Translate Tamil to any languages.

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

"இலக்கியச் செம்மல்" என மதிப்பளிப்பு


இலங்கை, திருகோணமலை, ஈச்சிலம்பற்று, சிறிசண்பகா மகா வித்தியாலயத்தில் 29/01/2017 ஞாயிறு அன்று ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத் தலைவர் ரூபன் அவர்களின் "யன்னல் ஓரத்து நிலா" நூல் வெளியீடு இடம்பெற்றது.



மேற்படி நிகழ்வில் உங்கள் யாழ்பாவாணனுக்கு "இலக்கியச் செம்மல்" என மதிப்பளிப்புச் செய்யப்பட்டது. இவ்வாறு மதிப்பளிப்புச் செய்த பெரியோர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.






இவ்வாறு எனக்கு மதிப்பளிப்புச் செய்வதால், மேலும் மேலும் எனது பணிகளைச் சிறப்பாகச் செய்யுமாறு பணிக்கின்றனர். ஆமாம், அவர்களின் விருப்பம் நிறைவேற...

வலைவழியே நற்றமிழைப் பரப்பிப் பேணுதல்
வலைவழியே மின்நூல்களைத் திரட்டிப் பேணிப் பகிர்தல்
தமிழ் செயலிகளைத் தயாரித்து வழங்குதல்
வலையுலகப் பதிவர்களை ஊக்குவித்தல்
வலைப் பதிவர்களின் படைப்புகளைத் திரட்டி மின்நூல் ஆக்குதல்
வலைவழியே உளநல வழிகாட்டலும் மதியுரையும் வழங்குதல்
போன்ற

எனது பணிகளைச் சிறப்பாகச் செய்வேன் என்று உறுதியளிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!