நாங்கள் இந்தியர்கள்
நமக்குள்ளே தமிழ்நாடு, கேரளாவா
இடையிலே தலையை நீட்டும்
முல்லைப் பெரியார் அணை
தமிழ்நாட்டாரையும், கேரளாவாரையும்
பிரிப்பதற்கென்றே நீண்டதா?
அப்படியாயின்
தமிழ்நாட்டாரும், கேரளாவாரும்
இந்தியர்கள் இல்லையா?
மாநிலங்களுக்குள் மோதல் என்றால்
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் தான்
கொண்டாட்டம் என்பதை அறிவீரா?
பாகிஸ்தான்-ஜம்முகஸ்மீர்
சீனா-தீபெத் இந்திய எல்லை
மோதல்களைத் தூண்டவா
மாநிலங்களுக்குள் மோதல்?
முதலில்
இந்திய வல்லரசைக் கட்டியெழுப்புவோம்
இரண்டாவதாக
காவிரி நீரைப்போல எல்லா நதிகளையும்
சமபங்கீடாய்ப் பாவிக்கலாம் வாருங்களேன்!
Translate Tamil to any languages. |
சனி, 9 ஆகஸ்ட், 2014
முல்லைப் பெரியார் அணை
லேபிள்கள்:
2-எளிமையான (புதுப்)பாக்கள்
ஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
காவிரியும் அடிக்கடி 'தண்ணி ' காட்டிக் கொண்டுதான் இருக்கிறது !
பதிலளிநீக்குதங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
நீக்குமிக்க நன்றி.