Translate Tamil to any languages.

வியாழன், 26 ஜூன், 2014

எப்ப மாறும் இந்த நிலை



பிச்சைக்காரர்கள் திரட்டும் பணத்தை
வங்கியில் இடுவதும்
தானியங்கி (ATM) இயந்திரத்தில் எடுப்பதும்
வழக்கம் ஆயிட்டுது என்கிறீங்க...
ஒரு பிள்ளை மருத்துவர்
மறு பிள்ளை பொறியியலாளர்
மொத்தமாக எட்டுப் பிள்ளைகளும்
கல்வியிற் பெரியவர்களாயினும்
பெற்றவர்கள்
பிச்சையெடுப்பதை நிறுத்தாயினமாம்...
அட! கடவுளே!
பிள்ளைகள் மாறினாலும்
பெற்றவர்கள் மாறுவதாயில்லையே...
ஓ! அவர்கள்
மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்!
பிச்சை எடுத்துக் குடித்து வெறித்து
அலைபவர்களை விட
பிச்சை எடுத்துப் பிள்ளைகளைப் படிப்பித்து
ஆளாக்குபவர்களை
நாம் போற்ற வேண்டுமே...
ஓ! அவர்கள்
மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்!

7 கருத்துகள் :

  1. வணக்கத்துக்குரியவர்கள்கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. படம் தந்த கவிதை அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. மதிப்புக்குரிய பிச்சைக்காரர்கள்...! அருமை அருமை ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!