காதல்
ஒரு பருவக் குழப்பம் என்கிறாங்க...
எவர் அழகானவரோ
எவர் பணக்காரரோ
என்றெல்லாம் பழகுவதும்
இவரை விட அவர் அழகு
இவரை விட அவர் பணக்காரர்
என்றெல்லாம் ஆளையாள் மாற்றுவதாலே!
காதல்
ஒரு சுவைக்கும் வழி என்கிறாங்க...
ஆண் பெண்ணைச் சுவைத்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
பெண் ஆணிடம் - பொன்,
பொருள், பணம் வாங்கி
வருவாய் ஈட்டி மகிழ்ந்ததும்
கைகழுவி விடுவதைக் காணலாம்!
இருபாலாரும்
ஆளையாள் ஏமாற்றிச் சுவைப்பதாலே!
காதல்
ஒரு உப்புக் கருவாடு என்கிறாங்க...
காதலிப்பதாகக் கூறி
ஊருக்குள்ள கேவலமாக உலாவுதால்
ஊரவரே
காறித் துப்பிப் பழித்து நெளித்து
கேலியும் நையாண்டியும் செய்வது கூட
கருவாட்டு நாற்றம் போல பரவுவதாலே!
காதலுக்குத் தான்
கண் இல்லை என்கிறாங்க...
கிழவி குமரனையும் குமரி கிழவரையும்
தாம் காதலிப்பதாக ஊருக்குள் உலாவுவதாலே!
காதலிலும் கூட
நகைச்சுவை இருக்கு என்கிறாங்க...
கள்ளக் காதல் செய்வோருக்கு
நல்ல காதலர் கிடைக்குது...
நல்ல காதல் செய்வோருக்கு
நம்பிக்கையான ஒருவரும்
கண்ணில் தென்படவில்லையென
காதலர் கிடைக்காதவரின்
கண்ணீர் கதை அது!
உண்மைக் காதல் என்பது
வேலிக்குள் பொட்டு வைத்து
மூஞ்சியை நீட்டிக் கதைப்பதால்
உருவான நம்பிக்கையான உறவென்று
ஆச்சி, அப்புமார் சொல்லி வைச்சாங்க!
