சீடர்கள்: குருவே கடவுளை வணங்குவோர் யார்? எங்கே?
குரு: கடவுளைப் பக்தர்கள் தான் வணங்குவர்! இதில் ஐயம் எதற்கு?
சீடர்கள்: கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிறீர்கள்! எங்கு உள்ளவர்கள் அதிகம் கடவுளை வணங்குகின்றனர்!
குரு: தங்கள் உயிர் பிரியக்கூடாது என்றும் தங்கள் நோய்கள் மாறவேண்டும் என்றும் மருத்துவமனையில் தான் அதிகமானோர் கடவுளை வணங்குகின்றனர்!
சீடர்கள்: அப்படி என்றால், அன்னதானம் சாப்பிடவும் அழகுப் பெண்களைத் திறன்பேசியில் படம் பிடிக்கவும் ஊர்வம்பு அலட்டவும் தான் கோவில்களுக்கு வருகின்றனரா?
குரு: வீணர்கள் வீண் வம்பு தும்பு பேசலாம் வேண்டாதவற்றைச் செய்யலாம். ஆனால், உண்மையான பக்தர்களுக்கே கடவுள் அருள் தருவார்!
சீடர்கள்: "நாம் கும்பிட்ட கடவுள், எம்மைக் கைவிட மாட்டார்" என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவருக்கு மட்டும் தான் பொருந்தும் போல...
குரு: ஆமாம்! கடவுளை நம்பினோர் கடவுளால் கைவிடப்படார்!
ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)
குரு: கடவுளைப் பக்தர்கள் தான் வணங்குவர்! இதில் ஐயம் எதற்கு?
சீடர்கள்: கடவுள் எங்கும் இருக்கிறார் என்கிறீர்கள்! எங்கு உள்ளவர்கள் அதிகம் கடவுளை வணங்குகின்றனர்!
குரு: தங்கள் உயிர் பிரியக்கூடாது என்றும் தங்கள் நோய்கள் மாறவேண்டும் என்றும் மருத்துவமனையில் தான் அதிகமானோர் கடவுளை வணங்குகின்றனர்!
சீடர்கள்: அப்படி என்றால், அன்னதானம் சாப்பிடவும் அழகுப் பெண்களைத் திறன்பேசியில் படம் பிடிக்கவும் ஊர்வம்பு அலட்டவும் தான் கோவில்களுக்கு வருகின்றனரா?
குரு: வீணர்கள் வீண் வம்பு தும்பு பேசலாம் வேண்டாதவற்றைச் செய்யலாம். ஆனால், உண்மையான பக்தர்களுக்கே கடவுள் அருள் தருவார்!
சீடர்கள்: "நாம் கும்பிட்ட கடவுள், எம்மைக் கைவிட மாட்டார்" என்பது கடவுள் நம்பிக்கை உள்ளவருக்கு மட்டும் தான் பொருந்தும் போல...
குரு: ஆமாம்! கடவுளை நம்பினோர் கடவுளால் கைவிடப்படார்!
ஆக்கம்: யாழ்ப்பாவாணன் (மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!