Translate Tamil to any languages.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

எதைத் தான் எழுதிப் பழகிறது?

எழுதிப் படிக்க வைத்த
பெற்றோர்
மணல் மண்ணிலே ‘அ’, ‘ஆ’ எழுத
எனது சுட்டு விரலை
தேய்த்தெடுத்தும் கூட - என்
கையெழுத்து அழகில்லைப் பாரும்!
என் கையெழுத்து
அழகில்லை என்று ஒதுங்கினாலும்
மூ.மேத்தா போல பாவலராகலாம்
செங்கைஆழியான் போல கதாசிரியராகலாம்
என்றெல்லாம்
எடுத்துக்காட்டோடு எழுதப் பழகென்றால்
எதைத் தான் எழுதிப் பழகிறது?

பிறக்கும் போதே
பாவலராக, கதாசிரியராகப் பிறந்தவர்கள்
எழுதுவதைப் போல
எத்தனையைத் தான் எழுதிப் பழகினாலும்
நறுக்காக நாலு அடிகளில்
பா/ கவிதை புனைய வராதாம்
கதை சொல்லுறது போல
எழுதினாலும் கூட கட்டுரையாகிறதே...
சரி, கட்டுரை என்றாவது
செய்தி ஏட்டுக்கு அனுப்பினால்
கட்டுரைக்கான அடையாளமில்லையென
திருப்பி அனுப்பிறாங்களே!

செந்தமிழும் நாப்பழக்கம்
சித்திரமும் கைப்பழக்கம்
போலத்தான்
எழுதிப்பழக எண்ணித்தான்
எடுத்தேனே எழுது கோலும் தாளும்
எழுதியது எல்லாம் இலக்கியமா
எனக்கு ஒண்ணுமே ஏறவில்லையே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!