Translate Tamil to any languages.

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

செய்தி எழுதுவதில் வெற்றி காண

படித்தவர்கள் பலர் இருகிறார்கள். பலரது பதிவுகளைப் படித்த பின் குறை, நிறை கூறி சிறந்த பதிவுகளை ஆக்க ஊக்கமளிப்பார்கள். சிலர் சிறந்த பதிவுகளைத் தாமே எழுதி, அவ்வாறே பிறரும் எழுத வழிகாட்டுவர். எழுத விரும்பும் நாங்கள் தான் தேடிப் பொறுக்கிக் கற்று எழுதுவதில் வெற்றி காணவேண்டும்.

செய்தி எழுதுவதாயினும் சரி, கட்டுரை எழுதுவதாயினும் சரி; தொடக்கம் (தலை), விரிப்பு (உடல்), முடிவு (கால்) என அமைத்து எழுதலாம். நாய் மனிதரைக் கடிப்பது வழக்கம். ஆனால், மனிதர் நாயைக்  கடிப்பது செய்தி. அப்படி ஒன்று நடந்ததாக எழுதிக் காட்டுவோமா?

"ஆற்றூரில் நாயைக் கடித்த மனிதர்" என்று தலைப்பிடுங்கள்.

"குளித்துவிட்டு ஆற்றங்கரையேறிய மனிதர் நாயைக் கடித்து விட்டார்." என்று தொடக்கம் (தலை) எழுதலாம். "அதாவது, தான் உடுத்திய உடைகளைக் கரையில் விட்டுச் சென்ற மனிதர்; தன் உடைகளின் மேல் படுத்திருந்த நாயை விரட்டியுள்ளார். நாயோ குறித்த மனிதரைக் கடிக்க முயன்று இருக்கிறது. கோபமடைந்த அம்மனிதர் நாயைக் கடித்து விட்டுக் கலைத்த பின், தன் உடைகளை எடுத்து உடுத்துள்ளார்." என்று விரிப்பு (உடல்) அமைக்கலாம். "மேலும், அக்காட்சியினை நேரில் கண்டவர்கள்; 'போயும் போயும் நாயைக் கடிக்க மூளை வேலை செய்திருக்கிறதே!' என்று தமக்குள்ளே முணுமுணுத்துச் சென்றனர்." என்று முடிவு (கால்) எழுதலாம்.

குட்டிச் செய்தி எழுதியாச்சா? அப்படியாயின் பத்திரிகைக்கு அனுப்பலாமா? அங்கே தான் சற்றுச் சிந்திக்க வேண்டும். நாம் எழுதியதை விட அடுத்தவர் சிறப்பாக எழுதியிருந்தால்; அதனையே பத்திரிகை ஆசிரியர் தெரிவு செய்வார். அப்படியாயின் அடுத்தவர் கையாளும் நுட்பங்களைத் தேடிப் பொறுக்கிக் கற்று எழுதுவதன் மூலமே இத்தடையைத் தாண்ட முடியும்.

செய்தி எழுதுவதில் வெற்றி காண வேண்டுமாயின் இவ்வாறான தடைகளை உடைத்தெறியக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்குப் பல செய்தி ஏடுகளைத் தேடி, அவை கையாளும் செய்தியை வெளிப்படுத்தும் நுட்பங்களைக் கண்டறிந்து எழுத வேண்டும்.

2 கருத்துகள் :

  1. நல்லதொரு பயனுள்ள ஆக்கம். வாழ்த்துகள் அய்யா..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!