Translate Tamil to any languages.

செவ்வாய், 14 ஜனவரி, 2025

2025 தமிழர் புத்தாண்டு வாழ்த்துகள்



தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதை நம்பித்தான்
பழசைக் கழித்து விடும் நானை
போகிப் பண்டிகை என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்று நம்பித் தான்
வெயில், மழை தருவோனுக்கு
நன்றி கூறும் கோட்பாட்டைச் சொல்லி
பொங்கிப் படைத்து உண்டு களித்து
தைப்பொங்கலைக் கொண்டாடுகிறோம்!
உண்டு, களித்துக் கொண்டாட உதவிய
எம்வீட்டுச் செல்வங்களான பசு, எருது
எல்லாவற்றுக்கும் அடுத்த நாள் கூட
நன்றி கூறும் பொங்கல் படையலை
பட்டிப்பொங்கல் என்கிறோம்!
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பதற்கு வலுச் சேர்க்கத் தான்
உறவுகள் வீட்டுக்குப் போய் வந்து
உண்டு களித்து உறவைப் பலப்படுத்தும்
நன்நாளைத் தான் மீண்டுப் பாரும்
காணும் பொங்கல் என்கிறோம்!
உழவர் திருநாள் உறவுகள் பெருநாள்
நன்றி கூறும் பண்பாட்டு நாள்
தமிழுக்கு முதல் நாள் தைத்திருநாளே!
 

வியாழன், 9 ஜனவரி, 2025

அடிக்கடி நினைவுக்கு வரும் வன்னி




நான்

செத்து செத்து உயிர்த்து வந்த கதையை சொல்ல வந்தேன்! புதுக்குடியிருரப்பில் இருந்து வந்தேன்
ஒட்டுசுட்டான் பக்கமாக வந்த வெடித்த
எறிகணைத் துண்டுகள் பல
என் வீட்டிற்குள்ளும் பாய்ந்தன...
ஒன்று முற்றத்துப் பலா மரத்தில் இருந்த
பலா  பழத்தைக் கீறிக் கிழித்தது!
இன்னொன்று முற்றததில் நின்ற
உந்துருளியின் எரிபொருள் தாங்கியை
உரசிக் கொண்டு போனது!
வேறு சில வீட்டுக் கூரையை
கிழித்துக் கொணடு போனது!
வீட்டிற்குள் உறங்கிய என்னையும் இல்லாளையும்
குத்திக் கிழித்து உயிர் குடிக்காமல் போக
புதுக்குடியிருப்பு, கோம்பாவிலில் குடியிருக்கும்
காட்டு ஆமணக்கு விநாயகர் தான்
காப்பாற்றியது என்று இன்றும் அழுகின்றோம்!
தமிழன் உயிர்களைக் குடிக்கும்
கொத்துக் (கிளஸ்டர்) குண்டுகளுக்கும்
தமிழன் உடைமைகளை எரிக்கும் நெருப்புக்  (பொஸ்பரஸ்) குண்டுகளுக்கும்
முகம் கொடுக்க முடியாமல்
ஊர் ஊராகப் பாதுகாப்புத் தேடி அலைந்தோம்!
போகும் வழிகளில் பிணங்களைக் கடந்து
போய்க் கொண்டு இருக்கும் போது
சூட்டுச் சத்தம், குண்டுச் சத்தம் கேட்க
பத்தாப்பளைக் கண்ணகி அம்மாவே
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரரே
எங்களைக் காப்பாற்று என்றழுதுகொண்டு
போய்க் கொண்டிருக்கையிலும்
நாம் கடந்த பின் எமக்குப் பின்னே
நாம் வந்த வழியில் குணடுகள் வெடித்தன...
அம்மோய் அப்போய் என்றழும
உறவுகளின் குரல்களும். காதைக் கிழித்தேன்...
நிப்பாட்பாத நிப்பாட்டாத - அடுத்த
குண்டு விழுந்தால் நாங்கள் செத்துப் போவோம்
என்றழும் இல்லாள் பேச்சுக் கேட்டு
என் உந்துருளியை முறுக்கிச் சென்றேன்!
இரணைப்பாலை, அம்பலவன் பொக்கணை,
சாளம்பன், இரட்டை வாய்க்கால்,
முள்ளிவாய்ககால், வாட்டுவாகல் என
பஞ்சம் பிழைக்கத் தஞ்சம் தேடி அலைந்தோம்!
முள்ளிவாய்க்கால் தள்ளி வந்து
வட்டுவாகல் நெருங்கு முன்
ஆங்கோர் இடத்தில் கிடந்த வேளை
அரூகே வந்தாங்கே வெடித்த குண்டால்
உடல் சிதறிப் பல உயிர்கள் பிரிய
பிள்ளையாரோ சிவபெருமானாரோ
இயேசுநாதரோ/கர்த்தரோ அல்லாஹ்வோ
எல்லா மதங்களும் சுட்டும் கடவுள்
என்னையும் இல்லாளையும் காப்பாற்றினார்!
வன்னி மண்ணில் போர்ச் சூழலில்
நாம் வாழ்ந்த வாழ்க்கை நிலை எழுத
உலகளவுத் தாளும் வானுயர்ந்த எழுதுகோலும்
போதாது போதாது - எமது
வாழ் நாளில் எழுதி முடிக்கவும்
இயலாது இயலாது - அந்த
கடவுள் தான் நீண்ட ஆயுளும்
தரவேண்டும்!








புதன், 8 ஜனவரி, 2025

வட்டிக்கு வட்டி கட்ட இயலாத போது

 


"நிலம் குட்டி போடாது 

பணம் குட்டி போடும்" என்று தான்

அன்று ஒரு நாள் 

எனது அப்பா சொன்னார்.

தொடக்கத்தில் - உழைப்பில்

மிச்சம் பிடித்துக் கொடுக்கலாமென

வட்டிக்குப் பணம் எடுப்பாங்க...

அடுத்த கட்டத்தில் - முதலில்

வட்டிக்கு எடுத்த பணத்திற்கு 

வட்டி கொடுக்கத் தான் 

வட்டிக்குப் பணம் எடுப்பாங்க...

பிறகென்ன - உழைக்கிறதே

வட்டிக்கு வட்டி கட்டப் போய்விடும்!

அதற்குப் பிறகென்ன

தின்னக் குடிக்க வழியிருகாது பாரும் தூக்கில் தொங்கிச் சாகப் போவாங்க!

அடடே! பணம் குட்டி போடாது

வட்டிக்கு வட்டி போட்டுப் பெருக்க

பிள்ளை, குட்டிகளைத் தூக்கில் தொங்கி

சாக வைக்கத் தூண்டுகிறதே!

ஞாயிறு, 3 மார்ச், 2024

எங்கே போகிறோம்

 02-03-2024 சனி மாலை 3 மணிக்கு யாழ் சரசுவதி (ராஜா கிறீம் ஹவுஸ்) மண்டபத்தில் மட்டுநகர் நீலையூர் சுதாகரனின் "கொத்துவேலி" பொத்தக அறிமுக விழாவில் "எங்கே போகிறோம்" என்ற தலைப்பில் பாடப்பட்ட என் கவிதை.

யாழிசைக் கவித்தடாகம் ஒருங்கிணைத்து வழங்கும்

"கொத்துவேலி" பொத்தக அறிமுக விழாவிலே

"எங்கே போகிறோம்" என்ற தலைப்பிலே

கவிதை அரங்கேறும் நிகழ்வூம் ஒன்றாச்சு!


பொன்னான கவியரங்கத் தலைவராக மின்னும்

பாவலர் உடுவிலுhர் கலா அவர்களுக்கு வணக்கம்!

பல்துறை ஆற்றலாளர் இவரென்று பறைசாற்ற

பத்துக்குமேலிவர் வெளியிட்ட பொத்தகங்களே சான்று!


இலக்கிய நாட்டமுடன் விழாவைச் சிறப்பிக்க

வருகை தந்துள்ள எல்லோருக்கும் வணக்கம்!

அரங்கையே அதிரவைக்கக் கவிபாட வந்திருக்கும்

பெருங்கவிஞர் எல்லோருக்கும் வணக்கம்!


நானோ தமிழறிவில் சின்னப்பொடியன் தான்

என்னையூமொரு பொருட்டாக எண்ணித் தான்

"எங்கே போகிறோம்" என்ற தலைப்பில் பாடத் தான்

இங்கே என்னையூம் அழைத்த உறவூகளுக்கு

நன்றியைக் கூறிக்கொண்டு நானும் தொடருகிறேன்.


எங்கே போகிறோம்


எந்நாளும் ஊருலகிற்கு என்னை அடையாளப்படுத்த 

எந்நேரமும் எல்லோரும் என்னோடு உரையாட

என்நாவால் ஒலிக்கும் தாய்மொழியாம் தமிழுக்கு

என்னுள்ளம் நிறைந்த நன்றியைக் கூறிக்கொண்டு

கதையை விதைக்கும் கவிதை வரிகளாய்

"எங்கே போகிறோம்" என்றவாறு தொடருகிறேன்.


எந்தனுhர் எல்லையிலே செந்தமிழ் விழாவாம்

வந்த பகலவன் செல்லும் வேளை தான்

இருள் சூழும் பொழுது பார்த்துத் தான்

வருவோர் போவோர் நிறையூம் அரங்கில் தான்

குத்துவிளக்கில் ஒளியேற்றி விழாவூம் தொடங்கியாச்சு!


எச்சூழலில் எப்படி வருவதென அறியாமல்

அச்சூழலில் வந்தாரைக் கண்டால் கண்கூசும்

மேலைநாட்டுப் பண்பாட்டு ஆடைகளை உடுத்தி

வேலைக் கடுமையெனத் தமிழர் பண்பாட்டை

காற்றிலே பறக்க விட்டிட்டு வந்தவர் தான்

பேச்சிலே பிறமொழிகளையே கலப்பாகப் பேசினர்

நாம்தமிழர் என்போராம் நம்தமிழைப் பேசவில்லையே!

நாம்தமிழர் நடாத்திய தமிழ்விழாக் காட்சியிதுவோ!!


நம்தமிழைப் பேணும் பற்றாளர் பரிசினைப் பெற

நம்தமிழர் ஒருவரை அரங்கிலேற அழைக்கையிலே

தமிழர் பண்பாட்டைப் பேணாத ஆடையூடுத்தி

தமிழ்விழா அரங்கிலே பரிசில்பெறப் போகலாமோ?

பார்த்தோர் காதுகிழிய முணுமுணுத்தனர் ஆங்கே!

பார்ப்போரில் வானிலிருந்து வந்திறங்கிய நக்கீரராம்

"எங்கே போகிறோம்" என்றுரக்கக் கேட்டாராம்

அங்கே அடுத்தகணம் அவருயிர் போச்சுதாம்! 


பிறந்த நாள், திருமண நாள் என

சிறப்பான நிகழ்வூகள் எதுவானாலும்

விருந்தளித்து வந்தாரை வரவேற்பது வழக்கமே!

விருந்தாகப் பதினெட்டுக் கறிகளும் ஊரரிசிச் சோறும்

விருந்துண்ணும் அரங்கிலே நிரையில் அடுக்கியாச்சு!

விருந்துக்குமுன் வந்தாரும் குடிக்கவூம் ஏற்பாடாம்

ஆணுக்குப் பெண் நிகரென்று காட்டவே

ஆணும் பெண்ணும் குளிர்பானம் குடித்தனராம்!


விருந்துண்ண வாவென்று சொன்னதும் விரைவாய் 

விருந்துண்ணக் குடித்தாரும் தள்ளாடி வந்தனராம்

ஒழுங்கான நிரையிலடுக்கிய உணவூத் தாங்கிகள்

ஒழுங்கில் வந்த தள்ளாடிகளும் தள்ளாடியதால்

உணவூண்ணும் அரங்கிலே விழுந்துணவைச் சிந்தின!

உணவெல்லாம் சிந்திச்சிதறிக் கிடந்ததைக் கண்ட

குண்டூசியாலே சிந்தியசோற்றை குத்திப்பொறுக்கித் தின்ற

வள்ளுவரும் வானிலிருந்து வந்திறங்கிப் பார்த்திட்டு

"எங்கே போகிறோம்" என்றே கத்திச் செத்தாராம்!


முழுவூலகைத் தமிழர் ஆண்டது பேச்சானாலும்

அரையூலகைத் தமிழர் ஆண்டது எழுத்திலே

'கடல் கொண்ட தென்னாடு' என்ற பொத்தகமாய்

கா.அப்பாத்துரை அவர்கள் வெளியிட்டாராம்!

தமிழின் தொன்மை, தமிழரின் பண்பாடு பேசி

தமிழே செம்மொழி என்று முழங்கும் - நாம்

எம்கண் முன்னே எம் அடையாளம்

எம்மவரால் சிதைக்கப்படுவதைக் கண்டும் கூட

"எங்கே போகிறோம்" என்றுணரத் தான்

எத்தனை மணித்துளிகள் எடுக்கப் போகின்றது?


நன்றி.


செவ்வாய், 16 ஜனவரி, 2024

வெற்றிநடை கவிநடை | வந்தது வந்தது இனிய தைப்பொங்கல்|

உலகத் தமிழ் உறவுகளே! 2024 இல் மீண்டும் தங்களுடன் இணைகிறேன்.


ஊடக வெளியில் ஊடறுக்கும் வெற்றிநடையில் 
வெற்றிநடை வழங்கும் கவிநடை நிகழ்வில் 
வந்தது வந்தது இனியதைப் பொங்கலென 
தந்தனர் தலைப்பொன்று நான்கவி பாடிடவே! 

சின்னப் பொடியன் நானென்று அறிந்துங்கூட 
என்னையும் கவிபாட அழைத்த 
வெற்றிநடைக்கு வணக்கம் 

என்னோடு கவிபாட இணையும் 
பெரியோருக்கு வணக்கம் 

அன்போடு கவனித்து கேட்கின்ற 
அறிஞருக்கு வணக்கம் 

என்னையும் உங்களையும் இணைக்கும் 
ஊடகத் தமிழுக்கு வணக்கம் 

என்பாவைச் சுவைத்துக் கேளுங்கள் பாடுகின்றேன்.

                                                        <--->

பனித்துளி விழுந்து குளிர்ந்தது குளிர்ந்தது 
இனியதைப் பொங்கல் வந்தது வந்தது
(பனி)

இனியதைப் பொங்கலிலும் மகிழ்வோடு வாழ்வோம்
பனிதரும் குளிரிலும் பிணியின்றி வாழ்வோம் 
(இனி)

ஆடியில தேடிவிதைத்த காலம் போயிற்று 
ஆவணியில மழைவந்த காலம் போயிற்று 
புரட்டாதியில விதைக்கிற காலம் ஆயிற்று
மாசிப்பனியில அறுவடைக் காலம் ஆயிற்று
மாதங்களின் மாற்றங்களில் சோர்வுகளே ஆயிற்று 
தையிலும் பகலவனுக்கு நன்றிப்பொங்கல் ஆயிற்று
(பனி)(இனி)

தமிழருக்கு முதல்மாதம் முதல்நாள் பொங்கல் ஆயிற்று 
உழவருக்குப் புதுநெல்லு புத்தரிசிப் பொங்கல் ஆயிற்று 
பகலவனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் ஆயிற்று 
நல்லெண்ணம் நல்வழி காட்டும் பொங்கல் ஆயிற்று  
புத்தாண்டுப் புதுமுயற்சித் தொடக்கமே பொங்கல் ஆயிற்று 
எவ்வாண்டும் தவறாமல் தப்பாமல் பொங்குவதாயிற்று
(பனி)(இனி)

குடும்பமே கூடிநின்று பொங்கும் நாளாயிற்று 
பகலவன் கதிர்பட்டு பனித்துளி மின்னுவதாயிற்று 
பொங்கற்பானை பொங்கி வழியும் நேரமாயிற்று 
பொங்கிடும் நுரைவழி வேளாண்மை என்றாயிற்று 
பானையில் இருந்தள்ளி எடுத்துப் படைத்துமாயிற்று
பகலவனைப் பார்த்துப் பக்தியிசை படிப்பதாயிற்று
(பனி)(இனி)

தைப்பொங்கல் பொங்கிப் படைத்து உண்டும் ஆயிற்று 
உண்டாறுமுன் புதுப்பணியும் தொடங்கி ஆயிற்று 
கோயில்போய்க் கும்பிட்டு வயற்கரையும் பார்த்தாயிற்று 
உழவுக்குத் துணைநின்ற எருதுக்குமடுத்துப் பொங்கலாயிற்று 
பணியிடத்தில் பொதுவிடத்தில் பண்பாட்டுப் பொங்கலாயிற்று 
உலகெங்கும் தமிழரின் தைப்பொங்கலே பேச்சாயிற்று 
தமிழரின் தைப்பொங்கலை உலகமே பின்பற்றலாயிற்று
(பனி)(இனி)

                                                    (முற்றும்)