Translate Tamil to any languages.

செவ்வாய், 24 ஜூன், 2014

கைக்குக் கைமாறும் பணமே - 04


பைங்கிளி வாழும் ஊராம்
கடல் சூழவுள்ள ஊராம்
கடற்கரையூரைக் கடந்தாம்
பிள்ளை ஒன்று பெற்றுக்கொள்ள
அருள் தாரும் அம்மாவென
நாகபூசணி அம்மன் காலில் வீழும்
அடியார்கள் செல்லும் தீவாம்
நயினாதீவை அறிவீரா?

முன்தோன்றித் தமிழரெனும் நாகர்கள்
நாகத்தை வழிபட்ட முன்னோர்கள்
போற்றிய நாகநயினார், நாகதம்பிரான்
கோவில் கொண்ட ஊராகையால்
நாகநயினார்தீவு, நயினார்தீவு என்றும்
மின்னிய இந்துக் கோவில்களை
போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் அழித்தனராம்!

முத்துக்குளித்தல் இருந்தாலும் கூட
சங்குகுளித்தல் விஞ்சிய கடலாம்
சூழவுள்ள நயினாதீவின் உள்ளே
தமிழரெனும் நாகர்கள் வழிவந்த
வள்ளுவர் மக்கட்குழாம் வழிபட்ட
நயினாதீவு நாகம்மாள் கோவிலாம்
பின்வந்த ஆங்கிலேயன் பின்னே
தலைநிமிர்ந்த தமிழர் கோவிலாம்!

யாழ்மண்ணின் பண்ணைக் கடலண்டி
தலைகாட்டும் தீவுகள் ஏழில்
புனிதமண்ணாம் நயினாதீவுக்குப் போவோர்
காணும் கடற்கரையூரில் வாழும்
கந்தப்புவுக்கும் செல்லாச்சிக்கும் வாய்த்த
பைங்கிளி மருத்துவராகப் படித்தாலும்
மூத்தவன் பொன்னன் விண்ணன்
கடலும் அங்காடியுமாகச் சுழல
இளையவன் வேலன் வணிகனாம்!
--தொடரும்--

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!