Translate Tamil to any languages.

செவ்வாய், 27 ஜனவரி, 2015

எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்

எத்தனையோ கோடிப் பணப் பரிசுகள்
உங்களுக்குக் கிடைத்திருக்கிறதென
எத்தனையோ சிறப்பு மின்னஞ்சல்கள்
உங்களுக்கு வந்தவண்ணமிருக்குமே!
எத்தனையோ நம்மாளுகள்
அத்தனையும் உண்மையென நம்பி
எத்தனையோ இலட்சங்கள் செலவாக்கி
அத்தனையிலும் தோற்றுப் போனதைக் கண்டீரோ?
எத்தனையோ கோடி மின்னஞ்சல் பயனர்கள்
அத்தனை மின்னஞ்சல்களையும் நம்பி ஏமாறுவதனாலேயே
எத்தனையோ கோடி ஏமாற்றுக்காரர்கள் உலாவுவர்
அத்தனை மின்னஞ்சல்களிலும் கவனம் தேவையே!


சனி, 24 ஜனவரி, 2015

பாலகணேஷின் கவிதை எழுதுவது எப்படி?


எழுதத்தான் எண்ணிவிட்டால் எழுதிவிடலாம்
எதைத்தான் எழுதிவிட்டால் மகிழ்ச்சியடையலாம்
அதைத்தான் வலைப்பூக்களில் தேடிவிடலாம்
அப்படித்தான் தேடியதைத்தான் பகிர்ந்துவிடலாம்
அப்படித்தான் பகிர்ந்ததைத்தான் படித்துவிடலாம்

இப்படித்தான் பா/கவிதை புனையத்தான்
எப்படித்தான் எனக்குதவியதோ அதைத்தான்
கவிதை எழுதுவது எப்படி? என்று தான்
பாலகணேஷின் பதிவைத்தான் பகிர்ந்தேன்
நீங்களும் தான் படித்தால் தான்
பா/கவிதை புனையத்தான் வேண்டியதைத் தான்
பாலகணேஷும் சொல்லியதைத் தான்
கருத்தில் கொண்டால் தான்
பா/கவிதை புனையலாம் தான்
என்றெல்லோ சொல்ல வந்தேன்!

"எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம்
உன்னிடத்தில் சொன்னதெல்லாம் கொஞ்சம்" என
"மின்னல்போல கண்ணில் தோன்றி
   மினுக்கி நடந்திட்டாள் அப்பாவை
கன்னல் மொழியதனைப் பேசி
   என் மனதைத் திருடிவிட்டாள்!" என
மரபுக்கவிதை நடை கூறுகின்றாரே!

"கடவுள் ஒருவர் இருந்தால்
கஷ்டம் இத்தனை தருவானா
திருடன், அயோக்கியனெல்லாம்
மகிழ்வாய்த்தான் திரிவானா?" என
"நிலவு தெரிந்தது
தண்ணீரில் என்
காதலி முகம்!" என
புதுப்பா, துளிப்பா நடை கூறுகின்றாரே!

படித்துத்தான் பார்த்தால் தான்
பா/கவிதை புனையத்தான்
பா/கவிதை நடையத்தான்
கண்டுபிடித்தாலும் தான்
எதுகை, மோனையைத் தான்
சுட்டிச் சொன்னாலும் தான்
சுவை சொட்டத்தான்
இசை முட்டத்தான்
பா/கவிதை இருக்கத் தான்
சற்று இலக்கணந் தான்
தெரிந்தால் போதும் தான்
என்றெல்லாம் எண்ணிக் கொள்ளத்தான்
பதிந்திருக்கிறார் நல்ல பதிவைத் தான்!

அதைத் தான்
நீங்களும் தான் படிக்கத் தான்
கீழுள்ள இணைப்பைத் தான்
உங்களுக்குத் தான் தந்தேனே!
http://minnalvarigal.blogspot.com/2014/01/blog-post_21.html

வியாழன், 22 ஜனவரி, 2015

யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!


மதிப்புமிக்க, அன்புக்குரிய தமிழகப் பதிவர்களே!  உங்கள் யாழ்பாவாணன் 02/02/2015 - 07/02/2015 வரை தமிழ்நண்பர்கள்.கொம் பதிவரும் நண்பருமான சுஷ்ரூவா அவர்களின் (இந்திய-தமிழகம், கடலூர் மாவட்டம், வடலூர்) இல்லத்தில் தங்கியிருப்பார். தைப்பூசத் திருவிழாவின் பின் 05 அல்லது 06 ஆம் திகதி இலக்கியக் கருத்தரங்கு ஒன்றும் நடாத்த யாழ்பாவாணன் ஆகிய நான் எண்ணியுள்ளேன்.

வடலூருக்கு அண்மையில் வாழும் பதிவர்கள் எல்லோரும் வருகை தந்து சந்திக்குமாறு பணிவாக அழைக்கின்றேன். இவ்விலக்கியக் கருத்தரங்கில் படைப்பாக்கமும் வலைப்பூக்கள், கருத்துக்களங்கள், மின்வெளியீடுகள் பற்றியும் கலந்துரையாடலாம் என விரும்புகின்றேன். கருத்தரங்கு மற்றும் சந்திப்பு நாளை 04/02/2015 அன்று கீழ்வரும் நடைபேசி (Mobile) எண்ணுக்குத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்தலாம்.
சுஷ்ரூவா - 091 087 54979451

2011 சித்திரை இந்திய-தமிழகம், சென்னைக்கு வந்த வேளை பலரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. இம்முறையும் சென்னையில் இருந்து தொலைதூரம் சென்று தங்கியிருக்க வேண்டியிருப்பதால் பலரைச் சந்திக்க முடியாமல் போகலாம். ஆயினும், சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்குரிய மதுரை மண்ணின் வானூர்தி இறங்கு தளத்தில் எனது பயணம் தொடர்புபட்டுள்ளதால் விரும்பும் பதிவர்கள் மதுரை வானூர்தி இறங்கு தளத்தில் வந்து சந்திக்கவும் முடியும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்
http://yppubs.blogspot.com/
https://yarlpavanan.wordpress.com/
http://paapunaya.blogspot.com/
http://eluththugal.blogspot.com/
https://mhcd7.wordpress.com/

திங்கள், 19 ஜனவரி, 2015

பரிசு பெற்ற பதிவுகள் மின்நூலாக வெளிவரும்!

உலகத் தமிழ் வலைப்பதிவர்களே!
வலைப்பூக்கள் வழியே ரூபன் குழுவினர் அடுத்தடுத்து இலக்கியப் போட்டிகளை நடாத்துவது யாவரும் அறிந்ததே! இவ்வாறான போட்டிகளில் முதல் பத்துப் பதிவுகள் தெரிவு செய்யப்படுவது வழக்கம். 2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டுச் சிறுகதைப் போட்டியும் நடாத்துகிறார்களே!

யாழ்பாவாணன் வெளீயீட்டகம் ஆகிய நாம் ஒவ்வொரு போட்டியிலும் தெரிவு செய்யப்பட்ட முதல் பத்துப் பதிவுகளை ரூபன் குழுவினருடன் இணைந்து ஒவ்வொரு மின்நூலாக வெளியிட எண்ணியுள்ளோம். அவற்றை மின்நூலகமாக (Cloud Drive இல்) பேணி உலகெங்கும் பரப்ப எண்ணியுள்ளோம். ஒவ்வொரு மின்நூலிலும் உங்கள் பதிவு இடம் பெற வேண்டுமாயின் ரூபன் குழுவினர் நடாத்தும் ஒவ்வொரு போட்டியிலும் பங்குபற்றி முதல் பத்து இடத்திற்குள் தங்கள் பதிவு இடம் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுடன் நீங்களும் இணைந்து 2015 தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடாத்தப்படும் சிறுகதைப் போட்டிகளில் பங்கெடுக்க முன்வாருங்கள். மேலதிகத் தகவலைப் பெறக் கீழ்காணும் படத்தைச் சொடுக்குக.

உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

இப்போட்டிகள் யாவும் வருவாய் நோக்கமின்றி பொதுப்பணியாகவே (சேவையாகவே) நடாத்தப்படுகிறது. இதன் இலக்கு சிறந்த பதிவர்களை அடையாளப்படுத்தவும் தமிழை உலகெங்கும் பரப்பவுமே! உலகெங்கும் வாழும் வலைப்பதிவர்கள் ஒன்றிணைந்து இப்பொதுப்பணி வெற்றி பெற உழைப்போம் வாருங்கள்.


மணிமேகலையின் பெற்றோர் யார்?

மணிமேகலை என்பவர் யார் என்று தெரியுமா? சுயநல, இல்லற வாழ்வை விட்டு ஒதுங்கி பொதுநல வாழ்வில் ஈடுபட்டவள். அவரது பெற்றோர் யாரென்று தெரியுமா? கீழ்வரும் இணையர்களில் எவராக இருப்பர்?

1. மாதவி-கோவலன்

2. கண்ணகி-கோவலன்

எஞ்சிய ஈழத் தமிழரை...

இலங்கையில் எப்பகுதியேனும் தமிழருக்கு உரியதல்ல - கோத்தபாய ராஜபக்ச.
 
சிங்களவர் நிலப்பரப்பிலே தமிழர் அத்துமீறிக் குடியேறியோர்களே - எல்லாவெல மேதானந்த தேரர்.
 
இவை தான் இன்றைய சுடச்சுடக் கிடைத்த செய்திகள். இவை மீளவும் ஈழப் போர் ஏற்பட அடித்தளமிடக்கூடும் அல்லது புலம்பெயர் தமிழரால் இலங்கைக்கு வெளிநாட்டு நெருக்கடியை ஏற்படுத்த வல்லது. இது பற்றிச் சிங்கள அறிஞர்கள் சிந்தித்தார்களோ எனக்குத் தெரியாது.
 
குபேரன் என்ற பணக்காரன் இராவணன் என்ற அரசனுக்கு இலங்கையை அன்பளிப்புச் செய்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையின் அரசனான இராவணன் ஒரு தமிழன். இராமன் இராவணனை அழித்த பின் அவனது உறவுக்காரரையே ஆட்சியில் அமர்த்தினான். இப்படித்தான் தமிழர் ஆட்சி இலங்கையில் தொடர்ந்தது.
 
பின்னொரு காலத்தில் விஜயன், குவேனி உட்பட 600 ஆட்கள் இந்தியாவில் இருந்து தென்னிலங்கையில் வந்து குடியேறியதாகவும். அவர்களே சிங்களவர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், சோழ மன்னர் ஆட்சியில் பௌத்தம் பரவிய வேளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கும் அது பரவியதாம். இவ்வாறே பௌத்தம் தழுவியோர் சிங்களத்தைப் பாவித்தமையால் பின்நாளில் அவர்கள் சிங்களவர் ஆயினர் என்றும் கூறப்படுகிறது.
 
என்னறிவுக்கெட்டியவரை இலங்கை தமிழருக்கு உரியது; சிங்களவர் பின்நாளில் வந்தேறு குடிகளாயினர். எனவே கோத்தபாய ராஜபக்ச, எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோரது கருத்துகள் பொய் என்கிறேன்.
 
புத்தர் ஓர் அரசன். திருமணமாகி ஆண் பிள்ளைக்கு அப்பா. அரச, இல்லற வாழ்வை விட்டொதுங்கி தனது பட்டறிவால் உலகுக்கு வழிகாட்டியவர். பௌத்தம் ஒரு மதமல்ல. புத்தரின் வழிகாட்டலால் ஈர்க்கப்பட்ட மக்கள் குடும்பம். இவ்வுண்மை தெரியாத தேரர் எல்லாவெல அரசியலில் ஈடுபட்டால், புத்தருக்கு முந்திய தமிழரின் வரலாற்றை எப்படி அறிந்திருப்பர்.
 
இராணுவத்திலிருந்து ஓடித்தப்பி அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோத்தபாய, மகிந்த ஆட்சியில் படைத்துறைச் செயலரான ஒழுக்கமற்றவருக்கு தமிழரின் வரலாறு அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
என் உயிரிலும் மேலான தமிழறிஞர்களே! தமிழரின் தாயகம் இலங்கை என்றும் சிங்களவர் வந்தேறு குடிகள் என்றும் சான்றுப்படுத்தி உலக அரங்கில் முன்வைக்க வாருங்கள். இல்லையேல் எஞ்சியுள்ள ஈழத் தமிழரும் கடலில் குதித்து சாக நேரிடுமே!
 
கோத்தபாய ராஜபக்ச, எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோரது கருத்துகளைப் பொய்யெனச் சான்றுப்படுத்தாவிடின் சிங்களவரே, எஞ்சிய ஈழத் தமிழரைக் கடலில் குதிக்க வைத்துச் சாகவைப்பார்களே!
 
 

வியாழன், 15 ஜனவரி, 2015

தைப்பொங்கல் குறித்துப் பாப்புனைக

பாப்புனைதலும் சரி
கவிதை ஆக்குதலும் சரி
எம் கற்பனைக்கேற்ப எழுதிவிட்டால்
பா/ கவிதை ஆகாதே!
நூலைப் போல சேலை
தாயைப் போல மோளை
பாலைப் போல வெள்ளை
கடுகைப் போல காரம்
என்றடுக்கினால் போல
பா/ கவிதை ஆகாதே!
"பாலைப் போல
வெள்ளைச் சேலை உடுத்த அம்மா
குந்தியிருக்கக் கற கறவென
கிழிஞ்சு போகத் தானே தெரிந்தது
நூலைப் போல தானே
சேலை இருக்குமென்றே!" என்றால்
பா/ கவிதை போலத் தெரிகிறதே!
"தாயைப் போல
மோளைப் பார்த்தால் அழகி - அவளோ
சின்னப் பிள்ளை என்றாலும்
கடுகைப் போல காரமாய் - தன்
அறிவை வெளிப்படுத்தினாளே! என்றால்
பா/ கவிதை போலத் தெரிகிறதே!
தைப்பொங்கல்
குறித்துப் பாப்புனைக என்றதும்
"வளமுள்ளவர் வீடுகள் தோறும்
பொங்கல், படையல் என்றிருக்க
வீடு வீடாகச் சென்று
வளமற்றவர் கையேந்தி நிற்பதையும்
பகலவன் பார்ப்பாரே!" என்றால்
பா/ கவிதை போலத் தெரிந்தாலும்
"பொங்கின புக்கையை (பொங்கல்) விட
தண்டின புக்கையே (பொங்கல்) மேல்..." என்ற
தமிழ் முதுமொழியே நினைவிற்கு வருகிறதே!
பாப்புனைய விரும்பும் உறவுகளே
தைப்பொங்கல் குறித்துப் பாப்புனைய
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை,
உவமை, எதுகை, மோனை என
எல்லாம் தெரிந்தாலும் கூட
பா/ கவிதை புனையும் திறன் வேண்டுமே!
அதற்குத் தானே
சித்திரமும் கைப்பழக்கம்
செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே
அது போலத் தானே
ஏற்றதொரு பா/ கவிதை புனைய
தேடலும் பயிற்சியும் வேண்டுமே!





தை பிறந்தாச்சு வெளியீடுகள் என்னவாச்சு

உலகத்தார் தமிழ் கற்று
உலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வலைத்தளம்,
வலைப்பூ, கருத்துக்களம் என
இணையம் வழியே தமிழ் பரப்பும்
மதிப்புக்குரிய
படைப்பாளிகள், வாசகர் எல்லோருக்கும்
இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!
தை பிறந்தாச்சு - இனி
வெளியீடுகள் என்னவாச்சு என்பீர்...
எம்மைப் போல
எல்லோரும் இனிதே வாழ
எம் உள்ளத்து வெளியீடுகளை
எல்லோருக்கும் பகிருவோம்!

செவ்வாய், 6 ஜனவரி, 2015

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?

உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா? என்பது பதிவர்கள் பக்கமாய்க் கிளம்பும் கேள்விக்கணை இதுதான். உழவர் பெருநாள், ஞாயிற்றுப் பொங்கள், தமிழர் புத்தாண்டு எனப் பல சிறப்புக்களைக் கொண்ட தைப்பொங்கலே முதல் தேவை! அப்படியெனின் சிறுகதைப் போட்டியை என்ன செய்யலாம்? இரண்டாம் இடத்தில் வைக்கலாம். ஆயினும் முதலாம் இடத்துத் தைப்பொங்கலைப் பற்றி உலகம் எங்கும் படிப்பிக்க இரண்டாம் இடத்துச் சிறுகதைப் போட்டி உதவலாம் என்பதை; எவரும் மறக்கமாட்டார்கள் என்பதை நான் நம்புகின்றேன். ரூபன் குழுவினரின் பெரிய மதியுரைஞர்கள் பண்டிகை நாட்களில் போட்டி நடாத்துவதை இப்படித்தான் எண்ணிச் செயலில் இறங்கி இருப்பார்கள் என நம்புகின்றேன்.

உங்க நாட்டு, உங்க ஊரு, உங்க வீட்டு, சிலருக்கு காதலன்/ காதலி வீட்டுப் பொங்கல் பற்றி இழையோடி அப்பண்டிகை நாளில் நள்ளிரவின் பின் ஞாயிற்றுக் கதிர்கள் முற்றத்தில் வந்து விழ பொங்கல் பானை பொங்கி வழியும் வரை நடந்ததென்ன? அதனை ஒரு சிறுகதை ஆக்கி அனுப்பலாமே! 2015 பொங்கல் நாள் என்றதும் கடந்த காலப் பொங்கல் நாட்களில் நிகழ்ந்த சுவையான செய்திகளையும் சிறுகதை ஆக்கி அனுப்பலாமே!

என்னங்க சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? அப்ப நான், நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன். ஆனால் எனக்கு ஒரு உதவி செய்யுங்கள் உங்கள் கூகிள்+, லிங்டின், டுவிட்டர், பேஸ்புக் சுவர் பகுதிகளில் கீழ்வரும் இணைப்பை அறிமுகம் செய்து உதவுங்கள்.
http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html

அல்லது உங்கள் வலைப்பூக்களில் இடது/வலது பட்டை விட்ஜற் ஆக கீழ்வரும் இணைப்பைப் புகுத்தி விடுங்கள்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="200" width="200" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>

“எப்படி இருப்பினும் எனக்குச் சிறுகதை எழுத வராது” என்று பின்னடிப்பவர்களும் இருக்கிறார்கள் பாருங்கோ! அவர்கள் சின்னப் பொடியன் யாழ்ப்பாவாணன் எழுதிய கீழ்வரும் பதிவுகளைப் படித்த பின்னர் தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாமே!
கதைகள் புனையலாம் வாருங்கள்! (http://wp.me/pTOfc-aP)

என்னங்க நீங்கள் சிறுகதை எழுதக் கூடியவரா? “சிறுகதை எழுதுவது எப்படி?” என எதாவது பதிவு செய்திருக்கிறீர்களா? இந்தச் சிறுகதைப் போட்டியில் ஆகக் குறைந்தது நூறு பதிவர்களைப் போட்டியில் இணைக்கவல்ல பதிவுகளை உங்கள் வலைப்பூக்களில் ஆக்கி உதவுங்கள். அதற்குக் கீழ்வரும் இணைப்பைப் பாவிக்கலாம். இதனையே எனது பதிவின் தொடக்கத்தில் இட்டேன்.
<a target="_blank" href="http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html" title="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி">
<img src="http://yarlpavanan.files.wordpress.com/2015/01/2015-01-01_074945.jpg" height="480" width="640" alt="உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டி"></img>
</a>

தைப்பொங்கல் நாளை முன்னிட்டு நடைபெறும் சிறுகதைப் போட்டியில் அதிகமானோர் பங்குபற்ற ஒவ்வொருவரும் உதவுங்கள். போட்டியில் சிறப்படைய எல்லோரும் பங்குபற்றலாம். இப்போட்டியின் வெற்றியே அடுத்து வரும் போட்டிகளாக நகைச்சுவைப் போட்டி, நாடகப் போட்டி, பாட்டுப் போட்டி, மரபுக் கவிதையாக அந்தாதிப் போட்டி எனப் பல நடாத்த உதவுமென நம்புகிறேன்.




ஞாயிறு, 4 ஜனவரி, 2015

பதிவர் ஓடித் தலைமறைவு

நண்பர் ஒருவரின் பதிவிற்கு
நண்பர்கள் பலர்
கருத்துரைத்த போதும்
பதில்க் கருத்தைக் காணாமையால்
"பதில் கருத்துக்கு அஞ்சி
பதிவர் ஓடித் தலைமறைவு" என
நாளேடு ஒன்றில்
செய்தி போடவேண்டி வருகிறதே!
உண்மையும் தான்
திறனாய்வாளரின் கேள்விக்கு
பதிலளிக்கத் தவறினால்
உங்கள் மீது
வாசகர் மதிப்பு வைக்கமாட்டார்களே!
நண்பர்களே!
உங்கள் பதிவுக்கு
பிறர் கருத்துத் தெரிவித்தால்
உடனுக்குடன்
பதில் கருத்தைத் தெரிவியுங்களேன்!
ஒவ்வொருவரும்
தங்கள் பதிவினைப் பதிந்த பின்
ஒதுங்கி இருக்க முடியாதே...
ஒரு பதிவு
எப்போது நிறைவடைகிறது?
அதற்கான
எதிற்கணைகளுக்குப் பதில்
வழங்கப்பட்டிருந்தால் மட்டுமே!
பதிற்கணைகளுக்குப் பொறுப்புக்கூற
அஞ்சும் பதிவர்களே
எப்படித்தான்
உங்கள் எழுதுகோல்
உங்களுக்கு   ஒத்துழைக்கிறதோ
எனக்கும் தான் தெரியவில்லையே!
நானொரு பதிவினைப் பதிந்தால்
பதிந்த பதிவுக்குக் கிட்டும்
பதில்களையே பார்த்து
பதில் கூறி மகிழ்வடைவதனாலேயே
எனக்கும்
என் எழுதுகோல் ஒத்துழைக்கிறதே!
 
(இதழியல் நோக்கில் "எழுதிய எழுத்துக்கு எழுதியவரே பதில் கூற வேண்டும்" என்பதை வெளிப்படுத்தவே இப்பதிவினை மேற்கொண்டேன்.)