Translate Tamil to any languages.

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

எழுதுறாங்கோ... எழுதுறாங்கோ...

தமிழில் எழுதுறாங்கோ...
உலக மொழிகள் கலந்த
உப்பு, புளி, காரம் இல்லாத
கூட்டுக்கறி (சாம்பாரு) போல...
உயிர், மெய், உயிர்மெய் அற்ற
வெறும் எழுத்தாக எழுதுறாங்கோ...
நம்மாளுகளும் படிக்கிறாங்கோ...
படிச்ச பின் மறக்கிறாங்கோ...
உண்மைத் தமிழில் எழுதினால்
உண்ணாணத் தான்
எவர் தான் மறப்பாங்கோ...
எழுதுறாங்கோ...
எழுதுறாங்கோ - எவரும்
உண்மைத் தமிழ் அற்ற
உலக மொழிகளின் கலப்பாக
படித்தாலும் மறக்க இலகுவாக
எழுதுறாங்கோ... எழுதுறாங்கோ...
உயிரும் மெய்யும் கலந்து எழுதாவிடின்
சொல்கள் உருவாக மாட்டாதே...
உணர்வுகள் கலந்து எழுதாவிடின்
படைப்புகள் உருவாக மாட்டாதே...
சின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கு
தமிழில் தீராக் காதல் - அது தான்
பிறமொழி கலந்து எழுதினால்
தமிழ் படைப்பல்ல என்கிறான்!

தீபாவளிக் கவிதைப் போட்டியின் முடிவுகள் வரும்போது...

தீபாவளிக் கவிதைப் போட்டி அறிவிப்பை
01/08/2014 இல் பதிவர் ரூபன் பதிவுசெய்தார்.
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html
உலகெங்கும் 12000 இற்கு மேல்
பதிவர்கள் இருக்கின்ற செய்தி அறிந்தேன்
அவர்கள் அத்தனை பேரும் போட்டியில்
பங்கெடுப்பார்கள் என நம்பியே
எனது எண்ணங்களை இப்படிப் பகிர்ந்தேன்...
01/08/2014 இல்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
03/08/2014 இல்
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!
http://wp.me/pTOfc-b1
08/08/2014 இல்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
23/08/2014 இல்
பாரும் பாப்புனைதலுக்கான போர்க்களம்
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post_23.html
போட்டியின் முடிவு நாள் - அது
இந்திய நேரப்படி 01/09/2014 இரவு 12 மணி
இறுதி நேரம் வரை காத்திருக்காமல்
பதிவுகளை முன்கூட்டியே அனுப்பியோர்
போட்டியின் முடிவுகள் எப்படி இருக்குமென
எண்ணிப் பார்க்கையிலே
எத்தனை ஆயிரம் பேர்
போட்டியில் பங்கெடுத்தார்களென
நடுவர்கள் தெரிவிக்க இருப்பதை
நானும் அறியக் காத்திருக்கிறேன்!
தீபாவளிக் கவிதைப் போட்டியின்
முடிவுகள் வரும் போது - நானும்
நகைச்சுவைப் பதிவர்களை வெளிக்கொணர
ஐந்தடிக் குறும்பா (லிமரிக்) உடன்
நான்கடி உரையாடல் (ஸ்கிரிப்) நகைச்சுவை
இல்லாவிட்டால் பாரும்
சிறுகதைப் பதிவர்களை வெளிக்கொணர
75-100 சொல்களைக் கொண்ட கடுகுக்கதை
தைப்பொங்கல் நாள் போட்டி நடத்த
எல்லோரையும் தயார்ப்படுத்த எண்ணியிருக்கேன்!
ஆனால், அதற்கு முன்
நண்பர்கள் எல்லோருக்கும் சொல்லி
முடிவு நாளுக்கு முன்னதாகவே
பல்லாயிரம் பதிவர்களை அழைத்து
தீபாவளிக் கவிதைப் போட்டியில்
பங்கெடுக்கச் சொல்லிவிடுங்கோ!
போட்டிகள் யாவும்
வலைப்பூக்களில் தமிழைப் பேணவும்
உலகெங்கும்
தமிழை வாழ வைக்கவுமே!

புதன், 27 ஆகஸ்ட், 2014

தமிழகப் பழைய இதழ்கள், பத்திரிகைகள்

படைப்பாளிகள் பலரும்
படித்தே ஆக வேண்டிய பதிவு
எழுதுகோல் ஏந்தியோர் எழுத்தாளராக
எழுதியோர் பதிவுகளைப் படித்தே
ஆக வேண்டுமே - ஏனெனில்
பாரதியின் சுதேசமித்திரன் பயணம்
பலருக்குத் தெரியாதே!
பழைய இதழ்கள், தினசரிகளின் கண்காட்சி பற்றி
அறியத் தந்த அறிஞரின் பதிவைப் பாருங்க...
ஊடகங்களின் கதை கூறி
பதிவர்கள் தெரிந்திருக்க வேண்டிய
தகவலும் தொகுத்தே தந்துள்ளார்!
பத்திரிகைகள், தினசரிகள் பற்றிய குறிப்புகள்
பதிவர்களுக்கு மட்டுமல்ல
ஊடகத்துறை சார்ந்த எல்லோரும்
அறிந்திருக்க வேண்டிய ஒன்றே!
கீழுள்ள இணைப்பைச் சொடுக்கி
மேலும் அறிவைப் பெருக்குங்கள்!

OLD IS GOLD - சென்னைப் பட்டினத்தில் 
பத்திரிகைக் கலாசாரக் கண்காட்சி


செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

சிறப்பு நடைபேசி (Smart Phone) தரும் நன்மைகளை அறிவீர்களா?



நடப்புக் காலத்தில் காதலர்கள் பரிமாறும் பரிசுப்பொருள்கள் என்ன தெரியுமா? சிறப்பு நடைபேசி (Smart Phone) தான்! அதுபோல கீதா 'சம்சுங்' சிறப்பு நடைபேசி (Smart Phone) ஒன்றை கயனின் பிறந்த நாளில் பரிசளிக்கிறார்.

கீதா: சிறப்பு நடைபேசி (Smart Phone) எமக்கு நன்றாக உதவுதே!

கயன்: எப்படி? எப்படி?

கீதா: நாங்க நடந்து கொண்டே வலைப்பூக்கள், வலைப்பக்கங்கள் பார்த்துக் கொண்டே செல்லலாம்!

கயன்: அது சரி! ஆனால், சிலர் சாகிறாங்களே! (மேலே படத்தைப் பாருங்கள்)

கீதா: எப்படி? எப்படி?

கயன்: நடைவழியே / வழி நெடுக சிறப்பு நடைபேசி (Smart Phone) பார்த்துக் கொண்டே செல்வதால் சிலர் விபத்துக்குள்ளாகிச் சாகிறாங்களே!

கயன்: அது சரி! ஆனால், அது சிறப்பு நடைபேசிப் (Smart Phone) பயனாளர்களின் தவறே!

ஈற்றில் சரி! சரி! என இருவரும் பிறந்த நாள் சாப்பாடுண்ண உணவகம் ஒன்றிற்குச் சென்றனர்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மக்களாயமே எனது பல்கலைக்கழகம்


"சமூகம்" என்பது வடசொல் - அதன்
தமிழ் வடிவம்
"மக்களாயம்" என்றே பொருள்படும்!
நான் என்றால்
மக்களாயத்தில் ஓர் உறுப்பினரே!
அதனால் தான் - என்னை
"மக்களாயத்தில் தங்கியிருக்கிறேன்" என்று
உங்களால் கூற முடிகிறதே!
நாம்
முழு நிறைவோடு(சுதந்திரமாக) வாழ
மக்களாயம் உடன்படாது என்பது
முற்றிலும் பொய்யே!
நம்மாளுகளின் ஒழுக்கத்தைப் பேண
வேலியாக நின்று
காவல் செய்வது மக்களாயமே!
என்னை
எடுத்துக் கொண்டால் பாரும்...
வெற்றிலை, பாக்குப் போட்டாலென்ன
புகையிலை, சுருட்டு பற்றினாலென்ன
அழகி ஒருத்தி பின்னே சுற்றினாலென்ன
அற்ககோல்(மது) குடித்தாலென்ன
விடுதியில் கன்னியோடு களிப்புற்றாலென்ன
சிவப்பியிருக்க கறுப்பியோடு காதலித்தாலென்ன
கடைத் தெருவில் களவெடுத்தாலென்ன
பணித்தளத்தில் கையூட்டுப் பெற்றாலென்ன
எண்ணிப் பார்த்தால் - நான்
பண்ணிய கெட்டது எல்லாவற்றையுமே
நாடறியச் செய்வதும் மக்களாயமே!
பால் கடைக்கு முன்னே
பனம் கள்ளுக் குடித்ததைக் கூட
பள்ளிக்கூட ஆசிரியருக்குப் போட்டுடைத்து
பிரப்பந் தடியால அடிவேண்டித் தந்ததும்
மக்களாயமே என்றால்
மக்களாயத்தின் கண்காணிப்பு
எவ்வளவு வலுவானது என்பதை
நீங்கள் அறிவீர்கள் தானே!
நம்மூர்
மக்களாயத்திடம் சிக்காமல் தப்ப
வெளியூர் போய்
கெட்டது செய்து சிக்கியோரும்
இருக்கிறார்கள் என்றால்
ஊருக்கூர் மக்களாயம்
பலவூரை இணைத்த வலையாக இருப்பதை
எவரும் ஏற்கத்தானே வேண்டும்!
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் நம்மாளுகள் பேசிக்கொள்வதை
"நாட்டு நடப்புப் பறையினம்" என்று
நாம் இருப்போம்
ஆனால்,
அங்கே அவர்கள் பறையிறதை
காது கொடுத்துக் கேட்டால் தெரியும்
"அவள் அவனோடு ஓடிப் போயிட்டாள்"
"அவளை அவன் தூக்கிட்டுப் போயிட்டான்"
"வயிற்றுப் பிள்ளையைக் கரைத்தவளாச்சே"
என்றெல்லாம்
ஆளாலைப் பற்றி அலசுவரே!
இப்படித்தான் பாருங்கோ
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் நம்மாளுகளால் தான்
செய்தி வேகமாகப் பரவுகிறது என்றால்
மக்களாய வலையமைப்பின் பலம்
என்னவென்று நான் பாடுவேன்!
கெட்டதைச் சுட்டும் மக்களாயம்
குறித்த கெட்டது நிகழாமல்
வழிகாட்டலையும் மதியுரையையும்
வழங்கத் தவறுவதில்லை என்பதை
சந்திக்குச் சந்தி
சந்திக்கும் குழுவில் நானுமிருந்தே
நாலும் கற்றறிந்தேன்!
பட்டப் படிப்பு படிக்காத
நான் கூட
கொஞ்சம் கொஞ்சம் படித்ததை
அறிமுகம் செய்த மக்களாயம்
என்னில் பிழை பிடித்தாலும்
சரிப்படுத்தப் புகட்டிய அறிவே
என்னை அறிஞனாக்கியது என்றால்
மக்களாயமே
எனது பல்கலைக்கழகம் என்பேன்!

சனி, 23 ஆகஸ்ட், 2014

பாரும் பாப்புனைதலுக்கான போர்க்களம்

தீபாவளி(2014) நாளன்று
வலைப்பதிவர் ரூபன் குழுவினர்
உலகளாவிய பதிவர்களிடையே
முதலாவதாக - தாங்கள்
சுட்டும் ஒளிப்படத்தை வைத்தும்
இரண்டாவதாக - உங்கள்
உள்ளத்திலெழும் எண்ணங்களை வைத்தும்
பாப்புனையப் போர்க்களம் அமைத்துள்ளனரே!
(விரிப்பறிய : http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html)
பாப்புனைதலுக்கான போரக்களத்தில்
குதிக்கப் பின்வாங்கும் பதிவர்களே...
பந்திக்கு பின்வாங்காத நீங்கள்
பாப்புனைய முன்னேற வேண்டாமா?
எண்ணிய எல்லாம் எழுதலாம்...
பண்ணிய கூத்துக்களையும் எழுதலாம்...
பாப்புனைதலுக்கான போர்க்களத்தில்
குதிக்கலாம் வாருங்கள் பதிவர்களே!
ஒழுங்கான பா/கவிதை என்றமைந்தால்
பாட்டு (யாப்பு) இலக்கணம் ஒத்துழைக்குமே...
ஒழுங்கான பா/கவிதை அமைந்திட
எண்ணிய எண்ணங்களை எல்லாம்
விரும்பிய வண்ணங்களாய் எழுதியே
மழுங்கிய வாசகர் உள்ளங்களில்
கூர்மையான எண்ணங்கள் தோன்ற
நறுக்காக நொறுக்கிய சொற்களால்
மிடுக்கான கருத்துக்கூறி எழுதினால்
எழுதியதை வாசித்தால்
வாசிப்பவர் உள்ளம் இனிப்படைத்தாலும்
சட்டென்று சொல்ல வந்த செய்தி
உள்ளத்தைத் தைத்தால் தானே
நீங்களும் பாவலர்/கவிஞர் என்பேன்!
உள்ளத்திலெழும் எண்ணங்களை வைத்து
பாப்புனையத் தானே தெரிந்தாலும் கூட
சுட்டும் ஒளிப்படத்தை வைத்தும் கூட
பாப்புனைய வேண்டுமாமே என்றால்
பாப்புனைதலுக்குப் பின்வாங்க எண்ணலாமோ?
ஒளிப்படத்தைப் பார்த்ததும் தோன்றிய
எண்ணங்களை எழுதிக் குவித்தாலும் கூட
ஒளிப்படம் சுட்டிய செய்தியைத் தானே
பாவாக/கவிதையாக புனைந்தால் தானே வெற்றி!
"கண்டேன் தெருப்பெண்ணின் ஆடையை
ஆடையை வைத்தே எண்ணினேன்
எண்ணிய எண்ணம் சொல்கிறதே
சொல்லாத அவளது ஏழ்மையை!" என்றும்
"ஒளிப்படத்தில் மின்னும் மங்கை தானே
கங்கைக் கரையிலே பூப்பறித்து
பறித்த பூவைக் கைத்தட்டில் வைத்தே
வைத்த கண் வாங்காமலே - ஆங்கே
எங்கேயோ எவரையோ மேய்கிறாளே!" என்றும்
எடுத்துக்காட்டாகச் சில வரிகள் சிந்தித்தேன்!
எண்ணங்களின் தொகுப்போ
ஒளிப்படத்தின் செய்தியோ
பாவாக/கவிதையாக அமையலாம்
எண்ணிப் பாருங்கள்... எழுதிப் பாருங்கள்...
பாப்புனைதலுக்கான போர்க்களத்தில்
பாப்புனைவோருடன் மோதிக்கொள்ள
உலகெங்கும் இருந்தே படையெடுத்தே
போட்டியில் குதிக்கலாம் வாருங்களேன்!

உங்கள் நண்பர்கள் எல்லோரையும் இப்போட்டியில் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

தைப்பொங்கல் 2010

பொங்கலோ பொங்கல்...
கதிரவன் முகம் பார்த்து
வேளான்மை விளைச்சல்
பெற்றெடுத்த உழவர்கள்
பொங்கும் பொங்கல்!
பால் வடியும்
பானை முகம் பார்த்து
பொங்குவோர் எண்ணுவது
இம்முறை எப்பக்கம்
விளைச்சல் பெருகும் என்பதையே!
தை பிறந்தால் வழி பிறக்குமென
எம்மவர்
பொங்கல் பானை கீழிறங்க முன்னரே
கதிரவனைப் பார்த்து
நடப்பு ஆண்டு
எண்ணங்களைப் பெருக்குவரே!
கதிரவனுக்குப் பொங்கிப் படைத்ததும்
பழையன கழிந்து, கெட்டவை ஒழிந்து
நன்மைகள் பல...
நமக்குக் கிடைக்குமென நம்பியே
எல்லோரும் கூடி உண்டு மகிழ்வரே!
நம்பிக்கைகள் தான்
எங்களுக்கு வழிகாட்டும்
ஒளி விளக்குகள்!
இவ்வாண்டுத் தையிலும்
நல்லன இடம்பெற, வெற்றிகள் குவிய
நம்பிக்கைகள் ஈடேற
உலகிற்கு ஓர் ஒளி முதல்வன்
எம்முடன் இருப்பானென நம்புவோம்!


புலிகள் அழிந்த பின்; ஈழப் போர் நின்ற பின்; வந்த 2010 தைப்பொங்கல் குறித்து எழுதிய பாவிது.

புதன், 20 ஆகஸ்ட், 2014

எழுது எழுது எழுது

எண்ணியதெல்லாம் எழுது - அது
எந்த இலக்கியம் என்று கேளாமலே...
அட, இலக்கியம் என்றால்
என்ன என்று கேட்கிறீரோ...
வாழ்ந்த, வாழும்
நம்மாளுகளின் வாழ்வை
படம் பிடித்துக் காட்டுவதே
இலக்கியம் என்கிறார்களே...
எழுது எழுது எழுது
எழுதப் புகுந்தால்
வாசிப்பது, எவர் என்று கேட்கிறீரோ...
அடடே, உன் எழுத்தால்
வாசிப்பவர் உள்ளத்தை
மகிழ்வடையச் செய்வாய் எனின்
மகிழ்வடைவதற்காக வாசிக்கும்
எல்லோரும்
உன் எழுத்தை வாசிப்பார்களே...
எழுதிய பதிவை
எவர் வெளியிட வருவாரா...
உனது சொந்தப் பதிவாயின்
எல்லோரும் உதவுவார்களே...
எழுதத் தூண்டுபவை
எவை என்று கேட்கிறீரோ...
மக்கள் வாழ்க்கையை படி
பழைய, புதிய
இலக்கியவாதிகளின் நூலைப் படி
நல்ல திரைப்படத்தைப் பார்
இதற்கு மேலும் - உன்
தேடலைப் பெருக்கினால் போதாதா?
எழுதுவதால் மகிழ்வடையப் பார்
உன் எழுத்தைப் பார்த்து
மகிழ்வோரின் விருப்பறிந்து எழுது...
உன் உள்ளத்தில் எழும்
நல்லெண்ணங்களையோ
படித்தறிவையோ
பட்டறிவையோ
மதியுரையையோ
வழிகாட்டலையோ
நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க
எழுத்தாசிரியர் ஆகலாமே!
எண்ணியதெல்லாம் எழுது
அதனால்
நாட்டு மக்கள் - தங்கள்
அறிவைப் பெருக்குவார்களே!

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

புதிதாக என்ன பண்ணுவோம்?


விடிந்தால் புதிய நாள் - அன்று
புதிதாக என்ன தான்
அமையப்போகிறது?
எல்லோரும்
நேற்றைய முகங்களே...
எல்லாம்
நேற்று நடந்தவைகளே...
அப்படியே தான்
ஆண்டுகள் மாறினாலும்
ஆள்களின் அகவை ஏறினாலும்
பட்டறிவெனச் சொல்லியே
பழசுகளைக் கிளறி விடாமல்
புதிய நாளில்
புதிதாக எத்தனை தான்
எண்ணிவிட முடியும்...
அடைய வேண்டியதை
அன்பாலே அடைவோம்...
காண வேண்டியதை
நல்லதாகக் காண்போம்...
பார்க்க வேண்டியதை
பணிவோடு பார்ப்போம்...
கேட்க வேண்டியதை
இனிமையாகக் கேட்போம்...
செய்ய வேண்டியதை
நன்மைக்கே செய்வோம்...
தொடங்க வேண்டியதை
வெற்றி கிட்டுமெனத் தொடங்குவோம்...
எண்ணங்கள் தான்
எமக்கு வழிகாட்டுவன....
அப்படியாயின், எண்ணம் போல்
எல்லாம் ஈடேறுமாம் என்றால் சரியா?
இல்லைப் பிழை தான்!
எண்ணுவதெல்லாம்
நல்லெண்ணங்களாக இருப்பதனாலேயே
எல்லாம்
நன்மையிலும் வெற்றியிலும் முடிய
எங்கள்
ஆளமான உள்ளம்(ஆழ் மனம்)
எம்மை இயக்குகிறதே!
புதிய நாளில்
புதிதாக என்ன பண்ணுவோம்?
எங்கள் உள்ளத்தில்
நாள் தோறும்
நல்லெண்ணங்களை விதைப்போம்
நல்லனவெல்லாம் பெறுவோமே!

சனி, 16 ஆகஸ்ட், 2014

நல்லுறவும் நமது முடிவிலேயே...


பணத்தை வைத்தோ
படிப்பை வைத்தோ
இணையாத உறவது
அன்பை வைத்தே
அணைந்த உறவிலேயே...
விரிசல் வந்தால் போதுமே
நல்லுறவும் கெட்டுப் போகுமே!
உள்ளத்திலே
உண்மை அன்பிருக்க
உடனடி முடிவும்
உறவை முறிக்கலாமே...
அன்பின்றித் தொற்றிய உறவை
அன்பாக அணைத்தாலும்
நெருங்கிய உறவாகலாமே...
உறவு கெட்டுப் போகாமல்
பார்த்துக் கொண்டால் நன்றே!
நம்மவர் நல்வாழ்விலே
பழகிய உறவுகள் பாதியில் பிரியலாம்
காலம் கரைய
தவறுகள் உணரத் தேடியே வரலாம்
பழசை மறந்து - நாம்
பணிவாய் நல்லுறவைப் பேணுவோமே!
நிலையற்ற வாழ்விலே
நிலையான உறவின்மைக்கு
மனித முடிவே எதிரி...
தடுமாறும் உள்ளத்தை
தளரவிடாமல் பேணினால் தானே
உறுதியான முடிவெடுத்தே
நிலையான உறவைப் பேண இடமுண்டே!
நாம் எடுக்கின்ற
ஒவ்வொரு நல்ல முடிவிலேயும் தான்
நெடுநாள் நிலைக்கக் கூடிய
நமது உறவுகளைப் பேண முடிகிறதே!

படிப்பும் சான்றும்

"படித்ததன் பயனென்ன படித்தே அறிந்தால்
படித்தவர் எவரென்று அறி!" என்று
நான் சொன்னால் பயனில்லைப் பாரும்
அவரவர் பட்டறிந்தால் பயனுண்டே!
பயனீட்டும் பயனர் கூறுவதே
உங்கள் படிப்பின் சான்றென்பேன்!

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

படியெடுக்கலாம்! ஆனால், இப்படியுமா?


உறவுகளே! முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள். அடுத்து எனது பதிவைப் படிக்கத் தொடருங்கள்.
http://sivamgss.blogspot.com/2014/08/blog-post_69.html

என்னைப் பெத்தவளுக்குத் தான் தெரியும்
என்னை ஈன்ற போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
பாப் புனைந்தவருக்குத் தான் தெரியும்
பாப் புனைந்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
கதை புனைந்தவருக்குத் தான் தெரியும்
கதை புனைந்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
நடிகை, நடிகருக்குத் தான் தெரியும்
நடித்து முடித்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
சிற்பிக்குத் தான் தெரியும்
சிலையை வடித்த போது - தான்
பட்ட துன்ப துயரங்கள்...
மொத்தத்தில எண்ணிப் பார்த்தால்
பிள்ளையை ஈன்ற தாய் - தான்
பட்ட துன்ப துயரங்களைப் போல தான்
படைப்பொன்றை ஆக்கி முடிக்கையிலே
படைப்பாளி ஒருவரும்
பட்டிருப்பார் என்பதைக் கூட
படியெடுப்போர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே!
"சின்ன வீடு தந்த சுகமிருக்கே - அது
காவற்றுறை தந்த கம்படியில
காணாமல் போயிட்டுதே!" என்று
எழுதியிருக்கிறியே
சின்ன வீட்டை நாடி
காவற்றுறையில சிக்கினதை எழுதினால்
உன்னை எவர் மதிப்பாரென
நண்பர் ஒருவர் கேட்க - அது
யாழ்பாவாணன் எழுதியது - நானோ
படியெடுத்துப் பகிர்ந்தேன் என்று
படியெடுத்தவர் பகிரும் போது தான்
பதிவின் உண்மைத் தன்மை அறியாதவர்
எல்லோரும் இப்படித்தான் சிக்குவாரென
அறிய முடிகிறதே! - நான்
கட்டிய மனைவியின் சுகத்தை விட
சின்ன வீட்டின் சுகம் கேடென எழுதியதை
வெளிப்படுத்த முடியாதமையால்
படியெடுத்தவர் சிக்கினார் என்பதைச் சொன்னேன்!
படியெடுக்கலாம்! ஆனால், இப்படியுமா?
படியெடுத்துப் பகிர்ந்ததை விளக்க முடியாமலா?
இதழியல், ஊடகவியல் பற்றி
எள்ளளவு தெரிந்ததை வைத்துச் சொல்கிறேன்
படியெடுத்துப் பகிர்வதற்குச் சட்டமில்லை
குற்றம் என்று உரைக்கின்றேன்...
எவருடையதெனச் சான்றுப்படுத்தி
எதற்காகப் பகிருவதாகச் சுட்டி
படியெடுத்துப் பகிரலாம் என்பதையும்
எல்லோரும் ஏற்பீர்களென
நானும் நம்புகின்றேன்!


நிறைவு (சுதந்திரம்) கிட்டுமா?


நான்
விரும்பியவாறு
பறக்க வேண்டும்
நீந்த வேண்டும்
நடக்க வேண்டும்
மொத்தத்தில்
என் விருப்பப்படி
வாழ வேண்டும்
வாழ்வில்
அச்சம்(பயம்) இன்றி
மகிழ்வோடு முன்னேற வேண்டும்
என் அடையாளம்
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்
இத்தனையும்
கிடைக்காத வரை
எனக்கு
நிறைவு(சுதந்திரம்) இல்லையே!


2012 இந்திய குடியரசு தினத்தை ஒட்டி எழுதியது.

அந்த நாள் நினைவுக்கு வர

அந்த நாள் நினைவை மீட்டிய
ஒளிஒலிநாடா ஒன்று
என்னை
சில வரிகள் எழுதத் தூண்டுகிறதே!
வன்னிப் பெரும் நிலப்பரப்பில்
இடம்பெற்ற ஈற்றுப் போரில்
சிக்குண்டு விடுதலையான
என் வாழ்வையும்
மீட்டுப் பார்க்கின்றேன்!
ஒளிஒலிநாடாவில்
என்னைத் தேடிப் பாருங்கள்...
குண்டு பட்டு வீழ்ந்திருக்கலாம்...
வானவூர்திகள்
குண்டு மழை பொழிய
மண்கிடங்கில் மறைந்திருக்கலாம்...
சாவா வாழ்வா என்றவாறு
குற்றுயிராகத் துடிக்கலாம்...
உண்ண உணவின்றி
சேலைத் துணியால்  வடித்து
சேற்று நீர் குடிக்கலாம்...
சிலர் காய்ச்சிக் கொடுத்த
கஞ்சிக்கு
நீண்ட வரிசையில் காத்திருக்கலாம்...
இன்னும் எழுதலாம்;
அந்த நாள் நினைவுக்கு வர
அழுகையும் வர
எழுதுகோலும்
எழுத மறுக்கிறதே!
http://www.youtube.com/watch?v=h4sGy6jPdWM&feature=share

வியாழன், 14 ஆகஸ்ட், 2014

மக்களால் நன்கு அறியப்பட்டவனாக (பிரபலமாக)


என்னை
உங்களுக்கு
அதிகம் அறிமுகம் செய்பவர்கள்
என் எதிரிகளே...
எதிரிகள்
என்னைப் படிக்காதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் படித்ததைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை கள்ளச் சான்றிதழ் பெற்றவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது தகுதியின் படி
நேர்மையான சான்றிதல் எனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைக் கெட்டவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நல்லதைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் கள்ளன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனது நேர்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பெண்பிள்ளைப் பொறுக்கி என்பர்
ஆனால்
நீங்களோ
எனது கற்பைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பலரைக் காதலித்தவன் என்பர்
ஆனால்
நீங்களோ
எனக்குக் காதலியில்லையெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பல மனைவிக்காரன் என்பர்
ஆனால்
நீங்களோ
என் மனைவி யாரெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அரசியல்வாதி என்பர்
ஆனால்
நீங்களோ
நான் மக்கள் தொண்டனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னைப் பொல்லாதவன் என்பர்
ஆனால்
நீங்களோ
நான் நல்லவனெனக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை இழிவுபடுத்துகையில் நம்பாமல்
நீங்களோ
என் சூழலைப் பகுப்பாய்வு செய்து
என் உண்மையைக் கணித்திருப்பீர்...
எதிரிகள்
என்னை அழிக்க வருகையில்
நீங்களோ
என் உயிரைக் காத்த
என் சூழலிலிருந்த பொதுமக்களே!
எதிரிகளுக்குத் தெரியாதது
சான்று காட்டியே
இழிவுபடுத்த வேண்டுமென்று...
அதனாலன்றோ
என்னை
நீங்கள் பகுப்பாய்வு செய்ய முடிந்ததே
இதனாலன்றோ
உங்களுக்குள்ளே - நான்
அறிமுகமாக முடிந்திருக்கிறதே!
மக்களுக்குள்ளே என்னை இழிவுபடுத்தினால்
நான்
மக்களால் நன்கு அறியப்பட்டவனாவேனென
எப்ப தான்
எதிரிகள் படிக்கப் போகிறார்களோ
எனக்கும் தெரியவில்லையே!

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்


வருவார் போவார் பழகுவார் பிரிவார்
நம்மவர் பிறவிச் செயலே!
தருவார் கேட்பார் கொடுப்பார் பெறுவார்
நம்மவர் செயலில் பாரும்!
சேருவார் விலகுவார் தேடுவார் மறைவார்
நம்மவர் தேவைகளில் தெரியும்!
சொல்வார் செய்யார் கைகுலுக்குவார் தோள்கொடுக்கார்
நம்மவர் ஒற்றுமையில் புரியும்!
அழுவார் வெறுப்பார் துடிப்பார் துன்புறுவார்
நம்மவர் வினைப்பயன் அறுவடையிலே!
புரிவோம் உணர்வோம் அறிவோம் படிப்போம்
"உதவி செய் பலனை எதிர்பார்க்காதே" என்பது
இறைவன் ஏட்டினிலே...
"உதவி செய்திருந்தால் பலன் கிட்டும்" என்பது
மனிதன் வீட்டினிலே...
செயலில் தேவைகளில் ஒற்றுமையில் முடிவுகளில்
சுயநலம் விட்டுப் பொதுநலம் நோக்கின்
எம் வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே!

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்ன?


2014 ஐப்பசி 07 இல் எனக்கு நாற்பத்தாறாம் பிறந்த நாள். எல்லோருக்கும் இப்படிப் பிறந்த நாள் வருமே! இந்நாளில் ஆளுக்கு ஒவ்வொரு சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடருவது வழமை தான். உங்கள் பிறந்த நாளன்றும் நீங்கள் எதைத் தொடருவதாகவோ எதைக் கைவிடுவதாகவோ எண்ணியுள்ளீர்கள். உங்கள் பிறந்த நாள் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) என்னவென்பதை வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!

1. எல்லாவற்றிலும் வெற்றி கிட்டுமென (தன்னம்பிக்கையுடன்) முயற்சியில் இறங்குதல்.
2. பகையைத் தோற்றுவிக்காமல் நல்லுறவைப் (குடும்பம், நட்பு) பேணுதல்.
3. செலவைக் குறைத்து வரவைப் பெருக்குதல். சேமிப்புப் பழக்கத்தைக் (குடும்பம் மேம்பட) கடைப்பிடித்தல்.
4. பிறமொழிக் கலப்பின்றித் (தாய் மொழி மேம்பட) தமிழைப் பேசி வழக்கப்படுத்துதல்.
5. புகைத்தல், மது(குடித்தல்), விலை மகளை நாடுதல் போன்ற கெட்ட பழக்கமுள்ளோரைச் (தாய்நாடு மேம்பட) சீர் திருத்துதல்.
6. எமக்கு மேலதிகமாகவுள்ளதை (தனக்குப் பின் தானம்) ஏழைகளுக்கு வழங்கி உதவுதல். எமக்கு வாழ்வளிக்கும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றியாக இதனைப் பின்பற்றலாம்.
7. மூன்று நேரமும் மூக்குமுட்ட விழுங்கிப் போட்டு நீட்டி நிமிர்ந்து படுப்பதும் விடிய எழுந்தால் எனது வருவாயை மட்டும் கவனிப்பது (சுயநலமாக...).
8. எந்தவொரு சிறப்புத் திட்டங்களும் (Master Plans) எனக்கில்லை (முட்டாளாக...).

என் பிறந்த நாளில் இப்படிச் சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டு
செயலில் இறங்கி நல்ல மனிதராகலாம் என எண்ணினேன்.
தங்கள் பிறந்த நாளிலும் எத்தனையோ சிறப்புத் திட்டங்கள் (Master Plans) போட்டுப் புதிய அகவையில் நல்ல மனிதராக எண்ணியிருப்பியள். அவற்றைப் பாருங்கோ நம்ம வலைப்பதிவர்களுடன் பகிருங்களேன்!

தண்ணீருக்கும் தமிழனுக்கும் போரா?

ஈழத்தில் புலிகள் அழிய
ஈழத்தில் தமிழர் நசுங்க
ஈழம் சிங்களவருடையதாக மாறிட
திருகோணமலை மாவிலாறு தண்ணீர் தான்
காரணமாயிற்றோ என்றால்
தொப்புள் கொடி உறவாம்
தமிழகத் தமிழரையும் பதம் பார்க்க
காவிரி ஆற்றுத் தண்ணீர் தான்
தலையிடி என்றால்
முல்லைப் பெரியாற்றுத் தண்ணீரும்
முரண்பட்டு நிற்க
பாலாற்றுத் தண்ணீரும்
பிரிந்து போக நினைக்கிறதே!
தொப்புள் கொடி உறவுகளே
தண்ணீரும் தேவை
இந்தியாவின் தலைநிமிர்வும் தேவை
ஆனாலும்
தமிழன் அழிவதற்கு இடமின்றி
தமிழ்நாடு மேன்மையுற
நல்ல தீர்வு ஒன்றைக் காணாவிட்டால்
தண்ணீருக்கும் தமிழனுக்கும் போர் தானே!

சனி, 9 ஆகஸ்ட், 2014

காதலில் இரண்டு வகை


மணமுடித்ததும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே காதல் மலர வேண்டும். மணமான ஆண்துணை, பெண்துணை இருவரும் காதல் கொள்வதாலேயே உளவியல், பாலியல் சிக்கல்களுக்கு தீர்வு காணமுடிகிறது.

மணமாகாத இருவர் காதல் கொள்வதாலே மணமுடிக்க முன் பழகியதாலே மணமுடித்த பின் மணவாழ்வில் சிக்கல் வராது என்பது பொய். ஏனெனில் அன்பு அதிகமானதால் வந்த காதல், மணமுடித்த பின் இருக்க வேண்டிய தேவைகளை அறிந்திருக்காது.

மணமுடிக்க முன் காதலித்து மணமுடித்தவர்களிடையே "இதற்காகவா காதலித்தாய்?" எனச் சில சூழலில் மோதல் வரலாம். ஆனால், மணமுடித்த பின் காதலிப்பவர்களிடயே நல்ல குடும்பமாக இருப்பதற்கு எல்லாம் தேவை என மோதிக்கொள்ள வாய்ப்பில்லை.

ஆயினும், நான் கூறும் கருத்தையே பொய்யாக்கும் வண்ணம் மணமுடிக்க முன் காதலித்து மணமுடித்த பின் மகிழ்வோடு சிலர் வாழ்கிறார்கள்.

எடுத்துக்காட்டாகத் தொழில் நிறுவனமொன்றில் நல்ல நட்போடு ஐந்தாண்டுகளாகப் பழகிய இருவரிடையே, இருவரும் மணமுடித்தால் நல்லாயிருப்பியள் என மாற்றார் தூண்டுதலினால் காதலித்து இன்றும் மகிழ்வோடு வாழ்கிறார்கள். அவர்களிடயே மலர்ந்த காதலில் "மணமுடித்த பின் இவ்வாறு வாழலாம்" என்ற குறிக்கோள் இருந்திருக்கிறது.

முடிவாகச் சொல்வதானால் காதலில் இரண்டு வகை உண்டு. ஒன்று அன்பு அதிகமானதால் வந்த உணர்ச்சியால் தோன்றியது. மற்றையது நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட இரு உள்ளங்களில் தோன்றிய காதல்.
முதலாம் காதல் இலக்கற்றது, இலக்குக்குறித்தது இரண்ணடாவது காதல். காதலில் எந்த வகை நல்லதோ, அது மணவாழ்வை முறிக்காது.
பள்ளிக் காதல் படலை வரையும் அகவைக்கு(21 வயதுக்குப் பிந்திய) வந்த பின் பொறுப்புணர்ந்தவர் புரிந்த காதல் ஆயுள் வரை தொடருமே!

காதல் பற்றிய மேலதீகத் தகவலுக்கு:
உளவியல் நோக்கில் காதல்

முல்லைப் பெரியார் அணை

நாங்கள் இந்தியர்கள்
நமக்குள்ளே தமிழ்நாடு, கேரளாவா
இடையிலே தலையை நீட்டும்
முல்லைப் பெரியார் அணை
தமிழ்நாட்டாரையும், கேரளாவாரையும்
பிரிப்பதற்கென்றே நீண்டதா?
அப்படியாயின்
தமிழ்நாட்டாரும், கேரளாவாரும்
இந்தியர்கள் இல்லையா?
மாநிலங்களுக்குள் மோதல் என்றால்
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தான்
கொண்டாட்டம் என்பதை அறிவீரா?
பாகிஸ்தான்-ஜம்முகஸ்மீர்
சீனா-தீபெத் இந்திய எல்லை
மோதல்களைத் தூண்டவா
மாநிலங்களுக்குள் மோதல்?
முதலில்
இந்திய வல்லரசைக் கட்டியெழுப்புவோம்
இரண்டாவதாக
காவிரி நீரைப்போல எல்லா நதிகளையும்
சமபங்கீடாய்ப் பாவிக்கலாம் வாருங்களேன்!



வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!


பாபுனையும் ஆற்றல்
எல்லோருக்கும் இருக்கத் தான் செய்கிறது...
பாபுனையும் ஆற்றலை
வெளிக்கொணர முயற்சி எடுத்தவர்களே
பாவலராக/ கவிஞராக மின்னுகின்றனர்!
நீங்களும்
பாவலராக/ கவிஞராக மின்ன
பாபுனையை விரும்புங்கள்...
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம்
பாபுனைதலும்
எழுதி எழுதிப் பழகலாம் என்றே
பாபுனையை விரும்புங்கள்!
பாபுனையை விரும்பினால் போதும்
பாபுனையும் ஆற்றலே வந்துவிடும்...
பாபுனையும் ஆற்றல் இருப்பின்
இன்றைக்கே போட்டிக்கு வந்துவிடும்...
நாளைக்கே வெற்றி பெறலாம்
நாளையன்று
பாவலராக/ கவிஞராக மின்னலாம்!
நிற்க
கீழுள்ள இணைப்புகளைச் சொடுக்கிய பின்
நன்றே படித்த பின் இறங்கலாமே!!
அறிமுகப் பதிவுகள்
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!
http://wp.me/pTOfc-b1
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
2014 தீபாவளிக் கவிதைப் போட்டி பற்றியறிய
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html


வியாழன், 7 ஆகஸ்ட், 2014

காதலி, காதலன் நினைவாக...

முதலாம் சந்திப்பு:-
ஆண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?

பெண் : நான் என்ன செய்ய முடியும். எனது நீண்ட தலைமுடியைப் பொருட்படுத்தாமல், மொட்டை அடித்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.

இரண்டாம் சந்திப்பு:-
பெண் : எங்கள் காதல் தான் உலகிலேயே உயர்ந்த காதல். நான் இறந்து விட்டால், நீ என்ன செய்வாய்?

ஆண் : பெட்டை மூஞ்சியாகக் கிடந்த என் முகத்தில் நீளும் மீசை தாடியை வளர்த்து எனது துயரை வெளிப்படுத்துவேன்.

மூன்றாம் சந்திப்பு:-
நானே ஒரு பெரியவரிடம் : காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?

பெரியவர் : இன்றைய பிஞ்சுகள்; ஒன்றை விட்டால் இன்னொன்றைப் பார்க்குதுகள்; உதுகள் எங்கே தாஜ்மகாலைப் போல காதலன், காதலி நினைவாக எதையாவது கட்டுங்கள் என நம்புகிறது.

நான்காம் சந்திப்பு:-
"காதலி, காதலன் நினைவாக... இன்றைய இளசுகளின் போக்கு என்னவாயிருக்கும்?" என்ற கேள்வியை உங்களிடம் கேட்கிறேன்.

நகைச்சுவையாக உங்கள் பதிலைத் தாருங்களேன்.

நான் பார்க்குமிடமெங்கும் உண்மைக் காதலைக் காணவில்லை. ஆகையால், இப்படியான கேள்வி அம்புகளை நீட்டுகிறேன்.

புதன், 6 ஆகஸ்ட், 2014

தாஜ்மகாலைப் பற்றிப் படித்ததில்...

http://wp.me/pTOfc-b1
போட்டியென்று வந்துவிட்டால் பாயும்புலி!


காதல் நினைவுப் பரிசாக
இளவரசி மும்தாஜ்ஜிற்காக
மன்னன் சாஜகான் கட்டிய
தாஜ்மகாலிற்குப் பின்னேயுள்ள
துயரம் நிறைந்த கதைகளை
உள்ளத்தில் மீட்டுப் பார்த்தால்
ஜமுனை நதி போல
எங்கள் கண்ணீரல்லவா ஓடும்!
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பிக்குப் பாராட்டு விழா நிகழ்வாம்...
ஊரே திரண்டு எழுந்து வர...
இசை முழக்கம் வானைப் பிளக்க...
வரவழைக்கப்பட்ட சிற்பி
மன்னன் சாஜகானைக் கைகூப்பி வணங்க...
மன்னன் சாஜகானோ
தன் உடைவாளைக் கழட்டினான்...
ஓங்கியே ஒரு வெட்டுப் போட்டான்...
கூப்பிய சிற்பியின் இரு கைகளும்
துண்டாகக் கீழே விழுந்தன...
வானதிரக் குளறிய வண்ணம்
நிலத்தில் விழுந்து
புரண்டு உருண்ட சிற்பியை
"வெளியே அழைத்துச் செல்" என
பணியாள்களுக்குக் கட்டளையுமிட்டான்...
இதற்கு மேலேயும்
"தாஜ்மகாலைப் போல
இன்னொன்று முளைக்கக் கூடாது" என்றே
சிற்பியின் கைகளை வெட்டியதாகவும்
சாஜகான் உரைத்தும் உள்ளானே!
இந்தத் துன்பச் செய்தியை
யாழ் வலம்புரிப் பத்திரிகையில் படித்ததும்
எனக்கு வெறுப்புத் தான் வந்ததே!
இளவரசி மும்தாஜைப் பிரிந்த
மன்னன் சாஜகான் மும்தாஜிற்காக
தன் காதல் பரிசாக
"உலகை ஈர்க்கும் வண்ணம்
புனித நினைவிடத்தை வரைந்து தா" என
பணியாளன் ஒருவரிடம் பணித்தானாம்!
ஏதுமறியாப் பணியாளன்
அரச கட்டளைக்குப் பணிந்தே
படம் வரையும் பணியில் இறங்க
துணைக்கொரு தோழியையும் நாடினான்!
படம்வரை கலைஞனுக்குத் தோழியும் உதவ
இருவரும் மாத விடுமுறையில்
ஜமுனை நோக்கியே நடைபோட்டனர்...
காதல் நினைவகம் வரைய - காதலில்
தோற்றவனாலேயே முடியுமென உணர்ந்தே
பணியாளனின் தோழி
பணியாளன் மீது காதல் கொண்டாளே...
இன்பமாகக் காதல் செய்தே
இருவரும் காலம் கடத்த
வரைபடம் கொடுக்க வேண்டிய
நாளும் நெருங்கி வரவே
பணியாளனின் தோழி ஜமுனையில் விழுந்து
காதல் மூச்சை நிறுத்திக் கொண்டாளே!
"உதவி செய்யத் துணைக்கு வந்தவள்
உள்ளத்தை அன்பாலே தடவியவள்
ஜமுனைக்கு உணவானாளே" என
படம்வரை பணியாளன் துயருற - அவன்
துயர் யாரறிவார் - அதுவே
நிழல் கூட விழுந்திடாத
சலவைக் கல்லால் ஆன
தாஜ்மகால் வரைந்திடத் துணையாயிற்றாமே!
தன்னை நினைத்து வடிக்கும் வரைபடம்
நன்றாக அமையுமென்றே
விழுந்தவளின் துயரைச் சுமப்பதாலேயே
சிரித்துக் கொண்டே ஓடும்
இந்திய நதிகளிலே ஜமுனை மட்டும்
அழுது கொண்டே ஓடுகிறதாம்!
இந்தத் துயரச் செய்தியை
பாவலர் பழனிபாரதியின் நூலொன்றிலும்
பழனிபாரதி எழுதியதாகப் பத்திரிகையிலும்
படித்ததும் - எனக்கு
வெறுப்புத் தான் வந்ததே!
முதலாம் துன்பச் செய்தியும்
இரண்டாம் துயரச் செய்தியும்
மூன்றாம் ஆளாகிய
என் உள்ளத்தைக் குத்தியதாலே
படித்ததும் - எனக்கு
வெறுப்புத் தான் வந்ததே!
காதலின் நினைவிடமான
தாஜ்மகாலுக்கு;
இரு காதல் இணைகளா?
தாஜ்மகாலைக் கட்டிய
சிற்பியின் இரு கைகளா?
ஒரு தாஜ்மகாலுக்குப் பின்னாலே
இன்னும் எத்தனை
துன்ப, துயரச் செய்திகள் இருக்குமோ
நானறியேன் நண்பர்களே!
--------------------------------------------------------------------
நண்பர்களே! உங்களுக்குத் தெரிந்த தாஜ்மகாலுக்குப் பின்னாலே உள்ள துன்ப, துயரக் கதைகளை பாடல்களாகவோ கவிதைகளாகவோ கதைகளாகவோ புனைந்து இப்பகுதியில் எடுத்துக் கூற முன்வாருங்களேன்.

தற்கொலையா?


ஒருவன்
ஒருத்தியை விரும்புகிறான்...
ஒருத்தி
ஒருவனை விரும்புகிறாள்...
காலமாற்றம்
பிரிவைத் தர
தற்கொலையை நாடலாமா?
நீங்கள்
காதலுக்காகப் பிறக்கவில்லை
காதல் தான்
உங்களுடன் விளையாடியது
அதில்
தோற்றதினால்
அடுத்தவர்
உள்ளத்தை அறிய முடிந்ததே!
உள்ளமும் உள்ளமும்
இணையாமையால்
தற்கொலை தீர்வாகாதே...
தற்கொலையை நாடாமல்
வாழ்ந்து காட்டு
அதுவே
காதலைத் தோற்கடிக்குமே!

சனி, 2 ஆகஸ்ட், 2014

தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!

உலகெங்கும் வாழும் பல இலட்சம் தமிழ்ப் படைப்பாளிகள் இருப்பினும் 12000 இற்கு மேல் தமிழ் வலைப்பூக்கள் பேணப்படுவதாக அறிய முடிகிறது. அத்தனை ஆயிரம் வலைப்பதிவர்களும் உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணக் களமிறங்கியவர்களே! உண்மையில் இத்தனை ஆயிரம் வலைப்பதிவர்களையும் உங்கள் யாழ்பாவாணன் போருக்கு அழைக்கின்றார்.

ரூபனின் வலைப்பூவில் "தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 (http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html) " என்ற தலைப்பில் வெளியான பதிவை எல்லோரும் படித்திருப்பீர்கள். சிறந்த போட்டி நுட்பம் அதாவது சிறந்த பாவலரை/கவிஞரை அடையாளப்படுத்தும் போட்டி, மிகப் பெரும் புலமை மிக்க நடுவர்கள், பலமுறை போட்டிகள்      நடாத்தி பட்டறிவு (அனுபவம்) பெற்ற ரூபன் குழுவினர் நடாத்துகின்றனர். இந்நிலையில் உங்கள் யாழ்பாவாணன் போருக்கு அழைப்பதில் தவறேதும் உண்டோ?!

என்னத்தைப் பண்ணிக் கிழிக்கலாமென்று
போரென்றால் போரென்று
யாழ்பாவாணன் அழைக்கின்றாரென்று
நீங்கள் கேட்கலாம்.
நானே சொல்லிவிடுகின்றேன்.

போட்டிகள் என்பது - சிறந்த
காட்டிகள் என்பேன் - அந்த
புலமைசாலிகள் யாரென்று
காட்டி நிற்கும் செயலே
போட்டிகள் என்பேன்!

வாருங்கள்... போராடுங்கள்...
உங்கள்
தமிழறிவை வெளிப்படுத்தி
பாப்புனையும் ஆற்றலை
முன்வைத்து வெளியிடுங்களேன்!

போரென்று முழங்கி
போட்டியில் பங்கெடு என்பதா?
போட்டியில் பங்கெடுத்தாலே
போர் தொடங்கியாச்சே!
ஆனால்,
வலுவான போரில்லையே!

ரூபன் குழுவினர் நடாத்தும் போட்டி என்றால் எல்லோரும் பங்கெடுப்பீர்கள் என்பது எனது நம்பிக்கை. இப்பதிவின் தொடக்கத்தில் சுட்டிய பன்னீராயிரம் வலைப்பதிவர்களும் இப்போட்டியில் பங்கெடுத்தால் போரென்றால் போர் தான்! கீழ்வரும் இணைப்புகளை உங்கள் வலைப்பூக்களிலும் இணைத்து தீபாவளி (2014) நாளில் மாபெரும் அந்தக் கவிதைப் போரை ஏற்படுத்த எல்லோரும் ஒன்றிணைவோம்.

உங்கள் வலைப்பூக்களில் பக்கப்பட்டையில் (Sidebar) இணைக்கக் கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்துக.



<a href="http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html" target="_blank" title="
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014">
<
img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLNjWRQKdnumTvlr12wUtsgB5Zezx4sGbsYx_SvDhD8RKM-z_ghJZLPpQJE5fbkQEn3YdWWg98oYSODUWDfjHMtPP6ftxsukbMH_x9__eEqz_Z9c8PgiWFnMp1P9QvVJd7RV_IaPEicDKS/s1600/Untitled-1+copy.jpg" height="160" width="200">
</a>

உங்கள் வலைப்பூக்களில் பதிவுப்பகுதியில் (Posting) அறிமுகம் செய்ய கீழ்வரும் இணைப்பைப் பயன்படுத்துக.



<a href="http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/08/2014.html" target="_blank" title="
தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014">
<
img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjLNjWRQKdnumTvlr12wUtsgB5Zezx4sGbsYx_SvDhD8RKM-z_ghJZLPpQJE5fbkQEn3YdWWg98oYSODUWDfjHMtPP6ftxsukbMH_x9__eEqz_Z9c8PgiWFnMp1P9QvVJd7RV_IaPEicDKS/s1600/Untitled-1+copy.jpg" height="400" width="480">
</a>

எல்லோரும் போட்டியில் பங்கெடுப்போம். பல்லாயிரம் வலைப்பதிவர்களைப் போட்டியில் பங்கெடுக்கச் செய்து; தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போரை ஏற்படுத்த முன்வாருங்கள்!


வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

விலை மகளுக்கு இலை போடாதீர்


போக்குவரவு என்றால்
தடைகள் ஆயிரம் வரலாம்
அதுபோலத் தான்
வாழ்க்கையிலும்
ஆயிரம் தடைகள் வந்து மோதலாம்!
தடைகளைக் கடந்தால் தான்
போக்குவரவும் இடம்பெறுவது போல
வாழ்க்கையிலும்
எதிர்ப்படும் தடைகளைக் கடக்கவேணுமே!
தடைகளைக் கடக்க முடியாது போனால்
தடைகளுக்குள்ளேயே
முடிந்தவரை வாழ முயற்சி செய்யலாமே!
தடைகளைக் கடக்க முடியா விட்டாலும்
முடிந்தவரை முயன்றும்
தடைகளுக்குள்ளேயே வாழ முடியா விட்டாலும்
சாகவேண்டுமே தவிர
விலை மகனாகவோ
விலை மகளாகவோ முடியாதே!
விலை மகனாரை விட
விலை மகளாரே நாட்டிலே அதிகம்...
ஆணென்றால்
எந்தத் தொழிலையையும் செய்யலாமென்றால்
சரிநிகர், சமநிலை கேட்கும் பெண்கள்
எந்தத் தொழிலையையும் செய்ய முடியாதோவென
கழிவுறுப்பு வாடகைக்கு விடுவது சரியா?
எவர் வாய்க் கேட்பினும்
எவர் தான் எப்படிச் சொன்னாலும்
பெண் பக்கம் தவறு என்றால்
அவளை
ஊரே ஒதுக்கி வைப்பதால் தான்
கோழைப் பெண்கள்
தெருக்கோடியில் விலைமகளாக
அலைவதைப் பார்க்க முடிகிறதே!
கோழைப் பெண்களே
உங்கள் தொழில் உறுப்புக்கு
பொன்(தங்க) நகை அணியும் வழக்கம்
(பழைய இலக்கியங்கள் கூறுகிறது)
ஏன் இருந்தது தெரியுமா?
வாடகைக்கு விடுவதற்கல்ல
வழித்தோன்றலைத் தருவிக்கவென்றே
உங்கள் புனித உறுப்பைப் பேணவே!
ஒருவனுக்கு ஒருத்தி என்பது
ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே
சொல்லப்பட்டது...
ஆனால்
ஆளுக்காள் தவறிழைத்த பின்
பெண் மீது பழி போடலாமோ?
ஆண் சிங்கங்களே
ஆண்மையை அடக்கியாள முடியாமல்
தெருக்கோடி விலைமகளை நாடி
பாலியல் நோயை மட்டுமல்ல
குடும்பப் பிரிவையும் தேடி வரலாமோ?
போதாக்குறைக்கு
மாற்றான் பெண் சீர்கெடத் துணைபோவதா?
இவை தானா
ஆண் சிங்கங்களின் ஆண்மை!
பெண்ணைப் பெற்றவர்களே
சற்றுச் சிந்தித்துப் பாருங்களேன்...
உங்கள்
குலமகள் தவறிழைத்தால்
சீர் திருத்தி வாழவையுங்களேன்...
தவறிழைத்த குலமகளை
நீங்கள்
ஒதுக்கி வைப்பதால் தானே
விலை மகளாகப் புறப்படுகிறாளே...
சீர் திருத்தியும்
குலமகளாக வாழாத
விலை மகளுக்கு இலை போடாதீர் - அது
எம்மைப் படைத்த ஆண்டவனுக்கே
பிடிக்காத ஒன்றே!
கழிவுறுப்பு வாடகைக்கு விடும்
தொழிலை ஒழிக்க
பெண்ணைப் பெற்றவர்கள்
விலை மகளுக்கு இலை போடா விட்டாலும்
ஆளாளுக்கு ஏற்ற பொறுப்பை
நிறைவேற்றினால்
நாளாக நாளாக
என் மகளும் விலை மகளாகாள்
நாடெங்கிலும் உள்ள
விலை மகளும் குலமகளாவாளே!

ஒரு திரைப்படம் எப்படிப்பட்ட கதையால் வெற்றி பெறுகிறது?


கதையை வைத்துத்தான் படத்தின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் எப்படிப்பட்ட கதை நம்மாளுகளுக்குப் பிடிக்கும்.

 நகைச்சுவைக் கதை
 துப்பறியும் கதை
 வரலாற்றுக் கதை
 அரசர் கதை
 இறைபக்திக் கதை
 சண்டைக் கதை
 சதை காட்டும் ஆடல் கதை
 இசையும் பாடலும் கூடிய கதை
 பிறமொழிப் படக்கதை
 கருவற்ற கதை(மாசாலா)

இன்றைய நிலையில் உங்கள் விருப்பத்தைக் கூறுங்கள் பார்ப்போம்.