Translate Tamil to any languages.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

நான் கிறுக்கியதை இல்லாள் பரப்பினாள்!


ஆளுக்காள் எழுதி
ஊடகங்களுக்கு அனுப்பிவைச்ச பின்
அந்த ஏட்டில வந்தது
இந்த வானொலியில வாசித்தது
உந்தத் தொலைக்காட்சியல போனது
என்றெல்லாம் சொல்லுறாங்களேயென்று
"உச்சி மண்டை வெடிக்கிறதே
தலைக்கு மேலே பகலவனா?
நேரம் பன்னிரண்டு மணி!" என்று
நானும் எழுதி வைச்சதை
எப்படிப் பகிரலாமென்று தான்
எண்ணி எண்ணி பார்த்தேன்!

வெள்ளையரை வெளியேற்ற எண்ணி
கரித்துண்டெடுத்து
தெருவில எழுதி வெளியிட்டு
போர்க்குரல் எழுப்பியவன் பாரதியென்று
கவிராஜன் கதையில வைரமுத்து எழுதியது
நினைவிற்கு வர - நானும்
நானெழுதிய தாளை இல்லாளிடம் நீட்ட
அவளோ
ஊராளுகளுக்கெல்லாம் காட்டி
பொங்கும் இளமையோடு தானிருக்க
தெருப் பிச்சைக்காரக் கிழவி மீது
காதல் வந்ததாய் - தன்னவர்
எழுதியிருக்கிறாரே என்றெல்லோ
வெளியிட்டு வைத்துவிட்டாளே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!