Translate Tamil to any languages.

செவ்வாய், 13 டிசம்பர், 2016

“சல்லடை கனவுகள்” நூலைப் பற்றி...

"தினத்தந்தி நாளிதழில் புதன்கிழமையன்று வெளியாகும் மதிப்புரை பக்கத்தில் “சல்லடை கனவுகள்” கவிதை நூல்.

தமிழ்நாட்டில் வெளியான நாளிதழில் பக்கம் எண்:16 இலும் அமீரகத்தில் பக்கம் எண்:8 இலும் புத்தக மதிப்புரை வழங்கப்பட்டுள்ளது." என்பதை நூலாசிரியர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.



வாருங்கள் உறவுகளே! தமிழ்நண்பர்கள் தளத்தில் "மௌனங்கள் உயிர்த்தெழுந்தால்" என்ற பா/கவிதை தொடரைப் (http://tamilnanbargal.com/node/57302) படித்தால் புரியும் ஆய்க்குடியின் செல்வன் (மணிகண்டன்) அவர்களது பா/கவிதை புனையும் ஆற்றலை!

"தாமரை கண்ணான் உலகிற்கு
போகிற வழி தந்தாலும்
போகிற எண்ணம் ஏதும் இல்லையடி
நீயற்ற எவ்வுலகமும் நிறையற்றதே எனக்கு!" என்று
அவள் இல்லாத இடத்துக்கு
இவன் போகானாம் - ஆங்கே
நிறைவு கிட்டாதென - இவன்
எண்ணம் வெளிப்படுத்தும் வண்ணம்
பல பா/கவிதை புனைந்த - தம்பி
ஆய்க்குடியின் செல்வன் (மணிகண்டன்)
ஆக்கி அரங்கேற்றிய படைப்பாம்
சல்லடை கனவுகள்நூல் பற்றி
தமிழ்நாட்டு 'தினத்தந்தி' நாளிதழில்
புத்தக மதிப்புரை பக்கத்தில்
அறிமுகம் செய்திருப்பதை பாரும்!

தாங்கள் “சல்லடை கனவுகள்” நூலை வாங்கிப் படியுங்கள். தாங்கள் கொடுக்கின்ற பணத்திற்கு அதிகமான அறிவு கிட்டும். அத்தனை சிறப்பான நூலைத் தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகின்னறேன். 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

வருக அறிஞர்களே! தருக தங்கள் கருத்துகளையே!