👨👩👧👤
இன்றைய செய்தி!
புலனாய்வுப் பிரிவு
திடீர் பணக்கார உறவுகளைப் பிடித்து
எப்படி - தங்களால்
திடீர் பணக்காராக முடிந்தது என்று
விசாரணை செய்யப் போகிறார்களாமே!
பணம் வந்த வழியைக் கூறா விட்டால்
பணத்தை அரசுடைமை ஆக்குவதும்
தரம் வாய்ந்த தண்டனைக்கு
ஆளை நீதிமன்றில் ஒப்படைப்பார்களாம்!
புலனாய்வுப் பிரிவு
ஏழைகளைப் பிடித்து - அவர்களை
பணக்காரர் ஆவது எப்படி என்று
தொழில் வழிகாட்டலைச் செய்யலாம்
எதற்கும் இயலாதவர்களுக்கு
அரச உதவி பெற்றுக் கொடுக்கலாம்
என்றெல்லோ
ஏழைகள் முன்னேற்ற முன்னணி
ஒருவேளை உணவுக்குக் கெஞ்சி நிற்கின்றது!
ஆண்டவா! அளவுக்கு மிஞ்சி நீண்டவா!
ஏழைகளைக் கொஞ்சம்
திரும்பிப் பார்க்க மாட்டாயா?
உன் மூச்சுக் காற்றுக் கூட
பணக்காரர் வீட்டுப் பக்கமாகவே வீசுகிறது!
எம்மைப் படைத்த ஆண்டவா!
ஏழைகளை ஏன் படைத்தாய்?
என்றல்லவா - உன்னிடம்
ஏழைகள் முன்னேற்ற முன்னணி
ஒவ்வொரு நாளும் அழுது வடிக்கின்ற
கண்ணீரால் நாடே நனைகின்றது!