Translate Tamil to any languages.

புதன், 30 ஏப்ரல், 2014

அம்பாளடியாள்: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா

எனது அருமை உறவுகளே!

பாபுனைய விரும்புங்கள் என எத்தனை பதிவுகளை நான் எழுதினாலும் அதைவிடப் பயன்தரும் பதிவை உங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

படியுங்கள், பாபுனைய விரும்புங்கள்!



அம்பாளடியாள்: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா: எழுத்துலகம் இது ஒரு தனீ ...சுகம் அறிவாயா

"கவிதை" என்பது வடமொழியா?

"கவி" என்றால் 'குரங்கு' என்று
சிலர்
வடமொழியைச் சான்றுக்கு இழுக்கிறார்களே!
'கவி' உடன் 'தை' ஐச் சேர்த்தால்
'குரங்கு'+'தை' = 'குரங்கைத்தை' என்பதா
கவிதை என்றும் கேட்கிறார்களே!
கவிதை என்பது
குரங்கைத்தையும் இல்லை
வடமொழியும் இல்லை
தூய தமிழ் தான் என்பதை
அலசிப் பார்க்கத் தவறியதே
என் தவறு என
நான் நினைக்கின்றேன்!
'கவி' என்ற சொல்
வடமொழியில் இல்லையாமே...
'கபி' என்று தானாம் இருக்கே!
'கபி' இற்குப் பொருள்
வடமொழியில்
'குரங்கு' தானாம் - அதுவும்
நம்ம தமிழ் தானாம் - அதனை
('கபி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததும்
வடமொழியாம்!
அடடே!
நானொரு முட்டாளுங்க...
கவிதை பற்றிச் சொல்லாமலே
இத்தனை வரிகளை நீட்டிப்போட்டேனே...!
இன்னும் நீட்டினால்
நீங்கள்
என்னைச் சாகடிச்சிடுவியளே...
அதுதானுங்க
'கவி' என்பதும் 'தை' என்பதும்
என் தாய்த் தமிழென்றே
தொடருகிறேன் பாரும்...!
தமிழில் 'கவி' என்றால்
கவிந்தபடி - கவிழ்ந்தபடி
நடப்பதென்று பொருளாம்...
அப்படி
நடப்பது குரங்காம்...
அதற்காக
'கவி' என்றால் 'குரங்கு' ஆகுமோ?
தமிழில் 'தை' என்றால்
தைத்தல் - பிணைத்தல் என்று தான்
நான் நினைக்கிறேன்!
தமிழில் 'கவிதை' என்றால்
"கருத்தொடு பல அணிகளும்
கவிந்திருப்பது" என்று தான்
தமிழறிஞர்கள் கூறுகிறார்களே!
'கவி' என்றால் 'கவிஞன்' என்று
வடமொழியில் சொல்கிறார்களே...
அதுகூட
('கவி' என்ற சொல்லை)
தமிழிலிருந்து கவர்ந்ததாம்!
'கவிதை' இற்குப் பதிலாக
'பா' என்றழைப்பதில்
தவறேதும் உண்டோ?
தமிழில் 'பா' என்பதும்
கருத்து, உணர்வு, நன்னெறி ஆகியவற்றை
பாவுதல் என்று பொருளாம்!
இதற்கு மேலே இன்னும் நீட்டினால்
எனக்கே
தலை வெடிக்கும் போல இருக்கே...
முடிவாகக் 'கவிதை' என்பது
தமிழென்றே முடிக்கிறேன்!

சான்று: பக்கம்-64, பக்கம்-111; நூல்: யாப்பரங்கம்; ஆசிரியர்: புலவர் வெற்றியழகன்; வெளியீடு: சீதை பதிப்பகம், சென்னை - 600 004.

இப்பதிவின் தொடர் பதிவைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.
புலவர் வெற்றியழகன் பொய் சொன்னாரா?
http://paapunaya.blogspot.com/2014/05/blog-post.html

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

நலமாக அமைய...

கேட்டீர்களா...
"நூலைப் போல சேலை
தாயைப் போல சேய்" என்று!
கேளுங்கோவேன்...
"பாலைப் போல வெள்ளை
செயலைப் போல அறிவு" என்று!
பார்த்தீர்களா...
"தேடல் உள்ள வரைக்குந் தான்
பெருக்கிக் கொள்ளலாம் அறிவு" என்பதை!
பாருங்கோவேன்...
"முயற்சி உள்ள வரைக்குந் தான்
வெற்றி எம்மை நாடி வரும்" என்பதை!
அறிந்தீர்களா...
"கேட்பதும் பார்ப்பதும் பொய்
தீர விசாரித்து அறிவதே மெய்" ஆகுமென!
அறியுங்கோவேன்...
"கற்றலும் அறிதலும் முயற்சி
கற்பிப்பதும் அறிவிப்பதும் பயிற்சி" ஆகுமென!
உணர்ந்தீர்களா...
"அப்பனும் அம்மையும் கூடி
உறவுக்கும் ஊருக்கும்
மக்களுக்கும் நாட்டுக்கும்
நற்பணி செய்வதற்கே
எம்மைப் பெற்றது" என்றறிக!
உணருங்கோவேன்...
"ஆணும் பெண்ணும் கூடி
நன்மக்களைப் பெற்றால் போதாது
நல்லறிவைப் புகட்டி
நல்லொழுக்கம் பேணி
ஆளுமை நிறைந்தவர்களாக ஆக்கினாலே
நாளைய தலைமுறை மட்டுமல்ல
தாயக மண்ணும் நலமாக அமைய" என்றறிக!

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

கணினி பழுதடைந்த பின்னே...

அடே! மச்சான்! அடி! தோழி!
எனக்கொரு மடிக்கணினி (Laptop) - 2011 இல்
மச்சாளும் மச்சானுமாய்க் கொடுத்து உதவினாங்க...
அப்பவெல்லாம் - நான்
மடிக்கணினி (Laptop) பழுதடைந்துவிட்டால்
பாதிப்பு என்னவாகுமென்று
எப்பனும் எண்ணிப்பார்க்கவில்லையே!
2014 சித்திரையாள் வந்தாள் - என்
மடிக்கணினியும் (Laptop) பழுதாச்சு...
பட்டினி வயிற்றோடு
பலதும் பத்தும் எண்ணிப்பார்த்து
என்னாலே இயலாமல் போயிற்றே!
தொழில்நுட்பவியலாளரிடம் நீட்டினால்
ஆளை விக்கிற விலையில
திருத்தச் செலவென்றார்...
எனது எல்லாத் தகவலையும்
மீளநிரப்ப (Backup எடுக்க) முடியல...
எனது வலைச்சேமிப்பில (Online Drive இல)
வைப்பிலிட்ட தகவல் தான்
ஈற்றில் எனக்கு உதவிச்சே!
என்ன தான் இருந்தாலும்
பணத்தை ஈந்து கணினியை மீட்டு
விட்ட, தொட்ட இடத்தில இருந்து
எல்லா வலைப்பூக்களையும்
மீள நடாத்த வந்தாச்சு உறவுகளே!
எப்படியோ
கணினி இயங்கிய வேளை
கிட்டாத அறிவு எல்லாம்
கணினி இயங்க மறுத்த வேளை
கற்றுக்கொள்ள வேண்டியதாச்சே!

புதன், 16 ஏப்ரல், 2014

கணினி முரண்டு பிடித்ததால்...

இனிய சித்திரைப் புத்தாண்டு வருமுன்
என் கணினிக்கு நோய் (பழுது) வந்தாச்சு
விரும்பிகளுக்கு, நட்புகளுக்கு, உறவுகளுக்கு
புத்தாண்டு வாழ்த்துக் கூட
வெளிப்படுத்த முடியாமல் போக
கணினி முரண்டு பிடித்தமையே
என் சாட்டு என்பேன்!
என் கணினி நலமாக
நானும்
உஙகளுடன் வலம் வருவேனென
இனிய சித்திரைப் புத்தாண்டில்
எல்லோரும் எல்லாமும் பெற்று
வெற்றியடைய வாழ்த்துகள்!

புதன், 9 ஏப்ரல், 2014

மூங்கில்காற்று : நிறம் வெளுத்துப் போகும் நிஜம்

பத்துக் குறள் வடிவப் பாக்கள்

அத்தனையும்

எங்கள் உறவுகள்

கற்றுக்கொள்ள வேண்டிய

பதிவு நுட்பங்கள் / இதழியல் விழிப்புணர்வு என்று

என் உள்ளம் உணர்த்திடவே

அறிஞர் டி.என்.முரளிதரன் அவர்களின் பதிவை

உங்களுடன் பகிர முன்வந்தேன்!

கவிதை இருக்கே - அதிலும்

இனிய கவிதை இருக்கே - அதை

அடிக்கடி நம்மாளுகள் படிப்பதை மறவேன்...

ஈரடிப் பாவால் வெளிப்படுத்திய அழகில

இதழியல் விழிப்புணர்வை

ஏடெடுத்துப் படித்தோரும் பின்பற்ற வேண்டுமென

நானுரைப்பேன் பதிவர்களே!

இனி

கீழுள்ள இணைப்பைச் சொடுக்கிப் படியுங்களேன்!


டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நிறம் வெளுத்துப் போகும் நிஜம்

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பள்ளிக்குச் செல்லும் சுமைதாங்கிகள்

பள்ளிக்கூடம் போகிற பிள்ளைகள் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்களோ எனக்குத் தெரியாது. தெருப் பேச்சாளர்கள் பிள்ளைகளைப் பார்த்து என்னமோ சொல்கிறாங்களே! கொஞ்சந்தான் கேட்டுப் பார்ப்போமே!
முகத்தார் : அங்கே பாரு, ஒரு பிள்ளை ஒல்லிப் பொதியும் ஒரு பிள்ளை பூசணிக்காய் போல பெரிய பொதியும் பள்ளிக்குச் சுமந்து போறாங்களே...

சிவத்தார் : பட்டினத்துப் பள்ளிக்குப் போறவை ஒல்லிப் பொதியும் நம்மூர்ப் பள்ளிக்குப் போறவை பெரும் பொதியும் சுமப்பினமே!

முகத்தார் : ஆட்களோ எலும்புந் தோலுமாக, பொதிகளோ ஆட்களை விடப் பெரிசே...

சிவத்தார் : எட்டுப் பாட வேளையும் பட்டென்று எடுத்துப் படிக்க வேண்டிய நூல்கள் தான்...

முகத்தார் : சின்னப் பொதிப் பட்டினத்துப் பிள்ளைகள், நம்மூர்ப் பிள்ளைகளைப் போல படிக்கிறெல்லையே?

சிவத்தார் : ஒல்லிப் பொதிக்குள்ள மடிக் கணினியடா (notebook)... எழுதிக்
கிறுக்காமல் படிக்கத்தான்...

முகத்தார் : குழந்தை குட்டிகளைப் பெத்துப்போட்டு, பள்ளிக்குப் பொதி சுமக்க விடுகிறதோ கணினியைக் கொடுத்து கையெழுத்துப் போடத் தெரியாமல் பண்ணுறதோ நல்லாயில்லைப் பாருங்கோ...

சிவத்தார் : படிப்பிக்கிற ஆட்கள் பள்ளியில படிப்பிக்காமல், பிள்ளைகள் சுமந்து சென்றதை விரித்து வாசிக்க வைச்சுப்போட்டு வீட்டை கலைக்கிறாங்களே...

முகத்தார் : ஆண்டவா! அளவுக்கு மிஞ்சி நீண்டவா! இஞ்ச கொஞ்சம் வாப்பா! சின்னஞ் சிறிசுகள் படுகிற பாட்டை பாரப்பா...

சிவத்தார் : ஆண்டவன் வரமுதல்ல... நான் போட்டு வாறேனே...

அரசே! மின்வெட்டு வேண்டாமப்பா!

பள்ளியில் பணிகளும் தொடரவே தொடங்க
பிள்ளையே படிக்கவே தொடங்கிற நேரமாக
நிறுவனப் பணிகளும் தொடங்கிற வேளையிலே
தொட்டேனே கணினியை நிகழ்நிரல் எழுதவே
தொட்டவர் கருவியைத் தலைமுடி குறைத்திட
மரவரி தொழிலாளி அரியவே தொடங்க
மருத்துவர் எடுத்தார் கத்தியை அறையிலே
அவளைய் வெட்டியே குழந்தையே வெளியேற
உழவனே வயலில் நீர்விடத் தொடங்க
தண்ணீர் பாய்ச்சிற கருவியை அழுத்திட
எட்டைத் தாண்டிய காலைவேளை எவரும்
எடுத்தது தொடுத்தது முழுக்கவே நிறுத்திட
நமக்கு மின்தடை எரிச்சலைத் தருமே!
பாருங்களேன் அரசுமே பாராமலே இருந்திட
நம்மாளு படுகிற நெருக்கடி தீருமோ?
மின்தடை வரும்வேளை பெருகிற எரிச்சலே
நமக்கு உள்ளேயே மோதலைத் தூண்டுதே...
ஐயையோ! ஆட்சியை நடத்துவோர் அறியணும்
மக்களே கிளர்ந்தெழ அரசாள முடியுமோ
மின்தடை தொடருற அரசே!

நாட்டுக்குத் தலையிடி தான்!

ஏதுமற்ற ஏழைகள்
கண் கண்ட பொது இடத்தில்
கண் மூடித் தூங்குவதோடு
மூடு மறைப்புக்குள்
குடும்பமும் நடாத்துவர்!
ஆட்சியாளர்
கண்களுக்குத் தெரியாதா...
தெரிந்தாலும் பாராமுகமா...
இந்த ஏழைகள்
சிசுக்கொலை செய்யாமல்
நாட்டில் பெருக...
நாளைய விடியலில்
நாட்டுக்குத் தலையிடி தான்!

தெருவிலே பிள்ளைகள்... பள்ளியோ எட்டுக்கு...

சின்னாளு சுமக்கிற பொதியைப் பார்த்தால்
பள்ளியில் படிக்கிற மாதிரித் தெரியேல
ஆட்களோ மெலிவு தோள்களில் கிடப்பதோ
ஆட்களை விடப்பெரும் பொதிகளாய் கிடக்குதே
ஊர்தியில் பொதிக்கு வேண்டுமே இருக்கை
பார்த்துப் பார்த்து ஓட்டுநர் நிறுத்தாமல்
செல்கிற பொழுதில சிறுவர் செல்லாமல்
பள்ளி எட்டாகத் தொடங்குதே!

சனி, 5 ஏப்ரல், 2014

எப்பவெல்லாம் தோன்றும்...

உடனுக்குடன்
எல்லாம் தெரிந்து விட
நம்மாளுகள் எவரும்
கடவுள் அல்ல!
வயிறு கடிக்கும் போதே
பசியைத் தெரிந்து கொள்கிறான்
பசியைப் போக்க நினைக்கையிலே
வருவாயீட்டத் தெரிந்து கொள்கிறான்
நாலுகாசு கையில் இருக்கையிலே
செலவு செய்யத் தெரிந்து கொள்கிறான்
கட்டுப்பாடு இல்லாத வேளை
(சுதந்திரமாக உள்ள போது தான்)
தவறு செய்யத் தெரிந்து கொள்கிறான்
தவறு செய்யும் போது தான்
நன்மை, தீமை எதுவென
நம்மாளுகள் மறந்து விடுகின்றனரே!
தேவை வந்த போது தான்
தோழமையைத் தேடுகின்றார்
விருப்பம் வந்த போது தான்
உறவைப் பேணுகின்றார்
துன்பம் வந்த போது தான்
சூழலைப் படிக்கின்றார்
இன்பம் வந்த போது தான்
சூழலையே மறக்கின்றார்
சூழலை விட்டு ஒதுங்கினால் தான்
நம்மாளுகள் தம்மையே உணருகின்றனரே!
சூழலே தம்மை ஒதுங்கினால் தான்
நம்மாளுகள் தெளிவையே பெறுகின்றனரே!
தெளிவைப் பெற்ற பின்னர் தானே
எப்பவெல்லாம் தோன்றும்
எல்லாவற்றையும்
எண்ணிப்பார்க்கத் தவறிவிட்டால்
எதிர்காலமே இருளாகிவிடுமென்றே
நம்மாளுகளும் எண்ணிப்பார்க்கின்றனரே!

அதனால், நட்புக்கு அழுக்கு

பெண்ணே!
நான் கெட்டவன் என்றா
என்னை விட்டு ஒதுக்கினாய்
அதனால்
நான் துயரப்படவில்லை!
பெண்ணே!
நீ என்னை நெருங்க
நானும் ஒதுங்குகிறேன்
அதனால்
துயரப்பட்டுவிடாதே!
காலம் மாறிப் போனாலும்
எங்கள் மக்களையும் (சமூகம்)
இன்னும் மாறவில்லையே
அதனால்
இருவருக்கும் கெட்ட பெயரை
வழங்க முடியாமல் திணறுமே!
என் மனைவிக்கு
உன் மீது விருப்பம் தான்
அதனால் - நீயே
என் வீட்டுப் பக்கம் வரலாம்
என் மனைவி முன்னே
நாமும் கருத்துப் பரிமாறலாம்!
உன் கணவனுக்கு
என் மீது விருப்பம் என்றால்
அதனால் - நானும்
உன் வீட்டுப் பக்கம் வரலாம்
உன் கணவன் முன்னே
நாமும் கருத்துப் பரிமாறலாம்!
நல்ல நட்புக்கு மட்டுமல்ல
உள்ளத்து அன்பைப் பகிரவும்
தடுப்பு வேலிகள் இருக்க
வாய்ப்பில்லையே...
அப்படியேதும் இருந்து விட்டால்
அங்கே
நட்புக்கு அழுக்கு இருக்கிறதே!

Kaviyakavi: நன்றி சொல்ல வார்த்தை இல்லை

அறிஞர் இனியா அவர்களின் தளத்தைப் (http://kaviyakavi.blogspot.com/) பார்த்த போது,  "நன்றி சொல்ல வார்த்தை இல்லை" என்ற பதிவை நானும் எனது வாசகருடன் பகிர எண்ணினேன். "தமிழ் வளர்க்க எண்ணும் ரூபனும், பாண்டியனும் இணைந்து நடாத்திய போட்டியில், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே இப் போட்டியில் நான் பங்குபற்றி இருந்தேன்." என்று அறிஞர் இனியா அவர்கள் தெரிவித்திருப்பதை நானும் வரவேற்கிறேன். நானும் அதே நோக்கிலேயே பங்கு பற்றினேன்.

உறவுகளே! வெற்றி பெறவேண்டுமெனப் போட்டிகளில் கலந்து கொள்வதை விட, போட்டிகளில் கலந்து கொள்வதற்காக முயற்சி எடுப்பதோ பங்கெடுப்பதோ வெற்றி தான். எனவே, தீபாவளி, தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டென அறிஞர்கள் நடாத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டுமென இப்பதிவைப் பகிருகிறேன். போட்டி நடத்துவதில் எத்தனை சிக்கல் இருக்கும் என்பதை யாவரும் அறிவர். ஆயினும், அப்போட்டிகளின் வெற்றி என்பது பங்கெடுப்போரின் எண்ணிக்கையிலே தங்கியிருக்கிறது.

உறவுகளே! அறிஞர்கள் நடாத்தும் போட்டிகள் ஊடாகச் சிறந்த படைப்பாளிகளை இனம் காண முடிந்தாலும் சிறந்த தமிழ்ப் படைப்புகளை அடையாளம் காணமுடியுமே! எனவே, எமது தமிழை அழியாது பேண எல்லோரும் போட்டிகளில் பங்கெடுக்க முன்நிற்க வேண்டும். மேலும், படைப்பாளிகள் எல்லோரும் இப்படி இணையும் போது உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண முடியுமே!

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.                 (110)
விளக்கம்:
எந்ந நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்: ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது." என்றவாறு http://thirukural4u.blogspot.com/2009/05/11.html என்ற தளத்தில் நன்றி பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் பொறுக்கி கீழுள்ள அறிஞர் இனியா அவர்களின் "நன்றி சொல்ல வார்த்தை இல்லை" என்ற பதிவைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

Kaviyakavi: நன்றி சொல்ல வார்த்தை இல்லை

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

முட்டாள் நாளைப் பற்றிப் பா(கவிதை) புனைவீரா?

பா(கவிதை) என்றால் எல்லோருமே புனைவோமே! என்றாலும் பா(கவிதை) என்பது பெருங்கதையைச் சுருங்கச் சொல்வதாக இருக்கணுமே! அதாவது, குறைந்த எழுத்துகள், குறைந்த சொல்கள், குறைந்த வரிகள் கொண்ட ஒரு படைப்பு ஆகும்.

எடுத்துக்காட்டு:
தாய்மை தான்
உண்மைக்குச் சான்று!

இல்லான், இல்லாள் இணைந்து நாடாத்திய குடும்ப வாழ்விற்கான சான்றாகத் தாய்மையைப் போற்றுகிறோம். அதாவது, தாய்மை இவ்வுண்மையை வெளிப்படுத்துவதால் உண்மைக்குச் சான்று தாய்மை எனலாம். இந்தப் பெருங்கதையைச் சுருங்கச் சொல்வதாக மேற்காணும் ஈரடிப் பாவைக் (கவிதையைக்) கூறலாம்.

"முட்டாள் நாளைப் பற்றிப் பா(கவிதை) புனைவீரா?" என்ற கேள்வியைப்  பா(கவிதை) புனைய முனைவோர் விருப்புடன் ஏற்று இறங்குங்கள். பா(கவிதை) புனைய இறங்கு முன் முட்டாள் நாளைப் பற்றிப் படித்தோ அல்லது பார்த்தோ அல்லது பிறரிடம் கேட்டறிந்தோ இருக்க வேண்டும். சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளையே முட்டாள் நாள் என்று கூறுவதை நாம் அறிவோம். அப்படியாயின்,

"சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளே
முட்டாள் நாள்!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான முதலாம் அடியைத் தொடங்குங்கள். அடுத்த அடியைத் தொடங்க முன் முட்டாள் நாளைப் பற்றி  http://ta.wikipedia.org/s/1a1o என்ற தளத்தில் படியுங்கள். அதிலே முட்டாள் நாளை முதலில் பிரெஞ்சு நாட்டவர் கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின்,

"முட்டாள் நாள்
பிரெஞ்சு நாட்டிலே பிறந்தது!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான இரண்டாம் அடியைத் தொடங்குங்கள். மேலும், http://ta.wikipedia.org/s/1a1o என்ற தளத்தில் 1466 ஆம் ஆண்டு தான் 'விகடகவி' என்ற ஒருவரால் மன்னன் பிலிப்பை அரச சபையில் வைத்து முட்டாளாக்கியதாகவும் அந்நாளையே முட்டாள் நாளாகக் கொண்டாடப்படுவதாகக் கூறப்படுகிறது. அப்படியாயின்,

"1466 இலே
மன்னன் பிலிப்பை
அரச சபையிலே
'விகடகவி' என்றவர்
முட்டாளாக்கிய நாளே
முட்டாள் நாளாம்!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான மூன்றாம் அடியைத் தொடங்குங்கள். அதேவேளை, எவரும் முட்டாளாகப் பிறந்திருக்க மாட்டார்களென நாமறிவோம். அப்படியாயின்,

"பிறக்கும் போது
எவரும்
முட்டாளாகப் பிறப்பதில்லையே!" என்று

உங்கள் பா(கவிதை) இற்கான நான்காம் அடியைத் தொடங்குங்கள். ஆயினும், ஒரு பாவலன் (கவிஞன்) நடப்பைக் கூறி நாளையை விளக்கி வழிகாட்டத் தவறக்கூடாது. அப்படியாயின்,

"எமக்கு
இங்கு முட்டாள் நாளா?
நாம் படிப்போம்...
அறிவாளி நாளாக
முட்டாள் நாளையே மாற்றுவோம்! என்று

உங்கள் பா(கவிதை) இற்கான ஈற்று அடியை முடித்து வைக்கலாம். இவ்வாறு நாம் கட்டம் கட்டமாக எண்ணி அடிகளை ஆக்கிய பின், எல்லா அடிகளையும் தொகுத்து ஒரு பா(கவிதை) ஆக்கலாமே! அவ்வாறே நான் ஆக்கிய பாவைக் (கவிதையைக்) கீழே பார்க்கவும்.

இத்தரைக்குச் சித்திரை (ஏப்பிரல்) வர
முதல் நாள் முட்டாள் நாள் என
முதல்ல பிரெஞ்சுக்காரர்
வெளிப்படுத்தினாலும்
1466 ஆம் ஆண்டு
அரச சபையில் வைத்து
பந்தயம் ஒன்றிலே
மன்னன் பிலிப்பை முட்டாளாக்கிய
'விகடகவி' என்ற பாவலரின் வெற்றி நாளா
முட்டாள் நாள்!
(தகவல்: http://ta.wikipedia.org/s/1a1o)
எண்ணிப் பாரும்
மண்ணில் பிறக்கையிலே
எவரும்
முட்டாள்கள் இல்லையென்றால்
முட்டாள் நாள் நமக்கெதற்கு?
சித்திரை (ஏப்பிரல்) முதல் நாளை
இத்தரையில் நாம்
அறிவாளி நாளாக மாற்றி
எல்லோரையும்
அறிஞர்களாக ஆக்குவோமே!

மேலே நீங்கள் படித்தது நான் தான் சின்னப் பொடியன் யாழ்பாவாணன் எழுதிய பா(கவிதை) தான். அதென்ன இடையில "(தகவல்: http://ta.wikipedia.org/s/1a1o)" என்று எழுதியிருப்பதாக நீங்கள் கேட்கலாம். குறித்த தளத்தில் தானே குறித்த தகவைலப் பொறுக்கியதாக மேலே குறிப்பிட்டேன். அவ்வாறு எழுதாவிடின் படித்தவர்கள் என்னை "அறிவுப் பொறுக்கி" என்பதற்குப் பதிலாக "இலக்கியத் திருடன்" என்பார்களே!

பா(கவிதை) புனைய விரும்பும் எல்லோரும் பா(கவிதை) புனையலாம். மேலே நான் பா(கவிதை) புனைய எப்படி எண்ணமிட்டேன்; எப்படித் தகவல் பொறுக்கிப் பொறுக்கிய இடத்தையும் சுட்டினேன் என்பதையும் மறக்கவேண்டாம். அதாவது சொந்த எண்ணங்களையே வெளிப்படுத்த வேண்டும்; பிறரது எண்ணங்களைப் பொறுக்கிப் பாவித்திருப்பின் அவரது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும். அப்படி எழுதுவோரையே இலக்கிய நேர்மையுடன் எழுதுவோர் என்று கூறலாம். சரி, இனி நீங்கள் நல்ல நல்ல பா(கவிதை)களை எழுதுங்களேன்.