Translate Tamil to any languages.

புதன், 11 ஜனவரி, 2017

என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்!


2010 இல கருத்துக்களங்களில் இறங்கி
(தமிழ்நண்பர்கள்.கொம் போன்ற தளங்களில்)
பின்னர் வலைப்பூக்களில் உலா வரும்
சின்னப்பொடியன் யாழ்பாவாணன் ஆகிய
நான்
இலக்கியப் படைப்புகளில் நாட்டம்
1987 இன் பின் இருந்து வந்தது...
திறனாய்வு (விமர்சனம்), தாக்குரை (கண்டனம்),
பின்னூட்டம், பதில் கருத்துகள் என
என்னாலும் வழங்க முடியும் - ஆனால்
பிழையான பின்னூட்டம் இடுவதில்
நான் முன்னோடி என்றுரைத்து
வெளிவந்த குற்றச்சாட்டுகள் - என்னை
கொஞ்சம் சிந்திக்க வைத்திருக்கிறதே!

ஒரிரு வரிப் பின்னூட்டம் இட்டு
என்னை நான் அடையாளப்படுத்த
எப்போதும் எண்ணியதில்லை - எவரது
பதிவையும் குறைத்துச் சொன்னதுமில்லை - எந்த
வலைப்பதிவரையும் நோகடிக்க - எனக்கு
உரிமையும் இல்லை - நானப்படி
எவரையும் நோகடிக்க முயன்றதுமில்லை!
பன்னீராயிரம் தமிழ் வலைப்பதிவர்களில்
சிலரது வலைப்பூக்களிலே தான் - அதுவும்
பொதுவாகச் சிறந்த பதிவென்றறிந்தே
நான் பின்னூட்டம் இட்டிருப்பேன்! - அந்த
பின்னூட்டம் இட்டதால் நோவுற்ற
தமிழ் வலைப்பதிவர் உள்ளங்களிடம்
என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்!

"தனது பதிவைப் படித்த பின்
படித்ததில் பிடித்ததை, பிடிக்காததை
சுட்டிக்காட்டலாமே தவிர
வேண்டாத சொல்களை இட்டு
தனது வலைப்பக்கத்தை நிரப்ப வேண்டாம்
முடிந்தால்
தனது வலைப்பூவிற்கு வரவும் வேண்டாம்" என
எனது பின்னூட்டம் பயனற்றது என
2014 இல நண்பர் ஒருவர்
எனக்குப் படிப்பித்ததை - மீண்டும்
2017 இல் நண்பர் ஒருவர் - மீண்டும்
"வலைப்பதிவர்கள் எல்லோரும்
உம்மை ஒதுக்கி வைக்கலாம்" என
எனக்கு நினைவூட்டி இருப்பதால்
என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்!

நானும் பதிவைப் படித்து - பின்
அடிக்கடி பயன்படுத்தும் சொல்களை நீக்கிவிட்டு
நல்ல கருத்துகளைத் தெளிவாகத் தர
முயற்சி செய்கிறேன் - அதற்காக
"வேலை நெருக்கடி" எனச் சாட்டுச் சொல்லி
வலைப்பூவிற்கு வருகை தருவதை நிறுத்தாமல்
நானே என்னைத் திருத்திக்கொண்டு
நல்ல எண்ணங்களைப் பகிர முன்வருவேன்!
பின்னூட்டம் இட்டதால் நோவுற்ற
தமிழ் வலைப்பதிவர் உள்ளங்களிடம்
என்னை மன்னிக்க வேண்டுகின்றேன்!

பிழையான பின்னூட்டம் இட்டு - தங்கள்
உள்ளம் சுடப்பட்டு இருந்தால் - தாங்கள்
சுடு சொல்லால்
என்னைச் சுட்டுக்கொள்ளுங்கள் - அதனால்
நான் எவரையும் பகைக்க மாட்டேன்!
ஏன்?
பிழையான பின்னூட்டம் இடுவதில்
நான் முன்னோடி ஆகிவிடாமல்
பின்னூட்டம் இடுவது பற்றி
படிப்பிக்கின்ற ஆசிரியர்கள் நீங்கள் ஆச்சே!
பின்னூட்டம் இடுவதால்
பதிவர் நிறைவடையவும் - அதேவேளை
வாசகர் கண்கள் பதிவை ஈர்க்கவும்
ஏற்ற கருத்தாக எனது எண்ணங்களை
2017 தைப்பொங்கலுடன் எதிர்பாருங்கள்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!