அன்று உணவே மருந்தாகும்!
இன்று மருந்தே உணவாகிறது.என்று தீரும் இந்தச் சிக்கல்?
அரிவரி, தொடக்கக்கல்விக்கு மேலே
பெரிதாக ஏதும் படிக்காத என்னிடம்
மருத்துவமனையை, மருத்துவரை நாடாதிருக்க
மருந்தொன்று தாவென்று கேட்கிறார்களே!
உண்டது உடலில் ஒட்ட
நாறும் வியர்வை வெளியேறும் வண்ணம்
உடற்பயிற்சி செய்ய வேணுமாம்!
(அது வயாக்கரா மருந்துக்கு ஈடானதாம்!)
இரண்டு (மலம், சலம்) அடக்கிப் பேணாமல்
ஒழுங்காக வேளியேற வைக்க வேணுமாம்!
உடலில் குருதி (கீமோகுளோபின்) வற்றாதிருக்க
கீரைவகைக் கறிகள் உடன் - உப்பில்லா
நன்நீரை நன்றாகக் குடிக்க வேணுமாம்!
தவிடு நீக்காத அரிசியில் சோறாக்கி
உப்பு, புளி, காரம், எண்ணெய் குறைத்து
விரும்பிய கறிகள் காய்ச்சி
(சுருங்கக் கூறின் அவியல் கறி, சோறு)
உண்டது செமிக்க 4 மணி நேரம் விட்டு
மூன்று வேளை கால் வயிறு உண்டு
கால் வயிறு நன்நீர் குடித்தும் தான்
எஞ்சிய வயிற்றில் காற்றுக் குடிகொள்ள
உண்டு வந்தாலும் 8 மணி நேரத் தூக்கத்துடன்
உண்டு களித்து வந்தால் பாரும்
மருத்துவரை நாடவேண்டி வராதாமே!
மருந்தே உணவாகாமல்
உணவே மருந்தாகும் என்ற
கதை, பாட்டு, கட்டுரைகள் எனப் பல
எங்கட மாதகலூர்
மயில்வாகனப் புலவர் வாசிகசாலையில்
வாசிக்கக் கிடைத்த பத்திரிகைகளில்
படித்துப் பொறுக்கித் தொகுத்த தகவலையே
சுருக்கிச் சொல்லி இருக்கிறேன்!
உண்ணானத் தான் சொல்கிறேன் - அதற்காக
தங்கட உழைப்பில தான்
மண் அள்ளிப் போட்டிட்டான் என்று
மருத்துவர்கள் என்னைத் திட்டக்கூடாது!
ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)
பெரிதாக ஏதும் படிக்காத என்னிடம்
மருத்துவமனையை, மருத்துவரை நாடாதிருக்க
மருந்தொன்று தாவென்று கேட்கிறார்களே!
உண்டது உடலில் ஒட்ட
நாறும் வியர்வை வெளியேறும் வண்ணம்
உடற்பயிற்சி செய்ய வேணுமாம்!
(அது வயாக்கரா மருந்துக்கு ஈடானதாம்!)
இரண்டு (மலம், சலம்) அடக்கிப் பேணாமல்
ஒழுங்காக வேளியேற வைக்க வேணுமாம்!
உடலில் குருதி (கீமோகுளோபின்) வற்றாதிருக்க
கீரைவகைக் கறிகள் உடன் - உப்பில்லா
நன்நீரை நன்றாகக் குடிக்க வேணுமாம்!
தவிடு நீக்காத அரிசியில் சோறாக்கி
உப்பு, புளி, காரம், எண்ணெய் குறைத்து
விரும்பிய கறிகள் காய்ச்சி
(சுருங்கக் கூறின் அவியல் கறி, சோறு)
உண்டது செமிக்க 4 மணி நேரம் விட்டு
மூன்று வேளை கால் வயிறு உண்டு
கால் வயிறு நன்நீர் குடித்தும் தான்
எஞ்சிய வயிற்றில் காற்றுக் குடிகொள்ள
உண்டு வந்தாலும் 8 மணி நேரத் தூக்கத்துடன்
உண்டு களித்து வந்தால் பாரும்
மருத்துவரை நாடவேண்டி வராதாமே!
மருந்தே உணவாகாமல்
உணவே மருந்தாகும் என்ற
கதை, பாட்டு, கட்டுரைகள் எனப் பல
எங்கட மாதகலூர்
மயில்வாகனப் புலவர் வாசிகசாலையில்
வாசிக்கக் கிடைத்த பத்திரிகைகளில்
படித்துப் பொறுக்கித் தொகுத்த தகவலையே
சுருக்கிச் சொல்லி இருக்கிறேன்!
உண்ணானத் தான் சொல்கிறேன் - அதற்காக
தங்கட உழைப்பில தான்
மண் அள்ளிப் போட்டிட்டான் என்று
மருத்துவர்கள் என்னைத் திட்டக்கூடாது!
ஆக்கம்:-
யாழ்ப்பாவாணன்
(மாதகல்வாசி காசி.ஜீவலிங்கம்)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!