Translate Tamil to any languages.

வெள்ளி, 22 மே, 2026

நெஞ்சத்தில் உருளும் நன்றி

 





நன்றிக்கு நன்றியெனச் சொல்வதல்ல நம்மரபில்
நன்றிக் கடன்தீர்ப்பின் நன்று
  (ஒரு விகற்பக் குறள் வெண்பா)

செய்த செயலுக்கு
செய்நன்றி மறவாமல் நினை
செயலிலும் செய்நன்றி
           (துளிப்பா/ஹைக்கூ)

பலனை எதிர்பார்க்காது செய்
பகவத் கீதை சொன்னது
செய்த செயலுக்குச் செய்நன்றி
திருக்குறள் தான் சொன்னது
             (தன்முனைக் கவிதை)

இந்தியாவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டையில்17 மே 2026 ஞாயிறு அன்று இடம்பெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் ஹைக்கூ மாநாட்டில் எனது "யாழ்ப்பாவாணனின் துளிப்பாக்கள் ஹைக்கூ" பொத்தகம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதனை அச்சிட்டு, வெளியீடு செய்து சிறப்பித்த இனிய நந்தவனம் குழுமத்திற்கு மிக்க நன்றி. இவ்வெளியீட்டில் பங்கெடுத்த மதிப்புக்குரிய அறிஞர்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி.

எனது சொந்த ஊரான  இலங்கை, யாழ்ப்பாணம், மாதகலூரில் இப்பொத்தகம் விரைவில் (இந்தியாவில் இருந்து எனது ஊருக்குப் பொத்தகம் வந்து சேர்ந்ததும்) அறிமுகம் செய்து வைக்கப்படும்.

தகவல்: மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்

புதன், 13 மே, 2026

காதல் என்பது பொய் என்கிறாங்க

 


காதல்
ஒரு பருவக் குழப்பம் என்கிறாங்க...
எவர் அழகானவரோ
எவர் பணக்காரரோ
என்றெல்லாம் பழகுவதும்
இவரை விட அவர் அழகு
இவரை விட அவர் பணக்காரர்
என்றெல்லாம் ஆளையாள் மாற்றுவதாலே!
காதல்
ஒரு சுவைக்கும் வழி என்கிறாங்க...
ஆண் பெண்ணைச் சுவைத்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
பெண் ஆணிடம் - பொன்,
பொருள், பணம் வாங்கி
வருவாய் ஈட்டி மகிழ்ந்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
இருபாலாரும்
ஆளையாள் ஏமாற்றிச் சுவைப்பதாலே!
காதல்
ஒரு உப்புக் கருவாடு என்கிறாங்க...
காதலிப்பதாகக் கூறி
ஊருக்குள்ள கேவலமாக உலாவுதால் 
ஊரவரே
காறித் துப்பிப் பழித்து நெளித்து
கேலியும் நையாண்டியும் செய்வது கூட
கருவாட்டு நாற்றம் போல பரவுவதாலே!
காதலுக்குத் தான்
கண் இல்லை என்கிறாங்க...
கிழவி குமரனையும் குமரி கிழவரையும்
தாம் காதலிப்பதாக ஊருக்குள் உலாவுவதாலே!
காதலிலும் கூட
நகைச்சுவை இருக்கு என்கிறாங்க...
கள்ளக் காதல் செய்வோருக்கு
நல்ல காதலர் கிடைக்குது...
நல்ல காதல் செய்வோருக்கு
நம்பிக்கையான ஒருவரும்
கண்ணில் தென்படவில்லையென
காதலர் கிடைக்காதவரின்
கண்ணீர் கதை அது!
உண்மைக் காதல் என்பது
வேலிக்குள் பொட்டு வைத்து
மூஞ்சியை நீட்டிக் கதைப்பதால்
உருவான நம்பிக்கையான உறவென்று
ஆச்சி, அப்புமார் சொல்லி வைச்சாங்க!