்களுக்கான மதிப்பளிப்பு விருதுகள்
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_17.html

சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருதா? என்னாலே நம்ப முடியவில்லை! தம்பி ரூபன் அவர்கள் காலையில வைபரில் (Viber) கதைக்கும் போது சொன்னதும் அதிர்ச்சி அடைந்தேன். ஆயினும், உலகெங்கும் தமிழைப் பேணப் போட்டிகள் நாடாத்தும் குழுத் தலைவர் சொல்லுக்குப் பணிந்து ஏற்றுக்கொண்டேன். அவருக்கு மிக்க நன்றிகள். கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/09/blog-post_16.html?spref=bl

அவரது பணிப்புக்கமைய அவரது விருதுகளைச் சிலருக்குப் பகிர்ந்து கொள்கிறேன். அவர்கள் தங்களைப் பற்றியும் தங்களது வலைப்பூ முயற்சிகளையும் குறிப்பிட்டு விருதினைத் தங்கள் தளத்தில் பகிருதல் வேண்டும். மேலும், தாம் விரும்பிய வலைப்பூ வழியே தமிழைப் பேணும் ஐந்து பேருக்கு ஆவது இதனைப் பகிரவேண்டும்.

என்னைப் பற்றி...
ஈழத்து யாழ் மண்ணில் மாதகலூரில் காசிராசலிங்கம் பரமேஸ்வரி இணையர்களுக்கு ஜீவலிங்கம் என்ற பெயரில் மூத்த மகனாகப் பிறந்தேன். எனது புனைபெயர் யாழ்பாவாணன். நான் தமிழிலக்கியம், இதழியல், உளவியல், கணினியியல் எனப் பல துறையைக் கற்றேன். எனக்கு மூன்று தம்பியர் (ஒருவர் போரில் சாவடைந்துவிட்டார்) ஒரு தங்கை. 2001 இல் சத்தியபாமா என்ற ஒருவளை மணமுடித்து வாழ்ந்து வருகிறேன். குழந்தைகள் இன்னும் கிடைக்கவில்லை,

தொடக்கத்தில் தனியார் கல்வி நிலையமொன்றில் கணித ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினிப் பாட ஆசிரியராக இருந்தேன். பின்னர் கணினி நிகழ்நிரலாக்குனராக இருந்தேன். இறுதியாக முகாமையாளராகப் பணியாற்றுகிறேன்.

எனது வலைப்பூ முயற்சிகள்.... 
1987 இல் எழுதுகோல் ஏந்தினாலும் 1990 இல் முதலாம் கவிதை பத்திரிகையில் வெளியானது. பின்னர் பல பதிவுகள் வெளியாகின. போர்ச் சூழலால் எல்லாப் பதிகளும் அழிந்தன. ஈற்றில 2010 இலிருந்து முகநூல், டுவிட்டர், தமிழ்நண்பர்கள்.கொம் ஊடாகப் பதிவுகளை மேற்கொள்கிறேன். ஆயினும் ஐந்து வலைப்பூக்களையும் அறிஞர்களின் மின்நூல்களையும் பேணுகிறேன். முழு விரிப்பையும் அறிய கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.
http://ypvn.96.lt/

எனக்களித்த விருது...
தம்பி ரூபன் அவர்கள் இரு விருதுகளை என்னுடன் பகிர்ந்தார். அதில் ஒன்று தான் கீழே தரப்பட்டிருக்கிறது.

எனது விருதைக் கீழ்வரும் பதிவர்களுடன் பகிருகிறேன்...
வலைப்பதிவர்களின் தமிழ்ப்பக்கங்கள் (http://tamilsites.doomby.com/) தளத்தில் இருந்து எழுமாறாகத் தெரிவு செய்யப்பட்ட சிலருடன் பகிருகிறேன்.

http://muthuputhir.blogspot.com/
http://kavithaivaanam.blogspot.in/
http://enganeshan.blogspot.in/
http://psdprasad-tamil.blogspot.in/
http://chellappatamildiary.blogspot.com/
http://writeinthamizh.blogspot.in/
http://marabukkanavukal.blogspot.in/
http://www.kaviaruviramesh.com/
http://www.rishvan.com/
http://www.hishalee.blogspot.in/


வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அந்த நாள் நினைவுக்கு வர

அந்த நாள் நினைவை மீட்டிய
ஒளிஒலிநாடா ஒன்று
என்னை
சில வரிகள் எழுதத் தூண்டுகிறதே!
வன்னிப் பெரும் நிலப்பரப்பில்
இடம்பெற்ற ஈற்றுப் போரில்
சிக்குண்டு விடுதலையான
என் வாழ்வையும்
மீட்டுப் பார்க்கின்றேன்!
ஒளிஒலிநாடாவில்
என்னைத் தேடிப் பாருங்கள்...
குண்டு பட்டு வீழ்ந்திருக்கலாம்...
வானவூர்திகள்
குண்டு மழை பொழிய
மண்கிடங்கில் மறைந்திருக்கலாம்...
சாவா வாழ்வா என்றவாறு
குற்றுயிராகத் துடிக்கலாம்...
உண்ண உணவின்றி
சேலைத் துணியால்  வடித்து
சேற்று நீர் குடிக்கலாம்...
சிலர் காய்ச்சிக் கொடுத்த
கஞ்சிக்கு
நீண்ட வரிசையில் காத்திருக்கலாம்...
இன்னும் எழுதலாம்;
அந்த நாள் நினைவுக்கு வர
அழுகையும் வர
எழுதுகோலும்
எழுத மறுக்கிறதே!
http://www.youtube.com/watch?v=h4sGy6jPdWM&feature=share

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்ன?


2014 ஐப்பசி 07 இல் எனக்கு நாற்பத்தாறாம் பிறந்த நாள். எல்லோருக்கும் இப்படிப் பிறந்த நாள் வருமே! இந்நாளில் ஆளுக்கு ஒவ்வொரு சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது வழமை தான். உங்கள் பிறந்த நாளன்றும் நீங்கள் எதைத் தொடருவதாகவோ எதைக் கைவிடுவதாகவோ எண்ணியுள்ளீர்கள். உங்கள் பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்னவென்பதை வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!

1. எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென (தன்னம்பிக்கையுடன்) முயற்சியில் இறங்குதல்.
2. பகையைத் தோற்றுவிக்காமல் நல்லுறவைப் (குடும்பம், நட்பு) பேணுதல்.
3. செலவைக் குறைத்து வரவைப் பெருக்குதல். சேமிப்புப் பழக்கத்தைக் (குடும்பம் மேம்பட) கடைப்பிடித்தல்.
4. பிறமொழிக் கலப்பின்றித் (தாய் மொழி மேம்பட) தமிழைப் பேசி வழக்கப்படுத்துதல்.
5. புகைத்தல், மது(குடித்தல்), விலை மகளை நாடுதல் போன்ற கெட்ட பழக்கமுள்ளோரைச் (தாய்நாடு மேம்பட) சீர் திருத்துதல்.
6. எமக்கு மேலதிகமாகவுள்ளதை (தனக்குப் பின் தானம்) ஏழைகளுக்கு வழங்கி உதவுதல். எமக்கு வாழ்வளிக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றியாக இதனைப் பின்பற்றலாம்.
7. மூன்று நேரமும் மூக்குமுட்ட விழுங்கிப் போட்டு நீட்டி நிமிர்ந்து படுப்பதும் விடிய எழுந்தால் எனது வருவாயை மட்டும் கவனிப்பது (சுயநலமாக...).
8. எந்தவொரு சிறப்புத் திட்டங்களும் (Master Plans) எனக்கில்லை (முட்டாளாக...).

என் பிறந்த நாளில் இப்படிச் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு
செயலில் இறங்கி நல்ல மனிதராகலாம் என எண்ணினேன்.
தங்கள் பிறந்த நாளிலும் எத்தனையோ சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டுப் புதிய அகவையில் நல்ல மனிதராக எண்ணியிருப்பியள். அவற்றைப் பாருங்கோ நம்ம வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!