Translate Tamil to any languages.

புதன், 7 டிசம்பர், 2016

எவரும் அறிவாளி ஆவதற்கு...



இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக உரிமைக் குரல் கொடுத்த தமிழக முதல்வர்  ஜெயலலிதா ஜெயராம் அவர்களின் இழப்பு, எல்லோருக்கும் பேரிழப்பு! வலைப்பூ உறவுகளுடன் துயர் பகிருகின்றேன்.


எல்லோரும் படித்தவர்கள் தான்
ஆனால், அவர்களை நான்
அறிவாளிகள் இல்லை என்றால்
நீங்களே சொல்லுங்கள்
என் நிலைமை என்னவாகும்?
கல்லெறியோ சொல்லெறியோ
என் தலை மேல் விழ முன்
எண்ணிப் பார்த்த வேளை
தமிழ் சொல்கள் வந்து விழ

"கண்டதும் கற்பதனால் - எவரும்
அறிவாளி ஆவதில்லையே!
கற்பதனால் அறிவைப் பெறலாம்
ஆனால்,
அறிவைப் பெருக்கத் தேடல் வேண்டுமே!
தேடல் உள்ள வரை
எவரும் அறிவைப் பெருக்கலாம்
ஆனால்,
அவர்கள் அறிவாளி ஆக முடியாதே!
நமது அறிவைத் தான்
பிறருக்குப் பகிருவதால் தானே 
அறிவாளி என்ற பெயர் கிடைக்கிறதே!
வாங்க... வாங்க...
நீங்கள் எல்லோரும் தான்
எங்கட எங்கட அறிவைத் தான்
"நாம் பெற்ற கல்வி
இவ்வுலகத்தார் பயனீட்டவே" என
பிறருக்குப் பகிர்ந்தால் தான்
நாமும் "அறிவாளி" என்ற
அடையாளத்தைப் பெறலாமே!" என்றவாறு

பா/கவிதை அடிகளைப் போல - நானும்
எழுதியதைப் பகிர்ந்தேன் - அதை
படித்துப் பார்த்த உங்களுக்கு - உங்கள்
உள்ளத்தில் என்னவாகத் தோன்றியது? - அதை
எனக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன் - நானும்
அறிவாளியாக விரும்புவதனாலேயே
பணிவோடு உங்களைக் கெஞ்சுகிறேன்!
உங்கள் பதிலடி தான் - எங்கள்
ஒவ்வொரு தமிழ் ஆளையும்
அறிவாளி ஆக்க உதவும் எனின்
அதுவே
என் பா/கவிதை இற்கு கிடைத்த
வெற்றி என்றே பாடுவேன்!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!