பகலவன் மூஞ்சியைக் காட்டினால் தான்
உலகிற்கு வெளிச்சம் பாருங்கோ!
பகலவன் ஒளியை உறிஞ்சித் தான்
நிலாவும் இரவில் சிரிப்பதைப் பாருங்கோ!
ஆசிரியர்மார் அழகாகக் கற்பித்தால் மட்டுமே
மாணவர் உள்ளத்தில் அறிவு பெருகுமே!
உயிர்களைக் காப்பாற்றும் மருத்துவர்கள்
சுற்றுச் சூழலில் இருந்தால் மட்டுமே
நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற முடியுமே!
பணிகளைப் பயன்பாட்டைத் தருவோர்
பக்கத்தில் இருக்காமல் போனால்
பயன் பெறுவோர் எப்படிப் பயனீட்டுவர்?
பாதிக்கப்பட்டவரிடம் தான் பதிலும் இருக்கிறதே!

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!