சிக்கல்கள் இல்லாத இல்வாழ்வு தேவையெனில்
சிக்கலுக்குத் தீர்வைத்தான் நாடு.
(ஒரு விகற்பக் குறள் வெண்பா)
சிக்கல்கள் (பிரச்சனைகள்) இல்லாத
குடும்பம் இருக்க முடியாது!
தீர்வுகள் இல்லாத சிக்கல்களும்(பிரச்சனைகளும்) இருக்க முடியாது! கணவன் பெரிதா
மனைவி பெரிதா என்று
பட்டிமன்றம் நடத்துவது தான்
குடும்பச் சிக்கல் (பிரச்சினை)!
கணவன் பணிந்தாலும்
மனைவி பணிந்தாலும்
ஒருவர் நிமிரத் தான் வேணும்!
எவர் நிமிர்ந்தாலும்
எவர் பணிந்தாலும்
எவருக்கும் தாழ்வு இல்லையென்று
குடும்ப மகிழ்ச்சியே தேவையென வாழ்வதே
குடும்பச் சிக்கலுக்கு (பிரச்சினைக்கு)
தீர்வென்று
உணர்ந்து கொண்டால் போதுமே!
(கவிதை போல...)
சிக்கல்களை சிக்கல்களாக
பார்த்துப் பயனில்லை
சிக்கல்களுக்குத் தீர்வுகளை
அலசினால் மகிழ்ச்சியே
(தன்முனைக் கவிதை)

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!