Translate Tamil to any languages.

வியாழன், 3 ஜூலை, 2014

கைக்குக் கைமாறும் பணமே - 05

ஆற்றங்கரையூராரின் ஒற்றுமையைக் கண்டு
அயலூராரிற்கும் இருப்புக் கொள்ளாது
அன்றொரு நாள் ஆங்கே
ஐங்கரன் வீட்டு அண்டையாள் வீட்டில
பொன், பணம் பொறுக்கிய திருடனை
அன்னக்கிளி போட்ட கூப்பாட்டில
ஊரேகூடி நின்று பிடிச்சிட்டாங்க!

ஊரேகூடி வருமுன்னே - அங்கே
ஐங்கரன் வீட்டு நாயெல்லோ
அன்னக்கிளி வீட்டுக் கள்ளரைக் கடிக்க
கள்ளர் போட்ட கூப்பாட்டில வந்த
ஊராருக்கு விளங்கிப் போச்சுதே
காசுக்கு மேலே படுப்பவள் தானே
ஐங்கரன் வீட்டு அண்டையாளென்றே!

ஊர்கூடி வீட்டுநிலை பரப்புதென
கள்ளரைக் காவற்றுறையில கொடென
அன்னக்கிளி மதியுரை கூறவே
ஐங்கரனும் நண்பர்களும் இறங்க
வைப்பகங்களில வைச்சதாலே தானே
கள்ளர் கைக்கு ஏதும் எட்டாமையே
வீட்டிற்கு உள்ளே தேடியலைய
என்காதுக்கெட்ட நானழுதேனே
நானழுவதைக் கேட்ட நாய்களே
கள்ளரைக் கடித்ததென்றாள் அன்னக்கிளி!

ஆற்றங்கரையூராரின் களவுச் செய்தி
நாளேட்டில வெளிவந்ததைப் படித்த
உறவுக்காரங்க நேரே வந்தாங்க
வைப்பகங்களில வைக்காட்டித் தாவேன்
எங்கட வீடுகளில வைக்கலாமென்றே
தங்கட எண்ணங்களைப் போட்டுடைக்க
என்னட்ட என்ன இருக்கென எண்ணி
கேட்கிறியளெனக் கேட்டாள் அன்னக்கிளி!

பொன், பொருள், பணம் வைத்திருப்போர்
பொத்திப் பொத்தி வைத்திருப்பரே
சொல், செயல், நடை கண்டே
கள்ளரும் களவெடுக்க இடம் காண்பரே
நன்நாள் அலங்கரிப்பு ஆளிட்டையும்
கஞ்சன் வீட்டில பணமிருக்கு என்றும்
கண்டுகொண்ட கள்ளர் இறங்கவே
ஊரறியுமே பணக்காரர் யாரென்றே!
(தொடரும்)

8 கருத்துகள் :

  1. வணக்கம்
    நன்றாக சொல்லியுள்ளீர்கள் தொடர் பதிவுக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. சுவாரஸ்யம்... ஆவலுடன் காத்திருக்கிறேன்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. நல்ல கருத்துக்கள் அருமையாக போகிறது.... போகட்டும், போகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!