'அ' என்பவர் 'ஆ' வையும் 'இ' ஐயும் பிரித்தால் 'அ' உடன் 'ஆ' சேரும் என்பது பொய். 'அ' என்பவர் 'ஆ' வை அதிகம் விரும்பினால் இணைவது உறுதி. ஆதலால் 'இ' விலகிச் செல்லக் கூடும். இந்தக் கதையைச் சொல்ல முயற்சித்த பதிவு இது.
👧👦❤
என்னை
எவருடன் இருந்தும் பிரித்தாலும் கூட
பிரிந்தவரின் எண்ணங்கள்
உள்ளத்தில் உருண்டு கொண்டிருப்பதால்
என்னோடு புதியவர் இணைய
வாய்ப்பில்லைக் கண்டியளோ!
என்னோடு
புதியவர் ஒருவர் இணைந்துவிட்டால்
புதியவரின் செயல், குணம் அறிந்து
என்னோடு இருந்த பழையவர்
என்னை விட்டுப் பிரியலாம் கண்டியளோ!
பழைய உறவைப் பிரிப்பது
சுகமாக இருந்தாலும் கூட
புதிய உறவை இணைத்துக் கொள்வது
இயலாமல் போகவும் கூடும் என்றே
மூன்று கோணப் பார்வை
எனக்கு உணர்த்துகிறது - ஆதலால்
மாற்றாரைப் பிரிக்காமல்
மாற்றாரை இணைக்க முயலும் காணும்!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!