கண்டதே கோலம் கொண்டதே காதல்
என்பதும் பொய் தானே!
காதலைத் தேடிப் போனால்
பொய்க் காதல் - அது
இருவரையும் சேர்த்து வைக்காது!
காதல் ஒரு போதும்
எங்களை நாடி வராதென்பது
உலகில் பரவும் பெரிய பொய்!
நெடுநாள் பழகிய இருவருக்குள்
ஏற்படும் ஒத்திசைவு, ஓரிணக்கப்பாடு
தானாக வந்த காதல் இல்லாமல்
தேடிப் போய்ப் பிடுங்கிய காதலா?
உண்மைக் காதலர்களுக்கு
சோதிடம் பார்க்கத் தேவையில்லை என்று
சொதிடக்காரர் சொல்கிறார்!
இயல்பாய்ப் பழகிய இருவர்
ஒரே நேர் கோட்டில் பயணித்தால்
ஈருடல் ஓருயிராக
ஒன்றாய்ப் பொருந்திய உள்ளங்கள் தானே!
ஈருள்ளம் ஒன்றாய்ப் பொருந்தினால்
உண்மைக் காதலர் தானே - அவர்கள்
சோதிடத்தில்
குறிப்புப் பொருத்தம் பார்க்காமல்
திருமணம் செய்யலாம் தானே!
