Translate Tamil to any languages.

சனி, 22 நவம்பர், 2014

ஓருயிரும் ஈருடலும்

ஒற்றைக் கோட்டில் சற்றும் வழுக்காமல்
முற்றும் முடியப் பயணிக்கும்
கற்றோரும் மற்றோரும் கூறும்
இருவரின் செயலே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
தோழன், தோழியாகலாம்
நண்பன், நண்பியாகலாம்
ஒரே பாலார் இருவராகலாம்
காதலன், காதலியாகலாம்
கணவன், மனைவியாகலாம்
எவ்வகை இணையராயினும்
இரு வேறு கோட்டில் பயணிக்காமல்
நேர்கோடு ஒன்றில்
நடைபோடும் இணையர்களே
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
பேசும் கருத்தில் ஒற்றுமை
பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
செய்யும் செயலில் ஒற்றுமை
செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
எதற்கெடுத்தாலும்
எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
ஓருயிரும் ஈருடலும் என்பேன்!
இதற்கு மேலும்
எதையேனும் சொல்லி நீட்டாமல்
முடிவாய் ஒன்றை முன்வைக்கிறேன்
இப்படித்தான்
நம்மவர்களுள் எத்தனையாள்
ஓருயிரும் ஈருடலுமாக வாழ்கிறார்கள்?

18 கருத்துகள் :

  1. எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
    பேசும் கருத்தில் ஒற்றுமை
    பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
    செய்யும் செயலில் ஒற்றுமை
    செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
    எதற்கெடுத்தாலும்
    எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
    ஓருயிரும் ஈருடலும் என்பேன்!//

    சால சிறந்த கருத்து வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. அற்புதமான வாழ்க்கைத் தத்துவம் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. வணக்கம்
    சொல்லிச்சென்ற விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமையான கவியில் அழகாய் ஓருயிரும் ஈருடலும் விளக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஓருடலும் ஈருயிரும் பற்றி நெருடலின்றி நீங்கள் சொன்ன விளக்கம் மிகச் சரியே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
      மிக்க நன்றி.

      நீக்கு
  6. எண்ணும் எண்ணத்தில் ஒற்றுமை
    பேசும் கருத்தில் ஒற்றுமை
    பேசிய கருத்தின் பொருளில் ஒற்றுமை
    செய்யும் செயலில் ஒற்றுமை
    செயற்படும் முனைப்பில் ஒற்றுமை
    எதற்கெடுத்தாலும்
    எதிலும் எதிலும் ஒற்றுமையாயின்
    ஓருயிரும் ஈருடலும் என்பேன்!//

    மிகச் சரியே! ஆனால் இது போல் உலகில் உண்டோ?
    முடிவில் ஒரு கேள்வி கேட்டீர்கள் பாருங்கள்! நல்ல கேள்வி!

    பதிலளிநீக்கு
  7. ஓருயிரும் ஈருடலும் அருமை அய்யா.

    பதிலளிநீக்கு

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!