Translate Tamil to any languages.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதா?

2017 பிறந்த பின் கேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வும் 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த கருத்தாடலும் சூடாகப் பரவுகிறது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசுக்கு என்ன நடக்கும்? அதனால், இலங்கைத் தமிழருக்கு நன்மை ஏதும் கிட்டுமோ? இன்று இவை தான் இலங்கைத் தமிழரின் உள்ளத்தில் உருளும் செய்தி!

கடும் பனிக்கு மத்தியில் கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம் பற்றியறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

கேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வுக்கும் இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கும் தொடர்பு இருக்கிறது. கேப்பாப்புலவு கவன ஈர்ப்பு நிகழ்வுக்குத் தீர்வு கிட்டாத வேளை, கேப்பாப்புலவையும் இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்கள மக்களைக் குடியேற்றலாம். இவ்வாறே இலங்கைத் தமிழர் வாழும் இடங்கள் பறிபோகலாம். இதனை 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் முன்வைத்துத் தீர்வு தருவார்களா? ஐ.நா. அழுத்தம் ஒன்றே இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வர்.

அறிஞர்களான இலக்குவனார் திருவள்ளுவன், இ.பு.ஞானப்பிரகாசன் ஆகியோர் வலைப்பூ வழியே நான் இணைத்துக்கொண்ட நண்பர்கள் என்பதில் பெருமை அடைகின்றேன். அவர்களின் முயற்சியில் சிங்கள மயமாக்கப்படும் தமிழர் நிலங்கள் பற்றிப் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படியுங்கள்.

இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தியமைக்கான வரலாற்றை அறியக் கீழ்வரும் இணைப்புகளைச் சொடுக்கிப் படியுங்கள்.

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்ட இடங்கள்

மணலாற்றில் சிங்களக் குடியேற்றங்கள்….

சிங்களவர் கையகப்படுத்திய தமிழர் வாழ்விடங்கள்
பகுதி - 1
பகுதி - 2

ஈழத்து வரலாறு சொல்லும் பக்கம்

ஈழத்து ஊர்களின் பெயர்கள் பற்றி

மகாவம்ச சிந்தனை மீள்பார்வை

இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக்  குடியேற்றங்களை ஏற்படுத்துவது தொடருமாயின் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதே வழி! இதனைக் கருத்திற்கொண்டு 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித  உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள இலங்கை குறித்த கருத்தாடலில் தீர்வு ஏதும் கிட்டுமா? அந்நிகழ்வில் இந்த வரலாற்றைச் சொல்லித் தீர்வு ஏதும் பெற்றுத் தர எவராலே முடியும்? இல்லையேல் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவது தான் முடிந்த முடிவோ?

1944 இலிருந்து இலங்கையில் தமிழர் வாழும் இடங்களை இலங்கை அரசு கையகப்படுத்திச் சிங்களக்  குடியேற்றங்களை ஏற்படுத்துவது தொடருகிறதே! ஆகையால், 2017 மார்ச்சு 22 ஆம் நாள் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்த  உண்மையைப் பேசுபொருளாக்கி தீர்வு கிட்ட முயற்சி செய்யவேண்டும். ஐ.நா. அழுத்தம் ஒன்றே இலங்கை அரசைக் கட்டுப்படுத்தும். இல்லையேல் இலங்கைத் தமிழர் கடலில் விழுந்து சாவதைத் தவிர வேறெந்த முடிவை எடுக்கலாம்???

இப்பதிவுக்கு என்னாலே முடிவுரை எழுத முடியாமலிருக்கிறது. உங்கள் முடிவுகளைப் பின்னூட்டத்தில் வெளிப்படுத்தி உதவுங்கள்!!!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!