நாம் சாவடைந்தால்
நாறும் நம் உடலைக் காவ
நாலு உறவுகள் இல்லாத வேளை
படிப்பு, பணம், நிலம்,
பொன், பொருள், சொத்து
எல்லாம் இருந்தென்ன பயன் காணும்?
கத்தியால இரண்டாக வெட்டிய
ஒற்றை வாழைப்பழத்தை
ஒன்றாக்க முடியாதது போலத் தான்
முறிந்த உறவுகளையும் சேர்க்க முடியாதே!
முரண்படாமல், விரிசல் ஏற்படாமல்,
வெறுப்பை விதைக்காமல்
அன்புக்குமுண்டோ அடைக்கும் தாழ் என
உறவுகளைப் பிரியாமல் முறியாமல் பேண
அன்பாலே ஒட்டி உறவாடி அணைக்கலாமே!

கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!