Translate Tamil to any languages.

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கொடுக்கல் வாங்கலின் போது...

கேட்டால் கொடுப்பது
கடன் - அப்ப
வீணாகக் கேட்டு வேண்டாதே!
கேளாமல் கொடுப்பது
உதவி - அது
இரக்கமுள்ளவர் செயலென அறி!
இடக்கை கொடுப்பது
வலக்கைக்குத் தெரியக்கூடாதாம் - ஏனெனில்
கொடுத்தவரையும்
கொடுத்ததன் பெறுமதியையும்
பெற்றவரல்லவா சொல்லவேண்டும்!
உப்பிட்டவரைக் கூட
உள்ளளவும் நினை - அதாவது
கடுகளவு உதவியானாலும்
உதவியோரை மறத்தலாகாதே!

2 கருத்துகள் :

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!