Translate Tamil to any languages.

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

காதல் நாடகங்கள் (2000 இற்குப் பின்)


காதல் என்பது
இயற்கையாக அமைய வேண்டுமாம்!
அப்படி அமைந்தால் - சோதிடத்தில்
குறிப்புப் பார்க்கத் தேவை இல்லையாம்!
அன்றைய காதல்
அப்படி இருந்திருக்கலாம் - ஆனால்
இன்றைய காதல் அப்படி இல்லையே!
அதனைத் தான்
கீழுள்ள உரையாடல்கள் வழியே
உறுதிப்படுத்த முனைந்துள்ளேன்!

பெண்: உங்களுக்குக் காதல் வராதா?
ஆண்: எனக்கு வராது!
பெண்: ஏனங்க...
ஆண்: வருவாய் (சீதனம்), சொத்து (ஆதனம்) வரவேணுமே!

பொடியன்: உங்களுக்குக் காதல் வராதா?
பெட்டை: எனக்கு வராது!
பொடியன்: ஏனங்க...
பெட்டை: வருவாய் (சீதனம்), சொத்து (ஆதனம்) கேட்போராலே...

அழகி: ஏன் காதலிக்க மறுக்கிறியள்?
அழகன்: கோடிக் கணக்கில நீட்டுவோர் நாடுவதனால்...

அழகர்: ஏன் காதலிக்க மறுக்கிறியள்?
அழகினி: கோடிக் கணக்கில கேட்போர் தொடருவதனால்...

ஒருவள்: நீங்க காதலிக்க விரும்பாததேன்...
ஒருவன்: மனைவியிடம் வேண்டிய
         வருவாய் (சீதனம்), சொத்து (ஆதனம்) பறிபோயிடுமே...

ஒருவன்: நீங்க காதலிக்க விரும்பாததேன்...
ஒருவள்: நூறாயிரக் கணக்கில
         உழைச்சுப் போடுற என்னவரை
         இன்னொருவள் மடக்கிப் போடுவாளே!

குமரி: நீங்கள் காதலிப்பதை வெறுப்பது ஏன்?
குமரன்: எவரையும் காதலிக்காத ஒருவள் வராமையே!

குமாரன்: நீங்கள் காதலிப்பதை வெறுப்பது ஏன்?
குமாரி: எவரையும் காதலிக்காத ஒருவன் வராமையே!

இப்படியான உரையாடல்களுக்குப் பின்னே
சில கெடுதல்களும் நிகழ்ந்திருக்கலாம்...
ஓமோம்! உண்மை தான்!
காதல் முற்றி நெருக்கம் நெருங்க
திருமணம் என்ற நிகழ்வைச் சந்திக்காமலே
வாழ்ந்து பார்க்க எண்ணிய வேளை
இப்படியும் நிகழ வாய்ப்பு இருக்கிறதே!
காதல் என்ற போர்வையில் பழகி
வயிற்றில் பிள்ளையைச் சுமந்தவளும் இருக்கலாம்...
சும்மா சொல்லக் கூடாது
கருக்கலைப்புச் செய்தவளைக் கட்டியவனும் இருக்கலாம்...
இந்த நிலை வந்து சேருமோ என
எவரும் எதிர்பார்த்து இருக்க முடியாதே!
பின்விளைவைச் சற்றுச் சிந்திக்க மறந்த
இளசுகளின் எண்ணங்களால் - அவர்களின்
எதிர்காலமே அழியும் நிலை காண்பீர்!
நன்றே முற்றிய காதல் ஆயினும்
நல்ல ஓர் எதிர்காலம் அமைய
முன்னமே வேண்டாம் அந்த நெருக்கம்!
காதலுக்குப் பிறகு தாலியைக் கட்டு
பதிவுத் தாளில் கையெழுத்தை இட்டு
ஆணுக்குக் கால் கட்டுப் போட்டு - பின்
காதலர் இருவரும் தமக்கிடையே
காற்றே நுளையாத நெருக்கம் காட்டலாமே!
அடிக்கடி காலம் மாறிப் போவதாலா
இவங்க மேல்நாட்டுக் கோலம் கண்டதாலா
இப்ப பிஞ்சுகளும் காதல் பண்ணுவதாலா
காதல் மலர அறிவு மங்குவதாலா
கண்டதும் காதல் கொண்டதே கோலமாவதாலா
இன்றோ
அரங்கேறும் காதல் நாடகங்கள் எல்லாம்
ஏமாற்றுதலிலும் ஏமாறுதலிலும்
கருக்கலைப்பிலும் தற்கொலையிலும்
முடிவுறும் காட்சிகளாகவே அமைவதைக் காண்பீரே!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!