Translate Tamil to any languages.

வெள்ளி, 29 டிசம்பர், 2017

பெண்களே காதல் வலையில் சிக்காதீர்!

இவை நகைச்சுவையோ நகைச்சுவை இல்லையோ வாசகரே முடிவு செய்யுங்கள். என் எண்ணத்தில் எழுந்த ஐயங்களைப் பகிருகிறேன்.
1.
தம்பி: நீயோ அவளை ஓடி ஓடிக் காதலித்தாய்! அவளோ அடுத்தவனைத் தாலி கட்டெனத் தலையை நீட்டுகிறாளே!

அண்ணன்: கொடுப்பனவு (சீதனம்+ஆதனம்) ஏதும் கேட்காதவனைப் பார்த்து எவளும் நாடலாம். வருவாயோடு வருபவளே எனக்குத் தேவை!

தம்பி: அப்ப காதல்...?

அண்ணன்: வருவாய்க்காரி எவளென்றறியவே!

2.
ஒருவள்: அடியே! என்னுடைய அழகன், காதலிக்கவோ தாலி காட்டவோ மாட்டேன் என்கிறானடி!

அடுத்தவள்: ஐம்பது ஏக்கர் நெற்காணி, நாற்பது இலட்சம் காசு, முப்பது இலட்சம் நகை, இருபது இலட்சம் பெறுமதியான மாடிவீடு பத்துப் பரப்புக் காணியில இருக்கு என்று சொல்லடி...
உன்னுடைய அழகன் என்னடி, ஆண்டவரே வந்து உன்னைக் கட்டுவாரடி!

3.
ஒருவன்: நான் உன்னைக் காதலிக்கிறேன் (143). உனக்கு விரும்பமா தோழி?
ஒருவள்: கணவன், பிள்ளைகளைக் கேட்டுச் சொல்கிறேன். என் கணவனே உனக்கு பதிலளிப்பாரே!

4.
இவளைக் காதலிக்கக் கேட்பவரெல்லாம்
குதிக்கால் பிடரியிலடிக்க ஓடுறாங்களாமே!

தானோ காவற்றுறைக் கதிரவனின் மனைவி என்றதும்...

5.
அவருக்கு அடிக்கடி காதல் தோல்வியாமே!

திருமணம் என்றதும் கொடுப்பனவு (சீதனம் + ஆதனம்) கேட்பதாலேயாம்!

6.
ஒருத்தி: ஏனடி அவரிடம் இருந்து மணமுறிப்புக் (டிவோஸ்) கேட்கிறாய்?

அடுத்தவள்: தாய்க்கு நோய் என்றதும் முதியோர் இல்லத்தில விட்டது போல, என்னையும் தெருவில விட்டாலுமென்று தான்...

7.
மூக்கு முட்டக் கடையில விழுங்கிப் போட்டு, கண்ணை உருடிப் பிரட்டி முழிக்கிறாரே!

காதலியின் கைப்பையில காசில்லையென, அவளும் கைவிரித்ததாலே!

8.
போட்டிக்குப் பாட்டெழுதி அனுப்பியவருக்கு பரிசில் இல்லையாமே!

பரிசு பெறுபவரின் பாட்டைப் படியெடுத்து அனுப்பியதாலாம்!

9.
முதலாமவர்: என்னடா... நேர்காணலென்று போனவர் தோல்வியோடு திரும்புகிறார்!

இரண்டாமவர்: கோட்பாடு (Theory) தெரிந்தளவுக்கு செயற்பாடு (Practical) தெரியாதாம்.

முதலாமவர்: அதென்னடா படிப்பு

இரண்டாமவர்: கடித மூலம் (Postal Learning Scheme) கணினி வன்பொருள் பட்டயப்படிப்பு (Diploma in computer Hardware) என்கிறாங்க...

10.

வகை வகையாக (பிஸ்ஸா கட், KFC, மக்டொனால்ட் போல) கடைக்குக் கடை சாப்பாடு இருக்கு, பணமிருந்தால் விழுங்கலாம்!

நோய்களை உடலுக்குள் திரட்டியதும் சாகத் துடிக்கையில் அவற்றின் அருமையை அறியலாம்!

11.
நான் சமைத்தால் - மனைவி
உண்ணமாட்டாள்!

மனைவி சமைத்தால் - நான்
உண்டதும் உறங்கிவிடுவேன்!

12.
ஒருவள்: தலைக்கவசம் (ஹெல்மெட்) ஒன்றைக் கண்டீரோ? என்னுடையதைக் காணவில்லையே!

ஒருவன்: அங்கே பார்...! தலைக்கவசம் (ஹெல்மெட்) நிறைய பணத்தை அள்ளிக்கொண்டு போறாளே!
பயனர்: இருசாராரும் இரண்டையும் களவெடுக்கிறாங்களே!

13.
நாட்டில விபத்துகள் அதிகமாக ஆள்களும் மடிகிறாங்க...

கால் எட்டாதவங்களும் உந்துருளி (Motor Bike) ஓடுவதனாலாம்!

14.
வண்டிகள் மோதித் தெரு மரங்களும் சாகின்றன...

வண்டி ஓட்டுநர்கள் நித்திரையில் வண்டிகளைச் செலுத்துவதனாலாம்...

15.
பயணிகள் சாவுக்குக் காரணம் குன்றும் குழியுமான பாதைகளா?

ஓட்டுநர்கள் தூங்கிவிடுவதனால், வண்டிகள் நடனமாடுமாம்; பயணிகள் சாவதற்கே...

16
நகைச்சுவையாகப் பேசுவோம்; நோய்களை நெருங்காமல் பேணலாம்.

எந்தச் சுவையையும் வாசிக்க ஆளில்லாத சூழலிலா?


பிறக்கும் போதும் தெரியவில்லை
இறக்கும் போதும் தெரியவில்லை
வாழும் போது தெரிகிறதே!



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!