அப்பா, அம்மா வைச்ச பெயர்
உயிரழகன் - அதனை
சொல்ல எவருமில்லை! - ஆனால்,
நல்லது செய்தால் இன்னாருடைய பிள்ளை
நல்லது செய்தானென்று
நாலு நாள் கொண்டாட்டம் போடுவாங்க!
ஐந்தாம் நாள் பாரும்
எல்லாம் காற்றிலே போய்விடும்!
எவருமே உயிரழகனைக் கவனிக்க மாட்டாங்க!
கெட்டது செய்தானென்று வைத்துக் கொள்க...
இன்னாருடைய பிள்ளை
கெட்டது செய்தானென்று
உலகெங்கும் பரப்பிப் போடுவாங்க!
பிறந்த நாள் தொடக்கம்
உடலில் ஒட்டிய அடையாளம் போல
(உயிரழகனின் கண்ணுக்குத் தெரியாத
கன்னக்குழி அழகும் கறுப்பு மச்சமும போல)
கெட்டது செய்த செயலாளர் என்று
சுடலையில் பிணம் எரியும் போதும்
ஊர் வாய் பேசும் எவர் தடுப்பார்!
நல்லதைச் செய்தால்
காற்றிலே பறந்து போய்விடும்!
கெட்டதைச் செய்தால்
உடலிலே ஒட்டிக் கிடக்கும் - அதைச் சுட்டி
ஊருலகம் கேலி பண்ணிக் கொண்டிருக்கும்!
ஒரு கோடி ஆண்டு சிந்தித்து
ஒரு முடிவுக்கு வந்தாச்சு - அது
காற்றிலே பறந்து போனாலும்
நல்லதை மட்டும் செய்த செயலாளர் என்ற
பெயரோடு சாகலாம் என்று தான்!
ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!