Translate Tamil to any languages.
4-எழுதியதைப் பகிருவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
4-எழுதியதைப் பகிருவோம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 பிப்ரவரி, 2018

காதலர் நாள் படிப்பு


30 ஆண்டுகளுக்கு முன்
(இப்ப எனக்கு 50)
நான்
காதலிக்க நினைத்த எவரையும்
என்னால் காதலிக்க முடியவில்லை...
எவளோ
என்னைக் காதலிக்க நினைத்தாலும்
அவளால் காதலிக்க முடியவில்லை...
வாழ்வில்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
கடவுளை நினைப்பவர் எவர்?
சிலர்
ஒரு தலைக் காதலாக
சொல்லிக் கொள்ளாமல் இணைவதில்லை
சிலர்
காதலைச் சொல்லி இணைந்தாலும்
திருமணம் வரை செல்வதில்லை
சிலர்
திருமணமான பின்னர் காதலிப்பதும்
(நானும் என்னில்லாளும் போல)
வாழ்வில் நிகழ்ந்தே தீரும்
ஆதாலால்,
உள்ளங்கள் உரசுவதால்
ஊற்றெடுக்கும் அன்பால் (காதலால்)
உறவாடும் உறவுகள் எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!
அதுவும்
வலன்டைன் நினைவாய் - எல்லோருக்கும்
காதலர் நாள் வாழ்த்துகள்!

"கி.பி.207 இல் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ், ரோமானிய வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் எனக் கருதினார். ஆகவே படையில் சேரும் இளைஞர்களுக்கு‚ 'திருமணம் ஆகியிருக்கக் கூடாது; காதலிக்கக்கூடாது' எனச் சட்டமிட்டார் மன்னர்.

காதலை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? வீரர்கள் இரகசியமாகக் காதலித்தார்கள். அவர்களை ஆதரித்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் இளைஞர்களுக்கு இரகசியமாக திருமணம் செய்து வைத்தார். விஷயம் தெரிந்து, பாதிரியார் சிறையில் தள்ளப்பட்டார்.

ஆனால், பாதிரியாராலேயே காதலிலிருந்து தப்ப முடியவில்லை. சிறை அதிகாரியின் பார்வை இழந்த மகள் அவருக்கு பணிவிடை செய்ய, காதல் மலர்ந்து விட்டது. 'இறைவா! இந்தப் பெண்ணுக்குப் பார்வை கொடு!' என்று வேண்டி சிறையில் தவம் இருந்தார் வலன்டைன். பெண்ணுக்குப் பார்வை கிடைத்தது.

இதையெல்லாம் கேள்விப்பட்ட மன்னர் கிளாடியஸ் கோபம் கொண்டு பாதிரியாரின் தலையைச் சீவும்படி ஆணையிட்டார். அதே ஆண்டு பாதிரியார் வலன்டைன் கொல்லப்பட்ட நாள் பெப்ரவரி 14 ஆகும்." என்ற தகவலை http://www.tamilwin.com/articles/01/135413 வலைப்பக்கமொன்றில் படித்தேன்.

அதாவது, அந்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் சாவடைந்த நாளான மாசி 14 ஐக் "காதலர் நாள் (வலன்டைன்ஸ் டே)" என்றழைப்பதாக நானறிந்தேன். உண்மைக் காதல் எதுவென உலகிற்கு உரைத்த 'வலன்டைன்' என்னும் பாதிரியார் வாழ்வு பலருக்குப் பாடமாகட்டும். இதனைப் படித்த பின் காதலிக்கலாம் வாங்க. ஏனெனில், நீண்ட ஆயுளுக்கு அன்பு (காதல்) நல்மருந்தாம்.

சனி, 26 ஆகஸ்ட், 2017

வலைவழியே பதிவர்களிடையே பெரும் மோதல்!

"மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017" என்னும் முயற்சியில் இரண்டு மின்நூல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.


Image result for bloggers

பதிவர் - 01:

"எழுத்து...
கவிதையோ கதையோ
நையாண்டிப் படைப்புகளோ
எதுவாகினும்
எழுத்து இறைவனின் வரம்." என்பது
அறிஞர் ஒருவரின் எண்ணம்!

"எழுத்தாளரையோ
பாவலரையோ (கவிஞரையோ)
படைப்பாளியையோ
இறைவன் (கடவுள்) ஆக்கவில்லை;
அவர்கள்
தாமாகவே உருவாகிறார்கள்." என்பது
சின்னப்பொடியனாம் எனது எண்ணம்!

எடுத்துக்காட்டாக எண்ணிப்பாரும்
காசில்லாத வேளை
உறவுகள் நெருங்க வாய்ப்பில்லைத் தான்.
நாய் வயிற்றுக்கு
உணவிடக் காசில்லை என்றாலும்
நாய் கூடத் திரும்பிப் பார்க்காது தான்.
இந்தச் சூழலில் தான்...

பணம் இருந்தால்
நிழல் போல உறவுகள்...
பணம் இல்லையென்றால்
நாயும் எட்டிப்பார்க்காதே!
என்றும்

பணமுள்ளவரை உறவுகள்
உணவுள்ளவரை நாய்
வாழ்க்கையில் சந்திக்கலாம்!
என்றும்

இல்லாத உறவும் சொல்லாமல் கூடும்
கையில் பணமிருக்கப் பாரும்!
என்றும்

பணமென்றால் பிணமும் பிழைக்கும் (உயிர்க்கும்/ வாழும்)
என்றும்

எழுத முடிகிறது என்றால் - அது
இறைவன் (கடவுள்) அருள் (வரம்) அல்ல;
இப்படியெல்லாம் எழுத வைத்தது
எழுதியவர் வாழ்ந்த சூழலே!
எவரையும் எழுதத் தூண்டுவது
அவரவர் வாழும் சூழலே தவிர
ஆண்டவன்/ கடவுள்/ கடவுள் அல்ல
உள்ளத்தைத் தொட்ட
உள்ளத்தில் நொந்த
ஒன்றோ பலவோ
(அதாவது, வாழ்விடச் சூழல்)
எழுதத் தூண்டுவதால்
ஒருவர்
எழுத்தாளராகவோ
பாவலராகவோ (கவிஞராகவோ)
படைப்பாளியாகவோ
உருவாகுகின்றார்! - உண்மையில்
கலைஞர் பிறப்பதில்லை
வாழ்விடச் சூழலே
கலைஞரை உருவாக்குகின்றது
என்பதே என் எண்ணம்!

பதிவர் - 02:

நீங்களும் பாவலனாக (கவிஞனாக) வர
எண்ணிப்பார்த்ததுண்டா?
எண்ணிப்பார்த்ததை
பா (கவிதை) நடையிலே எழுதினால் கூட
பாவலனாக (கவிஞனாக) வரமுடியாதா?
பார்த்ததைப் பார்த்தபடி
கேட்டதைக் கேட்டபடி
உணர்ந்ததை உணர்ந்தபடி
எண்ணியதை எண்ணியபடி
இப்படியும் அப்படியுமின்றி
உள்வாங்கியதை உள்ளபடி
நன்மை கருதி நல்லபடி
அச்சமின்றிப் பாவடிகளில்
பறைசாற்றும் பாவலர்கள்
உலகையே உருட்டிவிடக் கூடிய
உண்மையான வீரர்களே! - நம்ம
பாரதி கரித்துண்டால் தெருவில் எழுதி
(சான்று: கவிராஜன் கதை - வைரமுத்து)
வெள்ளையனை வெளியேற்றப் போராடியவரே!
நானும்
இப்படிப் பாவலனாக வர
எண்ணிப்பார்ப்பதுண்டு - ஆனால்
எனக்கோ
நன்றாகப் பாப்புனைய வராமையால்
பா (கவிதை) நடையிலே கிறுக்குகிறேன்
என்றோ ஒரு நாள்
பாவலனாக (கவிஞனாக) வருவேனென...

பதிவர் - 03:

உறவுகளே! எழுதும் வேளை 
தவறுகள் வரத்தான் செய்யும் - அதற்காக
எழுதுவதையே நிறுத்துவது நல்லதல்ல!
எழுதுங்கள்... எழுதியதைப் பகிருங்கள்
வாசிப்பவர்கள் வாசித்த பின் - அவர்கள்
தெரிவித்தால் தான் தெரிகிறதே
நம் எழுத்தில் மின்னும் பிழைகள்! - அவற்றை
திருத்திக்கொண்டு எழுதுங்க உறவுகளே!
இலக்கை இயம்புதல் இலக்கியம் என்றால் - உன்
எண்ணத்தைச் சுவையாகச் சொன்னாலும் இலக்கியமே!
இலக்கியம் தோன்றிய பின் தானே
இலக்கணம் தோன்றியது என்றால்
தவறுகள் களையப்படத் தானே
இலக்கணம் தோன்றியது என்பேன்!
வாசித்தவர் சுட்டும் தவறைத் திருத்தி
எழுதுங்க உறவுகளே! படைப்பாளி ஆகலாம்!!
எழுதுங்கள், எழுதியதைப் பகிருங்கள்
வாசிப்பவர் வாசித்ததும் பிழைகளைச் சுட்ட
சட்டென்று திருத்திக் கொள்ளப் பழகுவோம்
 
திருத்திக்கொள்ளத் தெரிந்து கொள்ளலாம்
இலக்கியத்தோடு ஒன்றிய இலக்கணம் எல்லாம்!
எண்ணங்களை வெளிக்கொணரும் போது
இயல்பாக இறுக்கமாக எழுத முயல்வோம்
இலக்கணம் தானாக வந்து குந்தும்
இலக்கணத்திற்கு அஞ்சி எழுதுவதை நிறுத்தலாமோ?
எழுதுங்க உறவுகளே! - என்றென்றும்
உங்கள் எண்ணங்களைப் பகிருங்க உறவுகளே!

பதிவர் - 04:

ஓ! படைப்பாளிகளே!
திறனாய்வு (விமர்சனம்) இல்லாத
படைப்புகளும்
தாக்குரை (கண்டனம்) இல்லாத
படைப்புகளும்
உப்புப் புளி காரமில்லாத
சோறுகறியும்
விரும்பக் கூடியதாக
எவருக்கும் இருக்காதே!
இத்தால் எல்லோருமறிய
திறனாய்வு (விமர்சனம்) செய்வோர்
செய்யட்டும் - அது
அவர் பணி...
தாக்குரை (கண்டனம்) செய்வோர்
செய்யட்டும் - அது
அவர் பணி...
எல்லாவற்றுக்கும் முகம்கொடுக்கும்
எமது பணி என்ன?
திறனாய்வுக்கும் தாக்குரைக்கும்
தாக்குப்பிடிக்கக்கூடியதாக
படைப்புகளை ஆக்குவதே
எமது பணியாக இருக்கட்டுமே!

பதிவர் - 05:

சொல் சிக்கனம் கவிதைக்கு அழகு.
வேண்டாத வரிகளைக் குறைப்பது
கதைகளுக்கு அழகு.
கவிஞனுக்கு வறுமை வரலாம்
எழுத்துக்கு வறுமை வரலாமா? - ஏன்
சொல்களுக்குத் தட்டுப்பாடா ?
வேண்டிய இடத்தில் வரவேண்டிய
சொல்லோ வரிகளோ வராதவேளை
எழுத்தில் செழுமை இல்லையோ!
எழுதுகோல் ஏந்தியோர்
கொஞ்சம் எண்ணிப் பார்க்கலாம்...!
அதற்காக
எழுதாமல் இருந்து விடாதீர்கள்!
"அடடே! இப்பவெல்லாம்
"எழுத்தசை சீர்தளை அடிதொடை" என
இவையாறும் அறியாப் பாவலர் - பலர்
இணையத்தில் உலாவுவதைக் காண்பீர்!" என
என்னையும் நோகடிப்பாங்க...
நானும் எழுதிக்கொண்டே இருக்கிறேன்!



 28-08-2017 அன்று உங்கள் யாழ்பாவாணன் இந்தியா (சென்னை) வருகிறேன். சென்னையில் 03-09-2017 ஞாயிறு இயன்றளவு பதிவர்களையும் சந்திக்கவுள்ளேன். முகவரி பின்னர் தெரிவிக்கின்றேன். 29-08-2017 தொடக்கம் 05-09-2017 வரை எனது பயணம் சென்னை, வடலூர், கன்னியாகுமரி, சென்னை எனத் திட்டமிட்டுள்ளேன்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

உள (மன) அமைதிக்கு வாசிப்பு மருந்தாகுமே!


அறிஞர் குணசீலன் அவர்களின் "வேர்களைத் தேடி..." தளத்தில் "புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்" என்ற பதிவைப் படித்தேன். (இணைப்பு: http://www.gunathamizh.com/2017/04/blog-post_25.html) இவ்விணைப்பைச் சொடுக்கிப் படித்த பின் வாசிப்பை விரும்பக் (நேசிக்கக்) கற்றுக்கொள்வோம். முத்தான கருத்துகள் முழுவதும் என்னை ஈர்த்துவிட்டன. அதனால் தான் நானும் இப்பதிவை எழுதுகிறேன்.


தொழில்நுட்ப வளர்ச்சி வேகத்தில் மின்நூல்கள் (eBooks), வாசிப்பு ஒலி (Audio Book), வாசிப்புக் காட்சி (Video Book) எனப் பல வழிகளில் திறன் பேசிகள் (Smartphones), மடிக்கணினிகள் (Laptops) எனப் பல கருவிகள் ஊடாக வாசிப்புப் பழக்கம் வந்துவிட்டதை ஏற்றுக்கொண்டாலும் உள, உடல் நலத்தோடு வாசிப்பதற்கு அச்சடித்த புத்தகங்களே சிறந்தது. அச்சடித்த புத்தகங்களையும் வாசிக்கக் கற்றுக்கொள்வோம்.

"உடலுக்கு எப்படி உடற் பயிற்சியோ அது போல உளப் (மனப்) பயிற்சிக்குப் புத்தக வாசிப்பு" என உளப் பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் பிராய்டு தெரிவித்த கருத்து உண்மையானது.

உள (மன) அமைதி பெற நல்ல புத்தகங்களை வாசிப்பது மருந்து.
உள (மன) நோய்கள் நெருங்காமல் இருக்க வாசிப்பு உதவுகிறது.
அறிவைப் பெருக்கும் வழியும் நல்ல புத்தகங்களை வாசிப்பதே!

வாசிப்பதால் மனிதன் முழுமையடைகிறான். தன் (சுய) முன்னேற்றப் புத்தகங்களை அதிகமாக வாசித்தவர் பிறரிடம் மதியுரை (ஆலோசனை) கேட்டு அலையமாட்டார். வாழ்வில் மகிழ்வைக் காண நல்ல நூல்கள் (புத்தகங்கள்) துணைக்கு வரும்.

கோவில் இல்லாத ஊரில் இருந்தாலும் நூலகம் (புத்தக ஆலயம்) இல்லாத ஊரில் இருக்கக்கூடாதென அறிஞர் ஒருவர் சொல்லியிருப்பதாக நானும் படித்திருக்கிறேன். அதுவும் கிட்டாதெனின் அவரவர் வீட்டில் சிறிய நூலகம் (புத்தக ஆலயம்) ஆக்குவோம். ஆங்கே அச்சடித்த புத்தகங்களை வேண்டித் திரட்டிப் பேணிப் படித்து அறிஞர்களாவதோடு நெடுநாள் வாழவும் முயற்சி எடுப்போம்.

நூல்கள் (புத்தகங்கள்) - வெறும்
எழுத்துகள் நிறைந்த
தாள்களின் திரட்டு அல்ல - அவை
அறிஞர்களின் அறிவாற்றலை வெளிக்கொணரும்
சுமை தாங்கிகளே!
நல்லதைக் கற்போம் - அதை
நன்றே கற்போம் - அதை
இன்றே கற்போம் - கற்றவை
நன்றே நமக்கு வழிகாட்டும்!

நிறுவனமொன்றில் நேர்காணல் செய்பவர் "என்ன படித்திருக்கிறாய்?" என்று கேட்க "நிறையப் படித்திருக்கிறேன்." என நேர்காணலுக்கு வந்தவரும் சொல்லியிருந்தார். "அப்படியென்ன நிறையப் படித்திருக்கிறாய்" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைப் போட்டார்.

"பத்தாம் அகவையில் (வயதில்) இருந்து பக்கத்து ஊர் மயில்வாகனப் புலவர் வாசிகசாலையில் ஒவ்வொரு நாளும் ஐந்தாறு பத்திரிகைகள் படிப்பேன். ஒரு கிழமைக்கு ஒரு பொத்தகம் என்ற அடிப்படையிலே இரவல் எடுத்துப் படிப்பேன். இப்படி இருபது ஆண்டுகளாகப் படிக்கிறேன்" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

"அப்படி என்றால் உன்னால் கவிதை எழுத முடியுமா?" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"ஓமோம்! மு.மேத்தா அவர்களின் "கண்ணீர்ப் பூக்கள்" நூலைப் படித்துப் புதுக்கவிதையும் வைரமுத்து அவர்களின் "என் பழைய பனை ஓலைகள்" பொத்தகத்தைப் படித்து மரபுக்கவிதையும் எழுதுவேன்" என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

"உள்ளம் (மனம்) அமைதி அடைய எதைப் படிக்கலாம்?" என நேர்காணல் செய்பவர் அடுத்த கேள்வியைக் கேட்டார்.

"கவிஞர் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் அல்லது இயேசு காவியம் படிக்கலாம்." என நேர்காணலுக்கு வந்தவரும் சொன்னார்.

ஈற்றில் "வாசிப்பு ஆற்றல் பரவாயில்லையே! நாளைக்கே வேலை தரலாம்." என நேர்காணல் செய்பவர் உறுதியளித்தார்.

இந்தச் செய்தியை என்னுடைய அம்மாட்டச் சொன்னேன். "வாய் இருந்தால் வங்காளம் போய் வரலாமடா..." என அம்மாவும் சொன்னார். அதைக்கேட்ட அப்பா "வாய் இருந்தாலும் நாலஞ்சு எழுத, வாசிக்கத் தெரிய வேணும்" என்றார்.

உறவுகளே! வாசிப்பு உங்களை உயர்ந்த இடத்துக்கு உயர்த்தினாலும் உளநிறைவோடு நெடுநாள் வாழ உதவுமே!

உறவுகளே! "புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்" என்ற பதிவைப் படிக்க கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கவும்; பின் வாசிப்பை விரும்பக் (நேசிக்கக்) கற்றுக்கொள்வோம்.

சனி, 21 ஜனவரி, 2017

தொல்லைக் குழுக்களும் தொல்லை பேசிகளும்


வலை வழியே அறிவு சார்ந்த படைப்புகளைப் பகிரும் அறிஞர்கள் எல்லோரும் நாளுக்கு நாள் மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிப் போக்கிற்கேற்ப தமது பயணத்தில் சில மாற்று வழிகளையும் கையாள வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக Wordpress இல் வலைப்பூ(Blog) நடாத்தியவர்கள் Blogger(Google) இற்கு மாறிய நோக்கம், விரைவாக கூகிள் தேடுபொறி ஊடாகத் தமது தகவல் விரைவாகப் பரவும் என்றே! ஆயினும், Wordpress இல் வலைப்பூ(Blog) நடாத்துபவர்கள் என்றும் தாழ்ந்து விடவில்லை. அவர்களும் பதிவுலகில் வெற்றிநடை போடுகிறார்களே!

வலைப்பூக்களில்(Blog) அறிவைப் பரப்பிய பலர், இன்று Facebook, Google+ ஊடாகத் தமது பணியைத் தொடருகின்றனர். ஏப்படியோ வலைப்பூக்களில் எட்ட முடியாத விருப்புகளை (Likes), பகிர்தலை (Shares) அவற்றில் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. ஆயினும், முறைப்படி வலைப்பூக்களை(Blog) நடாத்துவோர் அதிக விருப்புகளைப் (Likes), பகிர்தலைப் (Shares) பெற்று வெற்றிநடை போடுகிறார்களே! Facebook, Google+ இல் பதிவுகளை இட்டாலும் ஆவணத் தொகுப்பாகக் காண்பிக்க இயலாத போதும்,  வலைப்பூக்களில் காண்பிக்க முடியும் என்பதே சிறப்பு.

முறைப்படி வலைப்பூ(Blog) நடாத்துவது என்பது விரும்பியவாறு விரும்பிய பதிவுகளைப் பதிவு செய்த பின் படுத்து உறங்குவதல்ல. தமிழர் பண்பாட்டைப் பேணும் பதிவாகவும் வாசகர் விரும்பிப் படிக்கக் கூடிய அறிவாகவும் இருந்தால் போதாது. வாசகர் வாசிக்க எழுத்து (Text), வாசகர் உள்ளம் ஈர்க்கப் படம் (Photo) வாசகர் பார்க்கக் கேட்க என ஒலி(Audio) மற்றும் ஒளிஒலி(Video) போன்ற பல்லூடகப் பதிவுகளாக இருந்தாலும் போதாது. வாசகரை எமது வலைப்பூ(Blog) பக்கம் இழுத்து வரவேண்டும். இழுத்து வந்த வாசகர் எமது பதிவைப் படித்ததும் நாம் இழுத்து வராமலே அடுத்தடுத்த பதிவுகளைப் படிக்கத் தாமாகவே வரக்கூடியதான சிறந்த பதிவுகளை நாம் பதிவு செய்து பேணவும் வேண்டுமே!

வாசகர் விருப்பறிந்து பதிவெழுது என்கிறாய்... வலைப்பூவை(Blog) நடாத்து என்கிறாய்... வாசகரை இழுத்து வா என்கிறாய்...  இதற்கு அஞ்சியவர் முகநூலில் விழுந்தனர் என்கிறாய்... இந்தத் தொல்லைகளை எல்லாம் கடந்தவரே சிறந்த தமிழ் வலைப்பதிவர் என்கிறாய்... சரி! சரி! நானும் முயன்று பார்க்கிறேன். இப்படி முயன்று வெற்றி பெற்ற வலைப்பதிவர்களைக் கேட்டறிந்தோ கண்காணித்தோ புதிய உள்ளங்கள் எல்லோருமே வலைப்பூக்கள்(Blog) நடாத்தலாம் வாங்க!

வலைப்பூக்களில் (Blog) புதிய பதிவுகளை இட்டதும் Google+, Linkedin, Twitter, Facebook, Instagram போன்ற மக்களாய (சமூக) வலைத் தளங்களில் பகிருவதன் மூலம் வாசகரைச் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் வலைத் திரட்டிகளில் பகிருவதன் மூலம் வாசகரைச் சென்றடையும் என்றும் பகிர்ந்தனர். ஆயினும், வலைத்திரட்டிகள் நாளுக்கு நாள் செயலிழந்து வருவதும் பதிவர்களின் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருப்பதும் பதிவர்களை திரட்டிகளில் நம்பிக்கை இழக்கச் செய்துவிட்டது.

திரட்டிகளில் நம்பிக்கை இழந்த பதிவர்கள் மக்களைய (சமூக) வலைத்தளங்களில் நண்பர்களைத் திரட்டிக் குழு அமைத்துப் புதிய பதிவுகளைப் பகிருகின்றனர். அவ்வாறே திறன்பேசிகளில் (Smart Phone) கூடக் குழுக்களை அமைத்துப் புதிய பதிவுகளைப் பகிருகின்றனர்.

தொல்லைப் பேசிகள் போல தொல்லைக் குழுக்களும் பலருக்கு வெறுப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இலக்கின்றிச் சில குழுக்களில் தேவையற்ற பதிவுகளைப் பகிருவதால் பயனர்கள் அதிலிருந்து விலகிவிடுகின்றனர். கட்டுப்பாடுகள் நிறைந்த குழுக்கள் வெற்றிநடை போடுகின்றன.

வலைப் பதிவர்களுக்கான(Bloggers) குழுக்களாக முகநூலில்(Facebook) "தமிழ்ப் பதிவர்களின் நண்பன்" என்ற குழுவும் Google+ இல் "தமிழ்ப் பிளக்கர்ஸ்" என்ற குழுவும் செயற்பட்டு வருகின்றன.

Google+ இல் வலைப் பதிவர்களுக்கான கட்டுப்பாடுகள் நிறைந்த குழுவாக "உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்" என்ற குழுவும் திறன்பேசிகளில் (Smart Phone) Whatsup செயலியில் "தமிழ் வலைப்பதிவகம்" என்ற குழுவும் செயற்படுகிறது. இரண்டிலும் புதிய வலைப் பதிவுகளின் தலைப்பையும் இணைப்பையும் இணைத்தால் போதுமெனக் கட்டுப்படுத்துகின்றனர். இதனை இவர்கள் ஒழுங்காகப் பேணுவார்களாயின் எஞ்சிய வலைத்திரட்டிகளும் செயலிழந்து விடுமே!

மக்களாய (சமூக) வலைத்தளங்களில் "யாப்பா சாவு (மரணம்) அடைந்துவிட்டார். பாப்பா, வாம்மா ஆகியோரின் அருமைப் புதல்வர். ஏறு தழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டுக்கு) எதிராகக் கூப்பாடு போட்டவர்." என்றவாறு உயிரோரு வாழும் ஒருவருக்குச் சாவு (மரண) அறிவித்தல் வழங்குவோரை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவ்வாறே, திறன்பேசிகளில் (Smart Phone) கூடப் பாலியல் சார்ந்த பதிவுகளைப் பகிருவோரை எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவற்றையும் மீறி இவற்றினூடாகத் தகவல் பரிமாறி ஏறு தழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டுக்கு) எதிரான தடைய உடைத்து வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்களைப் பாராட்டுவோம்

வலை வழியே தமிழ் பண்பாடுகளை மீறிய கருத்துகள் பரிமாறப்படுவது நல்லது அல்ல. "நல்லதைப் பொறுக்கிப் படியுங்கள், கெட்டதைத் தவிருங்கள்" என எழுதுவதால் தமிழ் பண்பாடுகள் சீரழிய வாய்ப்புகள் அதிகம் என்பேன். இதன் அடிப்படையில் சிலர் சில குழுக்களைத் தொல்லைக் குழுக்கள் என்கின்றனரோ! இப்பவெல்லாம் தொலைபேசி வழிப் பேச்சுகள் கூட தமிழ் பண்பாட்டை மீறிக் காணப்படுகிறதே. அதனைப் பற்றிய பதிவொன்றைக் கீழே படியுங்க...

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் எவரோ - அவர்
"ஹலோ" என்று தானாம் முதலில் பேசினாராம்! - இங்கே
தொலைபேசியைக் கையில் பிடித்தவர்களோ - எப்போதும்
மதிப்பற்ற சொல்களைப் பாவிப்பதே தொல்லையாச்சு!

"அடியே! உன்னைக் கட்டிப்பிடிக்க விருப்பமடி
நடியாது மாலையே கடற்கரைக்கு வாவேனடி" என
எதிரே தொலைபேசியைத் தூக்கிய மாமியார்
மகளின் காதலன் சொல்க்கேட்டு மயங்கிவிழுந்தாராம்!

"கொஞ்சிக் கொஞ்சி நெடுநாள் ஆச்சு
கொஞ்சம் கோவில் பக்கம் வாவேன்டா" என
எதிரே தொலைபேசியைத் தூக்கிய மாமனார்
மகனின் காதலி சொல்க்கேட்டுக் கொதித்தெழுந்தாராம்!

"ஹலோ" வெனப் பிறமொழியில் பேசினால் பரவாயில்லை
தொலைபேசியில் பேசுமுன்னெதிரே எவரென்று அறியாது
பறைஞ்சுபோட்டு முறிந்தவுறவை எண்ணிப் பயனேது
தொலைபேசியில் நற்றமிழால் பண்போடு பேசலாந்தானே!

மின்னின்றிப் பணமின்றி பேசமுடியா விட்டால்
பயன்பாட்டு எல்லைக்கு அப்பால் என்றால் - ஏன்
கடன்காரர், தகாதவர் அழைப்பில் வந்தால் கூட
தொலைபேசியும் தொல்லைபேசியென அஞ்சுவோரைப் பாரும்!

வியாழன், 22 டிசம்பர், 2016

எவர் இவற்றைப் படிப்பித்தார்?

"நம்ம தமிழர் எல்லோரும்
போட்டி, பொறாமை,
வஞ்சகம், சூது, வாது எல்லாம்
எப்படிப் படித்தனர்?" என்று
அறிஞர் ஒருவர் ஐயம் எழுப்பினார்!

இராமாயணத்தில் கூனி மாமியும்
பாரதத்தில் சகுனி மாமாவும்
தமிழருக்குச் சூது, வாது படிப்பித்தார்களே!
போட்டி என்று ஒன்று
வந்துவிட்டால் பாரும் - நம்ம
ஆளுங்க சிங்கங்கள் தான் - ஆங்கே
நெஞ்சு நிறைய
வஞ்சகமும் பொறாமையும்
உயரப் பறக்க விரும்பும் (பதவி ஆசைக்) குணமே
படிப்பித்திருக்கலாம் - அதனைக் கற்ற
தமிழரின் செயலால் தான்
முகவரி இழந்த இனமாயிற்று
எங்கள் தமிழினம்!


இப்பதிவில் கலந்துள்ள பிறமொழிச் சொல்களை நீக்க முடியவில்லை. ஆயினும், பிறமொழிச் சொல்களுக்கு ஈடான தமிழ்ச் சொல்களை பின்னூட்டத்தில் தந்து உதவுங்கள்.

வெள்ளி, 18 நவம்பர், 2016

பாவலன் (கவிஞன்) ஆகுமுன் அறிவோம்!

பாவலன் (கவிஞன்) ஆக விரும்புவோர்
பாப்புனைய முன்னும் பாப்புனைகையிலும்
கீழான எண்ணங்கள் வந்தால் - கொஞ்சம்
மேலான எண்ணங்களாக மாற்றி
நல்ல எண்ணங்களைப் பகிரவும்
நல்ல எதிர்வைச் சுட்டியும்
நாட்டில் நல்லன விளையவும் - உன்
பாட்டில் புனைந்து காட்டிவிடு - உன்
பாவண்ணத்தைப் படிப்பவர் சுவைக்க - என்
எண்ணத்தில் பட்டதைப் பகிருகிறேன்!

பாவலன் (கவிஞன்) என்பான்
எண்ணி எண்ணிப் பார்த்து
(கற்பனையில் மிதந்து சென்று)
இங்கால இருந்து கொண்டே
கருங்கல் சுவருக்கு அங்கால
இருப்பதையும் துருவித் துருவி
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
எண்ணத் தோன்றியதையும் எண்ணி
(கற்பனையில் கண்டதையும் எண்ணி)
தெருவில் கண்டதையும் எண்ணி
தெருவில் கண்டவரையும் எண்ணி
கேலியும் நையாண்டியும் பண்ணி
பண்பாட்டைப் பேணும் வகையில்
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
காலம் கடந்ததும் உணருவீரென
காதலிக்காமல் இருந்தும் கூட
காதலித்தவன் போல எண்ணி
காதலின் முன்பின் விளைவை
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
கட்டினால் பட்டுத் தெளிவீரென
எவளுக்கும் தாலி கட்டாமலே
குடும்பம், அழகு (காமம்), வாழ்வு
எல்லாம் எப்படி என்றே
வரிக்கு வரி விரிப்பவனே!

பாவலன் (கவிஞன்) என்பான்
குப்பையைக் கிளறி விடும்
பெட்டைக் கோழியைப் போலின்றி
கல்லெறிந்து மக்களை நோகடிக்காமல்
சொல்லெறிந்து மக்கள் உள (மன) மாற்றி
நல்ல பண்பாட்டைக் காட்டி
நாட்டில் நல்லாட்சி மலர
வரிக்கு வரி விரிப்பவனே!

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

நான் கிறுக்கியதை இல்லாள் பரப்பினாள்!


ஆளுக்காள் எழுதி
ஊடகங்களுக்கு அனுப்பிவைச்ச பின்
அந்த ஏட்டில வந்தது
இந்த வானொலியில வாசித்தது
உந்தத் தொலைக்காட்சியல போனது
என்றெல்லாம் சொல்லுறாங்களேயென்று
"உச்சி மண்டை வெடிக்கிறதே
தலைக்கு மேலே பகலவனா?
நேரம் பன்னிரண்டு மணி!" என்று
நானும் எழுதி வைச்சதை
எப்படிப் பகிரலாமென்று தான்
எண்ணி எண்ணி பார்த்தேன்!

வெள்ளையரை வெளியேற்ற எண்ணி
கரித்துண்டெடுத்து
தெருவில எழுதி வெளியிட்டு
போர்க்குரல் எழுப்பியவன் பாரதியென்று
கவிராஜன் கதையில வைரமுத்து எழுதியது
நினைவிற்கு வர - நானும்
நானெழுதிய தாளை இல்லாளிடம் நீட்ட
அவளோ
ஊராளுகளுக்கெல்லாம் காட்டி
பொங்கும் இளமையோடு தானிருக்க
தெருப் பிச்சைக்காரக் கிழவி மீது
காதல் வந்ததாய் - தன்னவர்
எழுதியிருக்கிறாரே என்றெல்லோ
வெளியிட்டு வைத்துவிட்டாளே!