Translate Tamil to any languages.

சனி, 7 ஜூன், 2014

பொழுதுபோக்குப் பற்றி...


நம்மாளுகள் பயன்மிக்கதாகப் பொழுதுபோக்குவதில்லை. பின் பல தொல்லைகளுக்கு முகம் கொடுப்பர். அப்படி ஒரு நிகழ்வைப் படியுங்க...

கந்தர் : எப்படிப் பொழுது போகுது?

முருகர் : ஒருவர் மாறி ஒருவரைக் காதலிப்பதால்...

கந்தர் : நேரம் வசதியாக அமையுதோ?

முருகர் : ஆளுக்கேற்றால் போல நேரம் ஒதுக்கிறேன்.

கந்தர் : பாதிப்புற்றவர்கள் படையமைத்து உமக்கெதிராகப் போராடினால் ?
முருகர் : எல்லாம் சும்மா என்பேன்...

அந்த வழியால பத்துக் குமரிகள் வந்தார்கள். ஒருத்தி முருகரைக் காட்டி கந்தரிடம் "திருமணமானவரா?" என்று கேட்டாள்.

கந்தர் : அவர் திருமணமாகி ஆண்டுக்கு ஒன்றாக ஆறு பிள்ளைகளைப் பெற்றவராச்சே...

குமரிகள் (முருகரைப் பார்த்து) : "உங்கட மூஞ்சிக்கு எங்களில ஆளுக்கொருவராக ஆறாளைக் காதலிக்க வருகுதோ?" என்று ஆளாளாக தலைதெறிக்கக் கல்லெறிந்தார்கள்.

கந்தர் : அந்த ஆள் பொழுதுபோக்காகக் கதைத்திருப்பார். உதெல்லாம் பெரிதாக எடுக்காதைங்கோ...

குமரிகள் : பொழுதுபோக்கிற்கு நம்மட இளமையே கிடைச்சதெனக் கேட்ட பின் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

கந்தர் (முருகரைப் பார்த்து) : பொழுதுபோக்குப் பற்றி உன்னட்டையெல்லோ படிக்க வேணும்...

முருகர் : தலை வெடித்து ஆறாக ஓடும் செந்நீரை (குருதியை) நிறுத்த வழி பாரடா...

கந்தர் : எல்லாம் சும்மா என்பேன் என்றாய்... இப்ப எப்படித் தோழா?

ஈற்றில் கந்தரும் முருகரும் கணபதி மருந்தகத்திற்கு மருந்து கட்டச் சென்றனர்.

4 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!