பிறந்தவர் எல்லோரும்
இறப்பது வழக்கம் தான்!
எப்போது சாவு வரும் என்று
எனக்கும் தெரியவில்லையே!
என்னுயிரைப் பறிக்கும் இயமனோடும்
தொடர்புகொள்ள முடியவில்லையே!
இயமனின் கணக்குப்பிள்ளையோடும்
(சித்திரபுத்திரனார் உடனும்)
தொடர்புகொள்ள முடியவில்லையே!
என் சாவு எப்பவென்று
யாரிடம் கேட்டறிவது?
யாராச்சும் சொன்னார்கள் என்றால்
எள்ளுப் போல
எப்பன் நிம்மதியாகக் கிடப்பேனே!
என் சாவு எப்ப வரும் என்று
எனக்கும் தெரியவில்லையே!
இப்படிக்கு
சாவு வருமெனக் காத்திருக்கும்
பிள்ளைகளால் கைவிடப்பட்ட
முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்!
ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)
Translate Tamil to any languages. |
வியாழன், 3 ஜூலை, 2025
சாகும் நாள் தெரியவில்லையே!
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்)

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!