Translate Tamil to any languages.

புதன், 18 ஜனவரி, 2017

முகநூலில் என் கிறுக்கல்கள்...

முகநூலில், தமிழ்க் கவிதைப் பூங்கா (https://www.facebook.com/groups/1511712842478679) வழங்கிய தலைப்புகளுக்கு நான் எழுதிய கிறுக்கல்களை உங்களுடன் பகிருகிறேன். எதற்கும் பரிசு கிடைத்ததாகத் தகவலில்லை.

மனமே!
மனமே மனதுக்கு மருந்து என்பேன்
மனம் சுத்தமானால் ஆண்டவன் எதற்கு?
நெடுநாள் வாழ நல்ல மனமே!

'மனஸ்' என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பிறந்த 'மனம்' என்பதும் வடமொழியே! இனி நாம் 'மனம்' என்பதை அழகிய தமிழில் 'உள்ளம்' என்று அழைப்போம். அதற்கேற்ப மேற்காணும் பாவை/கவிதையை தமிழில் எழுதலாம் தானே!

உள்ளமே உள்ளத்துக்கு மருந்து என்பேன்
உள்ளம் சுத்தமானால் ஆண்டவன் எதற்கு?
நெடுநாள் வாழ நல்ல உள்ளமே!

எழுதிடு!
எழுதிடு! என்றும் எண்ணிய எல்லாவற்றையும்
எழுதியதால் வாசகர் அறிவு பெருகட்டும்
நாட்டவர் அறிவுயர என்றும் எழுதிடு!

ஆடுதே!
ஆடுதே! அந்தப் பனைமரம் தான்
கள்ளைத் தருவதும் அந்தப் பனையே
போட்டிக்குத் தென்னையும் தளராமல் ஆடுதே!

மார்கழி!
மார்கழி விடியலில் பிள்ளையார் கோவிலில்
குளிருடன் போய் திருவெம்பாவை வழிபாட்டில்
பிட்டுத்தின்ற சுவைக்கு நன்றி மார்கழி!

அழகே!
அழகே! உன்னை விரும்பும் ஆள்கள்
அழகாலே தாம் உயர்ந்தவர் எனக்கூறி
தம்மைத் தாம் இழக்கின்றனர் அழகே!

பேதை!
பேதை அறியாள் முகநூல் போலிகளை
காதல் காதலென முகநூலில் மூழ்குகிறாள்
காளையவன் நழுவ சாகிறவள் பேதை!

பெண்மை!
பெண்மை கடவுளின் துணைக்கருவி என்பேன்
கடவுளின் படைத்தலுக்குத் துணையாக இருப்பினும்
பிள்ளையை ஈன்றுதள்ளும் கருவியல்ல பெண்மை!

பெண்மையைக் கண்டு பெருமை கொள்
உன்னைப் பெற்றவளும் பெண்மை ஒருவளே!
உலக இயக்கத்துக்கு வேண்டும் பெண்மை!

ஏழ்மை!
ஏழ்மை கண்டு உருகாதோர் உள்ளம்
வாழ்வில் உண்டோ வாழும் உறவுகளே!
வாழ்வில் முன்னேறத் தடையல்ல ஏழ்மை!

ஏழ்மை வரலாம் எதிர்த்து முகம்கொடு
ஏழ்மையைக் கண்டு உருகுவோரும் உதவார்
வாழ நினைத்தால் வேண்டாம் ஏழ்மை!

கலங்காதே!
கலங்காதே தோல்வி வந்ததென்று எண்ணி
வெற்றியின் நிழலைக் கண்டதென்று எண்ணி
இனியும் தோல்வி நெருங்குமென்று கலங்காதே!

உழைப்பாய்!
உழைப்பாய் பிழைப்பாய் சிறப்பாய் முன்னேறுவாய்
வாழ்வதற்காய் வளம்சேர்ப்பாய் மகிழ்வாய் நிமிர்வாய்
உணர்வாய் தெளிவாய் நல்வழியாய் உழைப்பாய்! 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!