Translate Tamil to any languages.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

கதை எழுதப் புகுமுன்


நண்பர் ஒருவர் கதை எழுதுவது எப்படி என என்னைக் கேட்கிறார். அவருக்குக் கூறியதை உங்களுடன் பகிர முனைகிறேன். கதை எழுதப் புகுமுன் இவற்றையும் கருத்திற் கொள்ளவும்.

தூரத்து வேலியை மாடு பிடுங்க, நானும் அதைக் கலைக்க நகர்ந்தேன். ஐயோ! அம்மோய்! எனக் காலத் தூக்கினேன். காலடியில் எரிந்த குப்பைச் சாம்பலில் நெருப்பு இருந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் காலுக்குச் சூடு வேண்டத் தேவை இருந்திருக்காது. இனியென்ன, “பர்ணால்என்றொரு கழி மருந்தைப் பூசியவாறு என்னை நொந்தேன்.என்றவாறு நாம் பட்டறிந்ததை (அனுபவித்ததை) நேரடியாகக் கதையாக எழுதலாம். இதனைப் பட்டறிந்தது (அனுபவித்தது) போன்றும் இவ்வாறு புனைந்து எழுதலாம்.

அழகான பெண்ணொருத்தி அந்த வழியாலே போனாள். அவளுக்குப் பின்னாலே ஐந்தாறு ஆண்கள் பின் தொடர்ந்தனர். காதல் செய்யலாம் எனக் கல்லெறிந்து பார்க்கவோ தெரியவில்லை. அந்தப் பெண்ணுக்கு முன்னாலே இரண்டு பிள்ளைகளோட ஒற்றைக் காலில் ஒருவர் தாங்கு தடியுடன் வந்தார். அம்மா! அப்பா எங்களுக்குக் குளிர்களி (ஐஸ்கிறீம்) வேண்டித் தந்தவர்.என்று அந்தப் பெண்ணிடம் இரண்டு பிள்ளைகளும் சொன்னார்கள். அதனைக் கண்ட ஐந்தாறு ஆண்களும் கிழடியிடம் மண்டியிடுவதா என ஓட்டம் பிடித்தனர். ஒற்றைக் காலனுக்குத் துணையாக இரண்டு பிள்ளைக்குத் தாயாகத் தன்னை ஈகம் செய்த பெண்ணைப் போற்றலாம். ஓட்டம் பிடித்த ஆண்களுக்குக் கண்ணில்லையா? காதலுக்குக் கண்ணில்லையா?’ என்று எண்ணத் தோன்றுதே!என்றவாறு பார்த்த நிகழ்வைக் கதையாக எழுதலாம். பார்த்தது போன்றும் இவ்வாறு புனைந்து எழுதலாம்.

இதேபோல ஒருவர் சொன்ன கதையைக் கூட, அப்படியே கதையாக எழுதலாம். இவ்வாறு தொடங்கி இவ்வாறு முடிவதாகவும் நீங்கள் சொல்வதாகவும் கதையை எழுதலாம். தேவையற்ற சொற்களை நீக்கி (சொற் சிக்கனம் பேணி) இறுக்கமாகக் கதை புனையலாம். ஒரு மின்வெட்டு நிகழ்ந்து சிறிது நேரத்தில் மின்னொளி வந்ததும் நடந்த நிகழ்வைப் பகிருகிறோம் தானே! அதுபோலத் தான் சிறுகதை புனைதலும்.


நண்பர்களே! பெரிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை வாசிக்க மறக்கவேண்டாம். அவர்களின் எழுத்தாளுமை, எழுத்து நடை உங்களுக்கு வழிகாட்டுமே! இதனைப் புரிந்துகொண்டால் நீங்களும் எழுத்தாளர்களே! பிறமொழிச் சொல் கலக்காது செந்தமிழில் கதை எழுதி தூய தமிழ் பேண முன்வாருங்கள்.

2 கருத்துகள் :

  1. வெற்றி வேல் சொல்கிறார்: 6:29 பிப இல் ஜூன் 8, 2013

    பயனுள்ள பதிவு!!!

    நன்றி…

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 8:07 பிப இல் ஜூன் 8, 2013
      எனது தளத்திற்கு அடிக்கடி வாருங்கள்.
      நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!